வியவற்க எஞ்ஞான்றும் தன்னை.....

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை....


வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை"

                               குறள் :    439
     

வியவற்க - தற்பெருமை கொள்ளாதிருப்பீராக
எஞ்ஞான்றும் - எந்த நிலையிலும், எப்போதும்
தன்னை- தன்னைப்பற்றி
நயவற்க - விருப்பம் கொள்ளாதிருப்பீராக
நன்றி- நன்மை
பயவா- விளைவிக்காத
வினை - செயல்

தன்னைப்பற்றி வியந்து எந்த நிலையிலும்
பெருமை கொள்ளாதிருப்பீராக.
அதுபோல
நன்மை விளைவிக்காத எந்தச்
செயலைச் செய்யவும்
விரும்பாதிருப்பீராக.

விளக்கம் :

ஒருவன் தன்னை ஒருபோதும்
உயர்வாக எண்ணக்கூடாது.
உயர் பதவியில் இருப்பவர்களாக
இருக்கலாம்.
வசதி படைத்தவர்களாக
இருங்கலாம்.
படித்தவர்களாக இருக்கலாம்.
உங்களின் இந்த நிலைக்காக
இந்தச் சமூகம் உங்களுக்கு ஓர்
உயர்வான இடத்தைக் கொடுக்கும்.
மறுப்பதற்கில்லை.
ஆனால் நீங்கள் ஒருபோதும்
உங்களை உயர்வாக எண்ணவிடக்
கூடாது.
நான் மற்றவர்களைவிட
உயர்வு என்ற எண்ணம்
ஏற்பட்டுவிட்டாலே
மற்றவர்கள் எல்லாம் மட்டம்
என்ற எண்ணமும் ஓடி வந்து
குடியிருந்து கொள்ளும்.
அந்த எண்ணம்
தற்பெருமை கொள்ள வைக்கும்.
உங்களின் தற்பெருமை உங்கள்
பேச்சிலும் செயலிலும் வெளிப்படும்.
அதனால் விளையப் போவது என்ன?

உங்களை நீங்களே
உயர்வாக எண்ணிக்கொள்ள
வேண்டாம் .

எந்த உயர்நிலையில் இருந்தாலும்
இந்தச் சமூகத்திற்கு
நன்மை செய்வதற்குப் புறம்பான
செயல்கள் செய்வதில்
விருப்பம் கொள்ள வேண்டாம்.
உயர்வான நிலையில் இருப்பவர்கள்
பிறருக்கு நன்மை செய்பவர்களாக
இருக்க வேண்டும்.அதுதான்
அவர்களை உயர்ந்த
இடத்தில் கொண்டு வைக்கும்.
நம் செயல்கள்தான் நமக்கான
இடத்தைத் தீர்மானிக்கும்.

அதனால்தான்,
"நம்மை நாமே உயர்வாக
எண்ணிக்கொண்டு
நன்மைக்குப் புறம்பான
செயல்கள் செய்வதில் நாட்டம்
கொள்ள வேண்டாம் "என்கிறார்
வள்ளுவர்.

English couplet :

"Never indulge in self-complaisant mood,Nor deed
desire that yields no gain of good "

Explanation :

Let no one praise himself,at any time;
let him not desire to do useless things.

Transliteration :

"Viyavarka Egngnaandrum thannai Nayavarka
Nandri payavaa vinai"

Comments

Popular Posts