முற்பகல் செய்யின்....

முற்பகல் செய்யின்.....


காகம் ஒன்று மாமரத்தில் கூடு கட்டியது.
     
 தான் கட்டிய இந்தக் கூட்டில்  முட்டைகள் இட்டு 
 குஞ்சுகளோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
 என்ற கனவோடு கூட்டைப் பார்த்துப் பார்த்து
 மகிழ்ந்து வந்தது.
    ஒரு நாள் எங்கிருந்தோ வந்த 
 குரங்கு ஒன்று மரத்திற்கு மரம் தாவி 
 விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
 
  விளையாடியபோது  மரத்திலிருந்த
  காகத்தின் கூட்டினைக் குரங்கு
  பார்த்துவிட்டது.
  
  கூடு ஒன்று மரத்தில் இருப்பதைக் கண்டதும் 
  உற்சாக மிகுதியால் கூடுதல் ஆட்டம் போட்டது.
  தாவித்தாவி கூட்டிற்கு அருகில் சென்றது.
கூட்டினுள் எட்டிப் பார்த்தது.  
கூட்டினுள் யாரும் இல்லை.

  யாரும் இல்லாத போது விளையாடினால் 
  என்ன மகிழ்ச்சி கிடைக்கப் போகிறது ? 
  
   சற்று நேரம் அப்படியே உட்கார்ந்து 
   அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்து.
  அப்போது எதிரில் நிற்கும் ஒரு  
  கொய்யா மரத்திலிருந்து அணில் ஒன்று 
  தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டது.
  
  இப்போது   குரங்குக்குத் தலை கால் தெரியவில்லை. 
  ஒற்றைக் கையால் ஒய்யார ஆட்டம் போட்டது.
  
  அணிலைப் பார்த்து "வெவ்வெவ்வே..." 
  என்று அழகு காட்டியது.
அணிலுக்கு குரங்கின் செயல் எரிச்சலைப்
தந்தது.
உடனே முகத்தைத் திருப்பி  வைத்துக் கொண்டு
குரங்கினைப் பார்க்காதது போல இருந்து
கொண்டது.

 குரங்கிற்கு அணிலின்மீது கோபம்.
 இந்த அணில் தன்னை அலட்சியமாக
 நினைப்பது போன்ற எண்ணம்.
 
இந்த அணிலின் முன்னால் தான் யார்
என்பதைக் காட்ட வேண்டும் என்ற 
ஒரு வரட்டு ஆணவம்.
அணிலின்  கவனத்தை ஈர்ப்பதற்காக 
காகத்தின் கூட்டைப் பிரித்து மாமரத்தை 
நோக்கி வீசியது குரங்கு.

அணிலுக்கு கோபம் தாழவில்லை. 
ஆனாலும் இந்தக் குரங்கை என்ன
செய்துவிட முடியும்?
கோபத்தோடு வேறு மரத்திற்கு சென்றுவிட்டது.

மாலை நேரம். கூட்டிற்கு வந்த காகம், 
கூடு தாறுமாறாக வீசப்பட்டுக் கிடப்பதைக்
 கண்டு பரிதவித்தது.
 எத்தனை ஆசை ஆசையாக கட்டியவீடு.
 இப்படித் தாறுமாறாக வீசியிருக்கிறார்களே.
 
  " என்ன செய்வது? யார் செய்திருப்பார்கள்?" 
  
    இதெல்லாம் குரங்கின் வேலையாகதான் 
    இருக்கும். ஆனால் யார் தட்டிக் கேட்பது?"
    
   இரவு முழுவதும் மரக்கிளையிலேயே கவலையோடு
   அமர்ந்திருந்தது காகம்.
   
 காலையில் மறுபடியும் ஒவ்வொரு குச்சியாக 
 எடுத்து வந்து கூடு கட்ட ஆரம்பித்தது.
 காகம் எப்போது கூடு கட்டும்.
 நாம் பிரித்து வீச வேண்டும் என்பதுபோல
 காத்திருந்த குரங்கு  மறுபடியும் வந்து 
 கூட்டைப் பிரித்துப் போட்டு விளையாட்டுக்
 காட்டியது.
   "மழைக்காலம் வரப் போகிறது.
எத்தனை நாளைக்கு இப்படி 
மரத்திலேயே கிடந்து காலத்தைக் கடத்துவது?"
வெகு தொலைவுக்குச் சென்றுவிட வேண்டியது தான்.
இந்த குரங்கு கண்ணில்பட்டால் நம்மால் 
நிம்மதியாக வாழ முடியாது."
என்ற    முடிவோடு காகம் வேறு இடத்திற்குச் 
சென்றுவிட்டது.

இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது
"அப்பாடா....இப்போது தான் இந்த குரங்கு தொல்லையிலிருந்து 
விடுபட்டோம் " பெருமூச்சு விட்டது காகம்
கூட்டினுள் முட்டையிட்டு பாதுகாத்து வந்தது. 
ஆனால் எப்போதும் மனதுக்குள் ஒரு பயம் 
இருந்து கொண்டே இருக்கும்.

     காகத்தின் பயத்திற்காக குஞ்சுகள் 
பொரிக்காமல் முட்டைக்குள்ளே 
ஒளிந்து கிடக்க முடியுமா என்ன?
முட்டைகளில் இருந்து குஞ்சுகள்
 வெளியில் வந்தன.

 "எத்தனை நாள் தான் கூட்டிலேயே அடைபட்டுக் கிடப்பது?"
 குஞ்சுகளுக்கு இரை பொறுக்கி வந்து தர வேண்டுமே.
 அரை மனதோடு ஒவ்வொரு நாளும் 
 இரை தேடச் செல்லும் காகம்.
 
  திரும்பி வந்து தன் குஞ்சுகளைப் பார்த்த
   பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விடும்.
 நாட்கள் பல கடந்ததால் இனி எந்த 
 தொல்லையும் இருக்காது என்று நினைத்தது காகம்.
 ஆனால் அந்த நினைப்பும் நெடுநாள் நீடிக்கவில்லை.
எங்கிருந்தோ மோப்பம் பிடித்து வந்து 
சேர்ந்தது அந்த சேட்டைக்கார குரங்கு.

 மரத்திலிருக்கும் கூட்டைப் பார்த்தது.
"ஓகோ...நீங்க இங்கதான் இருக்கிறீர்களா? " மரத்தில் ஏறியது
ஒரு நொடியில் கூட்டைக் கலைத்து 
வீசிவிட்டு கும்மாளம் போட்டது.

 கீழே விழுந்த குஞ்சுகள்  கீச்..கீச்..சென்று கத்தின. 
 பயத்தில் நடுநடுங்கிப் பரிதாபமாகப்  பார்த்தன.
 
 காட்டிலுள்ள விலங்குகள் எல்லாம் 
 குஞ்சுகளுக்காகப் பரிதாபப்பட்டன.
 
 காகம் வந்தது. குஞ்சுகளைக்
 கூட்டிக்கொண்டு ஒரு புதரில் மறைந்து
 இருந்து கொண்டது.
 
       
 தன்னால்என்ன செய்ய முடியும்...?
 கடவுள்தான் கூலி கொடுக்கணும்
  என்று புலம்பியபடி  இருந்தது.
      
  ஒருநாள் அந்த காட்டுவழியாக
   ஒரு விறகுவெட்டி வந்தார்.
வந்தவர்  தன் கையில் வைத்திருந்த 
அரிவாளை எடுத்து மரக்கிளையில் 
தொங்க விட்டார்.
  
 வெயிலாக இருந்ததால் மரத்து நிழலில்
படுத்து அப்படியே தூங்கிப் போனார்.
எங்கிருந்தோ குதித்து குதித்து வந்த குரங்கு
 விறகு வெட்டிக்கு வேடிக்கை காட்ட 
மரக்கிளையில் ஏறி ஒற்றைக் கையால் 
ஊஞ்சலாட்டம் போட்டது. 
    
அங்குமிங்கும் தாவியது. ஆனந்த ஆட்டம் போட்டது.
 ஆ..ஆ .. வீலென்று...கத்தியபடி
  கீழே விழுந்தது குரங்கு.
     
 ஐயோ...   குரங்கின் வால் 
அரிவாளில் மாட்டிக் கொண்டது.
வலி தாங்க முடியாமல் கத்தியபடி
 அங்குமிங்கும் வாலை ஆட்டிப் பார்த்தது குரங்கு.
 
   யாராவது வந்து தன் வாலில் மாட்டி 
   இருக்கும் அரிவாளை எடுத்து விடமாட்டார்களா 
  என்று வலியில் பரிதாபமாக  காட்டுக்குள்
  அங்குமிங்கும்  ஓடியது
       
   வாலை ஒரே சுழற்றாக சுழற்ற...அம்மாடியோவ்...
    வால் வெட்டப்பட்டு கீழே விழுந்தது.
    வலி தாங்க முடியாமல் கத்திக்கொண்டே 
    வாலில்லாமல் காட்டுக்குள்
    ஓடி மறைந்தது குரங்கு.
    
   நடப்பவை யாவற்றையும் தொலைவில் உள்ள 
   மரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குயில், 
   "நேற்று வரை நீ என்னென்ன ஆட்டம்
    எல்லாம் போட்டாய்.
    இன்று உன் நிலைமையைப் பார்த்தாயா? 
    உனக்கு வேண்டும்...உனக்கு வேண்டும்..."
    என்று கத்தியது.
    
    "பார்த்தாயா நீ காகத்திற்கு என்னென்ன
இடையூறு எல்லாம்
செய்தாய்? எனக்குத் தண்டனை தானாக
கிடைத்துவிட்டது அல்லவா?
    
 இதற்குதான் வள்ளுவர் 
      "  பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
        பிற்பகல் தானே வரும்  "என்று
சொல்லியிருந்தாரோ?
சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
"கேட்டால் கேளுங்க..... கேட்காவிட்டால் இப்படித்தான்
அல்லல்படுவீங்க "  என்று 
மறுபடியும் பாடலைப் பாடிக் கொண்டே 
குயில் பறந்து சென்றது.
      
       


       
     


         
         

Comments

Popular Posts