பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்......

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்....


"பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் "
                      குறள் : 580


பெய - ஊற்றுதலை
கண்டும் - பார்த்தும் 
நஞ்சுண்டு- நஞ்சினைக் குடித்து
அமைவர் -அமைதியாய் இருப்பர்
நயத்தக்க - விரும்பத்தக்க
நாகரிகம்- உயர்ந்த பண்பு
வேண்டுபவர்-  விரும்புபவர்


விரும்பத்தக்க நல்ல நாகரிகம்
தெரிந்த ஒருவர் தன்னுடன் பழகிய
நண்பர் நஞ்சினை
இடுவதைப் பார்த்த பின்னரும்
அதனைத் தான்உண்டு 
அமைதியாக இருந்துகொள்வார்.


விளக்கம்:

பழகியவர் எது செய்தாலும்
மறுப்பு சொல்லாமல் செய்யும் பண்பு
சிலரிடம் இருக்கும்.
இது அவர் மீது நாம்
கொண்டுள்ள அதிகப்படியான
நம்பிக்கையின் வெளிப்பாடு.
அவர் எந்தத் தீங்கும் செய்யமாட்டார்
என்று அவர் பேரில் வைத்திருக்கும்
நல்லெண்ணம்.

ஆனால் எல்லா நேரங்களிலும்
நண்பர் நல்லவராக இருப்பார்
என்று நம்ப முடியாது.
சில நேரங்களில் அவர் உள்ளம்
நமக்கு எதிரான சிந்தனை கொண்டிருக்கலாம்.
நமக்கு எதிரான தவறான செயல்களில்
ஈடுபடுபவராக இருக்கலாம்.
  

நம் கண்முன்னே நஞ்சினை
ஊற்றித் தருகிறார் நண்பர்.
நம்மில் எத்தனைபேர் அதனை
வாங்கிக் குடிப்போம்?
நண்பர்தான் .அதற்காக உயிரை விட்டுவிட
முடியுமா?என்று எதிர்க்கேள்வி
கேட்பீர்கள்.

 ஆனால் தன் நண்பனை
நாலுபேர் மத்தியில் காட்டிக்
கொடுத்துவிடக்கூடாது என்ற
நற்பண்பு உடையவர் 
அந்த நஞ்சினை உண்டுவிட்டு
எதுவும் நடக்காதது போல அமைதியாக
இருந்து கொள்வாராம்.
இப்படியும் மனிதர்களா?
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

நஞ்சு என்பதாவது  ஊறு செய்யும்
ஒரு செயல் என்று எடுத்துக்கொள்ள
வேண்டும். அப்படி ஊறு செய்தபோதும் கூட
நண்பரை நாலுபேர் மத்தியில் காட்டிக்
கொடுத்துவிடாதபடி நண்பனால் வரும்
துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும்
பண்பு ஒரு சிலரிடம் இருக்கும்.
.
அதைத்தான் வள்ளுவர்,
நண்பன் தருவது நஞ்சு என்று
தெரிந்த பின்னரும் அதனை
மகிழ்ச்சியாக உண்டு அமைதியாக
இருக்கும் உயரிய பண்பானது
விரும்பத்தக்க ஒரு நாகரிகம்"
என்று அடையாளப்படுத்துகிறார்.

நண்பனால் வரும் துன்பத்தைப்
பக்குவமாகக் கையாளும் பண்பு
நல்ல நாகரிகம் தெரிந்த நண்பரிடம்
மட்டுமே இருக்கும்.


English couplet :

"They drink with smiling grace, though poison
interfused they see,
Who seek the praise of all-esteemed courtesy "

Explanation :

Those who desire to cultivate that degree of
Urbantly which all  shall love, even after swallowing the
poison served to them by their friends
will be friendly with them.


Transliteration :

Peyakkantum Nanjun Tamaivar Nayaththakka
Naakarikam ventu pavar"



Comments

Popular Posts