அந்தநாள்

அந்த நாள்....

வானிலா ஒளி
வரப்பின்மீது விழ
கையில் லாந்தர் ஒளி
காலுக்கு வழிகாட்ட
கால்கடுக்கக்
கடைமடைப் பயணம்
ஓடையில் ஓடும் 
சிறுமீன் கண்கள் 
சிதறும் நிலவொளியில்
மின்னிடும் தாரகையாய்
மிரட்டி அழகூட்ட
வரப்பில் தாண்டி ஓடும்
தவளை கால்கள்
மேல் துள்ளிக் குதித்து
அச்சத்தில் குதித்து
கால்கள் இடறி 
கால்வாயில் விழுந்த
அந்தநாள் நினைவுகள்
மெல்ல வந்து சிரிக்க
நாணத்தால் முகம் கவிழ்ந்தேன்
அவைதான் எத்துணை
இனிய நாட்கள்

சிள்வண்டு சுற்றி ஒலி எழுப்ப
ஒற்றைப் பறவையின்
சிறகடிப்பு தன் இருப்பைச்
சொல்லி வைக்க
யாருல அங்கே என்
மடையை அடைத்தது
என்ற பக்கத்துத் தோட்டத்து
மாமாவின் குரல்
அப்பப்போ வந்து
ஆள் அனக்கம் இருக்கிறது
அச்சம் தவிர் 
என்று சொல்லிச் செல்ல
அந்த நாள் நினைவுகள்
கடைமடைக்கு அழைத்துச் சென்று
கண் சிமிட்டிக் 
கவி பாட வைத்தது

முதல்மடை திறந்து
மொத்த தண்ணீரையும்
வரப்பு மவுழ பெருக்கி
மகிழும் முன்னர்
மொத்தமாய் முழுநீரும்
நின்று போக
யாரங்கே என் படையை
அடைத்தது லாந்தர்
விளக்கோடு மடை நோக்கிச்
செல்ல அங்கே
காத்திருந்தது அதிர்ச்சி
மடைமீது அய்யனாரோ 
இவர் அர்த்த ராத்திரியில்
கடைமடையைக் 
காக்க வந்த 
காவல் தெய்வமோ
என ஐயுறும் வண்ணம்
ஆரடியில் ஓருருவம்
அங்கே நின்றிருக்க
மிச்சம் உயிரிருந்தால்
நாளை பார்க்கலாம் என
பதுங்கி மறைந்து
வீடு வந்த நாட்கள்
நினைவின் உச்சம்
நிகழ்ந்தவை கடைமடை
காட்டிய கவினுரு 
நினைவுகளின் மிச்சம் 









Comments

Popular Posts