சொர்க்கத்துக்குச் செல்லும் வழி
சொர்க்கத்துக்குச் செல்லும் வழி சொர்க்கத்திற்குப் போக யாருக்குத்தான் ஆசை இல்லை. அனைவர்க்கும் ஆசை இருக்கிறது. அதற்கான வழியைத்தான் சொல்லித் தருவார் இல்லை. என்னவெல்லாமோ செய்து பார்க்கிறேன் . தான தர்மம் செய்கிறேன். ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்கிறேன்.ஆனாலும் சொர்க்கத்துக்குப் போவேனா மாட்டேனா என்று ஒரு குழப்பமாக இருக்கிறது. இப்படி குழம்பிய மனநிலையில் இருக்கிறீர்களா? ஒன்றுக்கும் கவலை வேண்டாம். சொர்க்கத்துக்குத் தானே போக வேண்டும். சரியான வழி இது என்று காட்டுகிறார் ஒரு புலவர். வாருங்கள் அந்த வழிதான் என்ன என்று பார்த்துவிடுவோம். குளந் தொட்டுக் கோடுபதித்து வழிசீத்து உளந்தொட்டு உழுவயலாக்கி வளந் தொட்டுப் பாடுபடும் கிணற் றோடென்றிவ்வைம் பாற்படுத்தான் ஏகுஞ் சுவர்க்கத் தினிது - சிறுபஞ்ச மூலம் பொருள் புரிகிறதா? இல்லையா? சொர்க்கத்திற்குப் போக வேண்டுமா? இதைச் செய்யுங்கள் என்கிறார் காரியாசான். என்ன செய்ய வேண்டும்? நீர்நிலைகளை உருவாக்குங்கள். சொர்க்கம் கிட்டும் என்கிறார் . குடிநீர் தேங்கும் குள...