இல்பொருள் உவமை அணி
இல்பொருள் உவமை அணி செய்யுளின் சொல்லழகு,பொருளழகு ஆகியவற்றை மெருகூட்டித் தருவதற்காக கவிஞர்கள் அணியிலக்கணத்தை இடத்திற்கு ஏற்ப கையாளுவர். சொல்லப்படும் பொருள் தெளிவாகப் புரிய வேண்டும். செய்யுள் அழகும் குறைந்துவிடக்கூடாது. அதற்காக அணிகலன்களை அணிவிப்பதுபோல அணிகளை அணிவித்து பாடல்கள் எழுதும் பாங்கு எல்லா புலவர்களிடமும் உண்டு. அணிகளுள் அணிசெய் அணியாக விளங்கும் இல்பொருள் உவமையணி பற்றி இக்கட்டுரையில் காண்போம். இல்லாத ஒன்றை இருப்பதுபோல கற்பனை செய்து அதனை உவமையாக கூறுவது இல்பொருள் உவமையணி எனப்படும் அன்பகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண் வற்றல்மரம் துளிர்த் தற்று என்கிறார் வள்ளுவர். கொடும்பாலை நிலத்தில் பட்டுப்போன ஒரு மரமானது தளிர் விடுவது என்பது அன்பில்லா வாழ்க்கைக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. கொடிய பாலைநிலம். நெடு நாட்களாக மழைகாணா பூமி. அங்கங்கே நின்றுகொண்டிருந்த ஒற்றை மரமும் பட்டுப் போய்விட்டது மரம் பட்டது பட்டதுதான். எங்கேயாவது பட்டுப்போன மரம் துளிர்த்து மறுபடியும் காய் ,கனி என்று பழைய நிலைக்குத் திரும்புவதை கண்டீரோ? இல்லை அல்லவா! இது எப்படி நடைபெறுவது சாத்திய...