காலத்தினால் செய்த நன்றி
காலத்தினால் செய்த நன்றி...... (குறளும் குயிலும் ) கோடைகாலம்.பல நாட்களாக மழை காணா பூமி. வறட்சியின் பிடியில் மாட்டிக்கொண்டு விலங்குகள் எல்லாம் பரிதவித்தன. நீருக்காக விலங்குகள் அங்குமிங்கும் ஓடின. தாகம் யாரைத்தான் விட்டு வைத்தது.....? நீர் நிலைகளைத் தேடி மான் ஒன்று காட்டுக்குள் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்தது. காடு முழுவதும் தேடியது...தேடியது. தேடிக்கொண்டே இருந்தது. கால்கள் ஓய்ந்து போனதுதான் மிச்சம். ஒரு சொட்டு நீரையும் கண்ணால் பார்க்க முடியவில்லை. கால் கடுத்தது. கடுகளவு தண்ணீர் கூட கிடைக்கவில்லை. இனி தன்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்ற நிலை. களைப்பில் அப்படியே கீழே விழுந்தது மான். நாக்கு வறண்டு போயிற்று. எழும்பி நடக்கவும் உடலில் தெம்பில்லை. நட்ட நடுவெயில். நிலம் அனலாக கனன்று கொண்டிருந்தது. வெப்பம் தாங்க முடியாத மான் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பரிதாபமாக கிடந்தது. ...