tag:blogger.com,1999:blog-14438308606648745722024-03-28T20:27:44.543-07:00Mumbai Tamil Teacherசெல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.comBlogger1004125tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-31683738821274979802024-03-17T21:09:00.000-07:002024-03-19T16:20:48.183-07:00குறி வைத்த குறிகாரி <p dir="ltr"><b>குறி வைத்த குறிகாரி</b></p><p dir="ltr"><br></p><p dir="ltr">எக்கா...எக்கா..".என்றபடி ஓடி வந்தாள்</p><p dir="ltr">பக்கத்து வீட்டுப் பெண் பார்வதி.</p><br><p dir="ltr">"என்ன...என்ன...இப்படி ஓடி வருகிறாய்?..</p><p dir="ltr">ஏதும் பிரச்சினையா?"</p><br><p dir="ltr">"ஆமாக்கா.... நீங்க எப்போதும் சொல்வீங்க..</p><p dir="ltr">அதுதான் ...அதுதான் "</p><p dir="ltr">மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க படபடவென்று</p><p dir="ltr">பேசினாள் பார்வதி.</p><br><p dir="ltr">'என்ன அதுதான்...அதுதான் என்கிறாய்.</p><p dir="ltr">அதுதான் என்ன என்று சொல்கிறாய்.</p><p dir="ltr">நிதானம்...நிதானம்....</p><p dir="ltr">தண்ணீர் குடிக்கிறியா?"</p><br><p dir="ltr">"தண்ணீர் குடிக்கும் மனநிலையில்</p><p dir="ltr">நான் இப்போது இல்லை"</p><p dir="ltr">வியர்க்க விறுவிறுக்க படபடப்போடு</p><p dir="ltr">நின்றிருந்தாள்.</p><br><p dir="ltr">"கொஞ்சம் தண்ணீர் குடி"</p><p dir="ltr">என்று வலுக்கட்டாயமாக தண்ணீர்</p><p dir="ltr">குடிக்க வைத்து</p><p dir="ltr">ஆசுவாசப்படுத்தினேன்.</p><br><p dir="ltr">"நீங்க சொல்வீங்க இல்லையா...நாளிதழில்</p><p dir="ltr">போடும் செய்திகள் எல்லாம் மக்களுக்கு</p><p dir="ltr">விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் என்று..</p><p dir="ltr">நான்தான் புரிஞ்சுக்கல..."</p><br><p dir="ltr">"புரியாமல் அப்படி என்ன பண்ணிவிட்டாய்..?"</p><br><p dir="ltr">"குறி சொல்வதுபோல் வந்து எல்லாவற்றையும்</p><p dir="ltr">அள்ளிகிட்டுப் போயிட்டாளே அக்கா...</p><p dir="ltr">நான் மோசம் போயிட்டேனே</p><p dir="ltr">அக்கா..நான்</p><p dir="ltr">மோசம் போயிட்டேனே!"</p><br><br><p dir="ltr">"முதல்ல இந்த ஒப்பாரியை நிறுத்து.</p><p dir="ltr">அல்லது பேச்சை நிறுத்து..."</p><br><p dir="ltr">"ஒப்பாரி வைக்க மாட்டேன்...ஒப்பாரி</p><p dir="ltr">வைக்க மாட்டேன்.</p><p dir="ltr">இனி அவுங்க கிட்ட எப்படி சொல்லுவேன்..</p><p dir="ltr">என்னன்னு சொல்லுவேன்."</p><br><p dir="ltr">"கிளம்பு..கிளம்பு..</p><p dir="ltr">நீ சொன்னால் கேட்க மாட்டாய்?</p><p dir="ltr">விவரமாக சொல்கிறாய் என்றால் சொல்...</p><p dir="ltr">அல்லது நடையைக் கட்டு"</p><br><p dir="ltr">"அக்கா...மத்தியானம் எங்க வீட்டுக்காரர்</p><p dir="ltr">இல்லாத நேரம் பார்த்து ஒரு குறி </p><p dir="ltr">சொல்லுகிறவள் வீட்டுப் பக்கம் வந்தாள்."</p><br><p dir="ltr">"அவளிடம் குறி பார்த்தியாக்கும்."</p><br><p dir="ltr">"நானும் வீட்டுல நாலு துட்டு தங்கமாட்டேங்குதே.</p><p dir="ltr">என் கைராசி என்ன என்று பார்த்து </p><p dir="ltr">சொல்லு என்று கையை நீட்டிப்புட்டேன்."</p><br><p dir="ltr">"நீட்டுன கையில் கிடந்த வளையலை உருவிகிட்டு</p><p dir="ltr">ஓடிட்டாளா....?"</p><br><p dir="ltr">"அப்படி உறுவி இருந்தால் நான் விட்டுருப்பேனா....?</p><p dir="ltr">இழுத்துப்போட்டு நாலு சாத்து சாத்தி</p><p dir="ltr">இருக்கமாட்டேன்."</p><br><p dir="ltr">"அப்புறம்...என்னாயிற்று?"</p><br><p dir="ltr">"கையைப் பார்த்ததும் அவள் உங்கள் வீட்டுல ஒரு பிரச்சினை இருக்குன்னா."</p><br><p dir="ltr">"நீயும் ஆமா என்றகருப்ப..."</p><br><p dir="ltr">"ஒரு பிரச்சினை யா இரண்டு பிரச்சினையா?</p><p dir="ltr">நாளும் ஓராயிரம் பிரச்சினை ஓடிக்கிட்டு இருக்கு."</p><br><p dir="ltr">"அதப்போயி அவள்கிட்ட சொன்னியாக்கும்"</p><br><p dir="ltr">"நான் எதுக்குங்க சொல்லணும்.</p><p dir="ltr">அவள்தான் முதலாவதே கண்டு பிடிச்சிட்டாள"</p><br><p dir="ltr">பெரிய துப்பறியும் புலி. அவ வந்து உன் வீட்டு பிரச்சினையை கண்டுபிடிச்சகட்டா?</p><p dir="ltr">சும்மா போவியா..."</p><br><p dir="ltr">"நீங்க நம்ப மாட்டியன்னு எனக்குத்</p><p dir="ltr">தெரியும்."</p><br><p dir="ltr">"நம்புறேன் தாயி...சொல்லு."</p><br><p dir="ltr">" யாரோ செய்வினை</p><p dir="ltr">வச்சுருக்காங்க என்று சொன்னாள்"</p><br><br><p dir="ltr">"அப்புறம் அதற்குப் பரிகாரம் செய்ய</p><p dir="ltr">செம்பு நிறைய தண்ணீரும் ஒரு பாத்திரம்</p><p dir="ltr">நிறைய அரிசியும் கொண்டு வா என்று</p><p dir="ltr">சொன்னாளாக்கும்"</p><br><p dir="ltr">"அதை மட்டும் சொன்னால் பரவாயில்லையே.</p><p dir="ltr"> ஐந்நூற்று ஒரு ரூபாய் பணமும் உடுத்திருக்கிற</p><p dir="ltr"> சேலையும் கொண்டு வந்து வை .</p><p dir="ltr">என்று சொன்னாள்.</p><br><p dir="ltr">"நினச்சேன்.</p><p dir="ltr"> கடைசியில் உன்னிடமே தந்துவிடுவேன்</p><p dir="ltr"> என்றும் சொன்னாளாக்கும்"</p><br><p dir="ltr">அப்படித்தான் சொல்லி வைக்கப் சொன்னாக்கா </p><p dir="ltr"> நானும் நம்மள புடிச்ச கிரவாதி </p><p dir="ltr">இன்னையோட வீட்டை விட்டுப்</p><p dir="ltr"> போகட்டும் என்று எல்லாத்தையும் கொண்டு</p><p dir="ltr"> வச்சேன்.."</p><p dir="ltr"> </p><p dir="ltr">" கிரவாதி மட்டும் போச்சா...</p><p dir="ltr">மொத்தப் பொருளையும் எடுத்துட்டுப் போயிட்டாளா?"</p><br><p dir="ltr">"அதை மட்டும் எடுத்துட்டுப் போனால் </p><p dir="ltr">பரவாயில்லையே. இரண்டு பவுனு தங்கத்தையும்</p><p dir="ltr">அடிச்சுட்டுப் போயிட்டாளே...."</p><br><p dir="ltr">"தங்கத்தையா...?</p><p dir="ltr">தங்கம் அங்கே எப்படி வந்தது?"</p><br><p dir="ltr">"அதுதாங்கா...முதலாவது இவ்வளவும்</p><p dir="ltr">போதும் என்றவள் கடைசியில் கொஞ்சம் </p><p dir="ltr">பொன்னும் பூஜையில் வைத்தால்தான்</p><p dir="ltr">நல்லது. வீட்டில் தங்கம்</p><p dir="ltr">இருந்தால் கொண்டு வையுங்க.</p><p dir="ltr">அப்போதுதான் திருஷ்டி எல்லாம்</p><p dir="ltr">போதும் என்றாள்.</p><p dir="ltr">பூஜை முடிந்ததும் கொடுத்துவிடுவேன்</p><p dir="ltr">நன்று நம்பிக்கை வரும்படி பேசினாக்கா."</p><br><p dir="ltr">"அப்படி அவள் சொன்னதால் நீ </p><p dir="ltr">தங்கத்தையும் கொண்டு வச்சுயாக்கும்.</p><p dir="ltr">கூறு கெட்டவள...</p><p dir="ltr">...கூறுகெட்டவள"</p><br><p dir="ltr">"ஏதோ வசியம் பண்ணிட்டாக்கா....</p><p dir="ltr">முகமாத்து பண்ணிட்டாக்கா...</p><p dir="ltr">அவள் சொன்னபடி எல்லாம் நான் ஆடினேன்</p><p dir="ltr">என்றால் பாருங்களேன்."</p><br><p dir="ltr">"இந்தக் கதை எல்லாம் என்கிட்ட விடாதே.</p><p dir="ltr">முகமாத்தும் கிடையாது...சேலைமாத்தும் கிடையாது.</p><p dir="ltr">எல்லாம் உன் பேராசை.அப்புறம் அந்தத் தங்கத்துக்கு </p><p dir="ltr">என்ன சேதாரம் ஆச்சு என்று </p><p dir="ltr">சொல்லு..."</p><br><p dir="ltr">"என் கண்ணு முன்னால் ஒன்றுமே</p><p dir="ltr">ஆகலைக்கா....</p><p dir="ltr">அவள் அப்படியே நான் கொடுத்த மாதிரியே தான் திருப்பித் தந்தா....</p><p dir="ltr">ஏதோ கண் கட்டு வித்தை வச்சுபுட்டாளேக்கா...</p><p dir="ltr">நான் மோசம் போய்விட்டேனே</p><br><p dir="ltr">"மறுபடியும்...மறுபடியும் அதையே சொல்லிக்</p><p dir="ltr">கொண்டிருந்தால் நான் ரொம்ப பொல்லாதவள்</p><p dir="ltr">ஆகிடுவேன். நடந்ததை மட்டும் சொல்."</p><br><p dir="ltr">"பூஜை முடிந்து கையில் தங்கம்</p><p dir="ltr">பொதிந்து வைத்திருந்த பொட்டலத்தையும்</p><p dir="ltr">தட்டினையும் என்</p><p dir="ltr">கையில்தான் தந்தாள்....</p><p dir="ltr">கடவுள் போட்டாவுக்கு முன்னால் வைத்து</p><p dir="ltr">கும்பிட்டு பீரோவில் வை. நாற்பத்தெட்டு</p><p dir="ltr">மணி நேரத்திற்குப் பிறகுதான் நீ திரும்ப எடுத்துப்</p><p dir="ltr">பார்க்கணும் என்றாள்."</p><br><p dir="ltr">"ஏன் தங்கம் குட்டி போடுறதுக்கா?"</p><br><p dir="ltr">ம்....சொல்லு...உன்னால் நாற்பத்தெட்டு மணி நேரம்</p><p dir="ltr">பொறுக்க முடிந்திருக்காதே..."</p><br><p dir="ltr">"சரியா சொன்னீங்கக்கா....ஒருநாள் முழுவதும்</p><p dir="ltr">இருந்தேன். அதற்குள் என் மனசுக்குள்</p><p dir="ltr">ஏதோ ஒன்று வாதிச்சுகிட்டே இருந்தது.</p><p dir="ltr">போய் பீரோவைத் திறந்து பொட்டலத்தை</p><p dir="ltr">எடுத்துப் பார்த்தேன்."</p><br><p dir="ltr">" தங்கம் குட்டிப் போடலையாக்கும்.</p><p dir="ltr"> பொட்டலத்தில் இரண்டு மூன்று</p><p dir="ltr"> சல்லிக்கல்தானே </p><p dir="ltr">இருந்திருக்கும்."</p><br><p dir="ltr">"அதேதான்...அதேதான்...</p><p dir="ltr">எல்லாவற்றையும் நேரில் பார்த்ததுபோல்</p><p dir="ltr">சொல்கிறீர்களே...எப்படிக்கா உங்களுக்குத்</p><p dir="ltr">தெரியும்?"</p><br><p dir="ltr">"எத்தனை தடவை செய்தித்தாளில் படித்திருக்கிறோம்.</p><p dir="ltr">அப்படி இருந்துமா இன்னும் புத்தி வரவில்லை."</p><br><p dir="ltr">"புத்திதாங்கா மழுங்கிப் போச்சு</p><p dir="ltr">நான் என்ன சொல்வேன் யாரிடம் போய்</p><p dir="ltr">சொல்லுவேன்.?"</p><br><p dir="ltr">"யாருகிட்ட போய் சொல்லப் போற...</p><p dir="ltr">போலீசுக்குப் போ..."</p><br><p dir="ltr">"போலீசுக்கு போனால் என்னை மடக்கி மடக்கி</p><p dir="ltr">கேள்வி கேட்பாவளே..."</p><br><p dir="ltr">"ஏன்....நீ ஏதும் தப்பு பண்ணுனியா?</p><p dir="ltr">இல்லை இல்ல....அப்புறம் எதற்குப் பயம்?"</p><br><p dir="ltr">"வெளியில் தெரிஞ்சா எல்லோரும் சிரிப்பாவளக்கா..."</p><br><p dir="ltr">"அதற்காக வெளியில் சொல்லாமல் </p><p dir="ltr">இருக்கப் போறியா?"</p><p dir="ltr">வீட்டுக்காரரிடம் விசயத்தைப் சொல்லி</p><p dir="ltr">இரண்டுபேருமாக சேர்ந்து போலீசுக்கு போய்</p><p dir="ltr">புகார் எழுதி கொடுங்க..."</p><br><p dir="ltr">"போலீசுக்கு போனால் கிடைச்சுடுமாக்கா?"</p><br><p dir="ltr">"சும்மா வளவள என்று பேசாமல் </p><p dir="ltr">போய் ஆக வேண்டிய காரியத்தைப் பாரு</p><p dir="ltr">கண்டுபிடித்து கொடுப்பாங்க"</p><br><p dir="ltr">"சரிக்கா...சரிக்கா" என்றபடி</p><p dir="ltr">வீட்டை நோக்கி ஓடினாள்.</p><br><p dir="ltr">இப்போது நாளிதழுக்கு இன்னொரு செய்தியாகிப்</p><p dir="ltr">போனாள் பார்வதி.</p><br><p dir="ltr">மனதிற்குள் ஏதேதோ ஓடிக்கொண்டிருந்தது.இதே மாதிரியான மோசடிகள் நடைபெறுவது</p><p dir="ltr">செய்தித்தாள்களில் எத்தனைமுறை வந்திருக்கும்.</p><br><p dir="ltr">இப்படிப்பட்ட செய்திகளை</p><p dir="ltr">எத்தனைமுறை நான்</p><p dir="ltr">செய்தித்தாளில் படித்திருப்பேன்.</p><p dir="ltr">ஆனால் கவனமாக இருக்க வேண்டும்</p><p dir="ltr">என்ற நினைப்பு வந்திருந்தால் இப்படி</p><p dir="ltr">நடந்திருக்குமா?</p><p dir="ltr">புலம்பிக் கொண்டே தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டாள்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">எந்தந்த மாதிரி எல்லாம் ஏமாற்று வேலைகள்</p><p dir="ltr">நடைபெறுகின்றன.</p><p dir="ltr">என்னென்ன வார்த்தைகள் பேசி </p><p dir="ltr">ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது நமக்கும்</p><p dir="ltr">தெரிய வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்டவர்களை</p><p dir="ltr">நேரடியாக சந்தித்து பேட்டி எடுத்து செய்தியாக</p><p dir="ltr">வெளியிடுகிறார்கள்.</p><p dir="ltr">எல்லாவற்றையும் விலாவாரியாக வாசித்திருந்துமா எனக்குப் புரியல?</p><br><p dir="ltr">எதற்காக படித்தேன். மனப்பாடம் செய்து தேர்வு</p><p dir="ltr">எழுதவா? </p><br><p dir="ltr">மனதில் பதிய வைத்து கவனமாக</p><p dir="ltr">நடந்து கொள்ள வேண்டும் என்ற புத்தி வரலியே</p><p dir="ltr"><br></p><p dir="ltr">என்னைப் போன்ற ஏமாளிகள் இருக்கிறவரை <br></p><p dir="ltr">ஏமாற்றுக்காரர்கள் தங்கள் வலையை </p><p dir="ltr">விரித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.</p> இனியாவது கவனமாக இருக்கணும்.<div>என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.</div><div><br><div>இப்போது என் தங்கம் கிடைக்குமா?</div><div>போலீசுக்குப் போனால் ஆயிரம் கேள்வி</div><div>கேட்பார்கள்.</div><div>பண்பும் கேட்பார்கள்...</div><div>வேறு என்ன வழி...</div><div>மனம் கணக்குப் போட்டுப்</div><div>பார்த்தது.</div><div><br></div><div>சட்டென்று ஒரு நினைவு.</div><div>ஆம் இப்படிச் செய்தால் என்ன?</div><div><br></div><div>வழுக்கம் பாறையில்</div><div>ஒரு பெண் குறி சொல்வாளாமே...</div><div>தொலைந்த பொருளையெல்லாம் கண்டு பிடித்துக் கொடுப்பாராளாம்...</div><div>.</div><div>அவளிடம் போய் கேட்டால் என்ன?</div><div>கால்கள் தடுமாறின....இல்லை தடம் மாறின.</div><div><br></div><div>"எங்கே போற ...."ஒரு குரல் வந்து தடுத்தது.</div><div>கை முதுகின் மீது விழுந்தது.</div><div><br></div><div>"இல்ல....வழுக்கள் பாறையில..."</div><div><br></div><div>"மறுபடியும் குறி கேட்கப் போறியா?</div><div>நீங்கள் எல்லாம் பட்டும் திருத்த மாட்டீங்களா?"</div><div><br></div><div>"உன்னை மாதிரி மனதில் தடுமாற்றம் இருப்பவர்கள் இருக்கும் வரை<br></div><div>குறி சொல்பவர்கள் காட்டில் அடைமழை தான். போ...போ... மறுபடியும் இருக்கிற காசை எல்லாம் குறிகாரிக்குக் கொடு.</div><div><br></div><div>பொருளைத் தொலைத்தால் போலீஸ் ஸ்டேஷன் போ....அவர்கள் கண்டுபிடித்துக் கொடுப்பார்கள்..</div><div>.அதைவிட்டுவிட்டு மறுபடியும்</div><div>களவாடியவளிடமே போய் நிற்பேன் என்கிறாய்...போ...போ...</div><div>துரத்தியது குரல்....</div><div><br></div><div>எங்கே போவாள்..குறிகாரியிடமா?</div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div><div><br><p dir="ltr"><br></p><br><br><br><br><br><br><br><br><br><br><br></div></div>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-37409123266486712632024-03-14T17:33:00.001-07:002024-03-14T17:35:37.709-07:00கூலி பாக்கி வைக்க வேண்டாம் <p dir="ltr"><b>கூலி பாக்கி வைக்க வேண்டாம் </b></p><p dir="ltr"><br></p><p dir="ltr">வேலைக்கு கூலி வேண்டும்.</p><p dir="ltr"> கூலிக்கு வேலை வேண்டும்.</p><p dir="ltr"> என்ன இது ....இரண்டும் ஒன்றுதானே ....இன்னொருமுறை வாசியுங்கள்.</p><p dir="ltr"> பொருள் வேறு வேறு இல்லையா!</p><p dir="ltr"> இதுதான் நாடு முழுவதும் கேட்கும் குரல்கள்.</p><p dir="ltr"> வேலை இருப்பவனுக்கு சரியான கூலி இல்லை.</p><p dir="ltr"> கூலிக்கு வேலை கிடைக்குமா என்ற கூப்பாடு மறுபக்கம்.</p><p dir="ltr"> இப்படி இந்த இரண்டையும் சுற்றி சுற்றிதான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது.</p><p dir="ltr"> வேலை செய்தவனுக்கு கூலி கொடுங்கப்பா...</p><p dir="ltr"> தொழிற் சங்கங்கள் கரடியாய்க் கத்தினாலும் காது கொடுத்துக்</p><p dir="ltr"> கேட்காத முதலாளி வர்க்கம்.</p><p dir="ltr"> அதுவும் தினக்கூலிகள் படும்பாடு....பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு, சாயங்காலம் கூலி வாங்க முதலாளி முன் கூனிக்குறுகி</p><p dir="ltr"> நிற்பதைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும்.</p><p dir="ltr"> வேலைதான் செய்தாகி விட்டதே முழு ஊதியத்தையும் தொழிலாளி கையில் கொடுப்பதில்லை. </p><p dir="ltr"> இடையில் சூப்ரவைசர் என்ற இடைத்தரகர் ஒருவர் இருப்பார். அவருக்கு கொடுக்க வேண்டிய படியைப் போட்டால்தான் அடுத்தநாள் வேலைக்கு வைப்பார்.</p><p dir="ltr"> இப்படி வேலைக்கான கூலியை வாங்குவதற்குள் திக்திக்கென்று</p><p dir="ltr">அடிக்கும்.</p><p dir="ltr">அந்தக் கூலிக்குள் தான் எத்தனை உயிர் இருக்கிறது என்பது தினக்கூலி வாங்கும் பணியாளருக்கு மட்டும் தான் தெரியும்.</p><br><p dir="ltr">கூலியை எதிர் நோக்கியே பலரின் வாழ்க்கைச் சக்கரம் </p><p dir="ltr">ஓடுகிறது.</p><br><p dir="ltr"> உடல் உழைப்புக்குக் கட்டாயம் கூலி கொடுத்தாக வேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.</p><p dir="ltr">இன்றுபோய் நாளை வா என்று</p><p dir="ltr">கடத்துதல் கூடாது.</p><p dir="ltr">வயிறு ஒருநாள் உணவு உண்ணாமல்</p><p dir="ltr">ஒழி என்றால் ஒழியுமா?</p><p dir="ltr">வயிற்றுக்குச் சோறு வேண்டும்.</p><p dir="ltr">அதற்காகத்தான் இந்த உழைப்பு.</p><br><p dir="ltr">வேலை முடிந்ததும் கூலி கையில்</p><p dir="ltr">கொடுக்க வேண்டும். பாக்கி வைக்கக் கூடாது.</p><p dir="ltr"> அதுவும் இந்த ஐந்து பேர் கூலியை மட்டும் பாக்கி வைத்து விடாதீர்கள் என்கிறார் உலக நாதர் என்ற புலவர்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> நீங்கள் யாருடைய கூலியிலும் கை வையுங்க.. வைக்காம போங்க...</p><p dir="ltr"> ஆனால் இந்த ஐந்து பேர் கூலியில் மட்டும் கை வைக்காதீர்கள்...என்று ஓங்கி உரைக்கிறார்.</p><br><p dir="ltr"> யார் அந்த ஐந்து பேர்? </p><p dir="ltr">அறிய வேண்டும் என்று ஆவலாக இருக்கிறதல்லவா?</p><br><p dir="ltr"> அதனை உலக நீதி என்ற நூலில் உலக நாதர் அழகாக கூறியுள்ளார்.</p><p dir="ltr">வாருங்கள் யார் அவர்கள் என்று பார்த்து விடுவோம்.</p><br><p dir="ltr"> முதலாவதாக நம் துணிகளைத் துவைத்துத் தரும் சலவைத் தொழிலாளி.</p><p dir="ltr"> நம்மை நாலுபேர் மத்தியில் அடையாளம் காட்டி நிற்பது உடை தான்.</p><br><p dir="ltr"> ஆள் பாதி ; ஆடை பாதி.</p><p dir="ltr">ஒருவர் உடுத்திய </p><p dir="ltr">அழுக்கு ஆடையை பிறர் ஒருவர் துவைத்துத் தருதல் என்பது பெரும்பணி. பொறுமை இருக்கும் ஒருவரால் மட்டுமே இதனைச் செய்ய முடியும்.</p><p dir="ltr"> ஆடையை தூய்மையாகத் துவைத்துத் தரும் பணியைச் செய்யும் சலவைத் தொழிலாளியின் கூலியை ஒருபோதும் வைத்திருந்தல் கூடாதாம்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> இரண்டாவதாக ...நமக்குப் பாதுகாப்பாக அழகாக முடிதிருத்தும் தொழிலாளி... </p><p dir="ltr"> அவர் மட்டும் இல்லை என்றால் நாம் எப்படி இருந்திருப்போம்.?</p><p dir="ltr"> கற்பனை செய்து பாருங்கள்.</p><p dir="ltr">ஆதிகால மனிதனாகவே அலைய வேண்டியிருக்கும்.</p><p dir="ltr"> நம்மை அழகுபடுத்திப் பார்ப்பவர் அவர்தான்.</p><p dir="ltr"> முகத்தில் எத்தனை முறை சவரம் செய்திருப்பார். </p><p dir="ltr"> ஒரு வடு வர விட்டுவிடுவாரா?</p><p dir="ltr">பார்த்துப் பார்த்து செதுக்கிய சிலை போல</p><p dir="ltr">நம்மை அழகுபடுத்தியர் இவரல்லவா?</p><p dir="ltr"> கவனமாகத் தன் தொழிலைச் செய்யும்</p><p dir="ltr">முடிதிருத்தும் தொழிலாளி கூலியை ஒருபோதும் வைத்திருக்கக்</p><p dir="ltr"> கூடாதாம்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> மூன்றாவதாக அனைத்துக் கலைகளையும் கற்றுத்தரும்</p><p dir="ltr"> ஆசிரியர்.</p><p dir="ltr">ஆசிரியர் கற்றுத் தரவில்லை என்றால் நமக்கு எந்தக் கலையுமே தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது.</p><p dir="ltr">"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்."</p><br><p dir="ltr">ஆசிரியர் கற்றுத் தரவில்லை என்றால் எண்ணும் தெரியாது. எழுத்தும் தெரியாது.</p><p dir="ltr">குருடர்களாக மலங்க மலங்க விழிக்க வேண்டியதுதான்.</p><br><p dir="ltr"> கற்றுக் கொடுப்பவர் அனைவரும் ஆசிரியரே... அது எந்தக் கலையாகவும் இருக்கலாம்.</p><p dir="ltr"> அப்படிப்பட்ட ஆசிரியர் கூலியைக் கண்டிப்பாகக் கொடுத்துவிட வேண்டுமாம்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> நான்காவதாக பிரசவ நேரத்தில் உடனிருந்து நஞ்சுக்கொடி அறுக்கும் மருத்துவச்சி.</p><br><p dir="ltr"> பிரசவம் மறு பிறப்பு என்று சொல்வார்கள்.</p><br><p dir="ltr"> அந்தக் காலத்தில் எல்லாம் மகப்பேறு மருத்துவராக இருந்து அனைத்து உதவிகளையும் செய்பவரை மருத்துவச்சி என்று கூறுவர்.</p><p dir="ltr">கிராமப்புறங்களில் இன்றும் இவர்களைக் காண முடியும்.</p><p dir="ltr">பிரசவத்தின்போது நஞ்சுக்கொடி விழவில்லை என்றால் தாய் மரணிக்க நேரிடும்.</p><p dir="ltr"> கூடவே இருந்து தாயையும் சேயையும் காப்பாற்றிக் கொடுக்கும் பெரும்பணி மருத்துவச்சி கையில்தான் இருக்கும்.</p><p dir="ltr"> நமக்கு மறுபிறப்பு கொடுக்கும் மருத்துவச்சி கூலியை ஒருபோதும் வைத்திருத்தல் கூடாதாம்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> ஐந்தாவதாக நம் உடல் நோவு தீர மருந்து தரும் மருத்துவர்.</p><p dir="ltr"> தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.</p><p dir="ltr"> வயிற்றுவலி வந்துவிட்டால் துடியாய்த் துடிப்போம்.</p><p dir="ltr"> காதுவலி வந்துவிட்டால் ஐயோ...சாகலாம்போல் இருக்கே என்று</p><p dir="ltr"> அலறுவோம்.ஒரு பல்வலிக்குத் தாங்க மாட்டோம்.</p><p dir="ltr"> இப்படிப்பட்ட நோவிலிருந்து எல்லாம் நம்மைக் காப்பாற்றுபவர்</p><p dir="ltr"> மருத்துவர்.</p><p dir="ltr"> அவர் இல்லை என்றால்... அப்பப்பா வேண்டாமப்பா...அந்த</p><p dir="ltr"> நரக வேதனை.</p><p dir="ltr"> இவர் வேண்டப்பட்டவர். அவர் வேண்டாதவர் என்று பாகுபாடு</p><p dir="ltr"> பாராது நேரம்காலம் இல்லாமல் நம் நோய்தீர்க்க மருந்து தந்து</p><p dir="ltr"> நம்மை குணப்படுத்துபவர் மருத்துவர்.</p><p dir="ltr"> அவர் கூலியைப் பாக்கி இல்லாமல் கொடுத்திடுங்கள்</p><p dir="ltr"> என்கிறார் உலக நாதர்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> இவர்கள் கூலியை கடனே என்று முணுமுணுப்போடு</p><p dir="ltr"> கொடுத்தல் கூடாதாம்.</p><p dir="ltr"> நம்மை மகிழ்ச்சியாக்க நமக்காக உழைத்தவர்களை நாம்</p><p dir="ltr"> மகிழ்வித்துப் பார்த்தல்தானே அறம்.</p><br><p dir="ltr"> அந்த அறச்செயலை மகிழ்வோடு செய்யுங்கள்.</p><p dir="ltr"> அப்படி அவர்களுக்கான கூலியைக் கொடுக்காது விட்டுவிட்டால்.... ?</p><p dir="ltr">என்ன நிகழும்?</p><br><p dir="ltr"> அதனை நான் சொல்ல மாட்டேன் .</p><p dir="ltr"> எமனே பார்த்துக் கொள்வான் .</p><p dir="ltr">என்று கூலி கொடுக்காது ஏமாற்றுபவர்களை எமன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டார் உலகநாதர்.</p><br><p dir="ltr">அச்சமாக இருக்கிறதில்லையா?</p><br><p dir="ltr"> எமன் கையில் அகப்பட்டால்... </p><p dir="ltr">அவன் ஏதேது</p><p dir="ltr">செய்வானோ ...?</p><p dir="ltr"> </p><p dir="ltr">அதற்குப் பிறகு அம்மாடியோ என்றாலும் விடமாட்டான்... </p><p dir="ltr">ஆத்தாடியோ என்றாலும் விடமாட்டான் என்று நமக்காகப்</p><p dir="ltr"> பரிதாபப்படுகிறார் உலக நாதர்.</p><br><p dir="ltr"> பயமாக இருக்கிறது இல்லையா?... எமன் செய்வது ஒருபக்கம் </p><p dir="ltr"> இருக்கட்டும். நமக்கே மனசாட்சி இருக்கிறது இல்லையா?</p><br><p dir="ltr"> இதுவரை பாக்கி வைத்திருந்தாலும் இனியாவது பார்த்து </p><p dir="ltr"> நடந்து கொள்ளுங்கள்.</p><p dir="ltr"> பாடலை வாசித்து யார் யாருக்கு கூலி பாக்கி வைக்கக்கூடாது என்று மனதில் </p><p dir="ltr">எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.</p><br><p dir="ltr">இதோ உலகநாதரின் பாடல் உங்களுக்காக.... </p><br><p dir="ltr">அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்</p><p dir="ltr">அது ஏது இங்கு சொல்லக் கேளாய்</p><p dir="ltr">தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி</p><p dir="ltr">சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி</p><p dir="ltr">வஞ்சமற நஞ்சு அறுத்த மறுத்துவச்சு கூலி</p><p dir="ltr">மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி</p><p dir="ltr">இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை</p><p dir="ltr">ஏதெது செய்வானோ எமன்றானே!</p><br><p dir="ltr"> உலகநீதி_ பாடல். 11</p><br><br><p dir="ltr"> English translation : </p><br><br><p dir="ltr"> Do not deprive the wages of five groups of people</p><p dir="ltr"> Listen, when I say these groups are </p><p dir="ltr"> The wages of washerman and hairdresser</p><p dir="ltr"> The wages of the teacher who taught you all</p><p dir="ltr"> The wages of the midwife who cut the umbilical chord</p><p dir="ltr"> The wages of the physician who saved you from pain</p><p dir="ltr"> What kind of fate will they have to face</p><p dir="ltr"> Who don't pay them with a pleasant word.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr">மறுபடியும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.</p><br><p dir="ltr">சலவைத் தொழிலாளி</p><p dir="ltr">முடி திருத்துபவர்.</p><p dir="ltr">ஆசிரியர்</p><p dir="ltr">மருத்துவச்சி</p><p dir="ltr">மருத்துவர் </p><p dir="ltr">இவர்கள் ஐவர் கூலியையும்</p><p dir="ltr">உடனே கொடுத்துவிட வேண்டும்.</p><p dir="ltr">நல்ல பாடல் இல்லையா?</p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-63094751186395306862024-03-14T14:37:00.001-07:002024-03-14T14:39:33.657-07:00இருந்தவளைப் போனவளை<p dir="ltr"><b>இருந்தவளைப் போனவளை </b></p><p dir="ltr"><b><br></b></p><p dir="ltr">பத்தாயிரம் கவிதை</p><p dir="ltr">முத்தாக அள்ளி வைத்த</p><p dir="ltr">சத்தான கம்பனுக்கு</p><p dir="ltr">ஈடு இன்னும் </p><p dir="ltr">வித்தாகவில்லை என்று பாடு"என்பார் கண்ணதாசன்</p><br><p dir="ltr">இந்தப் பத்தாயிரம் மட்டும்தானா...</p><p dir="ltr">இன்னும் உண்டு சத்தான பாடல்கள்.</p><p dir="ltr">தனிப்பாடல் திரட்டிலிருந்து கம்பர்</p><p dir="ltr">முத்தாக அள்ளி வைத்த</p><p dir="ltr">பாடல்கள் பல உண்டு.</p><p dir="ltr">அவற்றிலிருந்து </p><p dir="ltr">இதோ உங்களுக்காக ஒரே ஒரு பாடல்.</p><br><p dir="ltr">தன் மகள் காதல் வயப்பட்டு விட்டாள்.</p><p dir="ltr">அதனால் அவள் </p><p dir="ltr">உடல் மெலிந்தாள்.கைவளை</p><p dir="ltr">கழன்று காணாமல் போனது.</p><p dir="ltr">இதற்குக் காரணம் யார்?</p><p dir="ltr">யாரைப் பார்த்தாள்?</p><p dir="ltr">யார் மீது காதல் கொண்டாள்?</p><p dir="ltr">வேறு எங்கும் செல்லவில்லையே...அப்படியானால்....</p><p dir="ltr">அப்படியானால்....</p><p dir="ltr">யாராக இருக்கும்?</p><p dir="ltr">தாயின் மனம் கலக்கத்தில் கண்டபடி</p><p dir="ltr">ஏதேதோ புலம்பத் தொடங்குகிறது.</p><br><p dir="ltr">அன்றொருநாள் அவள் பார்த்த</p><p dir="ltr">அவன் அவனேதான். அவன் ஆகத்தான் இருக்க வேண்டும் .</p><br><p dir="ltr">யாராக இருக்க வேண்டும் என்கிறாள்?</p><br><br><p dir="ltr">தாய் தன் மகளின் காதல் பற்றிச் சொல்கிறாள். கேளுங்கள்.</p><br><p dir="ltr">தவளை தத்திப் பாயும்போது </p><p dir="ltr">தவளையின் கால்கள் பூவில் பட்டு அதில் இருக்கு தேன் மழைபோல் </p><p dir="ltr">கீழே சொரியும் .</p><p dir="ltr">அப்படிப்பட்ட வளமுடைய பொன்னியாறு பாயும் வளநாடு. </p><br><p dir="ltr">அங்கு மாதத்தன் என்பவன் </p><p dir="ltr">ஆட்சி செய்து வந்தான்.</p><p dir="ltr">ஒருநாள் மாதத்தன் தெருவில் உலா வருகிறான்.</p><p dir="ltr">சேவகர்கள் புடைசூழ பலத்த பாதுகாப்போடு வருகிறான் என்று முன்னறிவிப்பு</p><p dir="ltr">வருகிறது.</p><br><p dir="ltr">மன்னனைக் காண மக்கள் கூட்டம்.</p><p dir="ltr">இளம் பெண்கள் மறைந்து நின்று</p><p dir="ltr">மன்னனைக் காணவேண்டும்</p><p dir="ltr">என்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டு நிற்கின்றனர்.</p><br><p dir="ltr">மன்னனும் வருகிறான்.அவன் தடந்தோள் கண்ட தலைவி மெய்மறந்து அப்படியே</p><p dir="ltr">நிற்கிறாள்.</p><br><p dir="ltr">அப்போது ....</p><p dir="ltr">அவள் கையில் பொருந்தியிருந்த வளையல்களை அவன் பறித்துக்கொண்டு போய்விட்டான். </p><br><p dir="ltr">அதெப்படி?</p><br><p dir="ltr">பார்த்த மாத்திரத்தில் கைவளையல்களைப்</p><p dir="ltr">பறித்துக் கொள்ள முடியும்?</p><br><p dir="ltr">அதுதான் காதல்.</p><br><p dir="ltr">காதல் வயப்பட்டாள்.</p><p dir="ltr">அவன் நினைவினில் மிதந்தாள்.</p><p dir="ltr">ஊன் மறந்தாள்.</p><p dir="ltr">உறக்கம் தொலைத்தாள்.</p><p dir="ltr">உடல் மெலிந்தாள்.</p><p dir="ltr">கைவளைக் கழன்று ஓடியது.</p><p dir="ltr">இதனை இப்படிச் சொன்னாள் தாய்.</p><br><p dir="ltr">கம்பர் நடையில் கண்ணதாசன் பாடலுக்கே </p><p dir="ltr">வித்தாக அமைந்த பாடல் உங்களுக்காக.</p><br><br><p dir="ltr">"இருந்தவளைப் போனவளை</p><p dir="ltr">யென்னை யவளைப்</p><p dir="ltr">பொருந்தவளை பறித்துப்</p><p dir="ltr">போனான் - பெருந்தவளை</p><p dir="ltr">பூதத்தத் தேன் சொரியும்</p><p dir="ltr">பொன்னி வளநாட்டின்</p><p dir="ltr">மாத்தத்தன் வீதியினில் வந்து"(18)</p><br><p dir="ltr">மாத்தத்தன் வீதியினில் வந்தான்.</p><br><p dir="ltr">இருந்தவளை போனவளை</p><p dir="ltr">பொருந்தவளை பறித்துப்</p><p dir="ltr">போனான் என்கிறாள்.</p><p dir="ltr">பொருந்த வளை பறித்துப் போனவன்</p><p dir="ltr">யார் என்ற கேள்விக்குப் பதிலாக</p><p dir="ltr">பெருந் தவளை</p><p dir="ltr">பூதத்தத் தேன் சொரியும்</p><p dir="ltr">பொன்னி வளநாட்டு மாத்தத்தன் </p><p dir="ltr">என்று சொல்கிறாள்.</p><br><p dir="ltr">இப்படித் தாயைச் சொல்ல வைத்துத் தன் கவியோடு </p><p dir="ltr">நம்மையும் வளையிட்டு</p><p dir="ltr">அழைத்துச் சென்ற </p><p dir="ltr">கம்பர் பாடலின் கவி நயத்தை</p><p dir="ltr">என்னவென்பது?</p><br><p dir="ltr">இந்தப் பாடலைத் தான் கவியரசர்</p><p dir="ltr">கண்ணதாசன் </p><p dir="ltr">சின்னவளை முகம் சிவந்தவளை</p><p dir="ltr">சேர்த்துக் கொள்வேன் </p><p dir="ltr">கரம் தொட்டு</p><p dir="ltr">என்ன வளை </p><p dir="ltr">காதல் சொன்னவளை</p><p dir="ltr">ஏற்றுக் கொண்டேன் </p><p dir="ltr">வளையிட்டு </p><p dir="ltr">வந்தவளைக் கரம் தந்தவளை</p><p dir="ltr">நீ வளைத்துக் கொண்டாய் </p><p dir="ltr">வளையிட்டு</p><p dir="ltr">பொங்குவளை கண்கள் </p><p dir="ltr">கொண்டவளை</p><p dir="ltr">புதுப் பூப்போல் பூப்போல் தொட்டு</p><p dir="ltr">என்று பாடியிருப்பாரோ?</p><br><br><br><p dir="ltr">"</p><p dir="ltr"> </p>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-82195526689467860822024-03-09T07:42:00.001-08:002024-03-09T07:44:25.004-08:00அன்னக்கிளி அக்கா <p dir="ltr"><b>அன்னக்கிளி அக்கா </b></p><p dir="ltr">விசயத்தைக் கேள்விப்பட்ட நேரத்தில் இருந்து</p><p dir="ltr">அழுது கொண்டே இருந்தாள் அன்னக்கிளி.</p><br><p dir="ltr">"நிஜமாத்தான் சொல்லுறீயளா...</p><p dir="ltr">யாரு சொன்னா...மாப்பிள்ளை</p><p dir="ltr"> சொன்னாவளா அவுங்க</p><p dir="ltr">ஆத்தாகாரி சொன்னாவளா..."</p><p dir="ltr">அப்பா வந்து சொன்ன நேரத்தில் இருந்து</p><p dir="ltr">அப்பாவை கேள்வி கேட்டுக் கேட்டு</p><p dir="ltr"> குடைந்து எடுத்து விட்டார் அம்மா.</p><br><p dir="ltr">" என்ன ....யாதுன்னு சொல்லிபுட்டேன்ல்ல...</p><p dir="ltr">இனி ஆக வேண்டியதைப் பாரக்க வேண்டியதுதான்"</p><p dir="ltr">சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில்</p><p dir="ltr">போட்டுவிட்டு வாசலை நோக்கி நடந்தார் அப்பா.</p><br><p dir="ltr">"என்ன சொல்றிய...சட்டியா? பானையா?</p><p dir="ltr">உடனே மாப்பிள்ளை சொல்ற மாதிரி</p><p dir="ltr">மாத்துகிறதுக்கு...."</p><p dir="ltr">வார்த்தைகளைக் குறுக்கே போட்டு</p><p dir="ltr">அப்பாவைப் போக விடாமல் தடுத்தார்</p><p dir="ltr">அம்மா.</p><br><p dir="ltr">"பின்ன என்னை என்ன </p><p dir="ltr">செய்யச் சொல்லுற..."</p><p dir="ltr">அப்பாவின் குரலில் ஒரு இயலாமை</p><p dir="ltr">தெரிந்தது.கூடவே இனி பேசி என்ன ஆகப்போகுது என்ற விரக்தியும் இருந்தது.</p><br><p dir="ltr">என்ன செய்ய முடியும்?</p><p dir="ltr">வேறு எப்படித்தான் சொல்ல முடியும் ?</p><p dir="ltr">அன்னக்கிளி அவரு பெத்த புள்ளதானே...</p><p dir="ltr">வருத்தம் இல்லாமலா இருக்கும்...?</p><p dir="ltr">கடனவுடன வாங்கி கட்டிக் கொடுத்துவிட்டு</p><p dir="ltr">கடனை அடைத்து இன்னும் குறுக்கு</p><p dir="ltr">நிவுறல. அதுக்குள்ள வந்து</p><p dir="ltr">இப்படி ஒரு குண்டத்தூக்கிப் போட்டா</p><p dir="ltr">எந்த அப்பனாலத்தான் தாங்கிக் கொள்ள முடியும்.</p><br><p dir="ltr">ஆம்புளப்புள்ளய பெத்தவுக பொசுக்குன்னு</p><p dir="ltr">சொல்லிப்புடுவாவ.</p><p dir="ltr">இரண்டும் பொட்டப்புள்ளையா பெத்து</p><p dir="ltr">வச்சிகிட்டு கண்ணக் கண்ணத் தள்ளிகிட்டு</p><p dir="ltr">நிற்பவருட்ட போயி...</p><p dir="ltr">என்னத்த சொல்ல பாவம் மனுஷன்</p><p dir="ltr">நொந்து போயி வந்துருக்காரு..</p><br><br><p dir="ltr">"ஐயோ...நல்ல நல்ல சம்பந்தம்</p><p dir="ltr">எல்லாம் வந்துதே....நீங்க தானே...</p><p dir="ltr">நல்ல தோட்டமும் தொரவும் இருக்கு...</p><p dir="ltr">நல்ல குடும்பம் என்று சொன்னிய...</p><p dir="ltr">இந்தப் பாழாப் போன குடும்பத்துல</p><p dir="ltr">கட்டிக் கொடுக்க சம்மதிச்சிய...."</p><p dir="ltr">அம்மா இந்த நேரத்திலும் அப்பாவை</p><p dir="ltr">நோகடிக்கத் தவறவில்லை.</p><br><p dir="ltr">"இப்பவும் அதைத்தான் சொல்றேன்.</p><p dir="ltr">நல்ல குடும்பம்தான்.</p><p dir="ltr">மாப்பிள்ளைக்குப் பிள்ளையைப் பிடிக்கல என்று</p><p dir="ltr">சொன்ன பிறகு என்ன பண்ண முடியும்.?"</p><br><br><p dir="ltr">"இந்த இழவ கலியாணத்திற்கு முன்னேயே</p><p dir="ltr">சொல்லி தொலைச்சிருக்க வேண்டியதுதானே...</p><p dir="ltr">ஊருல ஒரு பொட்ட பிள்ளை </p><p dir="ltr">கண்ணுல தெரியல </p><p dir="ltr">என் பிள்ளைதான் கிடைச்சாளாக்கும்...</p><p dir="ltr">எதுக்கு வேண்டாம் என்கிறாவளாம்..."</p><p dir="ltr">இப்போது அம்மாவின் கோபம் </p><p dir="ltr">மாப்பிள்ளை பக்கம்</p><p dir="ltr">திரும்பியது.</p><br><p dir="ltr">"பொண்ணு சுறுசுறுப்பு காணாதாம்.</p><p dir="ltr">நாகரீகம் தெரியாதவளாம். அசமந்தம்</p><p dir="ltr">என்று சொல்றாவளாம்"</p><br><p dir="ltr">"என் பிள்ளைக்கு என்ன சுறுசுறுப்புக்குக்</p><p dir="ltr">குறைச்சல்.</p><p dir="ltr">சோறு ஆக்கிப் போடலியா.. ஊடு கூட்டலியா...</p><p dir="ltr">மாட்டுக்குத் தண்ணி எடுத்து ஊத்தலியா...</p><p dir="ltr">சாணி அள்ளிப் போடலியா...</p><p dir="ltr">துணி துவச்சிப் போடலியா....</p><p dir="ltr">இதுக்கு மேல என்ன சுறுசுறுப்பு வேணுமாம். அசமந்தம் என்று சொன்னானாமா...</p><p dir="ltr">அவன் ரொம்ப புடுங்கி தள்ளிட்டானோ?</p><p dir="ltr">ஒரு வரப்பு வெட்டத் தெரியாது...சம்சாரியாம் சம்சாரி"</p><p dir="ltr">புலம்பித் தள்ளினார் அம்மா.</p><br><p dir="ltr">"புலம்பாம கொஞ்சம் சும்மா இருக்கியா...</p><p dir="ltr">கொஞ்சம் மனுசனை நிம்மதியா இருக்க விடு . அவன் வரப்பு வெட்டுனா என்ன வாய்க்கால வெட்டுனா நமக்கென்ன....</p><p dir="ltr">அந்தப் பேச்சை விடு.கழுதையா இருந்தாலும் காக்கழஞ்சு யோகத்துல பொறக்கணும்ன்னு சொல்லுவா எங்க ஆத்தா. நம்ம பிள்ளைக்கு அந்த யோகமும் இல்லய"என்றார் அப்பா</p><br><br><br><p dir="ltr">அம்மாவோ அப்பாவை கொஞ்சம்கூட யோசிக்க விடாமல்</p><p dir="ltr">புலம்பிக் கொண்டே இருந்தார் .</p><br><p dir="ltr">"உமக்கு என்ன ... நீருபாட்டுக்குச் சொல்லிபுட்டுப்</p><p dir="ltr">போயிடுவீரு...</p><p dir="ltr">நித்தம் நித்தம் அது என் கண்ணுமின்ன </p><p dir="ltr">கண்ணைக் கசக்கிட்டு நிக்கும...</p><p dir="ltr">இப்ப பாரும். இப்பவும் மூலையில உட்கார்ந்து</p><p dir="ltr">அழுதுகிட்டுத்தான் இருக்கு....</p><p dir="ltr">என் மவளுக்கு அழத்தான் தெரியும்.</p><p dir="ltr">நாலு சனத்த மாதிரி </p><p dir="ltr">ஒரு கடுஞ்சொல் சொல்லத் தெரியாது.</p><p dir="ltr">அப்படி தங்கமா என் பிள்ளையை வளர்த்து</p><p dir="ltr">வச்சுருக்கேன்...சும்மா சொல்லிப்புட்டான்</p><p dir="ltr">ஒத்த வார்த்தையில. சுறுசுறுப்பு காணாது...</p><p dir="ltr">நாகரீகம் தெரியாது என்று...."</p><p dir="ltr">பெத்த மனசு கெடந்து தவிப்பது</p><p dir="ltr">வார்த்தையாய் வந்து விழுந்தது.</p><br><br><p dir="ltr">" இப்போ நீ என்னதான் சொல்ல</p><p dir="ltr">வார...என்னையும் சேர்த்து கண்ணைக் </p><p dir="ltr">கசக்கிட்டு மூலையில உட்காரச் சொல்லுறீயா..."</p><p dir="ltr">அப்பாவுக்கு அம்மா பேசப் பேச </p><p dir="ltr">மேலும் எரிச்சல் கூடியது.</p><br><p dir="ltr">"உம்ம ஒண்ணும் சொல்லலய்யா...</p><p dir="ltr">நீரு போவும்...மாப்பிள்ளை மாதிரி ஊரைச்</p><p dir="ltr">சுத்தி வாரும் "</p><p dir="ltr">அப்பாவைப் போட்டுத் தாக்கிவிட்டு</p><p dir="ltr">விருட்டென்று அழுது கொண்டே</p><p dir="ltr">மாட்டுத் தொழுவு பக்கம் போனார் அம்மா.</p><br><br><p dir="ltr">அங்கே ஒரு தூணில் சாய்ந்தபடி</p><p dir="ltr">வாய் பேச முடியாமல் உள்ளுக்குள்</p><p dir="ltr">ஊமையாய் அழுது கொண்டிருந்தாள்</p><p dir="ltr">அக்கா.</p><br><p dir="ltr">அம்மாவைக் கண்டதும் விசும்பல்</p><p dir="ltr">கொஞ்சம் அதிகமானது.</p><p dir="ltr">"சத்தமா கூட என் பிள்ளைக்கு</p><p dir="ltr">அழ தெரியாது... பாவிப்பயலுக்கு ஈவு </p><p dir="ltr">இரக்கமே கிடையாதா...."அம்மா வாயை மூடுதாக</p><p dir="ltr">இல்லை.</p><p dir="ltr">இதைக் கேட்டதும் அக்கா </p><p dir="ltr">அதிகமாக கேவிக் கேவி அழுதாள் .</p><br><p dir="ltr">இந்தப் பாவத்திற்கு அழுவதைத் தவிர</p><p dir="ltr">அதிகமாக ஏதுவும் படபடப்பாகப் பேசத்</p><p dir="ltr">தெரியாது...அதுவே இப்போ அவள்</p><p dir="ltr">வாழ்க்கையை தொலைக்க வந்து நிற்கிறது.</p><br><p dir="ltr">அம்மா பின்னாலேயே போய் நின்ற எனக்கு</p><p dir="ltr"> அக்காவைப் பார்த்ததும் ஓவென்று </p><p dir="ltr"> ஒப்பாரி வைக்க வேண்டும்போல் இருந்தது.</p><p dir="ltr"> </p><p dir="ltr">மெதுவாக அருகில் உட்கார்ந்து </p><p dir="ltr">அக்கா கையைப் பிடித்தேன்.</p><br><p dir="ltr">அவ்வளவுதான் ...சிறுபிள்ளையைப்போல</p><p dir="ltr">என் தோளில் சாய்ந்து அக்கா அழுதது </p><p dir="ltr"> எனக்குள் ஆத்திரத்தைக் கூட்டியது.</p><p dir="ltr"> </p><p dir="ltr">"நீ அழாதக்கா...அவங்க நல்லாவே இருக்க</p><p dir="ltr">மாட்டாங்க.."</p><br><p dir="ltr">இயலாதவர்களுக்குச் சாபமிடுவதைத்</p><p dir="ltr">தவிர வேறென்ன தெரியும் ?</p><p dir="ltr">இதற்கு மேல அக்காவை எப்படிச் சொல்லி</p><p dir="ltr">தேற்ற முடியும் ?</p><br><p dir="ltr">இது என்ன இப்படிச் சொல்லி</p><p dir="ltr">அக்காளைத் துரத்திவிடப் பார்க்கிறார்கள்...</p><p dir="ltr">நாகரீகம் தெரியாதவள் என்றால்</p><p dir="ltr">என்ன சொல்ல வருகிறார்கள்...</p><p dir="ltr">எனக்கு ஒன்றுமே புரியவில்லை.</p><br><p dir="ltr">கிராமத்துப் பெண்.. படிக்காதவள்.</p><p dir="ltr">இப்படித்தானே இருப்பாள்...</p><p dir="ltr">மாப்பிள்ளை என்ன லண்டனிலிருந்து வந்தவரா? </p><p dir="ltr">அவரும் இதே கிராமத்தைச் சேர்ந்தவர் தானே..</p><br><p dir="ltr">நாகரீகத்தின் அளவுகோல்தான் என்ன? </p><p dir="ltr">இப்படி ஏதேதோ நினைவுகள் </p><p dir="ltr">என்முன் கேள்விகளாக வந்து விழுந்தன.</p><br><p dir="ltr">"யாராவது நாலு சனத்துட்ட சொல்லி </p><p dir="ltr">மாப்பிள்ளை கிட்ட</p><p dir="ltr">பேசிப் பார்க்கச் சொல்லலாம் இல்லையா "</p><p dir="ltr">மறுபடியும் அம்மாவின் குரல்</p><p dir="ltr">என் நினைவுகளுக்குத் தடை போட்டது.</p><br><p dir="ltr">அப்பாவும் என்ன செய்வார்...</p><p dir="ltr">பிள்ளை வாழ்க்கை இப்படி ஆயிற்றே </p><p dir="ltr">என்ற வருத்தம்தான் அவரையும்</p><p dir="ltr">கோபத்தோடு பேச வைக்கிறது.</p><p dir="ltr">மற்றபடி அப்பா இப்படி எல்லாம் கோபப்பட்டு</p><p dir="ltr">நான் பார்த்ததில்லை</p><p dir="ltr">அக்கா வீட்டுக்காரர் மேல் உள்ள கோபத்தை</p><p dir="ltr">எங்களிடம் தவிர அப்பாவால் </p><p dir="ltr">வேறு யாரிடம் காட்ட முடியும்...</p><br><br><p dir="ltr">"பேசிப் பார்ப்போம்..."</p><p dir="ltr">விரக்தியில் பேசியபடி வெளியில் சென்றார்</p><p dir="ltr">அப்பா.</p><br><p dir="ltr">போனவரு ஒரு மணி நேரத்துல திருப்பி வந்தார்.</p><p dir="ltr">"நாளைக்கு பஞ்சாயத்து வச்சுருக்காவளாம்....</p><p dir="ltr"> பணம் கொடுத்தாவது ஒரேயடியா</p><p dir="ltr"> முடிச்சி உட்டுறதா </p><p dir="ltr">பேசிகிட்டாவளாம்...."</p><p dir="ltr">என்றார் அப்பா கம்மிய குரலில்.</p><p dir="ltr"> </p><p dir="ltr">அதுவரை எனக்கு இருந்த கொஞ்சம்நஞ்ச</p><p dir="ltr">நம்பிக்கையும் அப்படியே நொறுங்கி</p><p dir="ltr">கீழே விழுந்து உடைந்ததுபோல் இருந்தது.</p><p dir="ltr">எங்க அக்காவுக்கு கல்யாணம்...</p><p dir="ltr">எங்க அக்காவுக்கு கல்யாணம் என்று நான்</p><p dir="ltr">குதித்த குதியும் கும்மாளம் கண்முன் வந்து நின்றன.</p><p dir="ltr">பந்தல் மணம் கூட மாறல.....</p><p dir="ltr">..</p><br><p dir="ltr">" ஏதோ முகூர்த்தத் தேதி வைத்தது போல..</p><p dir="ltr">நாள குறிச்சு குடுத்துருக்காவ....</p><p dir="ltr">கேட்க ஆளுல்ல என்று நினைச்சாவளா...</p><p dir="ltr">நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்குற மாதிரி</p><p dir="ltr">கேட்க எனக்கும் தெரியும்"</p><p dir="ltr">கேட்டதும் ஆவேசமாக கத்த ஆரம்பித்தார்</p><p dir="ltr">அம்மா.</p><br><p dir="ltr">இவ்வளவு நேரம் அப்பா சொன்ன</p><p dir="ltr">விசயத்துல இவ்வளவு முக்கியத்துவம் </p><p dir="ltr">இருக்கும்ன்னு நினைக்கல.....</p><p dir="ltr">அப்படியே ஈரக் கொலை நடுங்கிப்</p><p dir="ltr">போச்சு...ஆத்திர ஆத்திரமாக வந்தது.</p><br><p dir="ltr">அக்காவைப் பார்த்தேன்.</p><p dir="ltr">உனக்காக்கா இப்படி ஒரு கதி வரணும்?</p><p dir="ltr">கேட்கத் தோன்றியது..</p><p dir="ltr">எங்க அக்கா ஒரு வாயில்லா பூச்சி.</p><p dir="ltr">வீட்டில் யாரையும் எதிர்த்துப் பேச மாட்டாள்.</p><br><p dir="ltr">இப்போது எது பேசினாலும் அது</p><p dir="ltr">அக்காவின் சோகத்தை அதிகத்தான் படுத்தும்</p><p dir="ltr">என்ற நினைப்பில் அப்படியே விட்டு விட்டேன்.</p><br><p dir="ltr">அக்காளுக்கு இப்போது அழகூட</p><p dir="ltr">தெம்பில்லாமல் கண்ணீர் மட்டும்</p><p dir="ltr">கன்னங்களில் ஓடிக் கொண்டிருந்தது.</p><p dir="ltr">குனிந்த தலை</p><p dir="ltr"> நிமிரவில்லை.</p><br><p dir="ltr">அவள் எப்போதும் அப்படித்தான். </p><p dir="ltr">அந்நியரை தலைநிமிர்ந்து</p><p dir="ltr">பார்க்க மாட்டாள்.</p><p dir="ltr">ரொம்ப வெட்கப் படுவா....நான் கூட</p><p dir="ltr">கலியாணத்தின்போது அத்தானை தலை</p><p dir="ltr">நிமிர்ந்து பார்ப்பியா....</p><p dir="ltr">என்று கேட்டு கிண்டலடித்தேன்.</p><br><p dir="ltr">ரொம்ப சாதுவா இருப்பாள்.</p><p dir="ltr">ஊருல ஒரு சனத்துகிட்ட கெட்டப் பிள்ளை </p><p dir="ltr">என்று பெயர் எடுத்தது கிடையாது.</p><p dir="ltr">தங்கமான பொண்ணு.... யாரையும்</p><p dir="ltr">அநாவசியமா எதுவும் பேச மாட்டாள்...</p><p dir="ltr">இப்படித்தான் சொல்லி </p><p dir="ltr">கேள்விப் பட்டிருக்கிறேன்.</p><p dir="ltr">அம்மாகூட அக்காவைக் காட்டி..."</p><p dir="ltr">"பிள்ளை என்றால்</p><p dir="ltr">அவள் பிள்ளை... வீட்டு சத்தம்</p><p dir="ltr">வெளியில் கேட்காமல் எவ்வளவு </p><p dir="ltr"> அமைதியாக இருக்கிறாள்.</p><p dir="ltr">நீயும் இருக்கியே ...."என்று சொல்லி </p><p dir="ltr">சொல்லி என்னைத் திட்டுவார்.</p><br><p dir="ltr"> அந்த அமைதியும் பொறுமையுமே</p><p dir="ltr">அவள் வாழ்க்கைக்கு உலை வைத்து விட்டது</p><br><p dir="ltr">சாதுவா இருப்பது ஒரு தப்பா..?</p><p dir="ltr">இப்படியும் ஆண்களா....?</p><p dir="ltr">நினைத்துப் பார்க்கவே </p><p dir="ltr">ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.</p><br><p dir="ltr">மறுநாள் ஊரு பஞ்சாயத்துக்கு</p><p dir="ltr">அம்மாவும் அப்பாவும்தான் போனார்கள்.</p><p dir="ltr">அக்கா போக மறுத்துட்டாள்.</p><br><p dir="ltr">போயிட்டு வரும்போதே அம்மா</p><p dir="ltr">அழுது கொண்டே வந்தார். எல்லாம்</p><p dir="ltr">முடிஞ்சு போச்சு என்பது அம்மாவின் </p><p dir="ltr">அழுகையில் இருந்து தெரிந்தது.</p><br><p dir="ltr">"யாதுக்கும் என்ன சொன்னாங்க அம்மா"</p><p dir="ltr">என்று ஒரு பேச்சுக்குக் கேட்டு வைத்தேன்.</p><br><p dir="ltr">"அவன் ஆரம்பத்திலேயே இவள்</p><p dir="ltr">வேண்டாம் என்றுதான் சொன்னானாம்.</p><p dir="ltr">நாகரிகம் தெரியாதவள்....நாலு இடத்துக்குக்</p><p dir="ltr">கூட்டிட்டு போக முடியாது...</p><p dir="ltr">நாகரிகமா துணி உடுக்கத் தெரியாது....</p><p dir="ltr">என்று என்னென்னவோ அடுக்குறாவ.</p><p dir="ltr">அம்மாகாரிதான் நம்ம வீட்டுல வந்து </p><p dir="ltr">விழவச்சுட்டாள் என்று அம்மாக்காரி மேல</p><p dir="ltr">குத்தம் சொல்லிட்டுப் பிடிவாதமா</p><p dir="ltr"> அக்காவை வேண்டாம்</p><p dir="ltr">என்று பேசுறான் ....சப்பகாலு பய...</p><p dir="ltr">என் பிள்ளையை குறை சொல்லுறான்"</p><p dir="ltr">மொத்தமாகக் கொட்டித் தீர்த்தார் அம்மா.</p><br><p dir="ltr">முதலிலேயே இந்தப் பிடிவாதம்</p><p dir="ltr">எங்கே போச்சு..</p><p dir="ltr">இப்போ எங்க அக்கா வாழ்க்கை </p><p dir="ltr">அல்லவா போச்சு...</p><br><p dir="ltr">சீ... இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள்...?.</p><br><p dir="ltr">"உங்க விருப்பத்துக்கு யாரையும் கட்டிக் கொள்ளுங்க..</p><p dir="ltr">எங்க அக்கா மாதிரி </p><p dir="ltr">வாயில்லா பூச்சிகள் வாழ்க்கையோடு</p><p dir="ltr">விளையாடாதீர்கள் "என்று ஓங்கி ஒரு</p><p dir="ltr">அறை கொடுத்து சொல்ல வேண்டும்</p><p dir="ltr">போல் தோன்றியது.</p><br><p dir="ltr">நானும் பெண்பிள்ளையாயிற்றே.</p><p dir="ltr"> நான் ஏதாவது பேசிவிட்டால்...</p><p dir="ltr">அடங்காப்பிடாரி என்று இன்னொரு</p><p dir="ltr">முத்திரையைக் கையில் வைத்து</p><p dir="ltr">எங்கள் சிறகுகளை முறிக்கக் காத்திருக்கும்</p><p dir="ltr">உலகம் இது !</p><br><p dir="ltr">வாழத் தெரியாதவன் வாயால்</p><p dir="ltr">வாழ லாயக்கில்லாதவள்</p><p dir="ltr">என்ற முத்திரை குத்தப்பட்டு </p><p dir="ltr">ஆட்டத்திலிருந்து அக்கா வெளியேறற்றப்பட்டாள்.</p><br><p dir="ltr">அக்காவை எண்ணி</p><p dir="ltr">உள்ளுக்குள் ஊமையாய் அழுவதைத் தவிர</p><p dir="ltr">வேறென்ன எங்களால் </p><p dir="ltr">இப்போது செய்துவிட முடியும் ?</p><br><p dir="ltr"> </p>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-26483760364336061222024-03-07T16:11:00.001-08:002024-03-07T16:15:05.175-08:00பேராழியோ போராளியோ<div><b>போராளியோ பேராழியோ </b></div><div><b><br></b></div><b>போராளியோ </b><div><b>பெரும்பேராழியோ</b></div><div><b>விளங்கிட முடியா</b></div><div><b>வேதம்தான் பெண்ணோ!</b></div><div><b>இளநகை புரிந்து </b></div><div><b>இன்முகம் காட்டியவளைப்</b></div><div><b>பேதை என்றது முத்தமிழோ!</b></div><div><b><br></b></div><div><b>சிறகுகள் முளைத்துச்</b></div><div><b>சிட்டாய்ப் பறந்து </b></div><div><b>செவிமடல் திறந்து</b></div><div><b>செம்மையை அறிந்து</b></div><div><b>கேள்விக் கணைகள் தொடுத்து</b></div><div><b>கர்வம் தொலைத்தவளைப்</b></div><div><b>பெதும்பை என்றது நற்றமிழோ!</b></div><div><b><br></b></div><div><b><br></b></div><div><b>மாசிமாதத் தென்றலாய் </b></div><div><b>மாலை நேரத் தென்றலாய் </b></div><div><b>மயங்கிட வைத்து</b></div><div><b>மனமதைத் துவைத்து</b></div><div><b>மடவரலானவளை</b></div><div><b>மங்கையென அழைத்தது வண்டமிழோ!</b></div><div><b><br></b></div><div><b>உள்ளதை உரைத்து</b></div><div><b>உவப்பினில் திளைத்து</b></div><div><b>உன்மத்தம் கொண்டு</b></div><div><b>ஊமைமொழி பேசி</b></div><div><b>உள்ளம் கவர்ந்தவளை </b></div><div><b>மடந்தையென உரைத்தது தீந்தமிழோ!</b></div><div><b><br></b></div><div><b>இமையாய் இருந்து</b></div><div><b>இதயத்தில் சுமந்து</b></div><div><b>இனிமையைத் தந்து</b></div><div><b>இல்லம் மகிழ</b></div><div><b>இளம்பிடியானவளை</b></div><div><b>அரிவை என்றது அருந்தமிழோ!</b></div><div><b><br></b></div><div><b>உள்ளங் கையில்</b></div><div><b>உறவினைச் சுமந்து</b></div><div><b>உலகினை அறிந்து</b></div><div><b>உழைப்பினைத் தந்து</b></div><div><b>உண்மையை உரைத்து</b></div><div><b>உயர்யானவளை</b></div><div><b>தெரிவை என்றது தண்டமிழோ!</b></div><div><b><br></b></div><div><b>பேராளுமையோடு </b></div><div><b>வீட்டாளுமை செய்து</b></div><div><b>நாட்டாமையாய் </b></div><div><b>நற்கடனாற்றி</b></div><div><b>நற்பணி முடித்து</b></div><div><b>நன்மகளானவளை</b></div><div><b>பேரிளம் பெண் என்றது பைந்தமிழோ!</b></div><div><b><br></b></div><div><b>இத்துணைப் பெயர்கள் </b></div><div><b>தந்தவர் எவரோ?</b></div><div><b>எப்படி இப்படி என்ற</b></div><div><b>வியப்புதான் நினதோ</b></div><div><b>போராளியோ பெரும்பேராழியோ</b></div><div><b>விளங்கிட முடியா </b></div><div><b>வேதம்தான் பெண்ணோ!</b></div><div><b><br></b></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgCkSX90r_e7QZUxQCFRPW8-s9Oob4Tp2vYkgNQfM0DqWiv_p_auMzYWKrLGZ3SxV-F1EVVarv03W_RUJIwqo88NmnSIsPm6WbL6iwJUh0MMR2HY1gdEop0aMN6u-1wXoGeJX-PjDVDid-1wEzPyRvUXQuQLogu9Nx7gaB1fGeFZILZUfy1BZdfZQCTG8aq" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgCkSX90r_e7QZUxQCFRPW8-s9Oob4Tp2vYkgNQfM0DqWiv_p_auMzYWKrLGZ3SxV-F1EVVarv03W_RUJIwqo88NmnSIsPm6WbL6iwJUh0MMR2HY1gdEop0aMN6u-1wXoGeJX-PjDVDid-1wEzPyRvUXQuQLogu9Nx7gaB1fGeFZILZUfy1BZdfZQCTG8aq" width="400">
</a>
</div><br></div><div><b><br></b></div><div><br></div>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-2773369473395576662024-03-07T11:35:00.001-08:002024-03-07T11:35:09.990-08:00மகன் வந்தான் <p dir="ltr"><b>மகன் வந்தான் </b></p><p dir="ltr">என்றுமில்லாதபடி அங்குமிங்கும் விடியற்காலையிலேயே எழுந்து கதவைத் திறந்தாள் ராசம்மா.</p><p dir="ltr"> பெருக்குமாறைக் கையிலெடுத்து தரதரவென்று தரையில் நாலு தேய் தேய்த்த மாதிரி இருந்தது. </p><p dir="ltr"> அதற்குள் கையில் தண்ணீர் சருவத்தைத் தூக்கி வந்து தெளிக்க ஆரம்பித்தாள்.</p><p dir="ltr"> எங்குதான் படித்து வந்தாளோ ராசம்மா மாதிரி எல்லா இடமும் ஒரே அளவாக கச்சிதமாக ஒரு ரோபோவால் கூட தண்ணீர் தெளிக்கமுடியாது.</p><p dir="ltr"> ஒருவேலை முடிந்ததும் மறுவேலைக்கு இடையில் ஒருநிமிட இடைவெளி கூட இருக்காது.</p><p dir="ltr"> கையில் பாத்திரங்களை அள்ளி வந்து முற்றத்தில் போட்டாள்.பலகை கட்டையை எடுத்து வந்து அதில் உட்கார்ந்து பாத்திரங்களைத் துலக்க ஆரம்பித்தாள்.</p><p dir="ltr"> யாரோ புதுசா ஆள் வருகிறது போல ஏதோ ஒரு பரபரப்பு மனதில் வந்து ஒட்டிக் கொள்ள படபடவென்று வேலை செய்ய ஆரம்பித்தாள். </p><p dir="ltr"> மனசு பூரா இன்று வரப் போற மகன் மேலேயே இருந்தது.</p><p dir="ltr"> ரொம்ப நாளுக்குப் பிறகு வருகிறான். என்ன பண்ண... ஏது பண்ண ....ஒன்றும் தெரியல..</p><p dir="ltr"> கை காலெல்லாம் ஒரு பதற்றம்..</p><p dir="ltr"> பெத்த பிள்ளைய பாக்கதுக்கு அப்படி என்ன பதற்றம். ....</p><p dir="ltr"> அவளுக்கே புரியல...</p><p dir="ltr"> பையன் டவுணுல வேலை பார்க்கிறான்.</p><p dir="ltr"> திருமணத்திற்குப் பிறகு இந்த பக்கம் அவ்வளவா வர்றது இல்ல...</p><p dir="ltr"> அடிக்கடி மாமியார் ஊருக்கு மனைவியோடு பைக்கில் போவதாக பார்த்தவர்கள் வந்து சொல்லுவார்கள்.</p><p dir="ltr"> அப்போதெல்லாம் அங்கு போயிட்டு வரும் போது வருவான் என்று காத்திருப்பா ராசம்மா.</p><p dir="ltr"> மறுபடியும் எக்கா ஒங்க மவன் வடக்கமாற பொண்டாட்டியோடு போனான இங்கு வரலயா....</p><p dir="ltr"> கேட்பவர்களுக்கு "அவனுக்கு என்ன சோலியோ அவசரமா போயிருப்பான்... வருவான்... வருவான் "சொல்லி சொல்லி சாமாளிப்பாள்.</p><p dir="ltr"> அடுத்தமுறை வரும்போது வருவான்... உதடுகள் சொல்லி சமாளிக்கும் வேலையைச் செய்யும். ஆனால் இதயம் அடுத்தமுறையாவது வர மாட்டானா என ஏங்கும்.....</p><p dir="ltr"> பெத்த மனசு புள்ளைய விட்டும் கொடுக்காம....தொலைக்கவும் மனமில்லாம...தவியா தவிக்கும்.</p><p dir="ltr"> இப்படி ஒரு முறையா ...இரண்டு முறையா....</p><p dir="ltr"> பட்டுத் திருந்துவார்கள் என்பார்கள். இந்தத் தாய் மனசு மட்டும் பட்டும் திருந்தாது.</p><p dir="ltr"> தூக்கிப் போட்டாலும் ....வந்து தூக்கமாட்டானா.... என்று ஏங்கும்.</p><p dir="ltr"> அந்த ஏக்கத்திற்கு பதிலாக வந்ததுதான் நாளை வரப்போகிறான் என்ற லேட்டஸ்ட் நியூஸ்.</p><p dir="ltr"> கேட்ட நேரத்திலிருந்து காலும் ஓடல...கையும் ஓடல....</p><p dir="ltr"> ஒரு நல்ல சோறு குழம்பு வைத்து கொடுப்பதற்கு கையில் கால் காசு இல்ல....</p><p dir="ltr"> நல்லா விடியட்டும் ...யாருட்டையாது கைமாத்தா பணம் வாங்கி வந்து கறி வாங்கி சமைக்கணும்.</p><p dir="ltr"> வந்தா எப்படியும் ஒரு ஐந்நூறு ரூபா துட்டாவது கையில தராமலா போயிடுவான்...</p><p dir="ltr"> சாயங்காலம் திருப்பி கொடுத்துறலாம்...</p><p dir="ltr"> மனம் என்னென்ன கணக்கெல்லாமோ போட்டு வைத்தது.</p><p dir="ltr"> எவ்வளவு நேரமாயிற்று....பாத்திரத்து முன் அமர்ந்ததும் நேரம் போனதே தெரியல..</p><p dir="ltr"> கையில் பாத்திரங்களை அள்ளி வந்து அடுக்கினாள்..</p><p dir="ltr"> முந்தானையில் கையைத் துடைத்தபடி வெளியில் வந்தாள்...</p><p dir="ltr"> யாரிடம் போய் ரூபாய் கேட்பது....கேட்க கூச்சமாக இருந்தது.</p><p dir="ltr"> இருந்தாலும் இப்போதைக்கு வேறு வழி தெரியல்ல...</p><p dir="ltr"> நேரே தம்பி வீட்டுக்குப் போனாள்..</p><p dir="ltr"> காலையிலேயே அக்காவைக் கண்டதும்" என்னக்கா காலையிலயே வந்திருக்கா..."</p><p dir="ltr"> " இல்ல தம்பி என் மவன் வர்றான்... "</p><p dir="ltr"> " அப்பிடியா இன்றைக்கு கண்டிப்பாக வர்றானாக்கும்....யார் சொன்னா" தம்பியின் பேச்சில் ஒரு எளக்காரம் தெரிந்தது.</p><p dir="ltr"> "யார் சொல்லுவா.. நம்ம பெருமாளுதான் நேற்று ரோட்டுல பார்த்தானாம்..."</p><p dir="ltr"> "எந்த ரோட்டுல... "</p><p dir="ltr"> "நம்ம மேல ரோட்டுலதான்"</p><p dir="ltr"> " அதான கேட்டேன்... மாமியார் வீட்டுக்குப் போயிருப்பான்..."</p><p dir="ltr"> ராசம்மாவால எதுவும் சொல்ல முடியல...</p><p dir="ltr"> " சரி உக்காரு.. நிக்க வச்சே பேசி கிட்டு இருக்கேன் பாரு....ராணி அக்காவுக்கு ஒரு தம்ளர் காப்பி கொண்டா..."</p><p dir="ltr"> "வேண்டாம் தம்பி..காப்பி குடிச்சுட்டுத்தான் தந்தேன்..."</p><p dir="ltr"> "ஒருவாய் குடிச்சதுல வயிறு நெறஞ்சு போச்சாக்கும்..."</p><p dir="ltr"> " இல்ல.. தம்பி..."</p><br><p dir="ltr">தம்பியிடம் கேட்கவா வேண்டாமா?</p><p dir="ltr">மனத்துக்குள் ஒரு தாவா ஓடிக்கொண்டிருந்தது.</p><p dir="ltr"> கேட்டால். ..உனக்கென்ன புள்ள பெரிய பதவியில இருக்கான்</p><p dir="ltr"> என்று சொல்லிடுவானோ...இருந்தாலும் கேட்டுத்தானே ஆவணும்... ஒரு</p><p dir="ltr">தைரியத்தை வரவழைத்துக்கொண்டு </p><p dir="ltr"> " தம்பி... ஒரு ஐந்நூறு ரூபா இருக்குமா....சும்மா தராண்டாம் கைமாத்தாதான்..."</p><p dir="ltr">கம்மியக்குரலில் பம்மியபடி கேட்டாள்.</p><br><br><p dir="ltr"> அதற்குள் காப்பியை நீட்டிய ராணி, "கையில ஒத்த ரூபா இல்ல...கையில இருந்த பணத்த எல்லாம் போட்டு நேத்துதான்</p><p dir="ltr">நன்செய்க்கு யூரியா வாங்கிட்டு வந்துபுட்டாவ..."என்றபடி கணவனின் முகத்தைப் பார்த்தாள்.</p><p dir="ltr"> "ஆமாக்கா...கையல இருந்தா தரமாட்டேனா....நீ ஒரு நாளும் கேட்காதவ கேக்குற..."</p><p dir="ltr">தம்பியும் மனைவியோடு சேர்ந்து</p><p dir="ltr">இல்லை என்பதை உறுதிப்படுத்தினான்.</p><br><p dir="ltr"> ராசம்மாவுக்கு இதுக்கு மேல எங்கு போய் கேட்க என்று தெரியல...</p><p dir="ltr"> "வர்றேன் தம்பி...."எழும்பினாள்.</p><br><p dir="ltr"> " காப்பிய குடிச்சிட்டுப் போ...".</p><p dir="ltr">என்றான் தம்பி.</p><p dir="ltr">காப்பியை வாயில் வைத்தாள். காப்பி தொண்ட குழிக்குக் கீழ இறங்க மாட்டேன்னுட்டுது...</p><p dir="ltr"> ஒருவழியா மருந்து குடிப்பதுபோல ஒரே மடக்காக குடித்துவிட்டு எழும்பினாள்.</p><p dir="ltr"> " மைனி...அந்த சின்னத்தாயி வட்டிக்குக் கொடுக்காளாம்...கேட்ட உடனே தந்துருவா... யாருக்கும் போய் கேட்டுப் பாருங்க...ஆனால்..."</p><p dir="ltr">என்று இழுத்தாள்.</p><br><p dir="ltr"> என்ன ஆனால் ....என்பது போல தம்பி பொஞ்சாதி முகத்தைப் பார்த்தாள் ராசம்மா.</p><br><p dir="ltr">" ரொம்ப கறார்காரி.பத்து வட்டிதான் ...தரும்போதே வட்டிய பிடிச்சுட்டுதான் தருவாளாம்.. அப்படி பேசிக்கிட்டாவ."</p><br><p dir="ltr">" ஆமாக்கா நானும் சொல்லணும்னு நெனச்சேன்... ராணி சொல்லிபுட்டா...நீ போய் அவகிட்டேயே கேட்டுப் பாறேன்</p><p dir="ltr">ஒருவேளை தந்தாலும் தருவாள்."</p><p dir="ltr">என்றான் தம்பி.</p><br><p dir="ltr"> '" அவ வீட்டுல இருப்பாளா?</p><p dir="ltr">நூறுநாள் வேலைக்குப் போவாள்ன்னு கேள்விப்பட்டேன்."</p><br><p dir="ltr">"வேலைக்கு எங்க போவா...</p><p dir="ltr">இப்படித்தான் கையெழுத்துப் போட்டுகிட்டு வந்துடுவாள்....நாள் முழுக்க</p><p dir="ltr">ஊருல கொடுத்த பணத்துக்கு வட்டி பிடிச்சுகிட்டு அலைவா"</p><br><p dir="ltr">"சரி ...அவளையாவது போய் பார்க்கிறேன்'என்றபடி வெளியில் வந்தாள்.</p><br><p dir="ltr">போறேன் என்று சொல்லிவிட்டு தம்பி வீட்டைவிட்டு வந்தாலும்</p><p dir="ltr"> சின்னத்தாயி வீட்டுக்குப் போவோமா...</p><p dir="ltr">வேண்டாமா கால்கள் கீழத் தெருவுக்குப் போகத் தயங்கின.</p><br><p dir="ltr"> சின்னத்தாயி கறார்காரி. </p><p dir="ltr"> "வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று பேசுவா ...பணத்த சரியா திருப்பி கொடுக்கலன்னா...</p><p dir="ltr"> நீங்க சோறு திங்கல என் பணத்த வச்சிகிட்டு மறு சோலி பாரு என்று வீட்டு வாசலுல நின்னு கத்துவா..."</p><br><p dir="ltr"> வேண்டாம்...வீட்டை நோக்கி நடந்தாள்.</p><p dir="ltr"> பாதி வழிதான் போயிருப்பாள் கால்கள் திருப்பி இழுத்தன.</p><p dir="ltr"> போய் கேட்டுதான் பார்ப்போம...</p><p dir="ltr"> நம்மதான் நாளைக்கே திருப்பி கொடுத்துறலாம...</p><p dir="ltr"> திருப்பி கொடுத்துட்டா அவள் ஏன் பேசப் போறா...</p><p dir="ltr"> ஏதோ ஒரு உந்துதலில் சின்னத்தாயி வாசலில் போய் நின்றாள்.</p><p dir="ltr"> ராசம்மாவை பார்த்த சின்னத்தாயி மவள்"அம்மா புளியமரத்து வூட்டு காரக வந்துருக்காவ..."</p><p dir="ltr">என்று குரல் கொடுத்தபடி வீட்டுக்குள்</p><p dir="ltr">ஓடினாள்.</p><br><p dir="ltr"> "அது யாருல ....அம்மா இல்லன்னு சொல்ல வேண்டியதுதான ..."</p><br><p dir="ltr"> "அம்மா...சத்தம் போடாத கேட்கப்போவுது..</p><p dir="ltr">அவிய வாசலில் நிற்காவ"</p><p dir="ltr">என்று அம்மாவுக்கு பதில்கொடுத்தாள் மகள்.</p><br><p dir="ltr"> " கேட்கட்டும்....அது எந்த வூட்டுக்காரக ... நானும் பாத்துபுடியேன்..."கொண்டையை முடித்தபடியே வாசலுக்கு வந்தாள் சின்னதாயி.</p><p dir="ltr"> "எக்கோ நீங்களா....</p><p dir="ltr">புளியமரத்து வூட்டுக்காரவன்னதும் </p><p dir="ltr">நான் மேலத்தெரு </p><p dir="ltr">தங்கம்மன்னு நினைச்சேன்.</p><p dir="ltr">.என்ன ஒருநாளும் வராதவுக வந்துருக்கிய....</p><p dir="ltr">வெளியிலே நிக்குறிய வாங்க வீட்டுக்குள்ள..." என்று அழைத்தாள் சின்னத்தாயி.</p><br><p dir="ltr"> "இல்ல சும்மாதான்... இந்தப்பக்கமா வந்தேன்"வார்த்தைகள் வெளி வர முடியாமல் தொண்டைக்குள்ளே திக்குமுக்காடின.</p><p dir="ltr"> " என்னக்கா எதும் பணம் கிணம் வேணுமா...உங்களப் பாத்து அப்படி கேட்கப்புடாது... உங்கப்புள்ள நல்ல வேலையில இருக்காவ.என் வீட்டுக்கு வந்திருக்கியள அதான் கேட்டேன்..."</p><p dir="ltr">என்று பணம் கொடுக்கல் வாங்கல்காரிக்கான</p><p dir="ltr">சாமர்த்தியமான பேச்சில் தொடங்கினாள்.</p><br><br><p dir="ltr">" ஆமா...அது ஒண்ணும் இல்ல.ஒரு ஐந்நூறு ரூபா கிடைக்குமா... இரண்டு நாளையில தந்துருவேன்...."</p><p dir="ltr">கேட்கும்போதே உடலெல்லாம் அவமானத்தால் குறுகிப் போனது.</p><br><p dir="ltr"> "நீங்க தந்துருவிய...உங்க பிள்ள நல்ல வேலையில இருக்காவுள...</p><p dir="ltr"> எக்கோ மகன் வந்துபோயி இருப்பாவளா..."</p><p dir="ltr">என்று ஒரு தயக்கத்தோடு பேச்சைத் தொடர்ந்தாள் சின்னத்தாயி.</p><br><p dir="ltr"> " இன்றைக்கு வர்றான்.." இப்போது</p><p dir="ltr">சொல்லும்போதே குரலில் சற்று தெம்பு வந்தது.</p><p dir="ltr"> "எவ்வளவு ரூபா வேணுங்கா .ஐந்நூறு போதுமா..".தாய் தராட்டும் மகன்கிட்ட ஒருநாள் வாங்கிபுடலாம் என்ற நம்பிக்கையில் பேசினாள் சின்னத்தாயி.</p><p dir="ltr"> "ஐந்நூறு ரூபா..போதும்"</p><p dir="ltr">கூடுதல் வாங்கினால் திருப்பி</p><p dir="ltr">கொடுக்க முடியுமோ முடியாதோ என்ற</p><p dir="ltr">அச்சம் இருந்தது.</p><br><p dir="ltr"> "இவ்வளவுதானா....இதக்கேக்குறதுக்கு ஏன் தயக்கம்.."கேட்டபடியே சுருக்கு பையைப் பிரித்து பணத்தை எடுத்தாள்.</p><p dir="ltr"> "எல்லாருக்கும் வட்டிய புடிச்சுட்டுதான் கொடுப்பேன்... ஒருநாளும் கேட்காதவுக கேக்குறிய. அதான் வட்டி புடிக்கல.."என்றபடி பணத்தை எடுத்து ராசம்மாவிடம் நீட்டினாள்</p><p dir="ltr">சின்னத்தாயி.</p><p dir="ltr"> பணத்தை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்ட ராசம்மா" உடனே தந்துருவேன்.பயப்படவேண்டாம்."என்றாள்.</p><p dir="ltr"> "அட...போக்கா...நீ தந்துருவ... </p><p dir="ltr">எனக்குத் தெரியாதா"</p><br><p dir="ltr"> " வாறேன்.. சின்னத்தாயி ..."வாய் சொன்னாலும் மனசுக்குள் ஏதோ ஒரு கவலை வந்து அப்பிக் கொண்டது.</p><br><p dir="ltr"> வர்ற வழியிலேயே சமையலுக்கு வேண்டிய எல்லா சாமானும் வாங்கினாள் .</p><p dir="ltr">நேரே கறிக்கடைக்குப் போய் </p><p dir="ltr"> அரைக்கிலோ </p><p dir="ltr">ஆட்டகறியும் வாங்கினாள்.</p><p dir="ltr"> ஓடி வந்து தடபுடலாக வேலையைப் பார்த்தாள்.</p><p dir="ltr"> ஒருமணி நேரத்துக்குள்ள எல்லாம் முடித்தாயிற்று...</p><p dir="ltr"> மணியும் பன்னிரண்டு ஆயிற்று..</p><p dir="ltr"> கையைத்துடைத்தபடி தெருவை...தெருவை எட்டிப் பார்த்தாள்.</p><p dir="ltr"> அவள் பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல கார் ஒன்று வாசலில்</p><p dir="ltr"> வந்து நின்றது.</p><p dir="ltr"> ராசம்மாவுக்கு உடம்பெல்லாம் படபடத்தது.ஓடிப் போய் </p><p dir="ltr"> "வாய்யா..வா. .".என்றபடி கையைப் பிடித்தாள்.</p><p dir="ltr"> " நல்லா இருக்கியாம்மா..."மருமகளையும் அழைத்தபடி வீட்டுக்குள் சென்றாள்.</p><p dir="ltr"> "எம்மா...வீட்டுக்குள்ள வருமுன்ன வாசன வாசல்வர வருது...</p><p dir="ltr">கறிக்குழம்பா அம்மா...</p><p dir="ltr"> என் அம்மா வச்சா இப்படித்தான் நாலு தெருவுக்கு மணக்கும் ."வந்ததும் வராததுமாக அம்மா சமையலுக்கு வாழ்த்துப்பா வாசிக்க ஆரம்பித்தான் மகன்.</p><br><p dir="ltr"> 'ம்ஊம்...'மனைவியின் முக்கல் காதில் விழவே அப்படியே அடங்கிப் போனான்.</p><p dir="ltr"> "அப்பா.... எங்க அப்பாவ காணோம்..."</p><p dir="ltr">மகனின் கண்கள் அப்பாவைத் தேடின.</p><br><p dir="ltr">" வேறு எங்க போயிருப்பாரு... தோட்டத்துப் பக்கம் போயிருப்பாரு..."</p><br><p dir="ltr">" ஆமா... தோட்டத்துல என்ன பயிர் போட்டுருக்கும்மா '</p><p dir="ltr">விசாரித்தான் மகன்.</p><p dir="ltr">என்ன பயிர் போட.....</p><p dir="ltr">கிணத்துல தண்ணி சரியா இல்ல.</p><p dir="ltr">ஒரு அரைமணி நேரம்தான் தண்ணி பாய்க்க முடியுது.அதுதான் கிணத்தச் சுத்தி</p><p dir="ltr">ஒரு வயலுல வீட்டுக்குப் போல </p><p dir="ltr">காய்கறி நட்டுப் போட்டுருக்கோம்.</p><p dir="ltr">வேறு ஒண்ணும் இல்ல.."</p><p dir="ltr">என்று விவசாயம் சரியில்ல என்பதை</p><p dir="ltr">சொல்லி வைத்தார் ராசம்ம.</p><br><br><p dir="ltr">"காய்கறி கிடக்குதா ..அப்பாகிட்ட பறிச்சுட்டு வரச் சொல்லணும..." என்றான் மகன்.</p><br><p dir="ltr">" பறிச்சுட்டு வருவாரு...நீ கேக்கணுமா...அதுக்குத்தான் தோட்டத்துக்குப் போயிருப்பாரு..."</p><br><p dir="ltr"> " வா...நேரம் ஆகுதுல்ல...நீ சாப்பிடு... அப்பா வந்துடுவாரு..."</p><p dir="ltr"> " எம்மோ உன் சாப்பாட்ட ஒரு புடி புடிச்சிற வேண்டியதுதான்..."சொல்லிவிட்டு நேரே போய்</p><p dir="ltr"> சாப்பிட உட்கார்ந்தான்..</p><p dir="ltr"> அதற்குள் அப்பாவும் கையில் கோணிப் பை நிறைய காய்கறிகளைச் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தார்.</p><p dir="ltr"> "தம்பி எப்புடிப்பா இருக்க....அம்மாதான் சதா புலம்பிகிட்டு இருப்பா...அப்பப்போ ஒரு எட்டு வந்து பார்த்துட்டுப்போப்பா...ஒரே தேட்டமா இருக்கு "என்றார் அப்பா.</p><br><p dir="ltr"> "ம்..."என்றபடி அம்மாவைப் பார்த்தான்.</p><p dir="ltr"> அம்மா திரும்பி நின்றபடி தோள் சீலையால் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்.</p><p dir="ltr"> "அம்மா...கொஞ்சம் குழம்பு ஊற்றுங்க..".பக்கத்தில் இழுத்தான்.</p><p dir="ltr"> "என்னம்மா...கண்ணு சிவந்துருக்கு..."</p><p dir="ltr"> "ஒண்ணுல்லப்பா...நீ வாறான்னு கையால மசாலா அரைச்சேனா...ஒரப்பு கண்ணுல பட்டுட்டு..."மறுபடியும் கண்களைத் துடைத்தார்.</p><p dir="ltr"> "கண்ணை கசக்காதுங்க....தண்ணி வச்சி கழுவுங்கம்மா..".எழும்பி வந்து கையைப் பிடித்தான்.</p><p dir="ltr">"கழுவுறேன்....கழுவுறேம்பா நீ சாப்பிடு..."என்றபடி வீட்டிற்குப் பின்னால் போய் நின்று முகத்தைத் துடைத்தாள்.</p><p dir="ltr"> துடைக்கத் துடைக்க கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது.</p><p dir="ltr"> </p><p dir="ltr">ஒரு செம்பு தண்ணீர் எடுத்து கழுவினாள். கண்ணீர் வந்த சுவடு தெரியாதபடி முந்தானையால் நன்றாக துடைத்தாள். </p><p dir="ltr"> "ராசம்மா அங்க என்ன செய்யுற... புள்ளக்கு இன்னும் சோறு வேணுமான்னு கேட்டியா"...</p><p dir="ltr">குரல் கொடுத்தார் அப்பா.</p><br><p dir="ltr"> இதோ வந்துட்டேன்.".கொஞ்சம் கறி வைக்கட்டுமாப்பா"</p><br><p dir="ltr"> "போதும்மா... திருப்தியா சாப்பிட்டாச்சி.."</p><p dir="ltr"> எழும்பி கை கழுவி விட்டு வந்தவன் "அப்போ நான் புறப்படட்டுமா அம்மா... "என்றபடி மனைவியைப் பார்த்தான்.</p><p dir="ltr"> கணவன் சொல்லுக்குக் காத்திருந்தவள் போல "வரட்டுமா அத்த"..என்றாள் மருமகள்.</p><p dir="ltr"> ராசம்மா மகனின் முன்னால் வந்து நின்றாள். அப்பா கோணிப்பையைத் தூக்கி காரில் வைத்தார். </p><p dir="ltr"> " அம்மா அப்போ கிளம்பட்டுமா....உடம்ப பத்திரமா பாத்துக்க..."</p><p dir="ltr"> என்று சொன்னபடியே மனைவியைப் பார்த்தான்.</p><p dir="ltr"> " இந்தாங்க அத்த...கைச்செலவுக்கு வச்சுகிடுங்க.."200 ரூபாவைக் கையில் திணித்தபடி காரை நோக்கி நடந்தாள் மருமகள்.</p><p dir="ltr"> மனைவியின் பின்னால் போய் காரில் அமர்ந்து கொண்டு கையை அசைத்தான்</p><p dir="ltr">மகன்</p><p dir="ltr"> அம்மாவும் பதிலுக்கு மருமகள் தந்த இருநூறு ரூபா நோட்டோடு சேர்த்து கையை அசைத்தாள்.</p><p dir="ltr">தெரு மறையும் வரை கையசைந்து</p><p dir="ltr">கொண்டே இருந்தது.</p><br><p dir="ltr">அவன்தான் போயாச்சே இன்னும் நின்னு</p><p dir="ltr">யாருக்குக் கையாட்டுற... என்ற குரல் கேட்டுத்</p><p dir="ltr">திரும்பிய ராசம்மாவின் கண்கள்</p><p dir="ltr">இருநூறு ரூபாய் நோட்டை</p><p dir="ltr">மறுபடியும் பார்த்தன.</p><p dir="ltr"> முந்நூறு ரூபாய் யாரிடம் வாங்கி கடனை அடைப்பது என்பது மட்டுமே இப்போது ராசம்மா மனதிற்குள்</p><p dir="ltr">ஓடிக்கொண்டிருந்தது.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-63810134201047501662024-03-06T17:50:00.001-08:002024-03-06T17:52:28.557-08:00கண்ணான கண்ணே <p dir="ltr"><b>கண்ணான கண்ணே </b></p><p dir="ltr"><b><br></b></p><p dir="ltr"><b>கண்ணான கண்ணே கண்ணான கண்ணே</b></p><p dir="ltr"><b>கண்ணில் வைத்து கொஞ்சிட வைத்தாய்</b></p><p dir="ltr"><b>கள்ளம் தவிர்த்து மெல்லச் சிரித்தாய்-</b></p><p dir="ltr"><b>பெண்ணே</b></p><p dir="ltr"><b>பேதை என்றழைக்க வைத்து பெருமிதம்</b></p><p dir="ltr"><b>தந்தாய்!</b></p><br><br><p dir="ltr"><b>வளர்ந்தாய் கால் தறித்திட மறுத்தாய் </b></p><p dir="ltr"><b>விளையாட்டே உலகமென நினைத்தாய் </b></p><p dir="ltr"><b>விளையாட்டுக்காட்டி வீதிக்கு இழுத்தாய்- பெண்ணே</b></p><p dir="ltr"><b>பெதும்பையாய்ப் பேரன்பு செய்தாய்!</b></p><br><br><p dir="ltr"><b>உணர்ந்ததை உரையாய் உதிர்த்தாய்</b></p><p dir="ltr"><b>உன்னில் என்னைக் கட்டியே வைத்தாய்</b></p><p dir="ltr"><b>மமதையில் மனமதைக் கவர்ந்தாய்- பெண்ணே</b></p><p dir="ltr"><b>மடந்தையாய் எம் மனதினில் நிறைந்தாய்!</b></p><b><br></b><p dir="ltr"><b>மாசிமாத கொண்டலாய் வலம் வந்தாய்</b></p><p dir="ltr"><b>மாலை நேரத் தென்றலாய் இதம் தந்தாய் </b></p><p dir="ltr"><b>மயங்கிட வைத்து மனமதை துவைத்தாய்- பெண்ணே</b></p><p dir="ltr"><b>மங்கையாகி மலர்ந்து மணம் தந்தாய்!</b></p><b><br></b><p dir="ltr"><b> இல்லறம் புகுந்தாய் நல்லறம் வகுத்தாய்</b></p><p dir="ltr"><b>இமையாய் இருந்து எம்மைக் காத்தாய்</b></p><p dir="ltr"><b>இல்லமெங்கும் மகிழ்வால் நிறைத்தாய்- பெண்ணே</b></p><p dir="ltr"><b>அரிவையாகி அன்பால் எம்பால் கலந்தாய்!</b></p><b><br></b><p dir="ltr"><b> உலக விழுமியம் சொல்லித் தந்தாய்</b></p><p dir="ltr"><b> உன்னில் எம்மை கண்டிட வைத்தாய்- </b></p><p dir="ltr"><b> உலகொடு உடன் நடைபயின்றாய்- பெண்ணே </b></p><p dir="ltr"><b>தெரிவை யானென்று தெரிய வைத்தாய்!</b></p><b><br></b><p dir="ltr"><b>ஊராண்மையோடு வீட்டாளுமை</b> <b>செய்தாய்</b></p><p dir="ltr"><b>பேராண்மையில் பேருவகை கொண்டாய்</b></p><p dir="ltr"><b>போராளியாய்ப் பெரும் பேராழியாய் - பெண்ணே</b></p><p dir="ltr"><b>பேரிளம் பெண்ணாகிப் பேரறம் புரிந்தாய்!</b></p><br><br><br><p dir="ltr"><b>எத்தனை எத்தனை பாத்திரம் ஏற்றாய் </b></p><p dir="ltr"><b>எப்படி இப்படி வியந்திட வைத்தாய்</b></p><p dir="ltr"><b>கண்ணின் கருவிழி என்றானாய்- பெண்ணே </b></p><p dir="ltr"><b>காலமெல்லாம் என் வாழ்வே நீயானாய்!</b></p><br><br><p dir="ltr"><b>இனிய மகளிர் தின வாழ்த்துகள்!</b></p><br><br><p dir="ltr"> </p><p dir="ltr"> </p>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-28897721180911077432024-03-04T09:54:00.001-08:002024-03-04T09:55:20.252-08:00இரங்கற்பா<p dir="ltr"><b>இரங்கற்பா</b></p><p dir="ltr"><b><br></b></p><p dir="ltr">தணியாத் தமிழே!</p><p dir="ltr">மணியாம் எழுத்தே!</p><p dir="ltr">பொறுமையின் சிகரமே!</p><p dir="ltr">உழைப்பின் உயர்வே!</p><p dir="ltr">பேச்சினில் கனிவே!</p><p dir="ltr">பேரன்பின் வெள்ளமே!</p><p dir="ltr">தமிழின் அடையாளமே</p><p dir="ltr">தகைசால் தமிழனே</p><p dir="ltr">நல்லாசிரியனே!</p><p dir="ltr">என்னவென்று அழைப்பேன்</p><p dir="ltr">யாரை முன்னிருத்தி</p><p dir="ltr">இனி இப்படி விளிப்பேன்?</p><br><br><p dir="ltr">தமிழோடு நின்றன் காதல்</p><p dir="ltr">தணியும் முன்னே</p><p dir="ltr">தணியாத் தாகம் கொண்டு</p><p dir="ltr">கூற்றுவன் நின்னுயிர் </p><p dir="ltr">பருகினனோ?</p><p dir="ltr">அயலக தமிழர் தினக் </p><p dir="ltr">கொண்டாட்டத்திற்குச்</p><p dir="ltr"> சென்று வந்த</p><p dir="ltr"> வாசம் மாறும் முன்னே</p><p dir="ltr">வாரியணைத்துக் கொண்டு </p><p dir="ltr">துள்ளி வந்த காலன்</p><p dir="ltr">தூக்கிச் சென்றனனோ?</p><br><p dir="ltr">கூற்றுவனுக்குத் </p><p dir="ltr">தமிழ்க்கணக்கு</p><p dir="ltr">தெரிந்திருக்கவில்லை</p><p dir="ltr">தெரிந்திருந்தால்...</p><p dir="ltr">எழுதி முடிக்கப்படா</p><p dir="ltr">முத்தமிழுக்கு</p><p dir="ltr">முடிவுரை எழுதி</p><p dir="ltr">பிழைக்கணக்குச் </p><p dir="ltr">செய்திருப்பானோ?</p><br><br><p dir="ltr">மாட்டேன் என்று</p><p dir="ltr">சொல்லி</p><p dir="ltr">மறுத்துரைக்கும்</p><p dir="ltr">மொழி பயில </p><p dir="ltr">மறந்தனையோ</p><p dir="ltr">அதனால்தான் </p><p dir="ltr">மாற்றான் வந்து </p><p dir="ltr">அழைத்தபோதும்</p><p dir="ltr">மறுப்புரைக்காது </p><p dir="ltr">கூற்றானுடன் </p><p dir="ltr">கூட்டாகிக்</p><p dir="ltr">கூடியுடன் நடந்தனையோ?</p><br><br><p dir="ltr">வேண்டும் எமக்கு </p><p dir="ltr">உம் தொண்டு</p><p dir="ltr">என்ற ஏக்கத்தோடு</p><p dir="ltr">தமிழ் பள்ளிகள்</p><p dir="ltr">ஏங்கித் தவிக்கின்றன</p><p dir="ltr">மாநகராட்சி </p><p dir="ltr">கட்டிடங்கள் எங்கும்</p><p dir="ltr">கண்ணீர்ச் சுவடுகளால்</p><p dir="ltr">எம்மை எழுத </p><p dir="ltr">வைத்து கண்மூடித்</p><p dir="ltr">திறக்குமுன்னே</p><p dir="ltr">காணாமல் போனீரோ?</p><br><br><p dir="ltr">கூற்றுவனே!</p><p dir="ltr">உன்னை யொன்று கேட்கிறேன்</p><p dir="ltr">தமிழின் அருமை தெரியாது</p><p dir="ltr">பெரும் பிழை </p><p dir="ltr">செய்துவிட்டாய்</p><p dir="ltr">அருமை தெரிந்திருந்தால்</p><p dir="ltr">ஆறுமுகம் பக்கம்</p><p dir="ltr">நெருங்கியிருக்க மாட்டாய்</p><p dir="ltr">தமிழைக் கற்றுவிடு </p><p dir="ltr">இல்லை தமிழருக்கு</p><p dir="ltr">எதிராகப் </p><p dir="ltr">பிழைக்கணக்கு</p><p dir="ltr">எழுதுவதை இத்தோடு </p><p dir="ltr">நிறுத்திவிடு!</p><br><p dir="ltr">பிறர் துன்பம் </p><p dir="ltr">பொறாப் பெருமானே !</p><p dir="ltr">இப்பெருந் துன்பம்</p><p dir="ltr">எமக்குத் தந்து </p><p dir="ltr">எங்கே காணாமல்</p><p dir="ltr">போனாய்?</p><p dir="ltr">காற்றாய் மாநகராட்சி</p><p dir="ltr">எங்கும் நிறைந்தாய்</p><p dir="ltr">மாற்றாய் நின்போல்</p><p dir="ltr">இனி யாரைக் காண்போம்?</p><p dir="ltr">கனத்த நினைவோடு</p><p dir="ltr">கண்ணீரால் கடைசி உரை </p><p dir="ltr">எழுதுகிறோம் இன்று!</p><br><br><br><br><br><br>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-78053313406377293782024-03-03T17:34:00.000-08:002024-03-13T09:26:58.468-07:00உலக பிராத்தனை தினம் <p dir="ltr"><br></p><p dir="ltr"><b>உலக பிராத்தனை தினம்</b></p><p dir="ltr"></p><div>
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhld7OwkuwZGyQneZ2NrF5gY6psw4FpSvs0_aECkEtiQYnFNWM0S_Lo7Q78rFzt7ghGdETqrMksijDx29l_H6ubiNzXZGZLv5dRuvuqAfdQF261Sfx40q2CKFHVbFg8lREJ7DjSxEGkEUyc0f1NjS76gRr0-b4kV7khXN4iuwljLPEH5IuCgBEcArrFL8L-">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhld7OwkuwZGyQneZ2NrF5gY6psw4FpSvs0_aECkEtiQYnFNWM0S_Lo7Q78rFzt7ghGdETqrMksijDx29l_H6ubiNzXZGZLv5dRuvuqAfdQF261Sfx40q2CKFHVbFg8lREJ7DjSxEGkEUyc0f1NjS76gRr0-b4kV7khXN4iuwljLPEH5IuCgBEcArrFL8L-" width="400">
</a>
</div><br><p></p><p dir="ltr">மார்ச் மாதம் முதலாம் வெள்ளி உலக பிராத்தனை தினம்.</p><p dir="ltr">இது உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப்</p><p dir="ltr">பெண்களால் நடத்தப்படும் ஒரு இயக்கமாக செயல்படுகிறது..</p><p dir="ltr"><br></p><p dir="ltr"><b>பிராத்தனை செய்வதன் நோக்கம் என்ன?</b></p><p dir="ltr">பிரார்த்தனையால் என்ன கிடைக்கும்</p><p dir="ltr">என்ற கேள்விகள் உண்டு.</p><p dir="ltr">பிராத்தனை மனித மனதை இலகுவாக்குகிறது. இன்றையச் சூழலில்</p><p dir="ltr">அனைவரும் ஏதோ ஒரு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் வாழ்ந்து</p><p dir="ltr">கொண்டிருக்கிறோம்.</p><p dir="ltr">வீட்டில் ...பணியிடங்களில்... அக்கம்பக்கத்தில்.... சமுதாயத்தில் என்று நாலாப்பக்கங்களிலிருந்தும் சிக்கல்கள் வந்து சூழ்ந்து கொள்ளும்போது அதிலிருந்து விடுபடுவது எப்படி?</p><p dir="ltr">யாராவது ஆறுதலாக நாலு வார்த்தை</p><p dir="ltr">சொல்லிவிட மாட்டார்களா என்று மனம்</p><p dir="ltr">ஆலாய்ப் பறக்கும்.....ஆறுதலைத் தேடும்.</p><p dir="ltr">அப்படி ஆறுதலுக்காக இறைவனிடம்</p><p dir="ltr">போய் நிற்கிறோம். </p><p dir="ltr">அல்லது பிரார்த்தனைக் குழுக்களிடம்</p><p dir="ltr">சென்று பிராத்தனை செய்கிறோம்.</p><p dir="ltr">தனிமையில் பிராத்தனை செய்வதைவிட</p><p dir="ltr">இரண்டுபேர் மூன்றுபேர் சேர்ந்து குழுவாகச் பிராத்தனை செய்தால்</p><p dir="ltr">நாம் விரும்பியது நடக்கும் என்ற</p><p dir="ltr">நம்பிக்கை ஏற்படும் </p><p dir="ltr"><b>மன அமைதி:</b></p><p dir="ltr">நமது மன அமைதிக்கான வடிகாலாக அமைந்திருப்பதுதான் பிரார்த்தனைக் மையங்கள்..பிராத்தனை மையங்களை நாடி ஓடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர்.</p><p dir="ltr">அதனால்தான் பிரார்த்தனைக் கூடங்களில்</p><p dir="ltr">நடைபெறும் கூடுகைகளின்போது பெண்கள் கூட்டம் நிரம்பி வழியும்.</p><p dir="ltr">அதனால்தானோ என்னவோ உலக பிராத்தனை தினம் உருவானதற்குப் பின்னணியிலும் பெண்கள் அமைப்புகள் தான் இருந்திருக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை.</p><b>அமைப்பு உருவாக்கம்:</b><br><p dir="ltr">இந்தப் பிரார்த்தனைத் தினம்</p><p dir="ltr">உருவாகுவதற்கான நோக்கம் என்ன?</p>அமைதி மற்றும் நீதிக்கான பங்களிப்பில்<div>பெண்களையும் ஈடுபடுத்திட வேண்டும்</div><div>என்ற நல்ல நோக்கத்திற்காக இந்த</div><div>அமைப்பு தொடங்கப்பட்டது.<br><p dir="ltr">கூடி பிராத்தனை செய்வது</p><p dir="ltr">குழுக்களை ஒருங்கிணைப்பது</p><p dir="ltr">பிராத்தனைகள் மூலம் ஒருவரை</p><p dir="ltr">ஒருவர் தாங்குவது பொருளாதாரத்தில்</p><p dir="ltr">பின்தங்கியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவுவது</p><p dir="ltr">இப்படி ஓர் உயர்ந்த நோக்கங்களைக்</p><p dir="ltr">கொண்டதாகவே பிராத்தனை தினம்</p><p dir="ltr">உருவாக்கப்பட்டது.</p><b> குறிக்கோள்:<br></b><p dir="ltr"><b>ஒதுங்கி நிற்கும் </b>பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு முடக்கப்பட்டு</p><p dir="ltr">வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பெண்களுக்களை முன்னேற்ற வேண்டும்.</p><p dir="ltr">அவர்களுக்கு உளவியல் ரீதியான</p><p dir="ltr">ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் .அவர்களையும் குழுக்களோடு இணைத்துத் திடன் கொண்டவர்களாக மாற்ற வேண்டும்.</p><p dir="ltr">அவர்களையும் சபை நிகழ்வுகளில்</p><p dir="ltr">பங்கெடுக்க வைக்க வேண்டும் இவை பிராத்தனை குழுக்களின் முக்கிய</p><p dir="ltr">நோக்கமாக இருந்தது.</p><p dir="ltr"><b>பணி இடங்களில் பிரார்த்தனைக் </b></p><p dir="ltr"><b>பணியிட குழுக்கள்:</b></p><p dir="ltr"> பணி நிமித்தமாக வெளியிடங்களில் இருக்கும் பெண்களை ஒருங்கிணைப்பது ,பணியிடங்களில் பிரார்த்தனைக் குழுக்கள் அமைத்து உதவித் தேவைப்படுவோர்க்கு உதவுவது</p><p dir="ltr">இவைதான் பிராத்தனை அமைப்பு ஒரு இயக்கமாக செயல்பட தூண்டு கோலாக அமைந்தது. அதனால்தான்</p><p dir="ltr">இது அமெரிக்காவில் உள்ள பெண்களால்</p><p dir="ltr">வீட்டிலேயே குழுவாக சேர்ந்து பிராத்தனை செய்யத் தொடங்கப்பட்டாலும் காலப் போக்கில்</p><p dir="ltr">உலகெங்கிலும் இந்தப் பிராத்தனை குழுக்கள் பரந்து விரிய காரணமாக அமைந்தது.</p><p dir="ltr"><b>செயல்பாடுகள் :</b></p><p dir="ltr">அதனை இன்று கொண்டாட்டமாகவே முன்னெடுத்துச் செல்கின்றனர்.</p><p dir="ltr">அமெரிக்கப் பெண்கள் முதன்முதலில்</p><p dir="ltr">1926 இல் உலக பிராத்தனை இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தனர்.</p><p dir="ltr">அதற்கு அடுத்த ஆண்டு முதல் உலகெங்கும் பிராத்தனைக் குழுக்கள் மூலமாக கொண்டாட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.</p><p dir="ltr">பைபிள் கதைகள் சொல்லுதல் ,பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளல்,</p><p dir="ltr">பிராத்தனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துதல் என்று பெண்கள் மத்தியில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தீவிரமாக</p><p dir="ltr">நடைபெற்றன. </p><p dir="ltr"><b>கொண்டாட்டத்தால் கிடைக்கும் நன்மைகள்:</b></p><p dir="ltr">1.அன்பில் ஒருவரை ஒருவர் தாங்குதல் நிகழ்கிறது</p><p dir="ltr">2.இறை நம்பிக்கை அதிகமாகிறது.</p><p dir="ltr">3.சேவை மனப்பான்மை வளர்கிறது.</p><p dir="ltr">4.ஒரு நட்பு வட்டத்தை உருவாக்குகிறது.</p><p dir="ltr">5.. தன்னம்பிக்கையை வளர்க்கிறது.</p><p dir="ltr">6.. தாழ்வு மனப்பான்மை நீங்குகிறது.</p><p dir="ltr"> <b>கூடுகையின் பலன் பற்றி பைபிள்</b></p><p dir="ltr"><b>கூறுவதென்ன?</b></p><p dir="ltr">"எங்கே இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே</p><p dir="ltr">எங்கே கூடியிருக்கிறார்களோ</p><p dir="ltr">அங்கே அவர்கள் நடுவில் வருவேன்"</p><p dir="ltr">என்ற வேத வசனம் நிறைவேறும் என்ற</p><p dir="ltr">நம்பிக்கை வரிகளின் அடிப்படையில் </p><p dir="ltr">பிராத்தனைகள் குழுக்கள் இயங்குகின்றன.</p><p dir="ltr"><br></p><p dir="ltr"><b>இலச்சினை:(லோகோ:)</b></p><p dir="ltr"><b>இந்தச் செயல்பாடுகள் அங்கங்கே </b></p><p dir="ltr"><b>நடைபெற்று ஒரு பெரிய இயக்கமாகவே முன்னெடுத்துச்</b></p><p dir="ltr"><b>செல்லப்பட்டது. இப்போது அதற்கான அடையாளம் தேவையாயிற்று.</b></p><p dir="ltr"><b>அதனால் </b>இந்த இயக்கத்திற்கான லோகோ உருவாக்கும் பணியை அயர்லாந்து பிராத்தனைக் குழு கையிலெடுத்து.</p><p dir="ltr">அதன்படி லோகோ உருவாக்கப்பட்டது.</p><p dir="ltr">திசைகாட்டி முலள் ஒரு புள்ளியிலிருந்து</p><p dir="ltr">நான்கு திசைகளையும் நோக்கிப் புறப்படும் அம்பு போன்று வடிவமைக்கப்பட்டது. சுற்றி ஒரு வட்டம் உலகத்தையும் அதன் பன்முகத் தன்மையையும் உள்ளடக்கியது போன்று</p><p dir="ltr">ஒரு லோகோ உருவாக்கப்பட்டது.</p><p dir="ltr">இவ்வாறு பொருள் பொதிந்த அமைப்பின் நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வவகையில் அமைப்பிற்கான லோகோ உருவாக்கப்பட்டது.</p><p dir="ltr">இந்த லோகோ சர்வதேச பிராத்தனைத் தின லோகோவாக 1982 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று முதல்</p><p dir="ltr">முறைப்படி செயல்படும் ஒரு இயக்கமாக ஒரு அங்கீகாரம் கிடைத்தது.</p><p dir="ltr"><b>உலக பிராத்தனை தினம்:</b></p><p dir="ltr">தற்போது உலக பிராத்தனை தினம்</p><p dir="ltr">என்று ஒரு நாளும் குறிக்கப்பட்டுள்ளது.</p><p dir="ltr">மார்ச் மாதம் முதல் வாரத்தில் வரும்</p><p dir="ltr">வெள்ளிக்கிழமை உலக பிராத்தனை தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.</p><p dir="ltr"><b>அன்பில் ஒருவரை ஒருவர் தாங்குங்கள்:</b></p><p dir="ltr">அதற்கென ஆண்டுதோறும் சிறப்பு முன்மொழிவு ஒன்று அறிமுகப் படுத்தப்படும். அதன் அடிப்படையிலேயே</p><p dir="ltr">அந்த ஆண்டு பிராத்தனை தின நிகழ்வுகள்</p><p dir="ltr">வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.</p><p dir="ltr"><b> 2024 ஆம் ஆண்டிற்கான</b></p><p dir="ltr"><b>முன்மொழிவு </b></p><p dir="ltr"><b>"நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன்.....</b></p><p dir="ltr"><b>அன்பில் ஒருவரை ஒருவர் தாங்குங்கள்</b>" <b>எபேசியர் 4 : 1-3</b></p><p dir="ltr"><b>என்பதாகும். பாலஸ்தீன போரில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக</b></p><p dir="ltr"><b>இந்த ஆண்டு இந்த முன்மொழிவு வைக்கப்பட்டது. அமைதி ஏற்படவும் பாதிக்கப்பட்டவர்களின் ஆறுதலுக்காகவும் நடைபெறும் பிராத்தனை தினமாக இந்த ஆண்டு செயல்பாடுகள் இருந்தன.</b></p><p dir="ltr"><b>பிராத்தனை தின நோக்கங்கள் </b><b><br></b></p><p dir="ltr"><b>நிறைவேறட்டும்.அமைதி நலவட்டும்.</b></p><p dir="ltr"><b>தனிமையில் வாடும் பெண்களுக்கு</b></p><p dir="ltr"><b>ஆறுதலாகவும் தன்னம்பிக்கையூட்டுவதாகவும் பொருளாதார உதவி தேவை உள்ளவர்களைக் கண்டறிந்து உதவுவதாகவும் தொடர்ந்து பிராத்தனை தின செயல்பாடுகள் இருக்க வாழ்த்துகள்.</b></p><p dir="ltr"><br></p><br><br><br><br><br></div>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-37612571332403624402024-02-28T20:05:00.001-08:002024-03-07T20:12:11.989-08:00உலக மகளிர் தினம் <p dir="ltr">உலக மகளிர் தினம் </p><p dir="ltr">மார்ச் எட்டாம் நாள் உலக மகளிர் தினம்.</p><p dir="ltr">ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.</p><p dir="ltr">இன்ஸ்பயர் இன்க்ளூஷன்</p><p dir="ltr">இந்த 2024க்கான தீமாக </p><p dir="ltr">அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது</p><p dir="ltr">பெண்கள் முன்னேற்றத்தை ஊக்கப்படுத்துதல் மற்றும் விரைவுப்படுத்துதல்.</p><p dir="ltr">இந்த நாளில் வாழ்த்துகள் பரிமாறப்படும்.<br></p><p dir="ltr">கொண்டாட்டங்கள் ,போட்டிகள்</p><p dir="ltr"> பட்டிமன்றங்கள் என்று</p><p dir="ltr">ஊடகங்கள் எங்கும் </p><p dir="ltr">பெண்கள் நிகழ்ச்சிகள்</p><p dir="ltr">களைகட்டும்.</p><p dir="ltr">நாளிதழ்கள், வார இதழ்கள்,மாத இதழ்கள்</p><p dir="ltr">அனைத்தும் சாதனைப் பெண்களின் கட்டுரைகளால் நிறைக்கப்பட்டிருக்கும்.</p><p dir="ltr">தன்னார்வ அமைப்புகளும் அரசும்</p><p dir="ltr">சாதனைப் பெண்களைக்</p><p dir="ltr">கண்டறிந்து விருதுகள் </p><p dir="ltr">கொடுத்து மரியாதை</p><p dir="ltr">செய்யும்.</p><br><p dir="ltr">இவற்றை எல்லாம் பார்க்கும் நாம் </p><p dir="ltr">அடேங்கப்பா...பெண்களுக்கு இவ்வளவு</p><p dir="ltr">அங்கீகாரமா என்று அண்ணாந்து</p><p dir="ltr">பார்த்து மலைத்து நிற்போம்.</p><br><p dir="ltr">நாமும் இப்படி ஒரு சாதனை புரிந்தால்</p><p dir="ltr">உலகம் நம்மைக் கொண்டாடும்</p><p dir="ltr">என்று கனவு காண வைக்கும்.</p><p dir="ltr">நாளைய சாதனையாளர் நான்தான்</p><p dir="ltr">என்று கனவில் மிதக்க வைக்கும்.</p><p dir="ltr">ஒருவகையில் இந்தக் கொண்டாட்டம்</p><p dir="ltr">நம்மை ஊக்குவிப்பதாகவே இருக்கும்.</p><p dir="ltr">இருக்க வேண்டும்.</p><p dir="ltr">அப்படி ஊக்குவிப்பதாக இருந்தால்தான்</p><p dir="ltr">இந்தக் கொண்டாட்டத்திற்கான</p><p dir="ltr">பலனைப் பெற்றதாகக் கொள்ள முடியும்.</p><br><p dir="ltr">ஆனால் உண்மையில் உலக மகளிர் நாள்</p><p dir="ltr">எதற்காகத் தொடங்கப்பட்டது?</p><p dir="ltr">உலகெங்கிலும் உள்ள சாதனையாளர்களைக்</p><p dir="ltr">கண்டறிந்து உலகிற்கு அறிமுகப்படுத்துவதற்காகவா</p><p dir="ltr">மகளிர் தினம் கொண்டாடப்பட்டது ?</p><p dir="ltr">இல்லை.</p><p dir="ltr">வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால்</p><p dir="ltr">இந்த நாளுக்குப் பின்னால் இருக்கும்</p><p dir="ltr">வலிகள் புரியும்.</p><br><p dir="ltr">பெண்களைக் கொண்டாட வேண்டும்.</p><p dir="ltr">பெண்ணியச் சிந்தனைகள் வளர வேண்டும்</p><p dir="ltr">என்பதற்காகத் தொடங்கப்பட்டதல்ல</p><p dir="ltr">உலக மகளிர் தினம்.</p><br><p dir="ltr">தினக்கூலி, வாரக்கூலி,</p><p dir="ltr">மாதக்கூலி என்று கூலி வேலை செய்து</p><p dir="ltr">வந்தனர் பெண்கள்.</p><br><p dir="ltr">அவர்களுக்கு முறையான கூலி வழங்கப்படாமலும்</p><p dir="ltr">எத்தனை மணி நேரம் வேலை செய்ய</p><p dir="ltr">வேண்டும் ஒரு வரன்முறை இல்லாமல்</p><p dir="ltr">வேலை செய்து வந்த காலகட்டம்.</p><p dir="ltr">தங்களுக்கு ஏன் ஆண்களுக்கு நிகரான</p><p dir="ltr">கூலி கொடுக்கக் கூடாது என்று கேள்வி</p><p dir="ltr">கேட்க வைத்தது. </p><p dir="ltr">எங்களுக்கும் ஆண்களைப் போன்று</p><p dir="ltr">எட்டுமணி நேர வேலை வேண்டும் என்று</p><p dir="ltr">குரலெழுப்ப வைத்தது.</p><br><p dir="ltr">பணித்தளங்களில் மனரீதியாக துன்புறுத்தப்படும் பெண்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கியது. அதற்காக பல்வேறு போராட்டங்களை</p><p dir="ltr">முன்னெடுத்து வெற்றி கண்ட நாள்தான்</p><p dir="ltr">மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டது.</p><p dir="ltr"> </p><p dir="ltr">பெண்கள் என்றால் உடல் வலிமையற்றவர்கள்</p><p dir="ltr">என்ற நினைப்பு இருந்து </p><p dir="ltr">வந்த காலம் அது.</p><br><p dir="ltr">அதனால் அரசு வேலைகளைத் தவிர</p><p dir="ltr">வேறு வேலைகளில் ஆண்களுக்கு</p><p dir="ltr"> இணையான வேலை செய்தால் கூட</p><p dir="ltr"> கூலி என்னவோ ஆண்களுக்கு இணையாகக்</p><p dir="ltr"> கொடுப்பதில்லை.</p><br><p dir="ltr">குறைந்தது பன்னிரண்டு மணி நேர வேலை</p><p dir="ltr">செய்ய வேண்டும்.</p><p dir="ltr">ஆனால் கூலி ஆண்களைவிடக்</p><p dir="ltr">குறைவு. </p><p dir="ltr">ஒரே வேலை. ஒரே நேரம்.</p><p dir="ltr">ஊதியத்தில் மட்டும் முரண்பாடு.</p><br><p dir="ltr">பொருளாதாரத் தேவைகளுக்காக</p><p dir="ltr">வெளியில் இறங்கி வேலை பார்க்க வரும்</p><p dir="ltr">பெண்களுக்கு உரிய அங்கீகாரம் </p><p dir="ltr">கிடைக்கவில்லை. பெண்கள்தானே</p><p dir="ltr">அவர்களால் ஆண்களுக்கு இணையாக</p><p dir="ltr">என்ன செய்துவிட முடியும் என்ற</p><p dir="ltr">அலட்சியப்போக்கு இருந்தது.</p><br><p dir="ltr">எவ்வளவு நாள்தான் பொறுத்துப் பார்ப்பது?</p><p dir="ltr">ஓங்கி குரல் கொடுக்காமல்</p><p dir="ltr">போராட்டங்களை முன்னெடுக்காமல்</p><p dir="ltr">நமக்கான உரிமையை நாம்</p><p dir="ltr">பெற்றுக்கொள்ள முடியாது</p><p dir="ltr">என்ற நிலைக்குப் பெண்கள் தள்ளப்பட்டனர்.</p><br><p dir="ltr">இதற்காக அமெரிக்கா,ஜெர்மனி</p><p dir="ltr">போன்ற நாடுகளில் பெண்கள் அமைப்புகள்</p><p dir="ltr">முதன்முதலாக குரல் கொடுக்க ஆரம்பித்தன.</p><p dir="ltr">அமெரிக்காவின் நியூயார்க் நகரில்</p><p dir="ltr">வேலை நேரத்தைக் குறைக்கவும்</p><p dir="ltr">கூலியை ஆண்களுக்கு இணையாக </p><p dir="ltr">உயர்த்தித்தரக்கோரியும் 15000 பெண்கள்</p><p dir="ltr"> முதன் முதலாகப் </p><p dir="ltr">போராட்டக் களத்தில் குதித்தனர்.</p><br><p dir="ltr">இந்தக் குரல் உலகெங்கும் கேட்க ஆரம்பித்தது.</p><p dir="ltr">சோவியத் ரஷியாவில் அது தொழிலாளர்</p><p dir="ltr">போராட்டங்களோடு இணைந்து</p><p dir="ltr">முன்னெடுத்துச் செல்லப்பட்டது.</p><p dir="ltr">எல்லா நாடுகளிலும் பெண்கள் குரல்</p><p dir="ltr">ஒலிக்க ஆரம்பித்தது.</p><p dir="ltr">பெண்களின் நியாயமான கோரிக்கைகள்</p><p dir="ltr">ஏற்றுக்கொள்ளப்பட்டன.</p><p dir="ltr">அதற்கான அங்கீகாரம் பெற்ற</p><p dir="ltr">அந்த நாளைத்தான்</p><p dir="ltr">மகளிர் தினமாக கொண்டாடி வருகிறோம்.</p><br><p dir="ltr">அது இன்று அடித்தட்டு மக்களைப்</p><p dir="ltr">புறந்தள்ளிவிட்டு மேல்தட்டு </p><p dir="ltr">மகளிர் கொண்டாடும் ஒரு நாளாக</p><p dir="ltr">மெல்ல மெல்ல மாறிக்கொண்டு</p><p dir="ltr">வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.</p><br><p dir="ltr">இன்றும் தொழிற்கூடங்களில் வேலை பார்க்கும்</p><p dir="ltr">பெண்கள் விவசாயக்கூலி வேலை</p><p dir="ltr">செய்யும் பெண்கள் வீட்டு வேலை செய்யும்</p><p dir="ltr">பெண்கள் இவர்களுக்கெல்லாம் ஆண்களுக்கு</p><p dir="ltr">நிகரான கூலி வழங்கப்படுவதில்லை.</p><p dir="ltr">இதனை யாரும் கண்டு கொள்வதில்லை.</p><br><p dir="ltr">குறைந்த பட்சம் இந்த நாளிலாவது</p><p dir="ltr">அவர்களது பிரச்சினைகள் வெளிச்சத்திற்குக்</p><p dir="ltr">கொண்டுவரப்பட வேண்டும் என்று எந்த அமைப்பும் முனைப்பு காட்டுவதுமில்லை.</p><br><p dir="ltr">அவர்களுக்கும் பணி இடங்களில்</p><p dir="ltr">பாதுகாப்பு உறுதி செய்யப்பட</p><p dir="ltr">வேண்டும்.</p><p dir="ltr">வேலைக்கு ஏற்ப கூலிக்கு</p><p dir="ltr">உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும்.</p><p dir="ltr">நேற்றைய வரலாற்றைப் பேசிப்பேசிக்</p><p dir="ltr">கொண்டாடுவதில் எந்தப் பயனுமில்லை.</p><br><p dir="ltr">நாளைய வரலாறும் நல்லதாக</p><p dir="ltr">எழுதப்பட வேண்டும்.</p><p dir="ltr">அதற்காகக் குரலில்லாதவர்களுக்குக்</p><p dir="ltr">குரலாக இருந்து ஊடகங்கள்</p><p dir="ltr">பெண்கள் அமைப்புகள் செயல்பட வேண்டும்.</p>அவர்களையும் ஒருங்கிணைத்து<div>உள்ளூர் நிகழ்வுகளில் கலந்துகொள்ளச்செய்ய வேண்டும்.</div><div>அடித்தட்டு மக்களின் வணிகத்தை</div><div>ஊக்குவிக்க வேண்டும்.</div><div><br><p dir="ltr">முற்றிலும் வியாபார நோக்கில் செயல்படாமல்</p><p dir="ltr">சமூகக் கடமையாக எண்ணி</p><p dir="ltr">அவர்களுக்காகவும் குரல் கொடுக்கும்</p><p dir="ltr">நாளாக இந்த மகளிர் தினம்</p><p dir="ltr">அமையட்டும்.</p><p dir="ltr">அரசு தினக்கூலிகள் விவசாயக் கூலி</p><p dir="ltr">செய்யும் பெண்கள் பக்கம்</p><p dir="ltr">இந்த நாளிலாவது கவனத்தைத் திருப்பி</p><p dir="ltr">அவர்களையும் வெளிச்சத்திற்குக் </p><p dir="ltr">கொண்டு வாருங்கள்.</p><p dir="ltr">அவர்களும் மகிழ்ச்சியாக நம்மோடு</p><p dir="ltr">இணைந்து இந்த நாளைக் கொண்டாடிடட்டும்.</p><br><p dir="ltr">இனிய உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!</p><br><br><br></div>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-13048184701398370602024-02-27T10:54:00.001-08:002024-02-27T10:55:31.981-08:00ஒழுங்கும் ஒழுக்கமும் <p dir="ltr"><b>ஒழுங்கும் ஒழுக்கமும் </b></p><p dir="ltr"><b><br></b></p><p dir="ltr">"<b>ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் </b></p><p dir="ltr"><b>உயிரினும் ஓம்பப் படும் "</b></p><p dir="ltr"><b>என்றார் </b>வள்ளுவர்.</p><p dir="ltr"> அதாவது ஒழுக்கம் உயர்வைத் தருவதால்</p><p dir="ltr">அந்த ஒழுக்கம் உயிரினும் மேலாக </p><p dir="ltr">பேணப்படும்.</p><p dir="ltr">உயிரினும் மேலானது ஒழுக்கம்.</p><p dir="ltr">அதனால்தான் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லி</p><p dir="ltr">வளர்க்கப்படுகிறோம்.</p><br><p dir="ltr">அடுத்து ஒழுக்கம் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது.</p><p dir="ltr">ஒழுக்கம் என்பது ஒரு நியதிக்கு</p><p dir="ltr">உட்பட்டு பண்போடு வாழ்வது.</p><p dir="ltr">நற்பண்பு இருந்தால் நல்லொழுக்கம்</p><p dir="ltr">தானாக வந்து குடியேறிவிடும்.</p><p dir="ltr">ஒழுக்கத்திற்கும் ஒழுங்கிற்கும்</p><p dir="ltr">என்ன தொடர்பு?</p><p dir="ltr">அனைவருக்கும் ஒழுங்கின்மீது அலாதி பிரியம் உண்டு.<br></p><p dir="ltr">ஒழுங்காக இருக்கும் பொருள்</p><p dir="ltr">தனிக்கவனம் பெரும்.</p><p dir="ltr">ஆனால் ஒழுங்காக வைப்பதில்தான் சிக்கல்.</p><p dir="ltr">யாராவது ஒழுங்குபடுத்தித் தரமாட்டார்களா </p><p dir="ltr"> என்று நினைப்போம்.</p><p dir="ltr"> வீட்டிற்கு யாராவது வந்தால் கண்கள் </p><p dir="ltr"> முதன் முதலாக வீட்டில் எல்லாம் சரியாக</p><p dir="ltr"> வைக்கப்பட்டிருக்கிறதா என்றுதான் பார்க்கும். </p><p dir="ltr"> பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக </p><p dir="ltr"> கிடந்தால் முதன் முதலாக அவற்றை சரிபடுத்திவிட்டுதான் </p><p dir="ltr">கதவையே திறப்போம்.</p><br><p dir="ltr"> இதற்குக் காரணம் பிறர் நம்மைப் பற்றித் தப்பாக நினைத்துவிடக்கூடாதே என்ற பயம்.</p><p dir="ltr"> </p><p dir="ltr">ஒழுக்கத்தைப் போலவே ஒழுங்கும்</p><p dir="ltr">நமக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும்.</p><p dir="ltr"> நம்மைப் பற்றிய நல்லெண்ணம் </p><p dir="ltr">கட்டமைக்கப்படுவதற்கு நாம்</p><p dir="ltr">நம்மைச் சுற்றியுள்ள இடத்தை எவ்வாறு</p><p dir="ltr">வைத்திருக்கிறோம் என்பதும் முக்கிய</p><p dir="ltr">பங்கு வகிக்கிறது.</p><p dir="ltr"> நாம் வீட்டை வைத்திருக்கும் நேர்த்தியை வைத்து நமது ஒழுக்கம் கணிக்கப்படுகிறது.</p><br><p dir="ltr">அழகின் மறுபெயர் ஒழுங்கு.</p><p dir="ltr"> </p><p dir="ltr">நெல்சன் ஒரு நல்ல எழுத்தாளர்.அழகை ஆராதிக்கிறவர்.</p><p dir="ltr">தாம் இருக்கும் இடம் நேர்த்தியாக இருக்க </p><p dir="ltr">வேண்டும் என்று எண்ணுவார்.</p><p dir="ltr">அவருடைய அறையில் புத்தகங்கள் யாவும்</p><p dir="ltr"> அதனதன் இடத்தில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கும்.</p><p dir="ltr">" ஒழுங்கு மனமகிழ்ச்சியைத் தருவதோடு </p><p dir="ltr">அமைதியையும் கொடுக்கும் </p><p dir="ltr"> சிந்தனை சக்தியைப் பெருக்கும். </p><p dir="ltr"> கற்பனை வளத்தைக் கூட்டும்.</p><p dir="ltr"> உன் வீட்டில் குவிந்து கிடக்கும் குப்பைக் குவியல் </p><p dir="ltr"> உன் மனதின் தாறுமாறான எண்ணக் குவியலின் பிரதிபலிப்பு."என்பார்.</p><p dir="ltr"> </p><br><p dir="ltr"> தாஜ்மகாலின் நேர்த்தியும் அதன் ஒழுங்கும் </p><p dir="ltr"> நம்மை இன்றுவரை கவர்ந்திழுக்கிறது.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> ஒழுங்கு என்பது ஒரு நியதி .</p><p dir="ltr"> இதை இப்படித்தான் செய்ய வேண்டும்.</p><p dir="ltr"> இதை இங்கேதான் வைக்க வேண்டும் </p><p dir="ltr"> இந்தக் காரியத்தை இத்தனை மணிக்குள் </p><p dir="ltr"> முடித்துவிட வேண்டும்.</p><p dir="ltr"> இப்படி செய்யும் செயல்கள் யாவற்றிலும் </p><p dir="ltr"> ஓர் ஒழுங்கைக் கடைபிடிக்கும்போது யாவும் </p><p dir="ltr"> நேர்த்தியாக வெற்றிகரமாக</p><p dir="ltr">செய்து முடிக்கப்படும்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> மாணவர்கள் புத்தகங்களை அடுக்கி வைத்து ஒழுங்காகப் பராமரிப்பதிலிருந்தே</p><p dir="ltr">அவர்கள் படிப்பில் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.</p><p dir="ltr">நோட்டுபுத்தகத்தில் எழுதும்போது ஒரு ஒழுங்கு இருக்கும்.</p><p dir="ltr"> வீட்டிற்கு வந்ததும் எல்லாவற்றையும் </p><p dir="ltr"> அதனதன் இடத்தில் வைக்கும் பண்பு இருக்கும். </p><p dir="ltr"> இவை யாவும் அவனது கல்வியில் அவன் செலுத்தும் அதிகப்படியான அக்கறைக்கு உதாரணமாகும்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> சிறுபிள்ளையிலிருந்தே ஒழுங்கு கடைபிடிக்கப்படும்போது</p><p dir="ltr"> அது பெரியவர்கள் ஆன பின்னரும் தொடரும்.</p><p dir="ltr"> தொடர்ந்து செய்யப்படும் எந்த செயலும்</p><p dir="ltr"> பழக்கமாகிப் போகும்.</p><p dir="ltr"> பழக்கம் வழக்கமானால் அது நல்லபழக்கமாக மாறும்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> அதென்ன பெரிய ஒழுங்கு ...பொல்லாத ஒழுங்கு .</p><p dir="ltr"> கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். </p><p dir="ltr"> கால் கை ஒழுங்கில்லாமல் கண்டமேனிக்கு </p><p dir="ltr"> வளர்ந்துவிட்டால் அது வளர்ச்சியாகுமா ?</p><p dir="ltr"> கை கால்கள் ஒழுங்காக இல்லாவிட்டால் </p><p dir="ltr"> அது நிறைவானதாக இருக்குமா! </p><p dir="ltr"> </p><p dir="ltr"> மூளையின் கட்டுப்பாட்டின்படிதானே</p><p dir="ltr">எல்லா உறுப்புகளும் இயங்குகின்றன.</p><p dir="ltr">அவை ஒரு சீராக நடைபெறாவிட்டால்....</p><p dir="ltr">செயல்கள் யாவும் தாறுமாறாகப் போய்விடும்.</p><br><p dir="ltr">இந்த ஒழுங்கு நமது அத்தனை செயல்பாடுகளுக்கும் முதன்மையானது தேவையானது. </p><p dir="ltr"> ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் மிகப் பெரிய</p><p dir="ltr"> வேறுபாடு ஒன்றும் இல்லை.</p><p dir="ltr">ஒழுங்கைக் கடைபிடிக்கும் ஒருவருடைய</p><p dir="ltr">வாழ்வில் ஒழுக்கத்திற்கும்</p><p dir="ltr">குறைவிருக்காது.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> எதிலும் ஒரு விதிமுறையைக் கடைபிடித்து </p><p dir="ltr"> ஒழுகும் ஒருவனிடம் </p><p dir="ltr"> ஒழுக்க நெறிகள் மிகுந்திருக்கும்.</p><p dir="ltr"> அவன் நெறி தவற மாட்டான்</p><p dir="ltr"> என்பதை நம்பலாம்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> நடத்தை விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் </p><p dir="ltr"> ஒருவனால் ஒருபோதும் தவறான பாதைக்குச் </p><p dir="ltr">செல்ல முடியாது.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> பள்ளிப்பருவத்திலேயே ஒழுக்கம் கற்பிக்கப்படுகிறது போல</p><p dir="ltr"> ஒழுங்கின் தேவையும் கற்பிக்கப்பட</p><p dir="ltr">வேண்டும்.</p><p dir="ltr"> </p><br><p dir="ltr">விளையாட்டு பாடவேளேயில் ஆசிரியர் </p><p dir="ltr">நிறைய விதிமுறைகளை ஒழுங்காகக் கடைபிடிக்கக் கற்பித்திருப்பார்.</p><br><p dir="ltr"> நிற்பதில்.... நடப்பதில்..... ஓடுவதில் .....</p><p dir="ltr"> இப்படி எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு </p><p dir="ltr"> கற்பிக்கப்பட்டிருக்கும்.</p><br><p dir="ltr"> அது விளையாட்டு பாடவேளைக்கு மட்டும் உரிய தல்ல. </p><p dir="ltr">நம் வாழ்க்கை முழுவதும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள்தான் </p><p dir="ltr">விளையாட்டிலும் </p><p dir="ltr">கற்பிக்கப்படுகின்றன.</p><br><p dir="ltr"> நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட </p><p dir="ltr"> பார்வையும் கூட ஒரு நேர்த்திதானே.</p><br><br><p dir="ltr"> இயற்கை யாவும் நியதிக்கு உட்பட்டுதான்</p><p dir="ltr"> இயங்குகின்றன.</p><p dir="ltr"> </p><p dir="ltr">காலையில் சூரியன் உதிப்பதில் தொடங்கி</p><p dir="ltr"> நடக்கும் யாவும் ஒரு ஒழுங்கிலேயே </p><p dir="ltr"> நடைபெற்றுக் கொண்டிருக்கும். </p><p dir="ltr"> </p><p dir="ltr">ஒழுங்கு கால விரயத்தைத் தடுக்கும்.</p><p dir="ltr">பொருட்களை எங்கேயாவது</p><p dir="ltr"> வைத்துவிட்டு தேடும் </p><p dir="ltr">போக்கு இருக்காது.</p><p dir="ltr"> </p><br><p dir="ltr">வீணான சண்டைகள் வராதிருக்கும்.</p><br><p dir="ltr">நம்மீது ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட </p><p dir="ltr">வழிவகுக்கும்.</p><br><p dir="ltr">எதிலும் ஒரு ஈடுபாட்டை உருவாக்கும்.</p><br><p dir="ltr">அழகு உணர்வைக் கூட்டும்.</p><br><p dir="ltr">மொத்தத்தில் ஒழுங்கு ஒழுக்கத்தைக் </p><p dir="ltr">கடைபிடிக்க உறுதுணையாக இருக்கும்.</p><br><p dir="ltr">ஒழுங்கும் ஒழுக்கமும் கூடியிருந்தால் </p><p dir="ltr">உங்கள் வெற்றிக்குத் தடையிடுவார் யார் ? </p><br><p dir="ltr">ஒழுங்கின்மையோடு கொள்ளுங்கள் பிணக்கு. </p><br><p dir="ltr">ஒழுங்காகத் தொடங்கட்டும் உங்கள் வெற்றிக்கணக்கு.</p><br><br><br><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><br><br>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-36317350143416005582024-02-25T18:00:00.001-08:002024-02-26T02:30:53.786-08:00யார் அறிவாளி <p dir="ltr"><b>யார் அறிவாளி </b></p><p dir="ltr"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh_9kJYCj0JpTdfDFM4mF6F6uVQNQ4YUxErPhxCFUU_WYZDl7oEQlAGZEjLQEdd8-V_26mXZLS6wSiJ-3puXkiaqlWgSzrQzEH2vd47UvTcKfIoxRdk6fyTiTDg8qsrTvsf1zjMQQviOph1RXhR5sZffV01eeO1EnWFWBBUeRhRGW555qtU2EcHLmxq_k7O" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh_9kJYCj0JpTdfDFM4mF6F6uVQNQ4YUxErPhxCFUU_WYZDl7oEQlAGZEjLQEdd8-V_26mXZLS6wSiJ-3puXkiaqlWgSzrQzEH2vd47UvTcKfIoxRdk6fyTiTDg8qsrTvsf1zjMQQviOph1RXhR5sZffV01eeO1EnWFWBBUeRhRGW555qtU2EcHLmxq_k7O" width="400">
</a>
</div><br></p><p dir="ltr">கூடு கட்டுவதில் தூக்கணாங்குருவிக்கு </p><p dir="ltr">இணையான அறிவார்ந்த பறவை</p><p dir="ltr"> வேறொன்றும் இல்லை.</p><p dir="ltr">பின்னல் போன்ற அதன் கூடு </p><p dir="ltr">கலையார்வம் கொண்டோரும் </p><p dir="ltr">வியக்கும் வண்ணம் மிகவும் </p><p dir="ltr">நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கும்.</p><p dir="ltr">அது மட்டுமல்ல . தன் கூட்டிற்கு வெளிச்சம்</p><p dir="ltr">வேண்டும் என்பதற்காக கூட்டின் உள்பக்கம்</p><p dir="ltr">முழுவதும் சேற்றை அள்ளிப் பூசி ,</p><p dir="ltr">சேறு காய்வதற்கு முன்பாக </p><p dir="ltr">மின்மினி பூச்சிகளைக் கொண்டுவந்து </p><p dir="ltr">சேற்றில் ஒட்டி வைத்துவிடுமாம்.</p><p dir="ltr">இதன் மூலம் கூட்டிற்கு நல்ல வெளிச்சம் </p><p dir="ltr">கிடைக்கும்.</p><br><p dir="ltr">இந்தச் சின்ன பறவைக்குள் இத்தனை</p><p dir="ltr">அறிவா?</p><p dir="ltr">வியப்பாக இருக்கிறதல்லவா!</p><br><p dir="ltr"> தூக்கணாங்குருவியைப் போன்று </p><p dir="ltr"> அனைவருக்கும் அறிவார்ந்த செயல்களில் </p><p dir="ltr"> ஈடுபட வேண்டும் என்று ஆசைதான்.</p><p dir="ltr"> ஆனால் நடக்கிற காரியமா என்ன?</p><p dir="ltr"> அனைவருக்கும் அறிவின் மீது ஒரு </p><p dir="ltr"> தாகம் உண்டு.</p><br><p dir="ltr"> யாருமே தன்னை அறிவற்றவர் என்று</p><p dir="ltr"> ஒத்துக் கொள்வதில்லை.</p><p dir="ltr"> யாராவது தப்பித்தவறி முட்டாள்</p><p dir="ltr"> என்று சொல்லிவிட்டால் போதும் ,</p><p dir="ltr"> கோபம் தலைக்கு ஏறிவிடும் .</p><p dir="ltr">என்னை முட்டாள் என்று சொல்லிவிட்டான்...</p><p dir="ltr">நான் முட்டாளாம்....</p><p dir="ltr">நான் முட்டாளா?</p><p dir="ltr">இப்படி கொந்தளித்து விடுவோம்.</p><br><p dir="ltr">ஆனால் விபரம் கெட்டத்தனமாக ஏதாவது </p><p dir="ltr"> செய்துவிட்டு தத்தக்கு பித்தக்கு </p><p dir="ltr"> என்று விழிப்போம்.</p><p dir="ltr">இது என் முட்டாள் தனத்தால்தான்</p><p dir="ltr"> நடந்தது என்பதை மட்டும் ஒருபோதும் </p><p dir="ltr"> ஒத்துக்கொள்ள மாட்டோம்.</p><p dir="ltr"> நம் கம்ப்யூட்டர் மூளையின் </p><p dir="ltr">கணிப்பு அப்படி.</p><p dir="ltr"> </p><p dir="ltr">ஆனால் இன்னொரு விசயத்தில் கவனமாக இருப்போம்.நமது அறிவை வளர்த்துக் கொள்ள </p><p dir="ltr">மறைமுகமாகப் படாத பாடுபடுவோம்.</p><p dir="ltr"> கண்ட கண்ட புத்தகங்களைப் படிப்போம். </p><p dir="ltr"> ஓடி ...ஓடி நாளிதழ் ,வார இதழ் </p><p dir="ltr"> என்று ஒன்று விடாமல் வாசிப்போம்.</p><p dir="ltr"> பொது அறிவு புத்தகங்கள் அனைத்தையும் </p><p dir="ltr"> தேடித் தேடிப் படிப்போம்.</p><p dir="ltr"> நாட்டு நடப்பு , உலக நடப்பு எல்லாம் </p><p dir="ltr"> தெரிந்தவர்கள் ஆகிவிட வேண்டும் </p><p dir="ltr"> என்று ஒரு செய்திச்சானல்கூட விட்டு </p><p dir="ltr"> வைக்க மாட்டோம்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> இதனால் மட்டும் நம்மால் அறிவுடையவர்கள் </p><p dir="ltr"> ஆகிவிட முடியுமா ?</p><p dir="ltr"> </p><p dir="ltr"> "வேறு என்ன வேண்டும் ?"</p><p dir="ltr"> </p><p dir="ltr">" கேட்க வேண்டும் போல் தோன்றுமே.</p><p dir="ltr"> அதையும் கேட்டுவிடுங்கள். </p><p dir="ltr"> ஏன் விட்டு வைக்கிறீர்கள்?"</p><p dir="ltr"> </p><p dir="ltr">" கற்றிலனாயினும் கேட்க" என்று</p><p dir="ltr">வள்ளுவரே கூறியிருக்கிறாரே ....</p><p dir="ltr">கண்ட கண்ட புத்தகங்களைப் படிப்பதால் </p><p dir="ltr">பண்டிதன் ஆகலாம் என்பதுதானே உங்கள் கணக்கு.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> நீங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்தான்.</p><p dir="ltr"> மறு பேச்சுக்கு இடமில்லை.</p><p dir="ltr"> தெரிந்து கொள்வது வேறு. </p><p dir="ltr"> அறிவுள்ளவர்களாக இருப்பது வேறு.</p><p dir="ltr"> எல்லாம் தெரிந்தவர்கள் எல்லாம் </p><p dir="ltr"> அறிவுடையவர்களாக இருப்பதில்லை.</p><p dir="ltr"> அறிவுடையவர்கள் எல்லாம் </p><p dir="ltr"> தெரிந்திருக்க வேண்டும் என்று </p><p dir="ltr"> அவசியமும் இல்லை.</p><br><br><p dir="ltr"> என்ன...ஒரே குழப்பமாக இருக்கிறதா!</p><p dir="ltr">இதுதான் உண்மை.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> அப்படியானால் கற்றல் ஒருவனை </p><p dir="ltr"> அறிவுடையவனாக மாற்றாதா? என்று அடுத்தக் கேள்வியை முன் வைப்பீர்கள்.</p><br><p dir="ltr">உங்கள் கேள்வி நியாயமானது தான்.</p><p dir="ltr"> கற்றல் எல்லாவற்றையும் தெரிந்து</p><p dir="ltr"> கொள்ள உதவும் .ஆனால் </p><p dir="ltr"> அதுவே அறிவு ஆகாது.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> அப்படியானால் அறிவாளியாய் </p><p dir="ltr"> இருப்பதற்கு என்னதான் வழி?</p><p dir="ltr"> </p><p dir="ltr"> இந்தக் கதையைக் கேளுங்கள்</p><p dir="ltr"> புரிந்தால் நீங்கள் அறிவாளி.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> ஓர் ஊரில் முத்து ,மணி என்று</p><p dir="ltr">இரு நண்பர்கள் இருந்தார்கள்.இருவரும்</p><p dir="ltr"> தங்களுக்குள் யார் அறிவாளி என்பதைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.</p><br><p dir="ltr">விவாதம் சண்டையில் முடிந்தது. சண்டை கடைசியில் கைகலப்பில் போய்</p><p dir="ltr">முடிந்தது.</p><p dir="ltr">இருவரையும் அக்கம்பக்கத்தினர் விலக்கிவிட்டனர்.</p><p dir="ltr">இப்போது வழக்கு ஊர் பெரியவரிடம் கொண்டு</p><p dir="ltr"> செல்லப்பட்டது.</p><p dir="ltr">பெரியவர் எதனால் சண்டை என்று</p><p dir="ltr">விசாரித்தார்.</p><br><p dir="ltr">அறிவாளி யார் என்ற விவாதத்தில்</p><p dir="ltr">தொடங்கிய சண்டை.பேசிக் கொண்டிருக்கும்போதே முத்து</p><p dir="ltr">அடித்து விட்டான் என்றான் மணி.</p><p dir="ltr"> </p><p dir="ltr">"சரி... இப்போது நான் கேட்கிறேன் உங்களில் யார் அறிவாளி?" என்று கேட்டார் பெரியவர்.</p><p dir="ltr">இருவரும் மறுபடியும் நான்தான்</p><p dir="ltr">அறிவாளி நான்தான் அறிவாளி என்று</p><p dir="ltr">முட்டை ஆரம்பித்தனர்.</p><p dir="ltr">அட...போங்கப்பா.</p><p dir="ltr">உங்கள் சண்டையப் பிறகு வைத்துக் கொள்ளலாம். இப்போது</p><p dir="ltr">இருவரும் பக்கத்திலுள்ள ஆற்றிலிருந்து இரண்டு குடங்களில் தண்ணீர்</p><p dir="ltr">நிரப்பி எடுத்து வாருங்கள் "என்று கூறினார் பெரியவர்.</p><br><p dir="ltr">இருவரும் இரண்டு வெற்றுக் குடங்களை</p><p dir="ltr">எடுத்துக்கொண்டு</p><p dir="ltr">ஆற்றை நோக்கிப் புறப்பட்டனர். </p><p dir="ltr"> </p><p dir="ltr"> சற்று நேரத்தில் </p><p dir="ltr"> தண்ணீர் குடங்களோடு </p><p dir="ltr"> இருவரும் திரும்பி வந்தனர்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> ஊர் முழுவதும் பெரியவர் என்ன தீர்ப்பு</p><p dir="ltr"> வழங்கப் போகிறார் என்பதை அறிவதற்காக</p><p dir="ltr"> கூடி நின்று வேடிக்கை பார்த்துக் </p><p dir="ltr"> கொண்டிருந்தது.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> " உங்கள் தண்ணீர் குடங்களை </p><p dir="ltr"> இங்கே கொண்டு வையுங்கள் "என்றார் பெரியவர்.</p><p dir="ltr"> இருவரும் குடங்களைப் பெரியவர் </p><p dir="ltr"> முன் கொண்டு வந்து வைத்தனர்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> முத்து குடத்தில் </p><p dir="ltr"> தண்ணீர் முழுவதும் நிறைந்திருந்தது.</p><p dir="ltr"> </p><p dir="ltr">"நீங்கள் சொன்ன மாதிரி அப்படியே<br></p><p dir="ltr">குடத்தில் தண்ணீர் நிரப்பி எடுத்து</p><p dir="ltr">வந்துவிட்டேன்.</p><p dir="ltr">ஒரு சொட்டு தண்ணீர்கூட குறையாமல்</p><p dir="ltr"> அப்படியே கொண்டு வந்து </p><p dir="ltr">விட்டேன் "</p><p dir="ltr"> என்றான் பெருமையாக.</p><p dir="ltr"> </p><p dir="ltr">ஆனால் மணி குடத்தில் </p><p dir="ltr">ஒரு சொட்டு தண்ணீர்கூட இல்லை.</p><p dir="ltr">வெறும் குடமாக கொண்டு வந்து வைத்தான்.</p><br><p dir="ltr">பெரியவர் தண்ணீர் எங்கே என்பதுபோல முத்துவை மேலும்</p><p dir="ltr">கீழும் பார்த்தார்.</p><br><p dir="ltr">"ஐயா...என்னை மன்னித்துவிடுங்கள்.</p><p dir="ltr">நானும் ஆற்றிலிருந்து குடம் நிறைய</p><p dir="ltr">தண்ணீர் மொண்டு கொண்டு தான் வந்தேன்.</p><p dir="ltr"> நான் வரும் வழியில் ஒரு</p><p dir="ltr"> கன்றுகுட்டி நீருக்காக வரப்போரம்</p><p dir="ltr">கிடந்த சிறிது தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருந்தது.பார்க்கப் பரிதாபமாக</p><p dir="ltr">இருந்தது.</p><p dir="ltr"> கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டுப்</p><p dir="ltr">போகட்டுமே என்று அதற்கு ஒரு பாத்திரத்தில் </p><p dir="ltr">சிறிது தண்ணீர் ஊற்றி வைத்தேன்.</p><p dir="ltr"> </p><p dir="ltr">சற்று தொலைவில் செடிகள் வாடி</p><p dir="ltr">கிடப்பதைப் பார்த்தேன். </p><p dir="ltr">அதைப் பார்த்துவிட்டு என்னால் </p><p dir="ltr">சும்மா வர முடியவில்லை.</p><p dir="ltr">அதற்கும் சிறிது நீர் ஊற்றிவிட்டேன்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> அப்போது சில காகங்கள்</p><p dir="ltr"> ஊர்க் கிணற்றங்கரையில் கிடந்த</p><p dir="ltr"> கொஞ்சம் நீரை உறிஞ்சி </p><p dir="ltr">குடிக்க முடியாமல்</p><p dir="ltr"> திணறிக் கொண்டிருப்பதைப்</p><p dir="ltr"> பார்த்தேன்.</p><p dir="ltr"> அதனால் மிச்சம் இருந்த நீரைப் பறவைகள்</p><p dir="ltr"> குடிக்கட்டுமே என்று கிணற்றடியில்</p><p dir="ltr"> ஊற்றிவிட்டு வந்துவிட்டேன்.</p><p dir="ltr"> இப்போது என்னிடம் வெற்றுக் குடம்தான்</p><p dir="ltr"> உள்ளது" என்றான்.</p><p dir="ltr"> </p><p dir="ltr">"நீதான் அறிவாளி" என்றார் பெரியவர்.</p><p dir="ltr">என்ன வெற்றுக்குடம் கொண்டு வந்தவன் அறிவாளியா? என்று முறைத்தான்</p><p dir="ltr">முத்து.</p><br><p dir="ltr">'எப்படி' என்பது போல எல்லோரும் </p><p dir="ltr">பெரியவரைப் பார்த்தனர்.</p><p dir="ltr"> </p><p dir="ltr">"எவனொருவன் பிற உயிர்கள் </p><p dir="ltr">படும் துன்பத்தை தன் துன்பமாக </p><p dir="ltr">நினைத்து அதனைக் களைய </p><p dir="ltr">முற்படுகிறானோ அவன்தான் அறிவுடையவன்.</p><p dir="ltr"> இந்த தம்பிக்கு தன் கண் முன்னர் எந்த உயிரும் </p><p dir="ltr"> வருந்தி நிற்பதைப் பார்க்க முடியவில்லை.</p><p dir="ltr">அறிவுடையவனாக இருக்க விரும்புகிறவன் </p><p dir="ltr">வாடிய பயிர்களைக் கண்டபோது </p><p dir="ltr"> எல்லாம் வாடிய வள்ளலாரைப் போல</p><p dir="ltr"> செடி கொடிகள் வாடுவதைக் கண்டதும் </p><p dir="ltr"> தண்ணீர் ஊற்றுபவனாக இருக்க வேண்டும்.</p><p dir="ltr">தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கொடுப்பவனாக இருக்க வேண்டும்.</p><br><p dir="ltr"> கீழே விழுந்து கிடக்கும் </p><p dir="ltr">மனிதனுக்கு ஓடிச் சென்று </p><p dir="ltr">உதவுபவனாக இருக்க வேண்டும். துன்பத்தால் துடிக்கும் உயிர்களைப் பார்த்த மாத்திரத்தில் அவன் உள்ளம் துடிக்க </p><p dir="ltr">வேண்டும்.</p><br><p dir="ltr">மொத்தத்தில் </p><p dir="ltr"> உயிர்கள் மீதும் அன்பு செலுத்தத் </p><p dir="ltr">தெரிந்தவனாக இருக்க வேண்டும்.</p><p dir="ltr"> அவன்தான் அறிவுடையவன்" என்றார்.</p><br><p dir="ltr">இதுதான் பெரியவரின் தீர்ப்பு.</p><p dir="ltr">தம்மைச் சுற்றியுள்ள </p><p dir="ltr">உயிர்கள் மீது அன்பு செலுத்தும் </p><p dir="ltr">ஒருவனால் மட்டுமே மகிழ்ச்சியான </p><p dir="ltr">சூழலை உருவாக்க முடியும்.</p><p dir="ltr"> தான் மட்டுமல்ல... தம்மைச் சுற்றி </p><p dir="ltr"> இருப்பவற்றையும் மகிழ்ச்சியாக </p><p dir="ltr"> வைத்துக் கொள்ளுதல் தானே அறிவுடைமை.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> கற்கிறோம் எதற்காக?</p><p dir="ltr">எல்லாவற்றையும் தெரிந்து</p><p dir="ltr">கொள்வதற்காக என்பீர்கள்.</p><p dir="ltr">தெரிந்து கொள்ளுதல் என்பது வேறு.அறிவைப் பெறுதல் என்பது வேறு</p><p dir="ltr">கற்றல் மூலமாகத் தெரிந்தவற்றை அறிவார்ந்த வழியில்<br></p><p dir="ltr"> பயன்படுத்துகிறவன்தான் அறிவாளி</p><p dir="ltr"> என்ற இலக்கணத்திற்குள் வருகிறான். </p><p dir="ltr"> </p><p dir="ltr"> கற்போம்.எல்லாவற்றையும் </p><p dir="ltr"> தெரிந்து கொள்வோம்.</p><p dir="ltr"> கற்றவற்றை அறிவார்ந்த </p><p dir="ltr"> வழிகளில் பயன்படுத்துவோம்.</p><p dir="ltr"> உயிர்கள்மீது காதல் கொள்வோம்.</p><br><p dir="ltr">இப்போது யார் அறிவாளி என்பது</p><p dir="ltr">புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> நீங்களும் அறிவுடையவர்களாக </p><p dir="ltr"> இருக்க வேண்டும் என்று மனக்கணக்கு </p><p dir="ltr"> போட்டு விட்டீர்களல்லவா?</p><p dir="ltr">அப்படியானால் அறியாமையோடு</p><p dir="ltr"> கொள்ளுங்கள் பிணக்கு. </p><p dir="ltr"> அறிவுடைமையோடு தொடங்கட்டும் </p><p dir="ltr"> உங்கள் வெற்றி கணக்கு.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><p dir="ltr"> </p><br><br>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-53556123734660967232024-02-24T10:19:00.001-08:002024-02-24T18:36:41.897-08:00நீரளவே ஆகுமாம் நீராம்பல்...<p dir="ltr"><b>நீரளவே ஆகுமாம் நீராம்பல்...</b></p><p dir="ltr"></p><div>
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjlC8HNEnrXUTKHeYdukaTm6-_0SYKvwwyL9PDhfTOawO63l3YEH7Eb1D4XAzQ1wC0fsqn0e31rRCYIyiiyeu55pTsxOChQTuOt0nmQw7NL7JfMXxuWlBp4rlHBfr11YhwKoQ_HJIWpf96_GE3PrDyKYnrJ1HM5IQrBuFe9GpOLE_lG5TEZfRw2iZ1aDg1A">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjlC8HNEnrXUTKHeYdukaTm6-_0SYKvwwyL9PDhfTOawO63l3YEH7Eb1D4XAzQ1wC0fsqn0e31rRCYIyiiyeu55pTsxOChQTuOt0nmQw7NL7JfMXxuWlBp4rlHBfr11YhwKoQ_HJIWpf96_GE3PrDyKYnrJ1HM5IQrBuFe9GpOLE_lG5TEZfRw2iZ1aDg1A" width="400">
</a>
</div><br><p></p><p dir="ltr">ஔவை என்றதும் கையில் கோலூன்றிய பாட்டி</p><p dir="ltr"> ஒருவர் கண்முன் வந்து நிற்பார்.</p><br><p dir="ltr"> முதல் வகுப்பில் படித்த" அறம் செய <b>விரும்பு'"</b></p><p dir="ltr"><b>" ஆறுவது சினம்" ...எல்லாம் மனதிற்குள் வரிசை கட்டி</b></p><p dir="ltr"><b>நின்று எட்டிப் பார்க்கும்.</b></p><p dir="ltr"><b>"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் "</b></p><p dir="ltr"><b>"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"</b></p><p dir="ltr"><b>என்று மனப்பாடம் செய்த பாடல் எல்லாம்</b></p><p dir="ltr"><b>ஓடி வந்து மறுபடியும் ஒருமுறை மனதிற்குள் ஒப்பித்துப்</b></p><p dir="ltr"><b>பார்க்க வைக்கும்.</b></p><b><br></b><p dir="ltr"><b>மறுபடி மறுபடி எனைப்படி எனத் தூண்ட வைக்கும்.</b></p><p dir="ltr"><b>ஔவை என்ற இந்தப் பாட்டிக்குள் எங்கிருந்து வந்தது</b></p><p dir="ltr"><b> இத்தனை பாடும் திறன் என வியக்க வைக்கும்.</b></p><p dir="ltr">இப்படி பார்த்து, படித்து மகிழ்ந்த பாடல்கள்</p><p dir="ltr">எத்தனையோ எத்தனையோ உள்ளன.</p><p dir="ltr">மூதுரையில் ஔவை எழுதிய முப்பது </p><p dir="ltr">பாடல்களும் நல்ல விழுமியங்களை</p><p dir="ltr">சொல்லித் தருவனவாக இருக்கும்.</p><p dir="ltr">மூதுரைக்கு வாக்குண்டாம் என்று</p><p dir="ltr">இன்னொரு பெயரும் உண்டு.</p><br><p dir="ltr">ஔவையின் இந்த வாக்கினை அதாவது பாடல்களைப் படிக்கப் படிக்க பாடலுக்குள் இருக்கும் சிலநுட்பமான உண்மைகள் தெரியவரும்.</p><p dir="ltr">அவற்றுள் மறுபடியும் என்னைப் படிக்க வைத்து ,</p><p dir="ltr">பாடலின் நுட்பத்தை அறிய வைத்து</p><p dir="ltr">மகிழ்வித்தப் பாடல் இதோ :</p><br><p dir="ltr">" <b>நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற</b></p><p dir="ltr"><b> நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு _ மேலைத்</b></p><p dir="ltr"><b> தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்</b></p><p dir="ltr"><b> குலத்தளவே ஆகுமாம் குணம் "</b></p><br><p dir="ltr">ஆம்பல் மலரின் வளர்ச்சி நீர் மட்டம் எதுவரை இருக்குமோ அதுவரை மட்டுமே இருக்கும்.</p><p dir="ltr">அதுபோல ஒருவனுடைய நுண்ணறிவும் தான் கற்ற நூல்களின் எண்ணிக்கையைச் சார்ந்ததாகவே அமையும்.</p><p dir="ltr"> முற்பிறப்பில் செய்த நற்பேற்றின் அளவுக்கு ஏற்பவே</p><p dir="ltr"> ஒருவரின் வாழ்க்கையில் செல்வம் வந்து சேரும்.</p><p dir="ltr">அதுபோல தான் பிறந்த குலத்தின்</p><p dir="ltr">அடிப்படையிலேயே ஒருவனுக்கு நல்லியல்புகள் வாய்க்கப் பெறும். இதுதான் பாடலின் பொருள்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> நீர்மட்டம் உயர உயர நீராம்பல் வளர்ச்சியும் </p><p dir="ltr"> நீர் மட்டத்திற்கு ஈடு கொடுத்து உயர்ந்து </p><p dir="ltr"> கொண்டே இருக்குமாம். நீர்மட்டம் உயர்ந்து விட்டதே </p><p dir="ltr">என்று ஆம்பல் நீருக்குள் மூழ்கிப் போய்விடுவதில்லை.</p><p dir="ltr"> திடீரென்று நீர் வரத்து அதிகமாகிவிட்டால்</p><p dir="ltr"> இரண்டே நாளில் தண்டானது் </p><p dir="ltr"> தன் நீட்சியை அதிகப்படுத்தி இலையை </p><p dir="ltr"> நீருக்குமேல் பரப்பி செடியைத் தலைதூக்கி நிற்க</p><p dir="ltr">வைத்துவிடுமாம். தண்டின் நீட்சியை அதிகப்படுத்தும் இயல்பு ஆம்பலுக்கு உண்டு.</p><p dir="ltr">இதுதான் நீராம்பலுக்கான சிறப்பு.</p><p dir="ltr"><br></p><p dir="ltr"> அதுபோல ஒருவனுடைய அறிவு அவன் எவ்வளவு அதிகமான நூல்களைப் படிக்கிறானோ அந்த நூல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடிக் கொண்டே இருக்கும்.</p><p dir="ltr"> அதிகமான நூல்களைப் படிக்கப் படிக்க </p><p dir="ltr"> அறிவு பெருகும். </p><p dir="ltr">அறிவு பெருகப் பெருக ஒருவனின் வளர்ச்சி அதிகமாகும். வளர்ச்சி அதிகமானால் எப்போதும் சமுதாயத்தில்</p><p dir="ltr"> நீராம்பலைப்போலத் தலை நிமிர்ந்து வாழ முடியும்.</p><p dir="ltr"> </p><p dir="ltr">இங்கே ஆம்பலுக்கும் நூலுக்குமான ஒப்புமையைச் சாதாரணமாக கூறப்பட்டுள்ள ஒரு உவமை என்று</p><p dir="ltr"> நம்மால் கடந்து போய்விட முடியாது. </p><p dir="ltr"> ஆம்பலை ஔவை இங்கே கூறுவதற்கான காரணம் என்ன ?</p><p dir="ltr"> ஆம்பலில் அப்படி என்ன சிறப்பு உள்ளது</p><p dir="ltr"> என்பதை ஒரு இயற்கை ஆர்வலரால் மட்டுமே கண்டறிந்து கூறமுடியும்.</p><p dir="ltr"> ஔவை தான் ஒரு இயற்கை ஆர்வலர்</p><p dir="ltr"> என்பதை இந்தப் பாடலில் மெய்ப்பித்துள்ளார்.</p><p dir="ltr"> உயரமாக வளர்ந்து நிற்கும் ஒரு பனை மரத்தையோ</p><p dir="ltr">ஒரு தென்னைமரத்தையோகூட உவமையாக</p><p dir="ltr"> கூறி இருக்கலாம். அப்படி கூறியிருந்தால்</p><p dir="ltr"> இந்தப்பாடல் சாதாரண பாடலாகப் பார்க்கப்பட்டிருக்கும்.</p><p dir="ltr"> ஆம்பலின் வளர்ச்சி எப்படி</p><p dir="ltr"> இருக்கும் என்பதை நாளும் உற்று நோக்கிவரும்</p><p dir="ltr"> ஒரு தாவரவியல் வல்லுநரால்தான் இத்தனை </p><p dir="ltr"> உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். அதனை ஏற்புடைய இன்னொரு</p><p dir="ltr">பொருளுக்கு உவமையாகச் சொல்ல முடியும் . அந்த விதத்தில் ஔவையார் </p><p dir="ltr"> தனக்குத் தாவரவியல் அறிவு உள்ளது என்பதை இந்தப் பாடல்மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.</p><p dir="ltr"> அதனையும் ஏற்ற இடத்தில் பயன்படுத்தி</p><p dir="ltr"> தான் சொல்ல வந்த கருத்துக்கு வலு சேர்த்துள்ளார்.</p><p dir="ltr"> </p><p dir="ltr"> ஏதோ நாலுவரியை எழுதினேன் போனேன்</p><p dir="ltr"> என்பதுபோல் அல்லாமல் உலக உண்மைகளோடுசொல்ல வந்த கருத்தைச் சொல்லி இருப்பதால்தான்</p><p dir="ltr">ஔவையின் பாடல்கள் கால வெள்ளத்தில்</p><p dir="ltr">அடித்துச் செல்லப்படாமல் இன்றும் நிலைத்து நிற்கின்றன என்ற உண்மையை மறுபடியும்</p><p dir="ltr">மறுபடியும் படிக்கும்போதுதான் புரிந்து</p><p dir="ltr">கொள்ள முடிகிறது.</p><p dir="ltr"> இதற்காகவே ஆம்பலைப் பார்க்க வேண்டும் </p><p dir="ltr"> அதன் தன்மைகளை நாமும் அறிந்து</p><p dir="ltr"> கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா!</p><p dir="ltr"> இப்படி ஒரு உள்ளக் கிளர்ச்சியைத் தூண்டுவதாக</p><p dir="ltr"> இருப்பதுதான் ஒரு நல்ல கவிதைக்கு அழகு.</p><p dir="ltr"> </p><p dir="ltr">வள்ளுவரும் ஓர் இயற்கை ஆர்வலர் </p><p dir="ltr">"வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் </p><p dir="ltr">உள்ளத்தனையது உயர்வு"</p><p dir="ltr">என்ற இந்தக் குறள் மூலம் அறிந்து கொள்ளலாம்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr"></p><div>
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjYyLftt51AjSFjzwFypIWyDKuRkvK209PeC_c2sqS0C7Pf0nkKCm45at0XzOAcQQFoWzO06bKAnnmwtnNPHXubssgvdj7akX3dSVhLRvUBhvnVHahawoYJziIoH6ruru0nsm05X9bl37GgA1Nk3xlStiLVTYltjdiOlFBqDff__GZVXLoXPmYBtMZL4XDZ">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjYyLftt51AjSFjzwFypIWyDKuRkvK209PeC_c2sqS0C7Pf0nkKCm45at0XzOAcQQFoWzO06bKAnnmwtnNPHXubssgvdj7akX3dSVhLRvUBhvnVHahawoYJziIoH6ruru0nsm05X9bl37GgA1Nk3xlStiLVTYltjdiOlFBqDff__GZVXLoXPmYBtMZL4XDZ" width="400">
</a>
</div><br><p></p><p dir="ltr">ஆம்பல் மலரை ஷாப்ளா என்று வங்காள மொழியிலும்</p><p dir="ltr">கோகா என்று இந்தியிலும்</p><p dir="ltr">குமுதம் என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கின்றனர்.</p><p dir="ltr">ஆம்பல் மலருக்கு என்று சிறப்பான</p><p dir="ltr">மணம் எதுவும் கிடையாதாம்.</p><p dir="ltr">தமிழில் செவ்வல்லி என்றும் அழைப்பதுண்டு .</p><p dir="ltr"><br></p>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-69242869353377181262024-02-23T03:29:00.001-08:002024-02-26T02:31:23.737-08:00மரங்களின் தாய் திம்மக்கா <p dir="ltr"><b>திம்மக்கா </b></p><p dir="ltr"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjNSQ9YaEr0Q7ev9o4Pe-QgxumiQBkEEqixSgTQcm7fXp_GrgKHcdxotwS2sncDsnB2EFyHe_0FnGqEED47wPPWqnsGM-K9Pjtjj1dEn9AcE1ZgD1Vr5pBAN7ePZgjhfpUB6u9HL8dWaDAfNBuzQz4HGenCR0CghvSw8LnCmPYvcQV5uhI5LfVgwFfDs4RR" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjNSQ9YaEr0Q7ev9o4Pe-QgxumiQBkEEqixSgTQcm7fXp_GrgKHcdxotwS2sncDsnB2EFyHe_0FnGqEED47wPPWqnsGM-K9Pjtjj1dEn9AcE1ZgD1Vr5pBAN7ePZgjhfpUB6u9HL8dWaDAfNBuzQz4HGenCR0CghvSw8LnCmPYvcQV5uhI5LfVgwFfDs4RR" width="400">
</a>
</div><br></p><p dir="ltr">"நாளிதழைத் திறந்தாலே லஞ்சம்</p><p dir="ltr">ஊழல், கொலை, கொள்ளை,</p><p dir="ltr">அப்பப்பா ..."சலித்தபடி செய்தித்தாளைக்</p><p dir="ltr">கையில் கொடுத்தாள் பக்கத்து</p><p dir="ltr">வீட்டுப்பெண் மல்லிகா.</p><br><p dir="ltr">"அதை எல்லாம் தெரிவிப்பதற்குத்தானே</p><p dir="ltr">செய்தித்தாள் ....வேறு என்ன செய்தியை</p><p dir="ltr">எதிர்பார்க்கிறாய்?" என்று கேட்டேன்.</p><br><p dir="ltr">"ஒரு நல்ல செய்தியாவது </p><p dir="ltr">சொல்லணுமில்லையா?</p><p dir="ltr">நாட்டில் நல்லதே நடக்கலியா? "</p><br><p dir="ltr">"ஏன் நடக்கல? </p><p dir="ltr">நாளும் நல்லது நடந்துகொண்டுதான்</p><p dir="ltr">இருக்கிறது. அதையும் செய்தித்தாள்கள்</p><p dir="ltr">சொல்வதற்கு மறப்பதில்லை.</p><p dir="ltr">உன் கண்களுக்குத்தான் அது</p><p dir="ltr">தெரியவில்லை"</p><br><p dir="ltr">"ஏன் ? நான் என்ன குருடா?"</p><br><p dir="ltr">"அப்படிச்சொல்லவில்லை.நீ</p><p dir="ltr">செய்தித்தாளைச் சரியாகப்</p><p dir="ltr">படிக்கவில்லை என்கிறேன்"</p><br><p dir="ltr">"முதல் பக்கத்தில் இருந்து </p><p dir="ltr">கடைசி பக்கம்வரை</p><p dir="ltr">ஒன்றுவிடாமல் வாசிப்பேன்."</p><br><p dir="ltr">"அப்படிப் படித்துமா நல்ல செய்திகள்</p><p dir="ltr">கண்ணில் தெரியவில்லை?.."</p><br><p dir="ltr">" பெரிய எழுத்தில் </p><p dir="ltr">போட்டால்தானே கண்ணுக்குப்</p><p dir="ltr">பளிச்சென்று தெரியும்.</p><p dir="ltr">இந்த பத்திரிகைக்காரங்க நல்லகாரியத்தை</p><p dir="ltr">பெருசா போடமாட்டேங்கிறாங்க "என்று</p><p dir="ltr">பொங்கினாள் மல்லிகா.</p><br><p dir="ltr">"ரொம்ப பொங்காத ...</p><p dir="ltr">நீ செய்திகளைச் சரியாக</p><p dir="ltr">படிக்கவில்லை என்று சொல்"</p><br><p dir="ltr">"இன்று ஏதும் நல்ல செய்தி</p><p dir="ltr">இருக்கிறதா என்று நீங்களே</p><p dir="ltr">பார்த்துச் சொல்லுங்கள்.</p><p dir="ltr">உங்க கண்ணுக்காவது நல்ல செய்தி</p><p dir="ltr">தெரிகிறதா என்று பார்ப்போம்"</p><br><br><p dir="ltr">"இதோ ஒரு நல்ல செய்தி."</p><p dir="ltr"><br></p><p dir="ltr">"அப்படி என்ன நல்ல செய்தி ?"</p><br><p dir="ltr">"கர்நாடகா மாவட்டத்தில் உள்ள</p><p dir="ltr">கூதூர் என்னும் சிற்றூர்.</p><p dir="ltr">அங்கே ஆலமரங்கள் சாலையின்</p><p dir="ltr">இருமருங்கிலும் வரிசைகட்டி </p><p dir="ltr">நிற்கின்றன.</p><p dir="ltr">யார் செய்த மாயம் இது?</p><p dir="ltr">ராணி மங்கம்மா மறுபடியும்</p><p dir="ltr">பிறந்து வந்துவிட்டாரா?</p><p dir="ltr">அப்பப்பா என்ன ஒரு குளுமை.</p><p dir="ltr">வெயிலே தெரியாத பயணம்.</p><p dir="ltr">பறவைகளின் பாட்டொலிக்கு</p><p dir="ltr">மரங்களின் கிளைகள் மெல்லொலி</p><p dir="ltr">எழுப்பி நம்மைச் சிலிக்க வைக்கின்றன.</p><br><p dir="ltr">எங்குமில்லாத அளவுக்கு ஆலமரங்கள்</p><p dir="ltr">எங்கிருந்து வந்தன?</p><p dir="ltr">ஒரே நாளில் முளைத்து வளர்ந்துவரக்</p><p dir="ltr">கூடியவையா மரங்கள்?</p><p dir="ltr">யாரின் உழைப்பு ?</p><p dir="ltr">எத்தனை ஆண்டுகால உழைப்பு...</p><p dir="ltr">யாரிந்த ஆட்சியாளர்? ....நட்டவர் யார்? </p><p dir="ltr">தண்ணீர் ஊற்றி பராமரித்தவர் யார் ?</p><br><p dir="ltr">எல்லா கேள்விக்கும் ஒரே விடை</p><p dir="ltr">திம்மக்கா என்ற தொண்ணூறு வயதைக்</p><p dir="ltr">கடந்த பெண்மணி என்பது மட்டுமே."</p><div><br></div>"என்னது தொண்ணூறு வயது பெண்மணி மரம் நட்டு வளர்தாரா ?<div>நம்பும்படியாக இல்லையே."</div><div><br></div><div>"உன்னை யார் நம்பச் சொன்னது ?</div><div>ஊரை நம்புகிறது. அரசு பாராட்டி</div><div>விருது வழங்கியிருக்கிறது."</div><div><br></div><div>"அப்படியானால் உண்மை இல்லாமல் இருக்காது"</div><div><br><p dir="ltr">"திம்மக்காவிற்கு மரம் நடவேண்டும்</p><p dir="ltr">என்ற எண்ணம் எப்போது வந்தது</p><p dir="ltr">என்று தெரிந்தால் அதிர்ந்து போவாய்"</p><p dir="ltr"><br></p><p dir="ltr">"அதிர்வதும் அதிராமல் இருப்பதும் நீங்கள் சொல்லப்போகும் செய்தியைப்</p><p dir="ltr">பொறுத்தது. சொல்லுங்கள் திம்மக்காவைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்."</p><br><p dir="ltr">"திம்மக்கா ஒரு சாதாரண ஏழை வீட்டுப்</p><p dir="ltr">பெண்.திம்மக்காவின் பெற்றோர் எல்லோரையும் போல உரிய பருவத்தில் திம்மக்காவை</p><p dir="ltr">சிக்கையா என்பவருக்கு மணம் முடித்து</p><p dir="ltr">வைத்தனர்.</p><br><p dir="ltr">அவர்கள் தங்கள் ஏழ்மையிலும் மகிழ்ச்சியாக</p><p dir="ltr">வாழ்ந்து கொண்டிருந்தனர்.</p><p dir="ltr">ஆனால் ஊர் கண்...உறவினர்</p><p dir="ltr">கண் எல்லாம் அவர்கள் மீதுதான்</p><p dir="ltr">இருந்திருக்க வேண்டும்.</p><br><p dir="ltr">அதனால்தான்....</p><p dir="ltr">திருமணமாகி ஓரிரு ஆண்டிலேயே குழந்தை</p><p dir="ltr">இல்லையா...?குழந்தை இல்லையா ?எனக்</p><p dir="ltr">கேட்டு காயப்படுத்தும் உலகம் திம்மக்காவையும்</p><p dir="ltr">விட்டு வைக்கவில்லை.</p><p dir="ltr">மலடி..மலடி என்று சொல்லால் அடித்தது</p><p dir="ltr">இந்த பிற்போக்கு சமூகம்.</p><br><p dir="ltr">நொந்து போனார் திம்மக்கா....ஏன்</p><p dir="ltr">வெந்து போனார் என்றுதான் சொல்ல</p><p dir="ltr">வேண்டும்.ஒரு கட்டத்தில் காட்டோடு</p><p dir="ltr">பேச ஆரம்பித்தார்.</p><p dir="ltr">காட்டை நேசிக்க ஆரம்பித்தார்.</p><br><p dir="ltr">பெற்றால்தான் பிள்ளையா....?</p><p dir="ltr">இந்த உலகமும் அதிலுள்ள ஒவ்வொரு உயிரும்</p><p dir="ltr">தன் பிள்ளை என்று நினைப்பவள்தான்</p><p dir="ltr">ஒரு தாய்.காடுகளுக்குத் தாயாக மாறினார்."</p><p dir="ltr"><br></p><p dir="ltr">"எவ்வளவு கொடுமையான உலகம்.</p><p dir="ltr">வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும்</p><p dir="ltr">ஏசும். பிள்ளை இல்லையா பெண்ணைக் குற்றம் சொல்லிச் சொல்லி</p><p dir="ltr">இதயத்தைக் கிழிக்கும்."</p><p dir="ltr"><br></p><p dir="ltr">எத்தனைபேர் காயப்படுத்தினாலும்</p><p dir="ltr">திம்மக்கா முடங்கிப் போகவில்லை.</p><p dir="ltr">காடுகளைக்குத் தாயாக வேண்டும் என்று</p><p dir="ltr">முடிவெடுத்தார்.</p><br><p dir="ltr">அந்தத் தாயுள்ளத்தில் உதயமானதுதான்</p><p dir="ltr">இந்த ஆலமரம் நடும் எண்ணம்."</p><p dir="ltr"><br></p><p dir="ltr">"ஓஹோ....ஆலமரங்களின் தயாரானார்"</p><p dir="ltr"><br></p><p dir="ltr">"உண்மை.முதலாவது ஒன்றிரண்டு மரங்களை </p><p dir="ltr">நட்டார்.</p><p dir="ltr">தண்ணீர் பஞ்சம் உள்ள ஊர்.</p><p dir="ltr">தொலைதூரத்தில் இருந்து</p><p dir="ltr">தண்ணீர் கொண்டு வந்து </p><p dir="ltr">ஊற்ற வேண்டிய நிலைமை.</p><p dir="ltr">அதற்காக திம்மக்கா பின்வாங்கிவிடவில்லை.</p><p dir="ltr">மரங்கள்தான் என் பிள்ளைகள் என்று</p><p dir="ltr">தொலை தூரத்திலிருந்து தண்ணீர்</p><p dir="ltr">கொண்டு வந்து ஊற்றி வளர்த்தார்.</p><p dir="ltr">கையிலும் தலையிலும் தண்ணீரை அவர்</p><p dir="ltr">சுமந்து வரும் காட்சி நெஞ்சைப்</p><p dir="ltr">பதைபதைக்கச் செய்திடும்.</p><p dir="ltr">தள்ளா வயதிலும் தளரா மன உறுதியோடு</p><p dir="ltr">தண்ணீர் ஊற்றுகிறார் என்றால்</p><p dir="ltr">மரத்தின்மீது அவர் கொண்ட அன்பை </p><p dir="ltr">என்னவென்பது?"</p><p dir="ltr"><br></p><p dir="ltr">"ஆச்சரியமாக இருக்கிறது."</p><p dir="ltr"> </p><p dir="ltr"> "அவரின் இந்த முயற்சியால்</p><p dir="ltr"> அந்த ஊர் சாலை எங்கும்</p><p dir="ltr"> ஆலமரம்.</p><p dir="ltr"> அதில் கூடுகட்டி வாழும் பறவைகள்.</p><p dir="ltr"> பழுத்துத் தொங்கும் மரங்கள்.</p><p dir="ltr"> ஊஞ்சலாடி விளையாட கயிறுகளாய்த்</p><p dir="ltr"> தொங்கி நிற்கும் விழுதுகள்."</p><br><p dir="ltr">"இவற்றிற்கெல்லாம் காரணகர்த்தாவாக</p><p dir="ltr">இருந்த திம்மக்காவைப்</p><p dir="ltr"> பெருமைப்படுத்த வேண்டாமா?"</p><p dir="ltr"><br></p><p dir="ltr">"பெருமைபடுத்தாமலா?</p><p dir="ltr">2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு<br></p><p dir="ltr">பத்மஶ்ரீ பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது."</p><p dir="ltr">"ஓ...பத்மஶ்ரீ திம்மக்கா என்று சொல்லுங்கள்."</p><div><br></div>'உண்மை<br><p dir="ltr">இது செய்தித்தாளில் வந்த செய்தி.</p><p dir="ltr">இது நல்ல செய்தி இல்லையா?"</p><br><p dir="ltr">"ரொம்ப நல்ல செய்தி.</p><p dir="ltr">நம்ம ஊரிலும் அங்குள்ள இளைஞர்கள்</p><p dir="ltr">எல்லாம் சேர்ந்து </p><p dir="ltr">குளத்தின் வரப்பில் மரங்கள்</p><p dir="ltr">நட்டார்கள் என்றால் நன்றாக </p><p dir="ltr">இருக்கும்."</p><br><p dir="ltr">"ஏன் நட மாட்டார்கள்? உனக்கே</p><p dir="ltr">இந்தச் செய்தியைக் கேட்டதும்</p><p dir="ltr">மரம் நட வேண்டும் என்று</p><p dir="ltr">தோன்றுகிறதில்லையா? </p><p dir="ltr">உங்கள் ஊர் வாலிபர்களுக்கு</p><p dir="ltr">வராதா என்ன....? </p><p dir="ltr">இதுதான் செய்தி செய்யும் மாற்றம்."</p><br><p dir="ltr">"கண்டிப்பாக...நீங்கள் சொல்வது</p><p dir="ltr">சரிதாங்கா...எனக்கே எங்க ஊரைச்</p><p dir="ltr">சுற்றி வேப்பமரம் நட வேண்டும்போல்</p><p dir="ltr">ஆசையாக இருக்கிறது."</p><br><br><p dir="ltr">"இந்தச் செய்தி திம்மக்காவைப்</p><p dir="ltr">பெருமைப் படுத்த வேண்டும்.</p><p dir="ltr">அதேநேரத்தில் இதை வாசிப்பவர்களையும் </p><p dir="ltr">நாமும் இதேபோன்ற நல்ல காரியங்களைச்</p><p dir="ltr">செய்ய வேண்டும் என்று தூண்ட</p><p dir="ltr">வேண்டும் என்று ஒரு நல்ல நோக்கிலேயே</p><p dir="ltr">வெளியிடப்பட்டிருக்கும்.</p><p dir="ltr">அது இப்போது நடந்துவிட்டது.</p><p dir="ltr">நாளை இன்னொரு செய்தியோடு<br></p><p dir="ltr">வருகிறேன்.</p><br><p dir="ltr">வரட்டா....?"</p><br><br><br></div>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-77989172817936409652024-02-19T15:40:00.001-08:002024-02-19T15:42:27.105-08:00நில்லாய் நெடுஞ்சுவரே <p dir="ltr"><b>நில்லாய் நெடுஞ்சுவரே </b></p><p dir="ltr"><b><br></b></p><p dir="ltr">"ஒரு சொல் வெல்லும்;</p><p dir="ltr">ஒருசொல் கொல்லும் "என்று சொல்வார்கள்.</p><p dir="ltr">சொல்லுக்கு அவ்வளவு பெரிய ஆற்றல்</p><p dir="ltr">உண்டு.</p><p dir="ltr">அதுவும் புலவர்களின் சொல்லுக்குப் பேராற்றல் உண்டு.</p><p dir="ltr">அதனால்தான் காளமேகம் மண்மாரிப் பொழியட்டும் என்றதும் மண்மாரிப் பொழிந்ததாகப் படித்திருக்கிறோம்.</p><p dir="ltr">புலவர்கள் அறம்பாடி அழித்த </p><p dir="ltr">வரலாறுகளும் உண்டு.</p><br><p dir="ltr">இங்கு ஒருவர் தன் சொல்லால்</p><p dir="ltr">நெடுஞ்சுவரேயே நிற்க வைத்து விட்டாராம்.</p><p dir="ltr">யாரப்பா அந்தப் பேராற்றலுக்குக்குரிய</p><p dir="ltr">பெரும்புலவர் என்று அறிய ஆவலாக</p><p dir="ltr">உள்ளதல்லவா?</p><br><p dir="ltr">சோழ மன்னன்னோடு ஏற்பட்ட</p><p dir="ltr">மாறுபாட்டால்</p><p dir="ltr">மன்னனும் நீயோ</p><p dir="ltr">வளநாடு முன்னதோ</p><p dir="ltr">உன்னை நினைத்தோ</p><p dir="ltr">தமிழை யோதினேன்</p><p dir="ltr">என்று கோபமாகப் பேசிவிட்டு சோழ நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார்</p><p dir="ltr">கம்பர்.</p><p dir="ltr">ஏதோ கோபத்தில் வெளியே வந்துவிட்டார்.</p><p dir="ltr">வந்த பின்னர்தான் எங்கே செல்வது?</p><p dir="ltr">யாரிடம் போய் நிற்பது?</p><p dir="ltr">என்று கம்பருக்கு ஒன்றும் புரியவில்லை.</p><p dir="ltr">கால் போன போக்கில் நடக்கிறார்.</p><br><p dir="ltr">எவ்வளவு தூரம் நடப்பது?</p><p dir="ltr">இப்போது வயிறு மெதுவாகக் குரல்</p><p dir="ltr">கொடுக்க ஆரம்பித்தது.</p><p dir="ltr">வயிற்றுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.</p><p dir="ltr">பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.</p><p dir="ltr">அதற்கு கம்பர் மட்டும் விதிவிலக்கா என்ன?</p><br><p dir="ltr">அதற்காக யாரிடமாவது இரந்து</p><p dir="ltr">பொருள் பெற முடியுமா?</p><p dir="ltr">அது தன்மானத்திற்கு இழுக்கல்லவா?</p><p dir="ltr">உழைக்காமல் உணவு பெற</p><p dir="ltr">மனம் இடம் கொடுக்கவில்லை.</p><br><p dir="ltr">பாடல் பாடிப் பொருள் பெறலாம் என்றால்</p><p dir="ltr">புலமை உள்ளவர்கள் இருக்க வேண்டுமே.</p><p dir="ltr">பாடலின் மதிப்பே தெரியாதவர்களிடம் </p><p dir="ltr">பாடி என்ன பயன்?</p><p dir="ltr">புலமை உள்ளவர்கள் யாரும் </p><p dir="ltr">இருப்பதாகத் தெரியவில்லை.</p><br><p dir="ltr">கம்பருக்கு இப்போதிருக்கும் ஒரே வழி</p><p dir="ltr">வேலை செய்வதுதான்.</p><p dir="ltr">என்ன வேலை செய்வது?</p><p dir="ltr">யாரிடம் போய் வேலை கேட்பது?</p><p dir="ltr">அப்படியொரு கேள்வி மறுபடியும் வந்து</p><p dir="ltr">முன் நிற்க எதிரே வரும் ஒரு சிலரிடம் வேலை கேட்டுப் பார்க்கிறார் கம்பர்.</p><br><p dir="ltr">எல்லோரும் கையை விரித்து விட்டார்கள்.</p><p dir="ltr">சோர்ந்துபோய் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.</p><p dir="ltr">அப்போது ஒரு மனிதர் இந்த ஊரில்</p><p dir="ltr">வேலி என்ற ஒரு பெண் இருக்கிறாள்.</p><p dir="ltr">அவள் வீட்டில் மண்சுவர் வைக்க ஆள் வேண்டும் என்றாள் . போய் கேட்டுப் பாருங்கள்.</p><p dir="ltr">ஒருவேளை வேலை கிடைத்தாலும் கிடைக்கும் என்று அனுப்பி வைக்கிறார்.</p><br><p dir="ltr">கம்பரும் வேலி வீட்டில் போய் வேலை</p><p dir="ltr">கேட்டு நிற்கிறார்.</p><p dir="ltr">முதலாவது கம்பரை ஏற இறங்க பார்த்த</p><p dir="ltr">அந்தப் பெண்</p><p dir="ltr">சுவர் உறுதியாக நல்லபடியாகக் கட்டித் தந்தால் மட்டுமே குருணி நெல் கூலியாகத் தருவேன் என்று கறாராகப் பேசினாள்.</p><br><p dir="ltr">மண்சுவர் கட்டுவது அப்படியென்ன</p><p dir="ltr">பெரிய வேலை என்று நினைத்துக் கொண்டு</p><p dir="ltr">கம்பரும் நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டு</p><p dir="ltr">வேலையைத் தொடங்கினார்.</p><br><p dir="ltr">முன்பின் தெரியாத வேலை.</p><p dir="ltr">முதலாவது நிறைய தண்ணீரை </p><p dir="ltr">ஊற்றி மண்ணைக் குழைத்தார்.</p><p dir="ltr">மண்ணை எடுத்துச் சுவர் எழுப்ப,</p><p dir="ltr">குழைத்த மொத்த மண்ணும்</p><p dir="ltr"> சடசடவென்று</p><p dir="ltr">கீழே வழிந்து விழுந்தது.</p><br><p dir="ltr">என்ன இது?</p><p dir="ltr">நீர் சற்று அதிகமாக ஊற்றி</p><p dir="ltr">மண்ணைக் குழைத்து விட்டேனோ?</p><p dir="ltr">இப்போது நீரைக் குறைத்து ஊற்றி</p><p dir="ltr">கெட்டியாக மண்ணைக் குழைத்துப்</p><p dir="ltr">பூச ஆரம்பித்தார்.</p><p dir="ltr">நீர் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் பொலுபொலுவென்று கீழே விழுந்தது.</p><p dir="ltr">மறுபடியும் மறுபடியும் முயன்று</p><p dir="ltr">பார்த்தும் கம்பரால் சுவரைக் கட்ட முடியவில்லை.</p><p dir="ltr">சுவர் உறுதியாக கட்டி முடிக்க விட்டால்</p><p dir="ltr">வேலி கூலி தரமாட்டாள் .</p><p dir="ltr">வயிற்றுப்பாட்டிற்கு என்ன செய்வது?</p><p dir="ltr">கையெல்லாம் வலிக்கத் தொடங்கியது.</p><p dir="ltr">அப்படியே கீழே அமர்ந்தார்.</p><br><p dir="ltr">அதட்டி உருட்டிப் புரட்டிப்</p><p dir="ltr">பாடல் பாடியவர் இப்போது சுவரோடு</p><p dir="ltr">பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்.</p><p dir="ltr">புலவர் சுவரோடு உரையாடலா நிகழ்த்துவார்?</p><br><p dir="ltr">அவருக்குத் தெரிந்த தமிழால்</p><p dir="ltr">உருக்கமான பாடலால் </p><p dir="ltr">ஒரு பேச்சு வார்த்தை நடத்தினார்.</p><p dir="ltr">பேச்சுவார்த்தையில் உடன்பாடு</p><p dir="ltr">ஏற்பட்டிருக்குமா?</p><p dir="ltr">அறிந்து கொள்ள</p><p dir="ltr">இதோ அவர் பாடிய பாடல் உங்களுக்காக...</p><br><p dir="ltr">"<b>மற்கொண்ட திண்புயத்தான் மாநகர் விட்டிங்கு வந்து </b></p><p dir="ltr"><b>சொற்கொண்ட பாவின்</b></p><p dir="ltr"><b>சுவையறிவா ரீங்கில்லையே </b></p><p dir="ltr"><b>விற்கொண்ட வாணுதலாள்</b></p><p dir="ltr"><b>வேலி தருங்கூலி </b></p><p dir="ltr"><b>நெற்கொண்டு போமளவும் </b></p><p dir="ltr"><b>நில்லாய் நெடுஞ்சுவரே !"</b></p><p dir="ltr"><b>என்று பாடினார்.</b></p><b><br></b><p dir="ltr"><b>"வீரம் கொண்ட திண்ணிய தோளையுடைய</b></p><p dir="ltr"><b>சோழன் நாட்டைவிட்டு இங்கு வந்தேன்.</b></p><p dir="ltr"><b>இங்கு புலவர் பாடும் பாடலின் புலமையை அறிந்து</b></p><p dir="ltr"><b>கொண்டாட ஒருவரும் இல்லை.</b></p><p dir="ltr"><b>வில்போன்ற புருவத்தை உடைய</b></p><p dir="ltr"><b>வேலி என்ற இப்பெண் கூலியாகத் தரும்</b></p><p dir="ltr"><b>நெல்லை வாங்கிக் கொண்டு</b></p><p dir="ltr"><b>இங்கிருந்து போகுமளவும் நெடுஞ்சுவரே நீ அப்படியே நிற்பாயாக " என்றார்.</b></p><b><br></b><p dir="ltr"><b>கம்பரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நெடுஞ்சுவர் அப்படியே நின்றது.</b></p><b><br></b><p dir="ltr"><b>பெரும் நிம்மதி.வேலை முடிந்தது.</b></p><p dir="ltr"><b>வேலி வந்தாள். கூலியாகப் பேசிய</b></p><p dir="ltr"><b>நெல்லைக் கொடுத்தாள்.</b></p><p dir="ltr"><b>கூலியைப் பெற்றுக்கொண்ட கம்பர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.</b></p><b><br></b><p dir="ltr"><b>வெல்லும் சொல்.</b></p><p dir="ltr"><b>நெடுஞ்சுவரையும் </b></p><p dir="ltr"><b>நிற்க வைத்தச் சொல் .</b></p><p dir="ltr"><b>நம்மையும் பாடலோடு கட்டி இழுத்துச்</b></p><p dir="ltr"><b>சென்ற சொல் கம்பருடையது.</b></p><b><br></b><p dir="ltr"><b>நில்லாய் நெடுஞ்சுவரே!</b></p><b><br><br><br><br><br></b><br>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-52032425759390484522024-02-18T19:58:00.001-08:002024-02-19T02:33:35.934-08:00சங்கத்தமிழ் மூன்றும் தா <p dir="ltr"><b>சங்கத்தமிழ் மூன்றும் தா </b></p><p dir="ltr"><br></p><p dir="ltr">எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர்</p><p dir="ltr">இறைவனைத் தொழுவது நமது வழக்கம்.</p><p dir="ltr">ஔவை மட்டும் இதற்கு விதிவிலக்காக என்ன?</p><p dir="ltr">நாம்,நம் தொழில் நன்றாக நடக்க வேண்டும்.</p><p dir="ltr">படிப்பில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வேண்டும்.</p><p dir="ltr">நல்ல வேலை கிடைக்க வேண்டும்.</p><p dir="ltr">நோய்நொடி இல்லாத</p><p dir="ltr">நலமான வாழ்வைத் தர வேண்டும்</p><p dir="ltr">என்று கேட்போம்.</p><p dir="ltr">நல்ல அறிவைக் கொடு என்று கேட்போம்.</p><p dir="ltr">கீர்த்தியும் புகழும் வந்து சேரட்டும் என்று கேட்போம்.</p><br><p dir="ltr">ஔவையும்</p><p dir="ltr">தனது நல்வழி பாடல்களை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக இறைவனை வணங்கினார். </p><p dir="ltr">வழங்குவதோடு மட்டுமல்லாமல் இறைவனிடம் ஒரு கோரிக்கையும் வைக்கிறார்.</p><p dir="ltr">அப்படி என்று தேவை </p><p dir="ltr">ஔவைக்கு இருந்தது.?</p><br><p dir="ltr">வயிறார உண்ண நல்ல உணவு வேண்டும்</p><p dir="ltr">என்று கேட்டாரா?</p><p dir="ltr">இல்லை.</p><br><p dir="ltr">அவர் வைத்த கோரிக்கை </p><p dir="ltr">என்ன தெரியுமா?</p><br><br><p dir="ltr">"<b>பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை</b></p><p dir="ltr"><b>நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்</b></p><p dir="ltr"><b>துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்</b></p><p dir="ltr"><b>சங்கத் தமிழ் மூன்றும் தா.</b></p><br><p dir="ltr">என்று கேட்கிறார்.</p><br><p dir="ltr">நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா</p><p dir="ltr">என்பது ஔவையின் கோரிக்கை.</p><br><p dir="ltr">"உயிர்களுக்கு நல்லது செய்யும்</p><p dir="ltr">யானை முகத்தானாகிய </p><p dir="ltr">குற்றமற்ற விநாயக பெருமானே!</p><br><p dir="ltr">பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன்,.</p><br><p dir="ltr"> நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றையும் தருவாயாக "</p><p dir="ltr">என்று கேட்கிறார்.</p><br><p dir="ltr">கூழுக்காகப் பாடியவர் என்று கூறுவர்.</p><p dir="ltr">கூழுக்காகப் பாடுபவர் எனக்கு அறுசுவை உணவு வேண்டும் என்றல்லவா கேட்க வேண்டும்.</p><p dir="ltr">ஆனால் ஔவை அப்படி கேட்கவில்லை.</p><p dir="ltr">தனது பாடல்கள் தரமானதாக இருக்க வேண்டும்.</p><p dir="ltr">அதில் இலக்கிய நயம் இருக்க வேண்டும்.</p><p dir="ltr">ஓசை நயம் மிகுந்திருக்க வேண்டும்.</p><p dir="ltr">உள்ளத்தோடு உரையாடி</p><p dir="ltr">சொல்லால் பிணிக்கும் அழகு இருக்க வேண்டும் என்று விரும்பினார்.</p><p dir="ltr">அதனால்தான் எனக்கு சங்கத்தமிழ்</p><p dir="ltr">மூன்றும் தா என்று கேட்கிறார்.</p><p dir="ltr">அருமையான வேண்டுதல் இல்லையா?</p><br><p dir="ltr"> </p>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-31693120957594604272024-02-18T06:59:00.001-08:002024-02-18T07:00:50.229-08:00சும்மா<p dir="ltr"><b>சும்மா...சும்மா... சும்மா </b></p><p dir="ltr"><br></p><p dir="ltr">என்ன பாலாமணி அக்கா...</p><p dir="ltr">வேலை எல்லாம் முடிந்துட்டுதா...</p><p dir="ltr">சும்மா இருந்தாப்ல இருக்கு...</p><br><p dir="ltr">"உனக்கு என்ன மகராசி நீ சும்மா </p><p dir="ltr">இருப்பதற்கு என்றே கொடுத்து வைத்தவள்"</p><br><p dir="ltr">" ஏன் உனக்கு என்னாயிற்று...</p><p dir="ltr"> நீயும் சும்மாதானே இருக்கிறாய் ."</p><br><p dir="ltr">"சும்மாவா...ஒருமணி நேரம் இந்த வீட்டுல </p><p dir="ltr">சும்மா இருக்க விட்டுருவாகளா என்ன "</p><br><p dir="ltr">"சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேம்பா...</p><p dir="ltr">அதுக்குப்போய் ....ஆமா..</p><p dir="ltr">உங்க அத்தை சும்மா இருக்காங்களா? "</p><br><p dir="ltr">"அவுங்களுக்கென்ன ...சும்மா</p><p dir="ltr">தின்னுட்டு தின்னுட்டு...சும்மா இருக்க முடியாமல்</p><p dir="ltr">ஊர்வம்பு இழுத்துக்கிட்டு இருப்பாங்க..."</p><br><p dir="ltr">"நீ சும்மா இருக்க சொல்ல மாட்டியா.."</p><br><p dir="ltr">"சும்மா சும்மா...எத்தனை தடவைதான்</p><p dir="ltr">சொல்றது...கேட்கணுமில்லையா..."</p><br><p dir="ltr">"உன் தங்கை ஒருத்தி சும்மா இருந்தாளே...</p><p dir="ltr">அவள் எப்படி இருக்கிறாள்.."</p><br><p dir="ltr">"அவள் வீட்டில் சும்மாதானே இருக்கிறேன்.</p><p dir="ltr">கம்ப்யூட்டர் வகுப்புக்குப் போகிறேன்</p><p dir="ltr">என்றாள்.</p><p dir="ltr">வீட்டில் சும்மாவே இருப்பதற்கு</p><p dir="ltr">ஏதாவது சும்மா படிச்சுட்டு வரட்டுமே</p><p dir="ltr">என்று அனுப்பி வைத்தேன்."</p><br><p dir="ltr">"சும்மா இருப்பதற்கு அது தேவலதான்..</p><p dir="ltr">அப்படியானால் உனக்கு சும்மா </p><p dir="ltr">இருக்க நேரமே இருக்காது இல்லியா.."</p><p dir="ltr">.</p><p dir="ltr">"சும்மா கொஞ்ச நேரம்கூட</p><p dir="ltr">இருக்க முடியாது"</p><br><p dir="ltr">" எப்போவாது சும்மா இருந்தால்</p><p dir="ltr">எங்க வீட்டுப்பக்கம் வர்றது...</p><br><p dir="ltr"> " அதுக்கெல்லாம் எனக்கு நேரம் ஏது ?</p><p dir="ltr">பகலில் சும்மா கொஞ்சம் தூங்கிட்டா</p><p dir="ltr"> போதும். சும்மா பகலில் அது என்ன</p><p dir="ltr"> தூக்கம் ?என்று எங்க பாட்டி வள்ளென்று</p><p dir="ltr"> விழுந்துடும்."</p><p dir="ltr"> </p><p dir="ltr">"இந்த வயசானவங்களுக்கு வாயை </p><p dir="ltr">வைத்துட்டு சும்மா இருக்கவே முடியாது."</p><br><p dir="ltr">"அது சும்மா இருந்தால் வீட்டில்</p><p dir="ltr">பிரச்சினையே இல்லையே...</p><p dir="ltr">ஆமா..நீ எதுக்கு சும்மா என்னை </p><p dir="ltr">கேள்விக் கேட்டுட்டே இருக்கிற..."</p><br><p dir="ltr">"சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேம்பா....</p><p dir="ltr">கோவிச்சுக்காத...சும்மா இந்தப்பக்கம்</p><p dir="ltr">வந்தேன்...அதுதான் சும்மா உன்னையும்</p><p dir="ltr">பார்த்துப் பேசிட்டுப் போகலாமே </p><p dir="ltr">என்று வந்தேன்."</p><br><p dir="ltr">"எனக்கென்னவோ நீ சும்மா </p><p dir="ltr"> பொய் சொன்ன மாதிரி தெரியுதே "</p><br><p dir="ltr">"சும்மா வரல என்றால் சுமையைத்</p><p dir="ltr">தூக்கிட்டா வந்திருக்கிறேன்."</p><br><p dir="ltr">"சும்மா மழுப்பாத...சொல்லு..</p><p dir="ltr">எதுக்கு வந்தாய்.."</p><br><p dir="ltr">"சும்மா இருப்பதற்கு ஏதாவது</p><p dir="ltr">செடிகிடி மாடியில வளர்க்கலாமே </p><p dir="ltr">என்று பார்த்தேன். ஏதாவது </p><p dir="ltr">காய்கறி விதை கிடைக்குமா என்று</p><p dir="ltr">பார்த்துட்டுப் போகலாம் என்று வந்தேன்."</p><br><p dir="ltr">"அதுதான....சோழியன் குடுமி சும்மா</p><p dir="ltr">ஆடாதே என்று பார்த்தேன்."</p><br><p dir="ltr">"அது என்ன ஆளாளுக்கு சோழியன்</p><p dir="ltr">குடுமி சும்மா ஆடாது என்கிறீங்க..</p><p dir="ltr">எனக்கு அது என்ன என்று </p><p dir="ltr">இன்று தெரிந்தாகணும்."</p><br><p dir="ltr">"எனக்குத் தெரியாதுப்பா...</p><p dir="ltr">சும்மா எல்லோரும்</p><p dir="ltr">சொல்றாங்களே என்று நானும்</p><p dir="ltr">சொன்னேன்."</p><br><p dir="ltr">"எல்லோரும் சொல்லுகிறார்கள்</p><p dir="ltr">என்றால் நீயும் சும்மா சொல்லி வைப்பியா...</p><p dir="ltr">பொருள்தெரியாமல் பழமொழியைப்</p><p dir="ltr">பயன்படுத்தலாமா?"</p><br><p dir="ltr">"சும்மா சொல்லிட்டேம்பா தாயே</p><p dir="ltr">ஆளை விடு.ஏன் உனக்குத்</p><p dir="ltr">தெரிந்திருந்தால் சொல்லுறது..."</p><br><p dir="ltr">"அது சோழியன் குடுமி சும்மா ஆடாது"</p><p dir="ltr">என்பதல்ல...</p><p dir="ltr">"சோழியன் குடுமி சும்மாடு ஆகாது "என்பதுதான்</p><p dir="ltr"> திரிந்து சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று</p><p dir="ltr">ஆகிவிட்டதாம்."</p><br><p dir="ltr">"அது என்ன சும்மாடு ஆகாது..?"</p><br><p dir="ltr">"சோழமண்டலத்திலுள்ள வேளாளர்கள்</p><p dir="ltr">தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்களாம்.</p><p dir="ltr">பின்புற குடுமியைச் சும்மாடாகப்</p><p dir="ltr">பயன்படுத்தலாம். முன்புறக் குடுமியைச்</p><p dir="ltr">சும்மாடாகப் பயன்படுத்த முடியாது.</p><p dir="ltr">ஆகவேதான் சோழியன் குடுமி </p><p dir="ltr">சும்மாடு ஆகாது என்ற சொல்வழக்கு</p><p dir="ltr">இன்று சும்மா ஆடாது என்று</p><p dir="ltr">திரிந்து வழக்குக்கு வந்து விட்டது."</p><br><p dir="ltr">"சும்மாடு சும்மா ஆகிப்போச்சு</p><p dir="ltr">இல்லையா? ...இப்போ சும்மாடு</p><p dir="ltr">என்றால் என்ன ? "</p><br><p dir="ltr">"ஏதாவது ஒரு சுமையைத் தலையில்</p><p dir="ltr">வைத்து தூக்கிவரும்போது பாரம்</p><p dir="ltr">தலையை அழுத்தாமல் இருப்பதற்காக</p><p dir="ltr">ஒருதுணியை வட்டமாக சுருட்டி</p><p dir="ltr">தலையில் வைத்து அதற்குமேல்</p><p dir="ltr">சுமையை வைத்து கொண்டுவருவர்.</p><p dir="ltr">வட்டமாக சுருட்டி வைக்கப்பட்டுள்ள</p><p dir="ltr">துணிக்குப் பெயர்தான் சும்மாடு..</p><p dir="ltr">புரிகிறதா? "</p><br><p dir="ltr">"புரிகிறது...புரிகிறது..</p><p dir="ltr">சோழியன் குடுமியும் புரிகிறது.</p><p dir="ltr">சும்மாடும் புரிகிறது...</p><p dir="ltr">இந்த சும்மா மட்டும் புரியவில்லை."</p><br><p dir="ltr">"சும்மா என்பது ஒன்றுமில்லாத </p><p dir="ltr">ஒரு செயலுக்காக மட்டுமே பயன்படுத்தப்</p><p dir="ltr">படும் சொல் என்று நினைத்துக்</p><p dir="ltr">கொண்டிருந்தோம்.</p><p dir="ltr">சும்மாவுக்கு அப்படி என்ன பெரிதாக பொருள் </p><p dir="ltr">இருக்கப் போகிறது என்று நினைப்போம்.</p><p dir="ltr"> இதுவரை நாம் இருவரும</p><p dir="ltr"> பேசிக்கொண்டிருந்ததை மறுபடியும்</p><p dir="ltr"> ஒருமுறை நினைவுபடுத்திப் பார்.</p><p dir="ltr"> அதுஎன்னென்ன பொருளில் எல்லாம்</p><p dir="ltr"> பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது புரியும்."</p><p dir="ltr"> </p><p dir="ltr">" எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என</p><p dir="ltr"> படித்திருக்கிறேன்."</p><br><p dir="ltr">" இந்த சும்மா மட்டும் விதிவிலக்கா என்ன...</p><p dir="ltr">சும்மா என்ற சொல் வேலையில்லாமல்</p><p dir="ltr">இருக்கிறேன் என்பதைக் குறிப்பிட்டாலும்</p><p dir="ltr">ஒரு நாளைக்கு எத்தனைமுறை சும்மா...</p><p dir="ltr">சும்மா வந்து போகிற சொல்லாக</p><p dir="ltr">இருக்கிறது. மாறி மாறி வந்து</p><p dir="ltr">எத்தனை பொருளைக் கொடுக்கிறது."</p><br><br><p dir="ltr">சும்மா இரு என்பதும் சும்மா</p><p dir="ltr">வேலையில்லை என்றாலும் சும்மா</p><p dir="ltr">வீணாய்க் கிடப்பதற்கும் சும்மா</p><p dir="ltr">தற்செயலாய் என்பதும் சும்மா</p><p dir="ltr">உபயோகமற்று கிடப்பதற்கும் சும்மா</p><p dir="ltr">அடிக்கடி என்பதற்கும் சும்மா சும்மா</p><p dir="ltr">காலியாக இருப்பதற்கும் சும்மா</p><p dir="ltr">ஒன்றுமில்லை என்பதற்கும் சும்மா</p><p dir="ltr">பேசாதே என்பதற்கும் சும்மா</p><p dir="ltr">பேசிக்கிட்டே இருந்தாலும் சும்மா சும்மா</p><p dir="ltr">உண்மையில் என்பதற்கும் சும்மா..</p><p dir="ltr">பொய்யே சொன்னாலும் சும்மா சும்மா </p><p dir="ltr">இளைப்பாறும் போதும் சும்மா</p><p dir="ltr">விளையாட்டிற்குச் சொன்னாலும்</p><p dir="ltr"> சும்மா.. சும்மா </p><p dir="ltr">இலவசம் என்றாலும் சும்மா...</p><p dir="ltr">இப்படி சும்மா இருந்தால் சும்மா</p><p dir="ltr">இருக்க விடாது இந்த சும்மா.</p><br><p dir="ltr">இப்போ... புரிந்து போயிற்று.</p><p dir="ltr">இன்னும் கொஞ்ச நேரம் சும்மா</p><p dir="ltr">நின்றேன்..நீ சும்மா சும்மா</p><p dir="ltr">பேசியே கொன்னுடுவாப்பா...</p><br><p dir="ltr">எனக்கு தலை சுற்றுகிறது.</p><p dir="ltr">ஆளை விடுங்கடா சாமி..</p><br><p dir="ltr"> நானுந்தான்...சும்மா ரொம்ப நேரம்</p><p dir="ltr"> உன்னோடு பேசிக் கொண்டிருந்ததால்</p><p dir="ltr">சும்மா நேரம் போனதே தெரியல...</p><p dir="ltr"> </p><p dir="ltr"> மறுபடியும் சும்மாவா...வா...!</p><br><br><br><br><br><br><br><br><br><br><br><br><br><br><br><br><br><br><p dir="ltr">.</p>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-27711292067389069662024-02-17T06:56:00.000-08:002024-02-17T09:21:43.389-08:00காக்கைப் பாடினியார் <p dir="ltr"><b>காக்கைப் பாடினியார் </b></p><p dir="ltr"><br></p><p dir="ltr"><br></p><p dir="ltr">தலைவன் ஒருவன் வெளியூருக்குப் பொருளீட்ட சென்று விட்டான்.</p><p dir="ltr">தலைவி தலைவனை எதிர்பார்த்துக்</p><p dir="ltr">காத்துக் கொண்டிருக்கிறாள்.</p><br><p dir="ltr">தலைவன் வந்தபாடில்லை..</p><p dir="ltr">தலைவனைப் பற்றிய எந்த செய்தியும் இல்லை.</p><p dir="ltr">என்ன ஆனதோ ஏதானதோ புலம்புகிறாள்.</p><p dir="ltr">வருவானோ வரமாட்டானோ</p><p dir="ltr">என்று ஏக்கத்தோடு வழிமேல் விழி வைத்துக்</p><p dir="ltr">காத்துக் கிடக்கிறாள்.</p><br><p dir="ltr">அப்போது ....</p><p dir="ltr">வீட்டு முற்றத்தில் இருந்த</p><p dir="ltr">மரத்திலிருந்து காக்கை ஒன்று கரைகிறது.</p><p dir="ltr">ஆ....இது காக்கையின் குரலல்லவா!</p><p dir="ltr">காக்கைக் கரைந்தால் விருந்து வரும் என்று</p><p dir="ltr">சொல்வார்களே! </p><p dir="ltr">அப்படியானால் .....</p><p dir="ltr">அப்படியானால்....</p><p dir="ltr">என் வீட்டிற்கு விருந்து வரப்போகிறதா?</p><p dir="ltr">எங்கள் வீட்டிற்கு விருந்தாளியாக</p><p dir="ltr">யார் வரப்போகிறார்?</p><br><p dir="ltr">வேறு யார் வரப்போகிறார்கள்?</p><br><p dir="ltr">ஒருவேளை ....அவராக இருக்குமோ.</p><p dir="ltr">என் தலைவன் </p><p dir="ltr">வரப் போவதைத்தான்</p><p dir="ltr">இந்த காக்கை அறிவித்துவிட்டுச் செல்கிறதோ...?</p><br><p dir="ltr">இருக்கலாம்... இருக்கலாம்.</p><p dir="ltr">அந்த நம்பிக்கையில் தலைவி</p><p dir="ltr">முகத்திலிருந்த கவலை</p><p dir="ltr">கொஞ்சம் கொஞ்சமாக கலந்துக் காணாமல் போயிற்று.</p><br><p dir="ltr"> நம்பிக்கையோடு காத்திருக்கிறாள் தலைவி.</p><p dir="ltr">அவள் எதிர் பார்த்தது போலவே</p><p dir="ltr">தலைவன் வந்து விட்டான்.</p><p dir="ltr">தலைவிக்குக் கையும் ஓடவில்லை.</p><p dir="ltr">காலும் ஓடவில்லை.</p><p dir="ltr">என்ன செய்யலாம்... என்ன செய்யலாம் என்று</p><p dir="ltr">அங்குமிங்கும் நடக்கிறாள் .</p><br><p dir="ltr">காக்கை கரைந்ததினால்தானே</p><p dir="ltr">என் தலைவன் வந்தான்.</p><br><p dir="ltr">காக்கை எனக்கு எவ்வளவு பெரிய உதவி</p><p dir="ltr">செய்திருக்கிறது.</p><p dir="ltr">காக்கை எனக்குச் செய்த இந்தஉதவிக்குக் கைமாறாக நான்</p><p dir="ltr">என்ன செய்யப் போகிறேன் . ?</p><br><p dir="ltr">அந்த காக்கைக்கு இன்று நல்ல உணவூட்ட வேண்டும் என்று நினைக்கிறாள். </p><p dir="ltr">அதனைத் தோழியிடம் சொல்கிறாள்.</p><br><p dir="ltr">அதற்கு தோழி,</p><br><p dir="ltr"> ."<b>திண்தேர் நள்ளிகானத்து அண்டர்</b></p><b><br></b><p dir="ltr"><b>பல்ஆ பயந்த நெய்யில், தொண்டி</b></p><b><br></b><p dir="ltr"><b>முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு</b></p><b><br></b><p dir="ltr"><b>எழுகலத்து ஏந்தினும் சிறிது; என்தோழி</b></p><b><br></b><p dir="ltr"><b>பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு</b></p><b><br></b><p dir="ltr"><b>விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே"</b></p><p dir="ltr"><b> </b></p><p dir="ltr"><b> குறுந்தொகை - 210</b></p><b><br><br></b><p dir="ltr"><b>வலிய தேரையுடைய நள்ளி</b></p><p dir="ltr">ஆட்சிக்குட்பட்ட காட்டில் இடையர்கள் இருக்கின்றனர்.</p><p dir="ltr">அவர்களிடம் ஏராளமான பசுக்கள் உள்ளன. அந்தப் பசுக்களில் இருந்து கரக்கும் பாலிலிருந்து நல்ல </p><p dir="ltr">நெய் கிடைக்கும். </p><p dir="ltr">அந்த நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில் நன்றாக விளைந்த, வெண்ணெல்லரிசியால் ஆக்கிய சுவையான சோற்றை அந்தக் காக்கைகளுக்கு</p><p dir="ltr"> ஏழு பாத்திரங்களில் </p><p dir="ltr">ஏந்தி நீ கொடுக்கலாம் .</p><br><p dir="ltr">இப்படியொரு சுவையான</p><p dir="ltr">உணவை நீ கொடுத்தாலும் தலைவியாகிய உன்னுடைய பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும் பொருட்டு, விருந்தினர் வருவார் என்பதற்கு அடையாளமாகக் கரைந்த</p><p dir="ltr"> காக்கைக்கு நீ வழங்கும் </p><p dir="ltr">இந்த உணவு சிறிதளவே ஆகும்.</p><br><p dir="ltr">காக்கைக்கு நீ நெய்சோறு கொடுத்துச் செய்ய விரும்பும் உதவியை விட</p><p dir="ltr">காக்கை உனக்குச் செய்த உதவி மிகப்</p><p dir="ltr">பெரியது என்கிறாள் தோழி.</p><br><p dir="ltr">தலைவன் வருவானா மாட்டானோ</p><p dir="ltr"> என்று தவித்துக் கொண்டிருந்த தலைவிக்கு</p><p dir="ltr">உன் தலைவன் வருகிறான் என்று முன்னறிவிப்பு செய்த உதவி</p><p dir="ltr">உரிய காலத்தில் செய்த உதவி.</p><p dir="ltr">அந்த உதவிக்கு எதுவும் ஈடாகாது என்பது</p><p dir="ltr">தோழியின் கூற்று.</p><br><p dir="ltr">காக்கை கரைந்து விருந்து வருமா?</p><p dir="ltr">வராதா?</p><br><p dir="ltr">இதில் உண்மை இருக்கிறாதா? </p><p dir="ltr">இல்லையா?</p><p dir="ltr">இது நம்பிக்கையா ?</p><p dir="ltr">மூட நம்பிக்கையா?</p><p dir="ltr">இப்படி ஓராயிரம் கேள்வி எழலாம்.</p><br><p dir="ltr">இந்த ஆய்வு தேவையில்லாத ஒன்று.</p><p dir="ltr">அந்த நேரத்தில் அது ஒரு நம்பிக்கை.</p><p dir="ltr">அவ்வளவே.</p><p dir="ltr">அதனால் கிடைத்தது ஆறுதல்.</p><p dir="ltr">சற்று மனநிம்மதி.</p><p dir="ltr">இதுதான் அவளுக்கு இப்போது தேவையாக</p><p dir="ltr">இருந்தது.</p><p dir="ltr">இதுதான் இங்கு முக்கிய செய்தியாக</p><p dir="ltr">வைக்கப்பட்டுள்ளது.</p><p dir="ltr">காக்கை கரைந்தால் விருந்து வரும் என்ற நம்பிக்கை கொடுத்த புலவர் யாரப்பா</p><p dir="ltr">என்ற கேள்வி எழாமல் இல்லை.</p><br><p dir="ltr">வேறு யாராக இருக்கும் .</p><p dir="ltr">காக்கையைப் பாடினவர்</p><p dir="ltr">காக்கைப் பாடினியார் என்ற பெண்பாற் புலவர்.</p><br><p dir="ltr"><b>விருந்துவரக் கரைந்த காக்கை</b></p><p dir="ltr"><b>அருமையான வரி இல்லையா?</b></p><b><br></b><br><br><br>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-50321588432931399852024-02-14T23:21:00.001-08:002024-02-15T09:51:08.503-08:00பருவத்தோடு ஒட்ட ஒழுகல்...<p dir="ltr"><br></p><p dir="ltr"><b>பருவத்தோடு ஒட்ட ஒழுகல்...</b></p><p dir="ltr"><b><br></b></p><p dir="ltr"><b></b></p><div><b>
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhKs5RV_h-HO0rPVPx9JgT4XRCyVh-yHtbuG__jvyN8Wbmb8EZ2P5pvDyvwGb265A7cW5MBrd9q8DBy-db_cquHhS4WSD4YThqGQVtKrfi3kngPKBj3ap_NTZjMzMTEtbGDTXH7JUitDQWgucBTCuKzX6lL-yvqPIXMQuCHyreUisrySxzqojGTF66gMrk5">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhKs5RV_h-HO0rPVPx9JgT4XRCyVh-yHtbuG__jvyN8Wbmb8EZ2P5pvDyvwGb265A7cW5MBrd9q8DBy-db_cquHhS4WSD4YThqGQVtKrfi3kngPKBj3ap_NTZjMzMTEtbGDTXH7JUitDQWgucBTCuKzX6lL-yvqPIXMQuCHyreUisrySxzqojGTF66gMrk5" width="400">
</a>
</b></div><b><br></b><p></p><p dir="ltr"><b>பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்</b></p><p dir="ltr"><b>தீராமை ஆர்க்குங் கயிறு"</b></p><p dir="ltr"><b> குறள்: 482</b></p><br><p dir="ltr">பருவத்தோடு-காலத்தோடு</p><p dir="ltr">ஒட்ட- பொருந்த</p><p dir="ltr">ஒழுகல்-நடந்து கொள்ளுதல் </p><p dir="ltr">திருவினைத்- செல்வத்தை</p><p dir="ltr">தீராமை- நீங்காமல்</p><p dir="ltr">ஆர்க்குங்- கட்டி வைக்கும் </p><p dir="ltr">கயிறு- கயிறாகும் </p><br><p dir="ltr"><b>காலத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும்</b></p><p dir="ltr"><b>இயல்பு செல்வத்தை </b></p><p dir="ltr"><b>நம்மிடமிருந்து நீங்கவிடாமல் </b></p><p dir="ltr"><b>கட்டி வைக்கும் கயிறாகும்.</b></p><p dir="ltr"><br></p><br><p dir="ltr"><b>விளக்கம்</b>:</p><br><p dir="ltr">எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர்</p><p dir="ltr">அதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காலம் ஏற்புடையதாக அமைந்து</p><p dir="ltr">விட்டால் சூழலுக்கு உகந்ததாக </p><p dir="ltr">அமைந்துவிட்டால் வெற்றியை நோக்கிய நமது பயணம்</p><p dir="ltr">தொடங்கிவிட்டது என்று கொள்ளலாம்.</p><p dir="ltr">அதுபோல காலத்திற்கு ஏற்ப</p><p dir="ltr">சூழலுக்கு ஏற்ப வாழப் பழகிக் கொண்டால்</p><p dir="ltr">நம்மிடம் இருக்கும் செல்வம் நம்மைவிட்டு ஒரு போதும் நீங்காது.</p><p dir="ltr">செல்வம் மிகுதியாக இருக்கும்போது</p><p dir="ltr">எப்படி செலவழிக்க வேண்டும்</p><p dir="ltr">செல்வம் குறைவாக இருக்கும்போது</p><p dir="ltr">எப்படிச் சிக்கன நடவடிக்கைகள்</p><p dir="ltr">மேற்கொள்ள வேண்டும் என்று தெரியும்.</p><br><p dir="ltr">எந்தப் பருவத்தில் எந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும்.</p><p dir="ltr">காற்றடிக்கும் போது மாவு விற்க</p><p dir="ltr">செல்வதும் மழைக் காலங்களில்</p><p dir="ltr">உப்பு வியாபாரத்திற்குக் கூடையைத்</p><p dir="ltr">தூக்கிக் கொண்டு செல்வதும்</p><p dir="ltr">எந்தப் பருவத்தில் எந்தத் தொழில் செய்தால்</p><p dir="ltr">பொருள் ஈட்ட முடியும் என்ற </p><p dir="ltr">அறிவில்லாமையே ஆகும்.</p><p dir="ltr">அதனால்தான் </p><p dir="ltr">காலம் அறிதல் வாழ்க்கைக்கு உகந்தது. வளர்ச்சிக்கு ஏற்றது. வெற்றிக்கு வழிகாட்டுவது. செல்வம் ஈட்டலுக்குத் துணை நிற்பது.ஆதலால் பருவ காலம் அறிந்து பக்குவமாய் நடந்து கொள்க.</p><p dir="ltr">பருவம் தப்பிய வெள்ளாமை</p><p dir="ltr">வீடு வந்து சேராது என்பார்கள்.</p><p dir="ltr">அதனால்தான் பருவம் அறிந்து காலத்தோடு பொருந்த ஒழுகுதல் வேண்டும் . அப்படி பருவம் அறிந்து ஒழுகுவோமானால் அது நம்மிடம் இருக்கும் செல்வத்தைக் குறைய விடாமல் பாதுகாத்து வைக்கும் ஒரு கருவியாக இருக்கும் என்கிறார் வள்ளுவர்.</p><p dir="ltr">காலத்தோடு பொருந்த ஒழுகுதல்</p><p dir="ltr">செல்வத்தைப் பிணிக்கும்</p><p dir="ltr">கயிறு.</p><p dir="ltr"><b><br></b></p><p dir="ltr"><b>English couplet:</b><br></p><b><br></b><p dir="ltr"><b>"The bond binds fortune fast is ordered </b></p><p dir="ltr"><b>effort made</b></p><p dir="ltr"><b>Strictly observant still of</b></p><p dir="ltr"><b>favouring season's aid"</b></p><b><br></b><p dir="ltr"><b>Translation:</b></p><b><br></b><p dir="ltr"><b>Acting at the right season,the cord</b></p><p dir="ltr"><b>that will improveably bind success.</b></p><b><br></b><p dir="ltr"><b>Transliteration :</b></p><b><br></b><p dir="ltr"><b>"Paruvaththodu otta ozhukal thiruvinaith</b></p><p dir="ltr"><b>theeraamai aarkkunG kayiru"</b></p><b><br></b><br>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-23738894304809762012024-02-13T10:32:00.000-08:002024-02-15T09:55:53.022-08:00வள்ளல் ஆய் அண்டிரன் <div>
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjs6LorH_ddGxTI_ftmiJCVFqETxHQ7UytMGQ-jBKCVLZ9C0wDy2xslrcCdr_f8o5EXKMdzZTq9D90dbDO4Yey4j5A_gSdvyUc6vkUyOZZgyq_Yiy_-TFiBCiQjC_iQQFaI0Z79gU6yIdmBV_DuQz88o9gzJV-PC_7uzfMXBSYANmG83YyuoBmysc7k-klN">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjs6LorH_ddGxTI_ftmiJCVFqETxHQ7UytMGQ-jBKCVLZ9C0wDy2xslrcCdr_f8o5EXKMdzZTq9D90dbDO4Yey4j5A_gSdvyUc6vkUyOZZgyq_Yiy_-TFiBCiQjC_iQQFaI0Z79gU6yIdmBV_DuQz88o9gzJV-PC_7uzfMXBSYANmG83YyuoBmysc7k-klN" width="400">
</a>
</div><p dir="ltr"><b>வள்ளல் ஆய் அண்டிரன் </b></p><p dir="ltr"><b><br></b></p><p dir="ltr">கடையேழு வள்ளல்களில் ஒருவன் ஆய்</p><p dir="ltr">அண்டிரன் பொதிகை மலையை ஆண்ட மன்னன்.</p><p dir="ltr">பாரியையும் ஓரியையும் காரியையும்</p><p dir="ltr">தெரிந்த நம்மில் பலருக்கு ஆய் அண்டிரனைத்</p><p dir="ltr">தெரியவில்லை.</p><br><p dir="ltr">ஆய் அண்டிரன் அப்படி என்ன செய்து விட்டான்.?</p><p dir="ltr">ஏதோ கடையேழு வள்ளல்கள் வரிசையில்</p><p dir="ltr">இருப்பதால் அந்தப் பெயரை உச்சரிக்கிறோம்.</p><p dir="ltr">முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி.</p><p dir="ltr">மயிலுக்குப் போர்வை கொடுத்தான்</p><p dir="ltr">பேகன். இந்த ஆய் அண்டிரன் என்ன கொடுத்தான் என்று கடையேழு வள்ளல்களுள் ஒருவராக எண்ணப்படுகிறார் என்ற கேள்வி நம்மில் பலருக்கு உண்டு.</p><br><p dir="ltr">எதுவுமே செய்யாத ஒருவரை</p><p dir="ltr">வரலாறு எப்படி வள்ளலாக ஏற்றுக் கொள்ளும்.?</p><p dir="ltr">நிச்சயமாக ஆய் அண்டிரன் பெரிய</p><p dir="ltr">பெரிய செயல்கள் செய்திருக்க வேண்டும் .</p><p dir="ltr">எதிர்பாராது வழங்கும் வள்ளலாக</p><p dir="ltr"> இருந்திருக்க வேண்டும்.</p><p dir="ltr">அவரைப் பற்றி நாம் அறிந்து வர<br></p><p dir="ltr">வேண்டும் என்பதற்காக பொதிகை மலையை நோக்கிப் பயணப்பட்டேன்.</p><p dir="ltr">ஏன் பொதிகை மலையை நோக்கிய பயணம்?</p><br><p dir="ltr">பொதிகை மலைப் பகுதியை ஆண்ட மன்னன் அல்லவா ஆய் அண்டிரன்!</p><p dir="ltr">அவனைப் பொதிகை மலையில் போய் பார்க்காமல் வேறு எங்கு போய்</p><p dir="ltr">கண்டிட முடியும்?</p><br><p dir="ltr">என்னைப் போலவே புலவர் ஒருவருக்கும்</p><p dir="ltr">ஆய் அண்டிரனைக் கண்டு வர ஆசை</p><p dir="ltr">என்று நினைக்கிறேன்.</p><p dir="ltr">அவர் முன்னால் செல்ல அவருக்குத் தெரியாமல் நான் மறைந்து மறைந்து</p><p dir="ltr">சென்றேன். அவருக்கு ஆய் அண்டிரனோடு நல்ல நெருக்கம் இருந்திருக்க வேண்டும்.</p><p dir="ltr">அது அவரது நடையில் தெரிகிறது.</p><p dir="ltr">புலவர் பொதிகை மலையை நோக்கி நடக்கிறார்.</p><p dir="ltr">வழியில் ஒரு இளைஞன்.</p><p dir="ltr">பார்ப்பதற்குப் பெரிய இடத்து இளைஞன் போல இருக்கிறான். கழுத்தில் புலித்தாலி அணிந்திருக்கிறான்.</p><p dir="ltr">அப்படியானால் அவனுக்கும் அரசனுக்கும்</p><p dir="ltr">தொடர்பு இருந்திருக்க வேண்டும்.</p><p dir="ltr">மன்னன் வழங்கிய புலிப்பல்<br></p><p dir="ltr">தாலியாகத்தான் இது இருக்க வேண்டும்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">அவனை ஏற இறங்க பார்த்த புலவர்,</p><p dir="ltr">பயணக் களைப்பு தெரியாதிருக்க அவனையும் கூடவே அழைத்துக் கொண்டு</p><p dir="ltr">மலையை நோக்கிச் செல்கிறார் .</p><p dir="ltr">அப்போது எதிரே இன்னொரு புலவர் வருகிறார்.<br></p><p dir="ltr">அவர் அணிந்திருந்த ஆடை,</p><p dir="ltr">வற்றிய வயிறு,</p><p dir="ltr">ஒட்டிய கன்னம் ,</p><p dir="ltr">பல நாட்கள் எண்ணெய் அறியாத்</p><p dir="ltr">தலைமுடி யாவும் ஏழ்மையின்</p><p dir="ltr">கோலத்தை வெளிப்படுத்தியது.</p><p dir="ltr">இவருக்கும் </p><p dir="ltr"> ஆய் அண்டிரனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டால்<br></p><p dir="ltr">இவருக்கு இருக்கும் வறுமை</p><p dir="ltr">தீரும்.</p><p dir="ltr">இப்படியொரு கணக்கு முடமோசியார் மனதில் ஓட,</p><p dir="ltr">அதனால் புலவர்மீது</p><p dir="ltr">இரக்கம் ஏற்பட,</p><p dir="ltr">அவரையும் ஆற்றுப்படுத்தி ,பொதிகை மலைக்குத் தன்னோடு</p><p dir="ltr">அழைத்துச் செல்கிறார் புலவர்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">செல்லும்போது வழி நெடுக </p><p dir="ltr">ஆய் அண்டிரன்</p><p dir="ltr">கொடைத் தன்மையைப் பற்றிச் சொல்லிக்கொண்டே செல்கிறார்.</p><p dir="ltr">நானும் காதுகளைக் கூர்மையாக்கிக்</p><p dir="ltr">கவனமாகக் கேட்டேன்.</p><p dir="ltr"> "ஆய் அண்டிரனைப் பார்த்து பரிசில்பெற வரும் யாரையும் அவன் வெறுங்கையோடு அனுப்புவதில்லை..பொன் பொருள் கொடுப்பதோடு நின்று விடுவதில்லை. அவற்றோடு ஒரு யானையையும் பரிசிலாகக் கொடுத்துவிடுவான்."</p><p dir="ltr">என்றார் புலவர்.</p><p dir="ltr">"பொன் பொருள் கொடுப்பது சரி.யானை எதற்கு?" </p><p dir="ltr">"பொதிகை மலையில் நிறைய யானைகள் உண்டு. அதனால் அதனையும் பரிசிலாக வழங்கி, தனக்கென ஒரு தனித் தன்மையை உருவாக்கி வைத்திருந்தான் ஆய் அண்டிரன்."</p><p dir="ltr">"ஓ...யானை கொடுத்த வள்ளல் என்று<br></p><p dir="ltr">சொல்லுங்கள். "</p><p dir="ltr">"ஆம்...அதுதான் ஆய் அண்டிரனின் தனிச்சிறப்பு.</p><p dir="ltr">"நான் ஆய் அண்டிரனைப் பார்க்கச் சென்ற நிகழ்வு சுவையானது.</p><p dir="ltr">வேடிக்கையானது.</p><p dir="ltr">சோழ நாட்டுப் புலவரான என் காதுகளில் ஆய் அண்டிரன் பற்றிய செய்திகள்</p><p dir="ltr">வந்து விழுந்தன. புகழாத புலவரில்லை. பாடாத வாயுமில்லை.அப்படி என்னதான் ஆய் அண்டிரனிடம் இருக்கிறது.? அனைவரும் கொண்டாடும் இந்த மன்னனை நானும் கண்டிட வேண்டும் என்ற வேட்கை உந்தித் தள்ள நானும்</p><p dir="ltr">ஆய் அண்டிரனைக் பார்த்து வரச் சென்றேன்.சொல்லப் போனால் வேடிக்கை பார்த்து வர வேண்டும்<br></p><p dir="ltr">என்றுதான் சென்றேன்.</p><p dir="ltr">பொருள் வாங்கி வர வேண்டும் என்பது என் நோக்கமல்ல. மன்னனின் புலமையும் புலவர்களை மதிக்கும் பண்பும் உண்மையா ?மிகைப்படுத்தப்படுகிறதா?என்பதை உறுதி செய்வதற்காகச் சென்றேன். </p><p dir="ltr">ஆனால் ....</p><p dir="ltr">நான் மன்னனைப் பார்த்ததும் என் நினைவுகளை மாற்றிக் கொண்டேன்.</p><p dir="ltr">.நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே மன்னன் என்னைக் கொண்டாடினான். எனக்கு முள்ளம்பன்றி இறைச்சி வைத்து விருந்தளித்தான்."<br></p><p dir="ltr">"முள்ளம்பன்றி இறைச்சியா? எதற்கு?"</p><p dir="ltr">"சிறப்பான விருந்து என்றால் அதில் முள்ளம்பன்றி இறைச்சி கொடுத்து மகிழ வைப்பது மன்னனின் பழக்கம்."</p><p dir="ltr">"நல்ல பழக்கம். நல்ல வரவேற்பு இல்லையா "</p><p dir="ltr">" மிகச்சிறப்பு.</p><p dir="ltr">மறுநாள் புறப்படும் நேரம் வந்தது.</p><p dir="ltr">பொன்னையும் பொருளையும் புலித்தோலால் போர்த்திக்</p><p dir="ltr">கைகளில் கொடுத்தான். மன்னன்."</p><p dir="ltr">"என்ன ...புலித்தோலிலா?</p><p dir="ltr">நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்" உடன் வந்த புலவர் ஆச்சரியத்தோடு பேசினார்.</p><p dir="ltr">"புலித்தோலால் போர்த்தி ஒரு பொருளைக் கொடுப்பது என்பது<br></p><p dir="ltr">அந்த காலத்தில் மிகவும் மரியாதைக்குரிய செயலாக கருதப்பட்டது.</p><p dir="ltr">சோழ நாட்டுப் புலவராகிய எனக்கே இத்துணை மரியாதை செய்து அனுப்புகிற</p><p dir="ltr">தங்கள் பண்பை எப்படி மெச்சுவது என்று</p><p dir="ltr">தெரியவில்லை என்றேன் . மன்னன் புன்னகைத்துக் கொண்டார்".</p><p dir="ltr">"தங்கள் பெயர் என்னவென்று நான் அறிந்து<br></p><p dir="ltr">கொள்ளலாமா? "என்று முதன் முறையாக உடன் வந்தப் புலவர் பற்றிய விபரத்தைக் கேட்டார்</p><p dir="ltr">"ஏணிச்சேரி முடமோசியார் என்பது என் பெயர்."</p><p dir="ltr">"அழகான பெயர்"</p><p dir="ltr">அப்போது உடன் வந்த வாலிபன் தன் கழுத்தில் கிடந்த புலிப்பல் தாலியைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான்.</p><p dir="ltr">"என்ன தம்பி திடீரென்று கழுத்தைத் தடவிப் பார்ப்பது போலிருக்கிறது."</p><p dir="ltr">"இதுவும் அண்டிரன் தந்ததுதான்"</p><p dir="ltr">பெருமையாகக் கூறினான் அந்த வாலிபன்.</p><p dir="ltr">"இப்படி வாரிவழங்கினால்..<br></p><p dir="ltr">தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ள மாட்டானா?"</p><p dir="ltr">"சரியாகக் கேட்டீர்கள்.</p><p dir="ltr">தனக்குப் போகத்தான் தானம்</p><p dir="ltr">இப்படியொரு எண்ணம் ஆய் அண்டிரனிடம் ஒருபோதும் இருந்ததில்லை.</p><p dir="ltr">இதற்கும் ஒரு கதை உண்டு.</p><p dir="ltr">ஒருமுறை ஒரு நீல நாகச்சட்டை ஒன்று </p><p dir="ltr">பெருந்தவம் புரிந்த ஒரு முனிவரின் </p><p dir="ltr">கையில் கிடைத்திருக்கிறது.</p><p dir="ltr">கிடைத்தற்கரியது.</p><p dir="ltr">அது யாரிடம் இருக்கிறதோ</p><p dir="ltr">அவருக்கு மேலும் மேலும் செல்வம் பெருகும். அப்படி ஒரு சிறப்பு அந்த</p><p dir="ltr">நீல நாகச் சட்டைக்கு உண்டு.இந்த நீல நாகச் சட்டை</p><p dir="ltr">என்னிடம் இருப்பதில் என்ன பயன்?</p><p dir="ltr">இப்படி நினைத்து ஆழ்ந்த சிந்தனையில்</p><p dir="ltr">கண்களை மூடி இருந்தார் முனிவர்.</p><p dir="ltr">திடீரென்று ஏதோ அசைவாடுவது போன்ற உணர்வு.கண்களைத் திறந்து பார்க்கிறார் முனிவர்.</p><p dir="ltr">எதிரில் சுரப்புன்னை மலர் மாலை அணிந்த ஒரு மனிதன் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறான். இவன் ஆய் அண்டிரனாயிற்றே . தக்க நேரத்தில் வந்திருக்கிறான்.</p><p dir="ltr">இந்த நீல நாக சட்டை </p><p dir="ltr"> ஆய் அண்டிரன் போன்ற ஒரு வள்ளல் கையில் இருந்தால்.....</p><p dir="ltr">ஆம் அதுதான் சரி. இந்த நீல நாகச் சண்டையால் அவனுக்கு மேலும் மேலும் </p><p dir="ltr">பொருள் சேரும். அது பிறருக்கு உதவுவதற்கு உதவியாக இருக்கும் .</p><p dir="ltr">அவன் இன்னும் அதிகமாக கொடுத்துக் கொண்டே இருப்பான் "என்று அதனை ஆய் அண்டிரன் கைகளில் கொடுக்கிறார் முனிவர்.</p>"ஆச்சரியமாக இருக்கிறதே!அந்த நீல நாகச் சட்டை ஆய் அண்டிரனினிடம் இருப்பதால்தான் இவ்வளவு கொடுக்க முடிகிறதா?"<p dir="ltr">அதுதான் இல்லை.</p><p dir="ltr">வள்ளல்களுக்குக் கொடுத்துதான் பழக்கம்.வாங்கி பழக்கமில்லை.</p><p dir="ltr">இந்த நீல நாகச் சட்டை</p><p dir="ltr">என்னிடம் இருந்தால் என்னைத் தேடி வருபவர்களுக்கு மட்டுமே என்னால் பொருள் கொடுக்க முடியும்.</p><p dir="ltr">இதுவே உலகுக்கெல்லாம் படியளக்கும் சிவன் கையில் இருந்தால்...</p><p dir="ltr">உலக மக்கள் எல்லாம் வறுமையின்றி</p><p dir="ltr">எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்வார்கள் நினைத்துப் பார்த்தான் அண்டிரன்.</p><p dir="ltr">அவ்வளவுதான் . அண்டிரன் அதனை ஆலமரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் பாதத்தில் வைத்துவிட்டு அப்படியே கடந்து சென்று விட்டான்.</p>என்னே உயர்ந்த சிந்தனை .!<div><p dir="ltr">"எனக்கு சீக்கிரமாகவே அந்த வள்ளலைப் பார்க்க வேண்டும் என்று ஆசை ஆசையாக இருக்கிறது."</p><p dir="ltr">விரைவு படுத்தினார் புலவர்.</p><p dir="ltr">"பார்க்கத்தானே போகிறோம்.</p><p dir="ltr">இதோ ஆய்க்குடி வந்து விட்டோம்.</p><p dir="ltr">அதோ தெரிகிறதே அதுதான் அரண்மனை."</p><p dir="ltr">"இதுவா இது அரண்மனைபோலவே தெரியவில்லையே.</p><p dir="ltr">அரண்மனை பொலிவிழந்து காணப்படுகிறது.</p><p dir="ltr">இவ்வளவு நேரம் நீங்கள் ஆய்</p><p dir="ltr">அண்டிரன் பற்றி பேசியதற்கும்</p><p dir="ltr">அரண்மனைக்கும் சம்பந்தமில்லா</p><p dir="ltr">காட்சி தெரிகிறது.. அரண்மனைக்கு </p><p dir="ltr">வெளியில் வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டிருக்கும் </p><p dir="ltr">யானை பந்தி இல்லை."</p><p dir="ltr">" ஆம்....ஏன் ....என்ன நிகழ்ந்தது?என்னாயிற்று?"</p><p dir="ltr">யானைப் பந்தி இல்லாமல் வெறுமனே கயிறுகள் கிடக்கின்றன. வறுமையில் வாழும் ஒரு மன்னனா புலவர்களுக்கு வாரிவழங்க முடியும்" என்ற கேள்வி முகத்தில் தெரிய உடன் வந்த புலவர் </p><p dir="ltr">முட மோசியாரைப் பார்க்கிறார்.</p><p dir="ltr">"ஏன் வருத்தப்படுகிறீர்.?</p><p dir="ltr">வாரும் வந்துப் பாரும்."</p><p dir="ltr">மூவரும் அரண்மனைக்குள் நுழைகின்றனர்.<br></p><p dir="ltr">நல்ல வரவேற்பு. நல்ல புலமையுள்ள மன்னன். புலவரின் பாடலைக் கேட்டு</p><p dir="ltr">பாராட்டினான்.</p><p dir="ltr">உரிய மரியாதை வழங்கப்பட்டது.</p><p dir="ltr">நல்ல விருந்தும் படைக்கப்பட்டது.</p><p dir="ltr">பொன் பொருள் வழங்கப்பட்டன</p><p dir="ltr">இப்போது உடன் வந்த </p><p dir="ltr">புலவரின் முகத்தில்</p><p dir="ltr">பெரும்மகிழ்ச்சி. </p><p dir="ltr">மகிழ்ச்சியோடு புலவர்கள்</p><p dir="ltr">அங்கிருந்து புறப்பட்டனர்.</p><p dir="ltr">அவர்களை வழியனுப்பி விட்டு</p><p dir="ltr">அண்டிரன் சற்று நேரம் அமைதியாக</p><p dir="ltr">அமர்ந்திருக்கிறான்.</p><p dir="ltr"> மன்னன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.</p><p dir="ltr">பொன் பொருளோடு யானையையும் கொடுப்பதல்லவா அண்டிரன்</p><p dir="ltr">பழக்கம்.</p><p dir="ltr">பந்தியில் யானை இல்லாததால்</p><p dir="ltr"> இந்த புலவருக்குக் கொடுத்தனுப்ப<br></p><p dir="ltr">யானையில்லையே என்ற கவலை</p><p dir="ltr">அண்டிரன் முகத்தில் மண்டிக் கிடக்க</p><p dir="ltr">தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறான்.</p><p dir="ltr">இப்போது அண்டிரன் மனதில் பல்வேறு கேள்விகள் வந்து விடை கேட்டு நிற்கின்றன.</p><p dir="ltr">இப்போது யானை மட்டும் இல்லை.இனி வரப்போகும் புலவர்களுக்கு</p><p dir="ltr">என்ன கொடுக்கப் போகிறாய்?</p><p dir="ltr">யானை இல்லாமல் அனுப்பிவிட்டாய்.</p><p dir="ltr">இனிவரும் புலவர்களுக்குப் பொருளும் இல்லை என்று அனுப்பப் போகிறாயா? என்ற கேள்வி மறுபடியும் மறுபடியும் வந்து அண்டிரனைத் தூங்கவிடாமல் </p><p dir="ltr">துரத்தியடித்தது.</p><p dir="ltr">கொடுத்த கை முடமாகிப் போனது போன்றதொரு உணர்வு.</p><p dir="ltr">என்னை நம்பி வருகிறவர்களுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்....</p><p dir="ltr">என்ன செய்யப் போகிறேன். கேள்வி</p><p dir="ltr">நெஞ்சை வாட்டியது.</p><p dir="ltr">இந்தக் கவலையே</p><p dir="ltr">அவன் ஊன் உறக்கத்தைக்<br></p><p dir="ltr">களவாடிக் கொண்டது.உண்ணாமல்...</p><p dir="ltr">உறங்காமல் மனிதன் எத்தனை நாளுக்கு தந்தான் தாக்குப் பிடிக்க முடியும்.?</p><p dir="ltr">அப்படியே இருந்து உயிரை மாய்த்துக் கொண்டான் பொதிகை மன்னன்.</p><p dir="ltr">கண்ணீர் நிறைந்த கண்களோடு திரும்பி<br></p><p dir="ltr">நின்று கொண்டேன்.</p><br><p dir="ltr">யானைப் பந்தியில் யானை இல்லை.</p><p dir="ltr">போரிடுவதற்கல்ல.</p><p dir="ltr">இரப்பவர்களுக்கு பொன் பொருளோடு</p><p dir="ltr">கொடுத்தனுப்புவதற்கு...</p><p dir="ltr">இப்படியொரு வள்ளலா?</p><p dir="ltr">கேட்கும்போது மெய் சிலிர்க்கிறதல்லவா! </p><p dir="ltr"> கொடுப்பதற்கு யானை இல்லையே எனத் தன்னை</p><p dir="ltr">மாய்த்துக் கொண்ட மன்னன் என்று வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்து விட்டான் ஆய் அண்டிரன்.</p><p dir="ltr"> இதுதான் கடையேழு வள்ளல்களுள்</p><p dir="ltr">ஒருவராக ஆய் அண்டிரன் கொண்டாடப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.</p><p dir="ltr">யானை கொடுத்த வள்ளல்ஆய் என்று</p><p dir="ltr">வரலாற்றேடுகளில் ஆய் அண்டிரன் </p><p dir="ltr">பதிவு செய்யப்பட்டான்.</p><br><br><br><br><br><br><br></div>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-85587712962045056662024-02-08T20:19:00.001-08:002024-02-15T01:11:23.756-08:00கனவில் ஔவை<p dir="ltr"><b>கனவில் ஔவை</b></p><p dir="ltr">நார்க்கட்டிலில் </p><p dir="ltr">நாடி வானம் பார்க்க</p><p dir="ltr">மூடி கண்கள் இருக்க</p><p dir="ltr">செவி மடலை</p><p dir="ltr">மெல்ல தொட்டதொரு குரல்</p><p dir="ltr">விழிகள் திறக்க மறுக்க</p><p dir="ltr">கைகள் மட்டும் சிலிர்க்க</p><p dir="ltr">கேள்வி கேட்க </p><p dir="ltr">மனம் நினைக்க</p><p dir="ltr">நா எழும்ப மறுக்க</p><p dir="ltr">செவி மடலுக்குக்குள்</p><p dir="ltr"> மேலும் ஒரு சலசலப்பு</p><p dir="ltr">சிற்றெறும்பு கடித்ததொரு </p><p dir="ltr">சிலுசிலுப்பு</p><p dir="ltr">செவி மடலைத் தழுவி</p><p dir="ltr">செவி தீட்டி</p><p dir="ltr">கவனம் திரட்டி</p><p dir="ltr">குரல் அடையாள</p><p dir="ltr">வகுப்பு நடத்தி</p><p dir="ltr">குழம்பிய மனதோடு </p><p dir="ltr"> காத்திருந்தேன்</p><p dir="ltr">வெற்றுக் காற்று </p><p dir="ltr">வெப்பமொடு வந்து முட்ட</p><p dir="ltr">கண் முன் ஏதோ </p><p dir="ltr">அசைவாடும் உணர்வு கிட்ட</p><p dir="ltr">யாரென்று குரல் அதட்ட</p><p dir="ltr">முட்ட வந்தவள் </p><p dir="ltr">இதழ் குவிக்க</p><p dir="ltr">முத்துக்களைச் சிதற விட்டு</p><p dir="ltr">வேடிக்கை காட்டி நின்றாள்</p><p dir="ltr">மயங்கிய வேளையில்</p><p dir="ltr">மெல்லொலி வந்து</p><p dir="ltr">வேசம் கட்டிய நான் </p><p dir="ltr">வேசக்காரியுமல்ல</p><p dir="ltr">மோசக்காரியுமல்ல </p><p dir="ltr">யாரென்று நீர் உரைத்தால்</p><p dir="ltr">சாகா மருந்தொன்று தருவேன்</p><p dir="ltr">வேகா வெயிலில் </p><p dir="ltr">சுட்டப் பழம் எடுத்து வந்தேன்</p><p dir="ltr">சுவைத்திட விருப்பமோ </p><p dir="ltr">எனக் கரம் நீட்ட</p><br><p dir="ltr">சாகா மருந்து தர இவளென்ன</p><p dir="ltr">சஞ்சீவி பர்வதத்துக்</p><p dir="ltr">காரிகையா?</p><p dir="ltr">கைத்தடியொடு</p><p dir="ltr">குறுக்கே நடக்க</p><p dir="ltr">முட்டொன்று தட்டி</p><p dir="ltr">ஒலியெழுப்ப</p><p dir="ltr">தட்டுத் தடுமாறி நடக்கு</p><p dir="ltr">மிந்த முதுமகள்</p><p dir="ltr">யாரிந்த தேவதை?<br></p><p dir="ltr">ஏனிந்த விடுகதை?</p><p dir="ltr">விடுகதை அவிழ்ப்பில்</p><p dir="ltr">சிந்தை வானில் மிதக்க</p><p dir="ltr">வானம் வெள்ளியை </p><p dir="ltr">அள்ளித்தூவி</p><p dir="ltr">மெல்ல கண் சிமிட்ட</p><p dir="ltr">அச்சத்தில் மெல்ல</p><p dir="ltr"> உதடுகள் விரிய</p><p dir="ltr"> அடுத்த கேள்விக் <br></p><p dir="ltr">கணை தொடுக்க</p><p dir="ltr">நான் முனைய</p><br><p dir="ltr">அச்சமில்லா குலமகள்</p><p dir="ltr">மிச்சமிருந்த முழு வசனத்தையும்</p><p dir="ltr">பேசி நின்றாள்</p><br><p dir="ltr">பேதையென்று</p><p dir="ltr"> உனை நினைத்தேன்</p><p dir="ltr">பேச்சில் புலமை </p><p dir="ltr">தெரிகிறது யாரென்று</p><p dir="ltr">நானறியேன் </p><p dir="ltr">புலமையோடு</p><p dir="ltr">பதுமை நிற்கிறது</p><p dir="ltr">பணிவும் தெரிகிறது</p><p dir="ltr">"ஆத்தி....யாரென்று</p><p dir="ltr">தெரியலியே "என்று வியந்தேன்</p><br><p dir="ltr">ஆத்திசூடி வந்தேன்</p><p dir="ltr">நாலு கோடி வாங்கியும்</p><p dir="ltr">நா கூழுக்கு அலைகிறது</p><p dir="ltr"> நல்வழி சொன்ன எனக்கு</p><p dir="ltr">அவ்வழி அதியனொடு </p><p dir="ltr">அதிநெருக்கம் உண்டு </p><p dir="ltr">அரண்மனை போகும் வழி</p><p dir="ltr">தெரியாது நிற்கிறேன் </p><p dir="ltr">அரசனைக் காண </p><p dir="ltr">விழைந்து வந்தேன் </p><p dir="ltr">அடிசுடும் மணலில்</p><p dir="ltr">அடி வைக்க </p><p dir="ltr">முடியவில்லை </p><p dir="ltr">ஆற்றுப்படுத்துவார் இல்லை</p><p dir="ltr">அங்கிங்கு அலைகிறேன்</p><p dir="ltr">என்று பேருரையாற்றி</p><p dir="ltr">பக்கத்தில் வந்து </p><p dir="ltr">அமர்ந்துவிட்டார்</p><br><br><p dir="ltr">யார் நீ என்று கேட்டு</p><p dir="ltr">நானும் என் தரம் தாழ்த்த</p><p dir="ltr">நினைக்கவில்லை</p><p dir="ltr">நல்வழி தந்த உமக்கு</p><p dir="ltr">எவ்வழி உரைப்பன் யான்?</p><p dir="ltr">நெல்லிக்கனி எமக்கும்</p><p dir="ltr"> உண்டோ</p><p dir="ltr"> என்று நெடுநாள்</p><p dir="ltr">நெட்டுருவாய்ச்</p><p dir="ltr"> சுமந்து வந்த வார்த்தையைக்</p><p dir="ltr">கொட்டி வாய்விட்டுச்</p><p dir="ltr"> சிரித்தேன்<br></p><br><p dir="ltr">என் கவி யாவும்</p><p dir="ltr">நெல்லிக்கனிதாம்</p><p dir="ltr">சாகாவரம் தரு அருமருந்து </p><p dir="ltr">அசைபோட்டுப் பார்</p><p dir="ltr">ஆழ்ந்த பொருள்பொதி</p><p dir="ltr">சுவை அறிவாயென</p><p dir="ltr">ஏடொன்றை</p><p dir="ltr">கையில் தந்து</p><p dir="ltr">ஈதுன் வாழ்விற்கு</p><p dir="ltr">நல்மருந்து என்றவளைக் </p><p dir="ltr">காணக் கண் திறந்தேன்</p><p dir="ltr">கனவில் வந்து</p><p dir="ltr">கவி சொன்ன கிழவி</p><p dir="ltr">காணாது மறைந்து போனாள்.</p><br><p dir="ltr">கிழவி சொன்ன</p><p dir="ltr">கிளவிகள் மட்டும் காதுகளில் </p><p dir="ltr">கணீரென்று ஒலித்துக் கொண்டிருக்கிறது.</p><br><br><br><div>
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhrp6bdF1uXKXUSoJX2mptemsOTXrna4duAe5DmW56FyOvrCkD4OmMJ15QZT73o4tvliRbmibbR9B54MpiUW_d9lztpbECT9tEIij3BLPbC8GRx1XqMIVMLBQVvL_Y3kQcy2lHKMP1psS8-1-RUKmFZERrTgr1EGP6em7BK-GRqKMPezVBmbU6psTduE1WQ">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhrp6bdF1uXKXUSoJX2mptemsOTXrna4duAe5DmW56FyOvrCkD4OmMJ15QZT73o4tvliRbmibbR9B54MpiUW_d9lztpbECT9tEIij3BLPbC8GRx1XqMIVMLBQVvL_Y3kQcy2lHKMP1psS8-1-RUKmFZERrTgr1EGP6em7BK-GRqKMPezVBmbU6psTduE1WQ" width="400">
</a>
</div><br><br><br><br><br><br><br><br><br><br><br><br><br><br><p dir="ltr"> </p>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-51889930502163131812024-02-07T21:22:00.001-08:002024-02-08T13:49:48.404-08:00மன்னனும் நீயோ...<p dir="ltr"><b>மன்னனும் நீயோ.....</b></p><p dir="ltr"><br></p><p dir="ltr">மன்னனும் நீயோ?</p><p dir="ltr">வளநாடும் நின்னதோ?</p><br><p dir="ltr">என்ன நாடாளும் மன்னனைப் பார்த்து</p><p dir="ltr">இப்படியொரு கேள்வியா?</p><br><p dir="ltr">இப்படிக் கேட்டது யார்?</p><p dir="ltr">யாருக்கு இப்படிக் கேட்கத்</p><p dir="ltr">துணிச்சல் வந்தது?</p><p dir="ltr">அறிய வேண்டும் போல இருக்கிறதல்லவா?</p><p dir="ltr">வாருங்கள் யாரந்த கேள்வியைக் கேட்டவர் என்று</p><p dir="ltr">பார்த்து விடுவோம்.</p><br><p dir="ltr">புலவர்கள் தன்மானம் மிக்கவர்கள். </p><p dir="ltr">தங்கள் தன்மானத்திற்கு இழுக்கு </p><p dir="ltr">ஏற்படும் </p><p dir="ltr">இடத்தில் அவர்கள் தங்குவதில்லை. தங்களை மதிக்காத அரசர்களைப் புகழ்ந்து பாடுவதுமில்லை.</p><br><p dir="ltr">வறுமை இருந்தாலும் தன்நிலையிலிருந்து கீழிறங்கி வந்துப் பொருள் பெற வேண்டும் என்று நினைப்பதில்லை.</p><p dir="ltr">அப்படியொரு நிலை ஏற்பட்டால்</p><p dir="ltr">கன்னாபின்னா என்று பேசிவிட்டு</p><p dir="ltr">அங்கிருந்து வெறுங்கையோடு</p><p dir="ltr">போய்விடுவார்.</p><br><p dir="ltr">இதற்கு அந்தப் புலவர்</p><p dir="ltr"> இந்தப் புலவர் என்று எவரும் விதிவிலக்கல்ல.</p><br><p dir="ltr">அறம் பாடிவிட்டு சென்ற வரலாற்று</p><p dir="ltr">நிகழ்வுகளும் உண்டு.</p><br><p dir="ltr">கம்பர் மட்டும் விதிவிலக்கா என்ன?</p><br><p dir="ltr">புலவர்களுக்குள் எப்போதும் ஒரு போட்டி</p><p dir="ltr">இருந்துகொண்டே இருக்கும்.</p><p dir="ltr">அந்தப் போட்டி பொறாமையாக மாறி</p><p dir="ltr">நீயா நானா என்று மோதிக்கொள்ளும்</p><p dir="ltr">நிலைக்குத் தள்ளப்பட்டு சொற்போரில்</p><p dir="ltr">இறங்கிய</p><p dir="ltr">புலவர்வர்களும் உண்டு.</p><br><p dir="ltr">அப்படிப்பட்ட பொறாமை மனநிலை சோழ அரசவையில்</p><p dir="ltr">இருந்த புலவர்களுக்கு கம்பர்மீது இருந்தது.</p><p dir="ltr">தங்களுக்கு ஏற்ற சந்தர்ப்பம் வாய்க்கும் போது அதனைத் தவறவிட்டுவிடக்கூடாது</p><p dir="ltr">என்று காத்திருந்தனர்.</p><br><p dir="ltr">ஒருநாள்</p><p dir="ltr">கம்பரும் குலோத்துங்கன் சோழனும் </p><p dir="ltr">பேசிக் கொண்டிருக்கின்றனர்.</p><br><p dir="ltr">அப்போது குலோத்துங்கன் இந்த நாடே எனக்கடிமை என்று பெருமையாகச் சொல்லிவிட்டு கம்பர் முகத்தைப் </p><p dir="ltr">பார்த்தார்.</p><p dir="ltr"> கம்பர் ஒரு நமட்டுச் சிரிப்பைப் பதிலாகத் தந்தார்.</p><br><p dir="ltr">"என்ன கம்பரே !நான் ஏதும் தவறாக</p><p dir="ltr">சொல்லிவிட்டேனா? சிரிக்கிறீர் "என்று கேட்டார் சோழ மன்னர்.</p><br><p dir="ltr">"இல்லை ....இல்லை தாங்கள் எதுவும் தவறாகச் சொல்லிவிடவில்லை.</p><p dir="ltr"> ஆனால்..."</p><p dir="ltr">"என்ன ஆனா...ஆவன்னா என்று</p><p dir="ltr">என்ன நினைக்கிறாரோ அதனைச் சொல்லும்."</p><br><p dir="ltr">"நாடே உங்களுக்கு அடிமை.</p><p dir="ltr">ஆனால் நீங்கள் எனக்கு அடிமை"</p><p dir="ltr">என்றார் கம்பர்.</p><br><p dir="ltr">குலோத்துங்கன் முன்னொரு முறை</p><p dir="ltr">கம்பரிடம் இப்படி ஒரு வார்த்தையைப்</p><p dir="ltr">சொல்லியிருந்தார் </p><p dir="ltr">அதை நினைவுபடுத்தத்தான் </p><p dir="ltr">கம்பர் இவ்வாறு கூறினார்.</p><br><p dir="ltr">கேட்டதும் குலோத்துங்கனின் முகம் அப்படியே மாறிப் போய்விட்டது.</p><p dir="ltr">அப்படியே உள்ளே சென்றுவிட்டார்.</p><br><p dir="ltr">இது குலோத்துங்கனின் மனதை</p><p dir="ltr">வாட்டிக் கொண்டிருந்தது.</p><br><p dir="ltr">அதனை அரசவைப் புலவரிடம் </p><p dir="ltr">சொல்லிச் சொல்லி </p><p dir="ltr">வருந்தினார்.</p><p dir="ltr">மன்னனுக்கும் கம்பனுக்குமிடையில் </p><p dir="ltr">இருந்த நட்பில் சற்று விரிசல் விழுந்திருக்கிறது. இப்போது இதில்</p><p dir="ltr"> ஒரு ஆப்பைச் செறுகி</p><p dir="ltr">இந்த இடைவெளியைப் பெரிதாக்கிவிட வேண்டும்.</p><p dir="ltr">கம்பரை வெளியேற்றிவிட்டு நிரந்தரமாக தான் மட்டும் </p><p dir="ltr">குலோத்துங்கன் அவைப் புலவராக இருக்க வேண்டும் .</p><br><p dir="ltr">அதற்கு என்ன செய்யலாம் என்ன செய்யலாம்....என்று யோசித்தார்.</p><br><p dir="ltr">அப்போது கம்பருக்கு பொன்னி என்ற</p><p dir="ltr">பெண்ணோடு தொடர்பு இருந்தது நினைவுக்கு வந்தது.</p><p dir="ltr"> கம்பரின் இந்தத் தொடர்பை வைத்து ஏதாவது களங்கம் கற்பிக்கலாமா </p><p dir="ltr">என்று நினைத்தார்.</p><p dir="ltr">அதுதான் சரி. <br></p><p dir="ltr"> தாசி பொன்னியின் வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து கம்பரை அங்கு</p><p dir="ltr">அனுப்பி வைக்க திட்டம் போட்டார்.</p><br><p dir="ltr">அதன்படி பொன்னியிடம் சொல்லி ஏற்பாடுகள் செய்தார்.</p><p dir="ltr">பொன்னியும் விருந்து வைக்கத்</p><p dir="ltr">தயாரானார்.</p><p dir="ltr">கம்பர் பொன்னியின் வீட்டிற்குச் சென்றார்.</p><p dir="ltr">பொன்னி கம்பரை அருமையாக வரவேற்று</p><p dir="ltr">அமர வைத்தாள்.</p><br><p dir="ltr">இருவரும் உணவருந்திய பின்னர் சற்று நேரம் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.</p><p dir="ltr">அப்போது பொன்னி கம்பரிடம்</p><p dir="ltr">"நீங்கள் என் வீட்டிற்கு வந்ததின் </p><p dir="ltr">நினைவாக எனக்கு ஏதாவது தர வேண்டும் "என்று கேட்டாள்.</p><p dir="ltr">"என்ன வேண்டும் கேள்.</p><p dir="ltr">மறுக்காமல் தருகிறேன்" என்று வாக்குக் கொடுத்தார் கம்பர்.</p><p dir="ltr">"ஒரு வரம் தர வேண்டும்" என்றாள்.</p><p dir="ltr">கம்பரும் "ஹக்ஷஷஸஎன்ன வரம் வேண்டுமானாலும்<br></p><p dir="ltr">தாராளமாக கேள். உறுதியாக தருகிறேன்" என்கிறார்.</p><br><p dir="ltr">இதுதான் நல்வாய்ப்பு என்று நினைத்த பொன்னி ,</p><p dir="ltr">"தாசி பொன்னிக்குக் கம்பனடிமை" என்று எழுதித் தரும்படி கேட்கிறாள்.</p><br><p dir="ltr">"அதனாலென்ன இதோ இப்போதே எழுதித்தருகிறேன் என்று ஒரு ஓலையில் எழுதி கையொப்பமிட்டுக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் கம்பர்.</p><br><p dir="ltr">கம்பரின் இந்த ஓலை புலவர்கள் மூலமாக</p><p dir="ltr">அரசன் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தது.</p><br><p dir="ltr">ஓலையை வாசித்த மன்னனுக்கு </p><p dir="ltr">ஆச்சரியம்.கம்பரா இப்படி எழுதிக்</p><p dir="ltr">கொடுத்தார் ?.நம்பமுடியவில்லை.</p><br><p dir="ltr">கம்பரை நேரில்</p><p dir="ltr">அழைத்து விசாரித்து உண்மையை</p><p dir="ltr">அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.</p><p dir="ltr">கம்பர் அழைத்து வரப்பட்டார் .</p><p dir="ltr">மன்னனைப் பார்த்ததும்</p><p dir="ltr">"என்ன மன்னா !ஏதாவது பாடல் வேண்டுமா?"</p><p dir="ltr">என்று எதுவும் நடக்காதது போல கேட்டார்</p><p dir="ltr">கம்பர்.</p><p dir="ltr">"நீர் இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்வீர்" என்று நான் நினைக்கவில்லை என்றார் மன்னர்</p><p dir="ltr">"அப்படி என்ன கீழ்த்தரமாக நடந்து கொண்டேன்?"</p><p dir="ltr">திருப்பிக் கேட்டார் கம்பர்.</p><p dir="ltr">"இது என்ன"? என்று கையிலிருந்த ஓலையை</p><p dir="ltr">நீட்டினார் மன்னர்.</p><br><p dir="ltr">"ஓலை...எந்த மன்னனிடமிருந்தாவது ஓலை வந்திருக்கிறதா?" என்றார் கம்பர்.</p><br><p dir="ltr">"நீர் எழுதிய ஓலை..பாரும்</p><p dir="ltr">என்ன எழுதியிருக்கிறீர் என்று</p><p dir="ltr">படித்துப் பாரும்"</p><p dir="ltr">கோபமாகப் பேசினார் மன்னர்.</p><br><p dir="ltr">"தாசி பொன்னிக்குக் கம்பனடிமை</p><p dir="ltr">என்று எழுதியிருக்கிறது."</p><br><p dir="ltr">"நீர்தானே எழுதினீர்?"</p><br><p dir="ltr">"நான்தான் எழுதினேன்.</p><p dir="ltr">நானேதான் எழுதினேன்.</p><p dir="ltr">இதிலென்ன தவறு இருக்கிறது.?"</p><br><p dir="ltr">"தாசி பொன்னிக்குக் கம்பனடிமை என்று எழுதிக் கொடுத்துவிட்டு என்ன தவறு என்றா</p><p dir="ltr">கேட்கிறீர்?"</p><br><p dir="ltr">"இப்போதும் கூறுகிறேன்.</p><p dir="ltr">அதில் தவறாக எதுவும் </p><p dir="ltr">நான் எழுதிவிடவில்லை."</p><br><p dir="ltr">"அப்படியானால் நீர் தாசிக்கு அடிமை என்கிறீர் இல்லையா?"</p><br><p dir="ltr">"ஆமாம் .நான் தாசிக்கு அடிமை தான்.</p><p dir="ltr">இதைச் சொல்வதில் எனக்கு</p><p dir="ltr">எந்த வெட்கமும் இல்லை."</p><br><p dir="ltr">"உறுதியாக..."</p><br><p dir="ltr">"உறுதியாக...இறுதியாக.</p><p dir="ltr">எத்தனைமுறை கேட்டாலும் </p><p dir="ltr">இதைத்தான் சொல்வேன்.</p><p dir="ltr">எனக்கு எந்த வெட்கமும் இல்லை."</p><br><p dir="ltr">"தாய் ஸ்ரி என்னும் பொன்மகளாகிய </p><p dir="ltr">அதாவது லட்சுமிக்கு </p><p dir="ltr">கம்பன் அடிமை.</p><p dir="ltr">இதுதானே உண்மை."</p><p dir="ltr">என்றார்.</p><br><p dir="ltr">புலவர்களுக்குப் பேசவா</p><p dir="ltr">சொல்லிக் கொடுக்க வேண்டும்?</p><br><p dir="ltr">அதற்கு மேல் மன்னனால் எதுவும்</p><p dir="ltr">பேச முடியவில்லை.</p><p dir="ltr">ஆனாலும் கம்பன்மீது இருந்த வெறுப்பு</p><p dir="ltr">மட்டும் குறையவே இல்லை.</p><p dir="ltr">நீர் அரசவையில் இருப்பது என் அரசுக்கே</p><p dir="ltr">அவமானம் .அதனால்</p><p dir="ltr">நாட்டைவிட்டு வெளியேறும்படி</p><p dir="ltr">கூறிவிட்டார்.</p><p dir="ltr">நல்லது என்ற கம்பர் வாயைமூடிவிட்டுச்</p><p dir="ltr">சென்று விடவில்லை.</p><br><p dir="ltr">பதிலாக ஒரு பாடலைப்</p><p dir="ltr">பாடிவிட்டுச் சென்றார்.</p><p dir="ltr">கம்பர் பாடிய பாடல்</p><p dir="ltr"> இதோ உங்களுக்காக </p><br><p dir="ltr">"<b>மன்னனும் நீயோ வளநாடு முன்னதோ</b></p><p dir="ltr"><b>உன்னை அறிந்தோ தமிழை யோதினேன்</b></p><p dir="ltr"><b> - என்னை</b></p><p dir="ltr"><b>விரைந்தேற்றுக் கொள்ளாத</b></p><p dir="ltr"><b>வேந்தருண்டோ வுண்டோ</b></p><br><p dir="ltr"><b>குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு"</b></p><p dir="ltr">நீ மட்டும்தான் இந்த உலகில் மன்னனா?</p><p dir="ltr">உன் நாடு மட்டும்தான் வளமான நாடா?</p><p dir="ltr">உன்னை அறிந்ததாலா</p><p dir="ltr"> நான் தமிழைக் கற்றேன்?</p><p dir="ltr">குரங்கை ஏற்றுக்கொள்ளாத </p><p dir="ltr">கிளைகள் இருக்கின்றனவா?</p><p dir="ltr">என்னை ஏற்றுக் கொள்ளாத மன்னரும் உண்டோ?</p><p dir="ltr">என்று பாட்டாலேயே பதிலடி</p><p dir="ltr">கொடுத்துவிட்டு</p><p dir="ltr"> அங்கிருந்து</p><p dir="ltr">வேறு நாட்டிற்குச் சென்றுவிட்டார் கம்பர்.</p><p dir="ltr">ஆரையடா சொன்னாயடா என்று</p><p dir="ltr">கேட்டு கம்பரை மடக்கினார் ஔவை.</p><br><p dir="ltr">கம்பரோ</p><p dir="ltr">தாசி பொன்னிக்குக் கம்பனடிமை</p><p dir="ltr">என்று எழுதியதில் என்ன தவறு</p><p dir="ltr">கண்டீர்.</p><p dir="ltr">சொற்குற்றமா? இல்லை பொருள்</p><p dir="ltr">குற்றமா?</p><p dir="ltr">என்று கேட்டதோடல்லாமல்</p><p dir="ltr">சொல்லிலும் குற்றமில்லை.</p><p dir="ltr">பொருளிலும் குற்றமில்லை.</p><p dir="ltr">லட்சுமியாகிய செல்வத்துக்கு </p><p dir="ltr">நான் அடிமை.இதுதான் நான் சொல்லிய</p><p dir="ltr">பாடலின் பொருள்.</p><p dir="ltr">இதற்குத்தான் அனைவரும் அடிமை.</p><br><p dir="ltr">அட போய்யா நீயும் உன் நாடும்.</p><p dir="ltr">என் தமிழைக் கேட்க</p><p dir="ltr">எல்லா நாட்டு வாயில்களும்</p><p dir="ltr">திறந்திருக்கின்றன என்று</p><p dir="ltr">போயே போய்விட்டார்.</p><p dir="ltr">என்னவொரு கர்வம்.</p><p dir="ltr">கம்பர் என்றால் சும்மாவா?</p><br><p dir="ltr"><b>உன்னை அறிந்தோ தமிழை யோதினேன்?</b></p><br><br><br><br><br>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-44708556016117516052024-02-06T23:26:00.001-08:002024-02-07T00:52:30.662-08:00எவ்வது துறைவது உலகம்...<p dir="ltr"><b>எவ்வது துறைவது உலகம்.....</b></p><p dir="ltr"><b><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjT7qffQawbt19UZRiGWsG3rqbTf1yULMerg0RwDMuVvoWQcUTQx1Hee6hqfqzAkdfO7V5rEpClg-ffXdtGcY2bzHP9A1VCQyqcY-hRUq9l1F44Y5Ac8jvA1m_G9Q5hEKuE05ei1fnGYjjG_LOjhA50jgN3DbJGbfldsRCxaVdl4pZgjE__Qs0-aPhHLcRI" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjT7qffQawbt19UZRiGWsG3rqbTf1yULMerg0RwDMuVvoWQcUTQx1Hee6hqfqzAkdfO7V5rEpClg-ffXdtGcY2bzHP9A1VCQyqcY-hRUq9l1F44Y5Ac8jvA1m_G9Q5hEKuE05ei1fnGYjjG_LOjhA50jgN3DbJGbfldsRCxaVdl4pZgjE__Qs0-aPhHLcRI" width="400">
</a>
</div><br></b></p><p dir="ltr"><b>"எவ்வது துறைவது உலகம் உலகத்தோடு</b></p><p dir="ltr"><b>அவ்வது துறைவது அறிவு"</b></p><b><br></b><p dir="ltr"><b> குறள் : 426</b></p><br><p dir="ltr">எவ்வது - எவ்வாறு</p><p dir="ltr">துறைவது- வாழ்வது</p><p dir="ltr">உலகம்-உலகத்தினர்</p><p dir="ltr">உலகத்தோடு- உலகம் செல்லும் வழியில் </p><p dir="ltr">அவ்வது- அவ்வாறு</p><p dir="ltr">துறைவது - சேர்ந்து ஒழுகுவது</p><p dir="ltr">அறிவு- அறிவார்ந்த செயல்</p><br><br><p dir="ltr"><b>உலகம் எவ்வாறு வாழ்கிறதோ அவ்வழியில்</b></p><p dir="ltr"><b>நாமும் சேர்ந்து ஒழுகுதல் அறிவார்ந்த செயலாகும்.</b></p><p dir="ltr"><b>விளக்கம் :</b></p><br><p dir="ltr">உலகம் எவ்வாறான ஒழுக்க நெறியில்</p><p dir="ltr">செல்கிறதோ அவ்வழியில் நாமும் செல்வதுதான் அறிவார்ந்த செயலாகும்.</p><p dir="ltr">அறிவு எனப்படுவது யாதெனில்</p><p dir="ltr">உலக மக்கள் எத்தகைய ஒழுக்க நெறியில் தமது வாழ்க்கைப்பாதையை அமைத்துக்</p><p dir="ltr">கொள்கிறார்களோ அவ்வழியில்</p><p dir="ltr">நாமும் நடைபோட வேண்டும்.</p><p dir="ltr">எல்லோருக்கும் ஒருவழி எனக்கு மாற்றுவழி</p><p dir="ltr">என்று எதிர்த்திசையில் பயணிப்பது</p><p dir="ltr">அறிவார்ந்த செயலாகாது.</p><p dir="ltr">உலகில் நல்லவர்களும் உண்டு.</p><p dir="ltr">தீயவர்களும் உண்டு.</p><p dir="ltr">அப்படியானால் உலகம் என்று வள்ளுவர்</p><p dir="ltr">கூறியது இவ்விரு திறத்தாரையுயும் </p><p dir="ltr">உள்ளடக்கியதாகவே இருக்கும்.</p><p dir="ltr">எனினும் நல்லொழுக்க நெறியை வலியுறுத்தும் வள்ளுவர் உலகம் என்று குறிப்பிடுவது நல்லொழுக்கப் பண்பு</p><p dir="ltr">கொண்டவர்களை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.</p><br><p dir="ltr">உலகம் மாறிக் கொண்டே இருக்கும்.</p><p dir="ltr">மாற்றத்திற்கு ஏற்ப நாமும் நம்மை</p><p dir="ltr">மாற்றிக்கொள்ள வேண்டும்.</p><p dir="ltr">பண்பாடு,பழக்க வழக்கம்,உணவு முறை </p><p dir="ltr">உடை என்று எத்தனையோ மாற்றங்கள்</p><p dir="ltr">வரலாம். அது காலத்திற்கு ஏற்ப மக்கள்</p><p dir="ltr">நலன் சார்ந்ததாக அனைவராலும் ஏற்றுக்</p><p dir="ltr">கொள்ளப்பட்டதாக இருக்கலாம்.</p><p dir="ltr">இப்படிப்பட்ட நெறிசார்ந்த</p><p dir="ltr">அறம் சார்ந்த பாதுகாப்பு சார்ந்த</p><p dir="ltr">உடல் நலன் சார்ந்த செயல்களில்</p><p dir="ltr">நாமும் உலகத்தோடு ஒத்துப் போக</p><p dir="ltr">வேண்டும்.</p><p dir="ltr">"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்</p><p dir="ltr">கல்லார் அறிவிலார் "என்ற வள்ளுவர்</p><p dir="ltr">அதையேதான் இந்தப் பாடலிலும் வலியுறுத்துகிறார்.</p><p dir="ltr">அறிவு என்பது எல்லாவற்றையும்</p><p dir="ltr">தெரிந்து கொள்வது மட்டுமல்ல.</p><p dir="ltr">உலக மக்கள் நடைமுறைக்கு ஏற்ப</p><p dir="ltr">நம்மை மாற்றி அவர்கள் வழியில் நடப்பதும்</p><p dir="ltr">அறிவுதான் என்பது வள்ளுவரின்</p><p dir="ltr">முடிவான கருத்து.</p><br><p dir="ltr">English Couplet :</p><br><p dir="ltr">As dwells the world, so with the world to dwell</p><p dir="ltr">In harmony- this is to wisely live and well.</p><br><p dir="ltr">Explanation:</p><p dir="ltr">To live as the world lives, is wisdom.</p><br><p dir="ltr">Transliteration:</p><p dir="ltr">"evva thuRaivadhu ulagam ulakaththoatu</p><p dir="ltr">avva thuRaiva thaRivu"</p><br><br><br>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-89421110737700727952024-02-05T10:31:00.001-08:002024-02-05T10:33:02.424-08:00திருநெல்வேலி வட்டார வழக்கு<p dir="ltr"><b>திருநெல்வேலி வட்டார வழக்</b>கு </p><p dir="ltr">திருநெல்வேலி என்றாலே</p><p dir="ltr">அல்வா.</p><p dir="ltr">அதுவும் இருட்டுக்கடை அல்லாவுக்கு</p><p dir="ltr">அடிமைப்பட்டுக் போன நாக்கு வேறு எந்த</p><p dir="ltr">அல்வாவையும் ருசி பார்க்காது.</p><br><p dir="ltr">தாமிரபரணி ஆற்றுத் தண்ணீருக்குக்கூட</p><p dir="ltr">தனி ருசி உண்டு.</p><p dir="ltr">நெல்லை மக்கள் </p><p dir="ltr">பேச்சில் இனிமை இருக்கும்.</p><p dir="ltr">மரியாதையோடு பேசும் பண்பு உண்டு.</p><br><p dir="ltr">ஒவ்வொரு ஊருக்கும் தனி அடையாளம் இருக்கும்.</p><p dir="ltr">பேசும் பேச்சிலிருந்து இது</p><p dir="ltr">எந்த வட்டார வழக்குச் சொற்கள்</p><p dir="ltr">என்பதைச் சொல்லிவிடலாம்.</p><p dir="ltr">பேரைச் சொல்லாமலேயே</p><p dir="ltr">ஊரைக் கண்டுபிடித்துவிடலாம்.</p><br><p dir="ltr">திருநெல்வேலி என்றதும் 'ஏல'</p><p dir="ltr">என்ற சொல் உள்ளேன் ஐயா என்று</p><p dir="ltr">முந்தி வந்து தலை தூக்கி நிற்கும்</p><br><p dir="ltr">அண்மை காலமாக நம் காதுகளில்</p><p dir="ltr">அடிக்கடி வந்து விழும் ஒரு சொல்</p><p dir="ltr">'ஏல ' என்பதுதான்.</p><br><p dir="ltr">ஏல...போல...வால....</p><p dir="ltr">இது எல்லாமே எங்கள்</p><p dir="ltr">பகுதியில் பேசப்படும் சொற்கள்தான்.</p><p dir="ltr">மறுக்கவில்லை.</p><br><p dir="ltr">ஆனால் இந்த ஏல...ஏல...என்பது மட்டும்</p><p dir="ltr">தொலைக்காட்சியில் அடிக்கடி உச்சரிக்கப்படும்</p><p dir="ltr">சொல்லாகிவிட்டது.</p><p dir="ltr">திரைப்படங்களால் இந்தச் சொல்</p><p dir="ltr">தனிக்கவனம் பெற்று வருகிறது.</p><br><p dir="ltr">இதில் தவறு ஒன்றுமில்லை.</p><p dir="ltr">ஆனால் உண்மையிலேயே அந்தச்</p><p dir="ltr">சொல் உண்மையான பொருளில்</p><p dir="ltr">சொல்லப் படுகிறதா...? அல்லது</p><p dir="ltr">திசைமாறிப் போகிறதா ?என்று </p><p dir="ltr">யோசித்துப் பார்த்தேன்.</p><br><p dir="ltr">என் மனசாட்சிப்படி திசைமாறிப்</p><p dir="ltr">போவது போன்றே தோன்றியது.</p><br><br><p dir="ltr">ஏல....ஏல....என்று திருநெல்வேலிக்காரர்களை</p><p dir="ltr">ஏலம் விடுவதைப் பார்த்தால் என்ன</p><p dir="ltr">சொல்வெதென்றே தெரியவில்லை.</p><br><p dir="ltr">திருநெல்வேலிக்காரர்கள் </p><p dir="ltr">தூத்துக்குடிக்காரர்கள் அனைவரும்</p><p dir="ltr">,ஏல ...'என்ற சொல்லைப்</p><p dir="ltr">பயன்படுத்துவார்கள் என்பது </p><p dir="ltr">அனைவருக்கும் தெரியும்.</p><br><p dir="ltr">அதனை எப்போது? எங்கே? யாரிடம்?</p><p dir="ltr">எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பது</p><p dir="ltr">அனைவருக்கும் தெரிய வேண்டுமல்லவா!</p><br><p dir="ltr">தெரிந்துதான் பேசுகிறார்களா?</p><p dir="ltr">தெரியாமல்தான் பேசுகிறார்களா?</p><p dir="ltr">ஒன்றும் புரியவில்லை.</p><p dir="ltr">கேட்டுவிட்டு சும்மா இருக்கவும்</p><p dir="ltr">மனம் ஒப்பவில்லை.</p><br><br><p dir="ltr">ஏல....என்ற சொல்லை எங்கே பயன்படுத்துவது?</p><p dir="ltr">யாரிடம் பயன்படுத்துவது என்று</p><p dir="ltr">ஒரு வரன்முறை வேண்டாமா?</p><p dir="ltr">பெரிய ஆளைப் பார்த்தாலும்</p><p dir="ltr">'ஏல 'தான்.</p><p dir="ltr">சின்ன பையனைப் பார்த்தாலும் 'ஏல' தான்.</p><br><p dir="ltr">திரும்பிப் பார்க்கிறேன்.</p><p dir="ltr">'ஏல 'என்று எல்லா இடங்களிலும்</p><p dir="ltr">எல்லோரையும் பார்த்துச்</p><p dir="ltr">சொல்ல முடியுமா?</p><p dir="ltr">என்னால் முடிந்ததா?</p><p dir="ltr">எங்களைச் சுற்றியுள்ளவர்கள் எந்த நேரங்களில் இந்தச் சொல்லைப் பயன்படுத்தினார்கள்.</p><br><p dir="ltr">நானும் 'ஏல' என்ற சொல்லை எடக்குமடக்காகப் பயன்படுத்திவிட்டு</p><p dir="ltr">வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்கள் எல்லாம் </p><p dir="ltr">கண்முன் வந்து வரிசை கட்டி நிற்க</p><p dir="ltr">மனம் ஏதோ ஒன்றைச் சொல்ல உந்தித் தள்ள எழுதியதுதான் இந்தக் கட்டுரை.</p><br><br><p dir="ltr">எங்கள் ஊர்பக்கம் எல்லாம் 'ஏல'</p><p dir="ltr">என்று ஆண்பிள்ளைகளைத்தான்</p><p dir="ltr">கூப்பிடுவார்கள்.</p><p dir="ltr">பெண்பிள்ளைகளை ஒருசிலர் மட்டும்</p><p dir="ltr">செல்லமாக 'ஏல 'என்று கூப்பிடுவதைக்</p><p dir="ltr">கேட்டிருக்கிறேன்.</p><br><p dir="ltr">ஆனால் பெரும்பான்மை</p><p dir="ltr">ஆண்களை அழைக்கும் சொல்தான்.</p><p dir="ltr">எல்லா ஆண்களையும் 'ஏல' என்று</p><p dir="ltr">அழைத்து விட முடியுமா?</p><br><p dir="ltr">ஏன் முடியாது?</p><p dir="ltr">படத்தில் அப்படித்தானே கூப்பிடுகிறார்கள்</p><p dir="ltr">என்பீர்கள்.</p><br><p dir="ltr">அதுதான் இல்லை என்கிறேன்.</p><p dir="ltr">நம்மைவிட வயதில் சிறியவர்களைப்</p><p dir="ltr">பார்த்துக் கூப்பிடும் ஒரு சொல்தான் 'ஏல.'</p><br><p dir="ltr">ஆனால்</p><p dir="ltr">"ஏல இங்க வா "என்றால்</p><p dir="ltr">மரியாதை கொடுக்காமல்</p><p dir="ltr"> அழைப்பதாக இருக்கும்.</p><br><p dir="ltr"> அதனால் நம்மைவிட</p><p dir="ltr">இளையவனாக இருந்தால்</p><p dir="ltr">"தம்பி இங்கே வா" என்று அழைப்பது தான்</p><p dir="ltr">மரியாதையாக இருக்கும்.</p><p dir="ltr">இதுதான் நான் அறிந்தது.</p><p dir="ltr">பேசியது. வீட்டில் சொல்லித் தந்தது.</p><br><p dir="ltr">என்ன நீங்க புது கதை விடுறீங்க....</p><p dir="ltr">நாங்க திருநெல்வேலிக்காரங்கள் என்றாலே</p><p dir="ltr">'ஏல' என்றுதான் கூப்பிடுவோம்.</p><p dir="ltr">எத்தனைப் படங்களில் பார்த்திருக்கிறோம் என்கிறீர்களா?</p><br><p dir="ltr">உங்களைவிட வயதில் பெரியவரைப்</p><p dir="ltr">பார்த்து ஒருமுறை கூப்பிட்டுப்</p><p dir="ltr">பாருங்கள்.</p><p dir="ltr">என்ன திமிருல உனக்கு.?</p><p dir="ltr">என்று திருப்பிக் கேட்பார்கள்.</p><p dir="ltr">திருப்பி அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.</p><br><p dir="ltr">அண்ணாச்சிக் கடைகளில்</p><p dir="ltr">போய் 'ஏல 'ஐந்து கிலோ அரிசி</p><p dir="ltr">தால என்று சொல்லிப் பாருங்கள்.</p><br><p dir="ltr">.அவ்வளவுதான்.</p><p dir="ltr">அவரது எதிர்வினையே வேறு மாதிரி </p><p dir="ltr">இருக்கும்.</p><br><p dir="ltr">தொலைக்காட்சிகளில் விளையாட்டு</p><p dir="ltr">பண்ணுகிறார்கள் என்று நேரில்</p><p dir="ltr">எங்கள் ஊர் அண்ணாச்சிகளிடம்</p><p dir="ltr">விளையாடிவிடாதீர்கள்.</p><p dir="ltr">அறியாமல் பேசுகிறான் என்று</p><p dir="ltr">விட்டுவிடுபவர்கள் ஒருசிலர் தான்</p><p dir="ltr">இருப்பார்கள்.</p><br><p dir="ltr">கோபப்படுபவர்கள்தான் அதிகமாக</p><p dir="ltr">இருப்பர்.</p><p dir="ltr">ஏனென்றால் </p><p dir="ltr">இந்தச் சொல் சாதாரணமாக</p><p dir="ltr">நீங்கள் நினைப்பது போல</p><p dir="ltr">அனைவராலும் பயன்படுத்தக்கூடிய</p><p dir="ltr">சொல் அல்ல.</p><p dir="ltr">அது மரியாதைக் குறைவான சொல்.</p><br><p dir="ltr">இது அந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்களுக்குக்</p><p dir="ltr">கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.</p><br><p dir="ltr">தெரியாவிட்டால் கேட்டுக் தெரிந்து</p><p dir="ltr">கொள்ளுங்கள்.</p><br><p dir="ltr">ஒருமுறை இப்படித்தாங்க </p><p dir="ltr">நானும் எங்கள் அண்ணன்</p><p dir="ltr">என்னை அடித்தபோது எதுக்குல </p><p dir="ltr">என்னை அடிக்ககுற?</p><p dir="ltr">என்று கேட்டுவிட்டேன்.</p><br><p dir="ltr">அவ்வளவுதான்....அன்று நான் பட்ட</p><p dir="ltr">அடி இன்றுவரை வலிக்குதுங்க....</p><br><p dir="ltr">"என்ன சொன்னா....என்னா சொன்னா</p><p dir="ltr">ஏல .....என்னைப் பார்த்து' ஏல' சொல்றா</p><p dir="ltr">என்ன.....அவ்வளவு திமிறா உனக்கு</p><p dir="ltr">என்று குனிய வைத்து முதுகில்</p><p dir="ltr">குத்து குத்தென்று குத்தி எடுத்து விட்டான்.</p><br><p dir="ltr">உண்மையில் நம்மைவிட வயதில் மூத்தவர்களை 'ஏல 'என்று</p><p dir="ltr">சொல்லிவிட்டால் மரியாதைக்</p><p dir="ltr">குறைவாக பேசுகிறோம் என்றுதான்</p><p dir="ltr">நினைப்பார்கள்.</p><br><p dir="ltr">என்னை மாதிரி தெரிந்தோ </p><p dir="ltr">தெரியாமலோ நம்மைவிட</p><p dir="ltr">மூத்தவர்களைப் பார்த்து' ஏல ..'என்று</p><p dir="ltr">சொல்லிவிடாதீர்கள்.</p><br><p dir="ltr">பிறகு முதுகில் 'டின் ' கட்ட</p><p dir="ltr">வேண்டியிருக்கும்.</p><br><p dir="ltr">இது போகட்டும்.</p><p dir="ltr">என்னைவிட இரண்டு</p><p dir="ltr">மூன்று வயது இளையவன் தான் எங்கள்</p><p dir="ltr">சித்தப்பா பையன்.</p><p dir="ltr">ஒரு முறை "'ஏல 'உன்னை எங்க அம்மா</p><p dir="ltr">கூப்பிடுகிறாங்க "என்று</p><p dir="ltr"> சொல்லிவிட்டேன்.</p><p dir="ltr"> அவ்வளவுதான் .அவன் ஒரு மாதிரியாகப்</p><p dir="ltr"> பார்த்தான்.</p><br><p dir="ltr">நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.</p><p dir="ltr">ஆனால் அதன்பிறகு அவன் பத்து </p><p dir="ltr">வருடங்களுக்கு மேலாக</p><p dir="ltr">என்னிடம் பேசவில்லை.</p><br><p dir="ltr">எவ்வளவு திமிரு.....ஏல என்று என்னை</p><p dir="ltr">கூப்பிடுகிறாள் என்று</p><p dir="ltr">அவர்கள் வீட்டில் போய் சொல்லியிருக்கிறான்.</p><br><br><p dir="ltr">சித்தப்பா எங்கள் வீட்டிற்கு வந்து பெரியப் </p><p dir="ltr">பையனைப் பார்த்து நீ</p><p dir="ltr">ஏல என்று சொல்லலாமா? </p><p dir="ltr">அவனை அவமரியாதை செய்ததுபோல</p><p dir="ltr">இருக்கும் இல்லையா?</p><p dir="ltr">இனி அப்படி பேசாத</p><p dir="ltr">என்று என்னை சத்தம் போட்டார்கள்</p><p dir="ltr">என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.</p><br><p dir="ltr">அதன் பின்னர்தான் </p><p dir="ltr">சாதாரணமாக யாரையும்</p><p dir="ltr">பார்த்து' ஏல..' என்று கூப்பிடுவது</p><p dir="ltr">தப்பு என்பதைப் புரிந்து கொண்டேன்.</p><br><p dir="ltr">அப்படியானால்....அப்படியானால்...</p><p dir="ltr">இந்த 'ஏல..'.என்ற சொல்லை</p><p dir="ltr">எப்போதுதான் பயன்படுத்துவது</p><p dir="ltr">என்கிறீர்களா?</p><br><p dir="ltr">கோபமாக பேசும்போது பயன்படுத்துவர்.</p><p dir="ltr">தோட்டத்தில் வேலை பார்க்கும் சிறு</p><p dir="ltr">பையன்களைப் பார்த்து முதலாளிகள்</p><p dir="ltr">'ஏல 'என்று அழைப்பதைப் பார்த்திருக்கிறேன். </p><p dir="ltr">கேட்டிருக்கிறேன்.</p><p dir="ltr">அவர்கள் ஓடி வந்து முன்னே நிற்பார்கள்.</p><br><p dir="ltr">அப்படியானால் தன்னைவிட பொருளாதாரத்தில்</p><p dir="ltr">குறைந்தவர்களைப் பார்த்து சொல்லும்</p><p dir="ltr">ஒரு சொல். </p><p dir="ltr">இதுவும் தவறுதான் என்பது என்</p><p dir="ltr">கருத்து.</p><br><p dir="ltr">பெயர் இருக்கும்போது இந்த' ஏல' என்பது</p><p dir="ltr">எதற்கு ? </p><br><br><p dir="ltr">பெயர் சொல்லி அழைக்கலாமே!</p><br><p dir="ltr">பெயர் சொல்லி அழைப்பதற்குத் தானே </p><p dir="ltr">பெயர் வைத்திருக்கிறோம்.</p><br><p dir="ltr">செல்லமாக அழைப்பது வேறு.</p><p dir="ltr">அவமானப்படுத்துவதுபோல </p><p dir="ltr">அழைப்பது வேறு.</p><br><p dir="ltr">வட்டாரவழக்குச் சொல்லைப் </p><p dir="ltr">பயன்படுத்துவது</p><p dir="ltr">தப்பில்லை.</p><br><p dir="ltr">மரியாதை குறைவில்லாமல்</p><p dir="ltr">பேசுங்கள்.</p><p dir="ltr">விளையாட்டாய்ப் பேசுங்கள்.</p><p dir="ltr">உங்கள் வயதை ஒத்தவர்களிடம்</p><p dir="ltr">பேசும்போது மட்டும் பேசுங்கள்.</p><p dir="ltr">அதுவும் அவர் ஒத்துக் கொண்டால் மட்டும்.</p><br><br><p dir="ltr">திருநெல்வேலிக்காரர்கள் மரியாதை</p><p dir="ltr">கொடுத்துப் பேசுபவர்கள்.</p><p dir="ltr">அவர்கள் வட்டார வழக்குச் சொல்லைக்</p><p dir="ltr">கையிலெடுத்து அவர்களையே</p><p dir="ltr">மரியாதைக் குறைவாகப் பேசுவது</p><p dir="ltr">ஏற்புடையதல்ல .</p><br><p dir="ltr">இந்த 'ஏல ' எங்கே எப்போது யாரைப்</p><p dir="ltr">பார்த்துப் பயன்படுத்த வேண்டும்</p><p dir="ltr">எனப் பார்த்து பக்குவமாகப் பேசுங்கள்.</p><br><p dir="ltr">ஏல....ஏல என்று தொலைக்காட்சிகளில்</p><p dir="ltr">வரும்போது சிரிப்பாக இருக்கலாம்.</p><p dir="ltr">ஆனால் அது சிரிக்க வைப்பதற்கான சொல்</p><p dir="ltr">அல்ல....சிந்தித்துப் பேச வேண்டிய சொல்.</p><br><p dir="ltr">புரிந்தால் சரி....</p><br><br><br><br>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1443830860664874572.post-72779017603372818342024-02-03T10:39:00.001-08:002024-02-03T11:08:09.982-08:00செவியிற் சுவையுணரா....<div><b>செவியிற் சுவையுணரா...</b></div><div><b><br></b></div><b>செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்</b><div><b>அவியினும் வாழினும் என் "</b></div><div><b><br></b></div><div><b> குறள்- 420</b></div><div><br></div><div>செவியிற்-காதினால் கேட்டறியும் </div><div><br></div><div>சுவையுணரா - அறிவுச் சுவை அறியாதவர்</div><div><br></div><div>வாயுணர்வின் -வாயால் உண்ணும் </div><div> உணவின் சுவை அறியும்</div><div><br></div><div>மாக்கள் - விலங்குப் பண்பு கொண்ட</div><div> மக்கள்</div><div>அவியினும் - இறந்தாலும்</div><div><br></div><div>வாழினும் -வாழ்ந்தாலும்</div><div><br></div><div>என் - என்ன</div><div><br></div><div><br></div><div><b>செவிச்சுவை இல்லாமல்</b></div><div><b>வாயினால் நுகரும் </b></div><div><b>உணவின் சுவை மட்டும்</b></div><div><b>அறியும் பகுதறிவில்லா மக்கள்</b></div><div><b> இருந்தாலும் இறந்தாலும்</b></div><div><b> என்ன பயன்?</b></div><div><br></div><div><br></div><div><b>விளக்கம்:</b></div><div><br></div><div>செவிச்சுவை என்பதுசொற்சுவை, பொருட்சுவை என இருவகைப்படும்.</div><div>சொற் சுவை </div><div>பொருட்சுவை இரண்டும் கேட்டு அறியும்<br></div><div>சுவையின் பாற்படும்.</div><div><br></div><div>வாயின் சுவை அறுசுவைகளாகும்.</div><div><br></div><div>ஒருவன் செவிச்சுவை அதாவது கேள்வி அறிவு</div><div>இல்லாதிருக்கிறான்.</div><div>உணவின் சுவை அறியும்</div><div>திறன் மிகுதியாக இருக்கிறது.</div><div>இருந்து என்ன பயன்?</div><div>செவிச்சுவை இல்லையே.</div><div>அப்படியானால் </div><div>அவன் பகுத்தறியும் பண்பில்லாதவனாகத்தான் இருப்பான்.</div><div><br></div><div>மனிதனாக இருக்கும் தகுதி </div><div>என்னவென்றால் அவனுக்கு கேள்வி அறிவு</div><div>இருக்க வேண்டும். அது இல்லையா அவன் மனிதன் அல்லன். மாக்கள் </div><div>என்ற நிலைக்குத் தள்ளப்படுவான்.</div><div>கேள்வி அறிவு மட்டுமே ஒருவனை</div><div>மனிதன் என்று அடையாளப்படுத்தும்.</div><div><br></div><div>அதோடு திருவள்ளுவர் விட்டுவிடவில்லை.</div><div>செவிச்சுவை நுகரும் ஆற்றல்</div><div>இல்லா ஒருவன் இவ்வுலகில் இருந்தால் என்ன?</div><div>இல்லாது போனால் என்ன?</div><div>அவனால் யாருக்கும் எந்தவொரு பயனும் </div><div>நடக்கப்போவதில்லை.</div><div><br></div><div><br></div><div>அவன் இருப்பதும் ஒன்றுதான்.</div><div>இல்லாமல் இருப்பதும் ஒன்றுதான்.</div><div>என்கிறார்.</div><div>கற்றலின் கேட்டல் நன்று </div><div>அதனால் </div><div>கேள்வி அறிவு வேண்டும் என்று</div><div>சொன்ன வள்ளுவர் அந்தக் கேள்வி அறிவு </div><div>மட்டும் இல்லையா</div><div>நீ மனிதனே இல்லை என்று </div><div>உச்சந்தலையில் அடித்து</div><div>உரக்கச் சொல்லி முடித்துவிட்டார்.</div><div><br></div><div>அவியினும் வாழினும் என்?</div><div>என்ற கேள்வியை நம்முன் வைத்து </div><div>நீங்களே பதிலைச் சொல்லுங்கள்</div><div>என்று நம்மைப் பார்த்துக் கேட்டு</div><div>குறளை முடித்திருக்கிறார்.</div><div><br></div><div>சிந்திக்க வைக்கும் அருமையான</div><div>குறள் இல்லையா?</div><div><br></div><div><br></div><div><br></div><div><b>English couplet </b></div><div><b><br></b></div><div><b>"His mouth can taste,but ear no taste of joy can give ! What matter if he die,or prosperous live?"</b></div><div><b><br></b></div><div><b>Explanation</b></div><div><b><br></b></div><div><b>What does it matter whether those men live or die,who can judge of taste by the mouth, and not by the ear?</b></div><div><b><br></b></div><div><b>Transliteration </b></div><div><b><br></b></div><div><b>"seviyiR suvaiyuNaraa vaayuNarvin maakkaL aviyinum vaazhinum en"</b></div><div><b> </b></div>செல்வபாய் ஜெயராஜ் http://www.blogger.com/profile/15862036699977514730noreply@blogger.com0