பூசனிக்காயில் எத்தனை விதைகள் இருக்கும்?

பூசனிக்காயில் எத்தனை விதைகள் இருக்கும்?
நானும் தங்கையும்
புளியம் முத்து கையில் வைத்து
விளையாடிக் கொண்டிருந்தோம்.

 என் கையில்
எத்தனை முத்து இருக்கிறது சொல்
என்றாள் என் தங்கை
ஏழு என்றேன்.

இது தெரியாதா?
இதற்குப் போய் கல்லூரியிலா
படிக்க வேண்டும்?

எப்படி கண்டு பிடித்தாய்
சொல்லேன்....ப்ளீஸ் கெஞ்சினாள் தங்கை.

மாயமும் இல்லை மந்திரமும் இல்லை.
டொட்டொடொயிங்....
இவ்வளவு நேரம் ஏழுகல்
சுட்டிதானே விளையாடிக்கொண்டிருந்தாய். இதனால் முத்தும் ஏழுதான் வைத்திருப்பாய் என்று ஒரு ஊகத்தில்
சொன்னேன். சரியா என்றேன்.

இப்போது நான் ஒரு விடுகதை
போடுகிறேன் நீ விடுவி பார்க்கலாம்.

ஆரஞ்சு பழத்தில் எத்தனை விதைகள்
இருக்கும்?

ஆரஞ்சுப் பழத்தில் ஆரஞ்சு விதை
இருக்கும்.
விளையாடாதே....எத்தனை விதைகள் இருக்கும்
சரியாகச் சொல்.

சரியாகத்தான் சொன்னேன்.
ஆரஞ்சு விதைகள் தான் இருக்கும்.

என்னை என்ன  கேணச்சி
என்று நினைத்தாயா?

சரியாகத்தான் சொன்னேன்.
 ஆறு ஐந்து ஆரஞ்சு
விதைகள் .மொத்தம் பதினொரு விதைகள்
இருக்கும் அதனால்தான் அதற்கு
ஆரஞ்சு என்று பெயர்.
புரிகிறதா?எனக்குப் பாடம்
எடுத்தாள் என் தங்கை.
இவளை எப்படியாவது மடக்க
வேண்டுமே...என்ன செய்யலாம்?   
என்ன செய்யலாம்...
மண்டைக்குள் என்னவெல்லாமோ சிந்தனை ஓடியது.

அப்படியானால் ஆரஞ்சு கலரில்
இருப்பதால் அந்தப் பெயர் இல்லையா?
சரி விடு .நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?
என்று கேட்டேன்.

கேளு... முடிந்தால்
சொல்கிறேன் என்றாள்.

பூசணிக்காயில் எத்தனை விதைகள் இருக்கும்?

எத்தனை விதைகள் இருக்கும்?...
எத்தனை விதைகள் இருக்கும்?..
ம்...நிறைய விதைகள் இருக்கும்.
இதுவரை எண்ணிப் பார்த்ததில்லையே...
நீ எண்ணிப் பார்த்திருக்கிறாயா?

நானும் எண்ணிப் பார்க்கவில்லை...

உனக்கும் தெரியாதா?
உனக்குத் தெரியாமல்தான்
என்னிடம் கேட்கிறாயா?

ஏன் எண்ணிப் பார்க்க வேண்டும்?
ஒரு கணக்கு போட்டு பார்த்துவிட
வேண்டியதுதானே!
 
கணக்கு அது என்ன கணக்கு...?

கணக்கதிகாரத்தில்  ஒரு பாடல் இருக்கிறது.
அது பூசனிக்காய்க்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன 
என்பதைப் சொல்லித் தருகின்றது.

இதோ பாடலைப் சொல்கிறேன் நீயே கணக்குப்
போட்டுப் பார்த்து விடையைச் சொல்.

"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றைஞ்சு தன்னில் மிகப் பெருக்கி
பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல் "


ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ண வேண்டும்.
அந்தக் கீற்றுக்களின் எண்ணிக்கையை முறையே மூன்று ஐந்து ஆறு ஆகிய எண்களால் பெருக்க வேண்டும்.
இப்போது பெருக்கி வரும் விடையை
இரண்டால் வகுக்க வேண்டும்.
இப்போது பெருக்கற்பலன்
பாதி ஆகிவிடும்.
அதன் பின்னர் இந்த எண்ணை
மூன்றால் பெருக்கினால் கிடைப்பது
பூசனிக்காயினுள் இருக்கும்
விதைகளின் எண்ணிக்கை ஆகும்.

பாடல் சொல்வது சரி.
பூசனிக்காய் விதை இந்தப் பாடலில்
சொல்லியதுபோல எண்ணிக்கையில்
சரியாக இருக்குமா?
நீ சரி பார்த்தாயா?

இல்லை...இனிதான் எண்ணிப்
பார்க்க வேண்டும்.

பார்த்துவிட்டு சொல் ஒத்துக்கொள்கிறேன்.

 கொஞ்சம் பொறு.
பூசனிக்காய் வாங்கி வருகிறேன்
ஓடினாள் தங்கை.

இதோ பூசனிக்காய் வாங்கி வந்துவிட் டேன்.
உள்ளே எத்தனை விதைகள் இருக்கின்றன
என்று கணக்குப் போட்டுச் சொல்.
என்று பூசனிக்காய் முன்னே வைத்தாள்
தங்கை.

இவளிடம் போய் கணக்கதிகார கணக்கைப் போட்டது தப்பாகப்
போயிற்று.

ஒரு பத்து நிமிடம் நேரம் கொடு.
அதற்குள் கணக்கதிகார பாடலை மறுபடியும் வாசித்து விட்டு வாரேன்.

ஒன்றும் வாசிக்க வேண்டாம்.
எனக்குப் பாடல் மனப்பாடம்.

தெரியாத்தனமாக இவளிடம் பாடலைப்
சொல்லிவிட்டேன்.
நீங்களும் உதவுவீர்களல்லவா?
 உங்களை நம்பிதான் களத்தில்
இறங்கியிருக்கிறேன்.
கைவிட்டுவிடாதீர்கள்.

ஹலோ...பூசனிக்காயை உன்
கையில் வைத்துவிட்டு
அவர்களிடம்  உதவி கேட்கிறாயா? முதலாவது பூசனிக்காயில் எத்தனை கீற்றுகள் இருக்கின்றன என்று 
எண்ணிச் சொல்
மகளே!

ஏழு கீற்றுகள் இருக்கின்றன.
அப்புறம்...

அப்புறம் என்ன?
முறையே மூன்று ,ஐந்து ,ஆறு ஆகிய எண்களால் பெருக்கச் சொல்.

சொல்லியாயிற்று .

இப்போது இந்தப் பெருக்கற்பலனை
இரண்டால் வகுக்கச் சொல்.

இரண்டால் வகுக்க வேண்டும் அவ்வளவுதானே...
 வகுத்தாயிற்று..

இப்போது  பெருக்கற்பலன் பாதியாகிவிட்டதா
அதனை  மூன்றால்
 பெருக்கும்படியாகக் கூறு.

வகுத்து கிடைத்த எண்ணை
இப்போது மூன்றால் பெருக்க வேண்டும்.
அவ்வளவுதானே...
வகுத்தாயிற்று தாயே...

இதுதான் பூசனிக்காயில்
இருக்கும் விதைகளின் எண்ணிக்கை.

சரியாக இருக்கும் இல்லையா?

பூசனிக்காயை வெட்டி எண்ணிப்பார்.
கணக்கு சரியாக இருக்கும்.
வரட்டா....

கணக்கு போட்டது நான்.
பெயர் வாங்கியது நீயா?
இருந்தாலும் ரொம்ப நன்றியம்மா.

அதுதாங்க இப்படி விவரமாகச் சொல்லித்தர ஒரு தங்கை வேண்டும் என்பது.
"தம்பியுடையான் படைக்கு அஞ்சான்"
இது பழமொழி.
"தங்கையுடையாள் கணக்கிற்கு
அஞ்சாள்"
இது புதுமொழி.

என் தங்கை சொல்லித்  தந்த
பூசனிக்காய் கணக்கு புரிந்ததா?

நீங்களும் ஒரு பூசனிக்காயை வாங்கி
வெட்டி கணக்கு சரியாக வருகிறதா என்று சரிபார்த்து விடையை எனக்கு
எழுதுங்கள்.

என் கணக்கும் உங்கள் கணக்கும்
சரியா என்று பார்த்துவிடுவோம்.

வரட்டா...











Comments

  1. புதிரையும் கொடுத்து அதற்கு விடை காண பாடலையும் தந்து பதிவிட்ட கட்டுரை மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts