Skip to main content

Posts

Featured

ஆற்றில் போட்டியைக் குளத்தில் தேடலாமா

ஆற்றில் போட்டதைக் குளத்தில் தேடலாமா  எங்கேயோ தவறவிட்ட ஒன்றை  அதற்குச் சம்பந்தமே இல்லாத வேறு ஒரு இடத்தில் போய் தேடிக் கொண்டிருப்போம். மூக்குக் கண்ணாடியை கண்களில் போட்டுவிட்டு அறை முழுவதும்  தேடுவோம். வீட்டுச்சாவியைக் கையில் வைத்துக் கொண்டு வீடெல்லாம் தேடுவோம். இவை மறதியால் நடைபெறும் நிகழ்வுகள் என்பதைவிட பெரும்பாலும் பதற்றத்தால் ஏற்பட்ட நிகழ்வுகளாகத்தான் இருக்கும். போட்ட இடம் ஒன்று; தேடும் இடம் மற்றொன்றாக இருக்கும் போது ஆற்றில் போட்டதைக் குளத்தில் தேடுவது போல என்ற சொலவடையைப் பயன்படுத்துவதைக் கேட்டிருப்போம். அனுபவப்பட்டவர்கள் வாயிலிருந்து  புறப்படும் வார்த்தைகள் சொலவடைகளாக காலங்காலமாக சொல்லப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சொலவடையும் ஏதோ ஒரு அனுபவத்தின் அடிப்படையில் ஏதோ ஒரு காரணமாகச்  சொல்லப்பட்டதாகத்தான் இருக்கும்.  இந்தச் சொலவடை பிறந்த வரலாறு   மிகவும் சுவாரசியமானது. சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சுவாரசியமான ஒரு நிகழ்வின் போது எழுந்ததுதான் இந்த சொலவடை. என்பது செய்தி. சிவபெருமானைத் தன் தோழனாகவே எண்ணி வழிபட்டு வந்தவர் சுந்தரமூர்த்தி நாயனா...

Latest Posts

தமிழ்ப் போட்டி

கலைந்து போன கனவு

புதியதோர் உலகம் செய்வோம்

காலத்தினால் செய்த நன்றி