குருதட்சணையான கட்டைவிரல்
குருதட்சணையான கட்டைவிரல் "அண்ணா... குருதட்சணை...குருதட்சணை என்று கூறுகிறார்களே அது என்ன ?" கேட்டான் பாலனின் தம்பி முகிலன். "படிப்பதற்கு ஆசிரியருக்கு கொடுக்கும் பொருள் அல்லது பணம் குருதட்சணை. ஏன் திடீரென்று இந்தக் கேள்வி?" என்று தம்பியை ஏற இறங்க பார்த்தான் பாலன். "பணமும் பொருளும்தான் குருதட்சணை என்கிறாய்...ஆனால் கட்டைவிரலையே குருதட்சணையாக கொடுத்தான் ஏகலைவன் என்று ஆசிரியர் சொல்லித் தந்தாரே....அது என்ன ?" "ஓ...அதுவா அது பெரிய கதை.. அந்தக் கதை எல்லாம் உனக்கு எதற்கு?" "ஏன் ...நான் தெரிஞ்சுக்கக் கூடாதா ?" "ஏன் கூடாது...எல்லோரும் தெரிந்து வைத்திருப்பதில் தப்பில்லை." "அப்படியானால் எனக்கும் அந்தக் கட்டைவிரல் கதையைச் சொல்லுங்களேன்."என்று பிடிவாதம் பிடித்தான் முகிலன். "ரொம்ப பிடிவாதம் பிடிக்காதே...," . "எதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பது தப்பா?" "தப்பில்லை.... உன்னைப்போலவே எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ள சிறுவன் ஒருவன் காட்டில் வசித்து வந்தான்" "தனியா...