Skip to main content

Posts

Featured

குறி சொல்லும் சேதி

குறி சொல்லும் சேதி எக்கா...எக்கா..".என்றபடி ஓடி வந்தாள் பக்கத்து வீட்டுப் பெண் பார்வதி. "என்ன...என்ன...இப்படி ஓடி வருகிறாய்?.. ஏதும் பிரச்சினையா?" "ஆமாக்கா.... நீங்க எப்போதும் சொல்வீங்க.. அதுதான் ...அதுதான் " மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க படபடவென்று பேசினாள் பார்வதி. 'என்ன அதுதான்...அதுதான் என்கிறாய். அதுதான் என்ன என்று சொல்கிறாய். நிதானம்...நிதானம்.... தண்ணீர் குடிக்கிறியா?" "தண்ணீர் குடிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை" வியர்க்க விறுவிறுக்க படபடப்போடு நின்றிருந்தாள். "கொஞ்சம் தண்ணீர் குடி" என்று வலுக்கட்டாயமாக தண்ணீர் குடிக்க வைத்து ஆசுவாசப்படுத்தினேன். "நீங்க சொல்வீங்க இல்லையா...நாளிதழில் போடும் செய்திகள் எல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் என்று.. நான்தான் புரிஞ்சுக்கல..." "புரியாமல் அப்படி என்ன பண்ணிவிட்டாய்..?" "குறி சொல்வதுபோல் வந்து எல்லாவற்றையும் அள்ளிகிட்டுப் போயிட்டாளே அக்கா... நான் மோசம் போயிட்டேனே அக்கா..நான் மோசம் போயிட்டேனே!" "முதல்ல இந்த ஒப்பாரியை நிறுத்து. அல்லது பே

Latest Posts

கூலி பாக்கி வைக்க வேண்டாம்

இருந்தவளைப் போனவளை

அன்னக்கிளி அக்கா

பேராழியோ போராளியோ