பணி நிறைவுப் பாராட்டு மடல்
பணி நிறைவுப் பாராட்டு மடல் திருமதி: ஜூலியட் ராஜன் ஆசிரியை கே. சி. மாதுங்கா தமிழ்ப்பள்ளி மும்பை- 19 நாள் :29.06.2024 கத்தும் கடல் கடந்த புகழாறு கன்னிமாதா கருணைக்கு நிகர் யாரு பண்டாரகுளம் சந்தானமரியான் ராஜம்மாள் தேனூர செவியோதி வைத்தார் ஜூலியட் என்ற நற்பேரு ! களிகை ராஜனோடு இணைந்த இந்தத் துணையாறு இராஜாங்கம் நடத்திப் பெற்றதிரு பொன்னாறு அகவை இவருக்கு என்றும் பதினாறு - அதுதான் ஆண்டவன் கட்டளை அதற்கு மறுப்பேது? ஆர் எஸ் நகரில் சிற்றடி பதித்த சிற்றாறு ஆரேகாலனி கே.டி காய்க்வாட் எங்கும் தெண்ணீராறு ஐயாறு ஆண்டுகள் மாதுங்காவில் நிறைவான வரலாறு ஐயமில்லை இவர் மாநகராட்சித் தமிழ்ப்பேராறு! கற்பித்தலில் புதுமை அள்ளிவரும் புத்தாறு கற்பவர்க்கு இவரொரு தெவிட்டாத நன்னீராறு கற்றவர் மெச்ச நடந்துவரும் தனிப்பேராறு கற்றுக்கொள்வதில் பெற்றார் ஈடில்லாத் தனிப்பேரு! மொழியாக்கப்பணியில் பதித்தார் புது வரலாறு தமிழ்ப்பாடநூல் பேசுமே நாளும் இவர் பேரு கவினான உரையோடு நடைபயிலும் செந்தமிழாறு - இவர் கலையாக நடந்து வரும் வற்றாத ஜீவஆறு கற்பித்தலுக்கு எல்லைக்கோடு வரைந்தவர்