Skip to main content

Posts

Featured

இனியது எது

இனியது எது.. வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் ? கை நிறைய பணம் வேண்டும். ஆசைப்பட்டப் பொருட்கள் எல்லாம் வாங்கி சாப்பிட வேண்டும். விரும்பிய ஆடைகளை எல்லாம்  அணிந்து அழகு பார்க்க வேண்டும். உலகிலுள்ள எல்லா நாடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும். அழகான வீடு வேண்டும். கால்மேல் கால் போட்டு இருந்து சாப்பிட வேண்டும். அன்பான மனைவி  அறிவான குழந்தைகள் என்று வாழ்க்கை இனிதாக ஓட வேண்டும். நாளொரு உடை... பொழுதெல்லாம் உடன் நடக்க... உரையாட... நண்பர்கள் உடனிருக்க வேண்டும். ஏன்? எதற்கு ?எங்கே? என்று கேட்காத பெற்றோர் வேண்டும். துள்ளித் திரிய கால்கள் வேண்டும். தொட்டுத் தழுவ ஓடியாட பட்டாம்பூச்சி சூழ் மலர் வனம் வேண்டும். நோயில்லா உடல் வேண்டும். ஏனென்று கேட்க  விழுந்தால் தூக்கிவிட பிள்ளைகள்  வேண்டும் . இவைதான் இனிமை. இப்படி இனிமை ஆளுக்கு ஆள் காலத்திற்கு காலம் இடத்திற்கு இடம் மாறுபடும்.  வேறுபடும். இவைதான் இனிமை என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறனர். இவற்றைத் தேடித்தான்   ஓட்டம்... தேட்டம்....  நாட்டம்..... எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. . ஆனால் இவை எல்லாம் கிடைத்தவர்கள்  நிம்மதி

Latest Posts

பிளாக் காமடி என்றால் என்ன?

மரமது மரத்திலேறி

நீலச் சிற்றாடைக்கு நேர்

இட்டார் பெரியோர்....