தீதொழிய நன்மை செய்

தீதொழிய நன்மை செய் 

மனித மனங்கள் வேறுபடுகின்றன.

மதங்கள் என்றும் வேறுபடுவதில்லை.

எல்லா மதங்களும் போதிப்பது

அன்பை மட்டும்தான்.


தீமை செய்வதற்கு எந்த மதமும் அனுமதிப்பதில்லை.

நன்மை செய்தால் நல்லது கிடைக்கும்.

என்பதை ஆழ விதைத்துச் செல்வது

மதங்கள்.


ஆனால் மதங்களுக்குள்

ஏன் இத்தனை மாறுபாடுகள்?


வேறுபாடுகள்?

மதத்தின் பெயரால் ஏன் சண்டைப்

சச்சரவுகள் ?

இப்படியொரு கேள்வி உங்கள் மனதில்

எழலாம்.


இவை எல்லாவற்றிற்கும் காரணம் 

மனித மனங்களும் அவற்றில்

நிரம்பிக் கிடக்கும் மாறுபாடுகளும்

வேறுபாடுகளும் அன்றி வேறென்ன சொல்வது?


அதனை மக்களுக்கு எப்படி புரிய வைப்பது?

நானும் நீங்களும் சொன்னால்

கேட்டுவிடவா போகிறார்கள்?


இப்படி ஒவ்வொருவரும் 

நமக்கென்ன நமக்கென்ன 

என்று விலகிச் சென்றால் எப்படி?


யாராவது ஒருவர் பேசித்தானே

ஆக வேண்டும்.புரிய வைத்து

மக்களை நல்வழிப்படுத்த வேண்டாமா?


அதற்குதான் யாம் இருக்கிறோம்

என்கிறார் ஔவை.


தனது நல்வழி பாடல்களின்

முதல் பாடலே  நல்வழிப்படுத்தவதாக

அமைந்துள்ளது.


இதோ பாடல் உங்களுக்காக...


"புண்ணியம் ஆம் பாவம் போல் போனநாள்

செய்தவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள்

எண்ணுங்கால்

ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர்

சொல்லும்

தீதொழிய நன்மை செயல் "


             நல்வழி பாடல் -1


இம்மண்ணில் பிறக்கும் போதும் இருக்கும்போதும்

ஒரு மனிதன் கூடவே வருபவை

இரண்டு மட்டும்.

ஒன்று நாம் உயிரோடிருக்கும் காலத்தில்

செய்த பாவக்கணக்கு.

மற்றொன்று நாம் செய்த புண்ணியக்கணக்கு.

இவை தவிர எவ்வளவுதான் பொருள்

சேர்த்து வைத்தாலும் 

இறக்கும்போது கூடவே எடுத்துச் சென்றுவிட

முடியுமா?

முடியாதல்லவா?


ஆதலால் வாழும் காலத்தில் தீயவை செய்யாது நன்மை செய்யுங்கள்.


அனைத்து சமயங்களும்

சொல்லித் தருவதும் இவையன்றி வேறொன்றுமில்லை "

என்கிறார் ஔவை.


வாழும் காலத்தில் உன்னால் முடிந்த அளவுக்கு நன்மை செய்.

தீமை செய்யாதே. இதுதான் மதங்களின் 

போதனை.


இதனைக் கேட்டால் போதும்.

உலகம்

அமைதியாக இருக்கும்.

இதுதான் நல்வழியின்

முதல்பாடல் மூலமாக 

ஔவை சொல்லும் செய்தி.


நல்லவை செய்.

அல்லவை செய்யாதே.

ஒத்த கருத்து. ஒருமித்த 

குரலோடு உலகுக்கு 

உரைக்கும் படியாகச்

சொல்ல வேண்டிய கருத்து.


அருமையான கருத்து இல்லையா?


Comments

Popular Posts