உன்னாலே எல்லாம் உன்னாலே
உன்னாலே எல்லாம் உன்னாலே வாய் வாழ்த்துகிறதோ இல்லையோ வயிறு வாழ்த்தும்'" என்பது பழமொழி. வயிறார உண்டால் மனமார வாழ்த்து வரும். "எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்ற நிலை மாறி எண்சாண் உடம்புக்கு ஒரு சாண் வயிறே பிரதானம்" என்ற நிலைக்கு வந்து விட்டோம். வயிற்றுக்காகத்தானே இந்த ஓயா உழைப்பும் ஓட்டமும். அன்றொரு நாள் ... நடந்த களைப்பு தீர ஒரு மரத்து நிழலில் அமர்ந்திருந்தார் ஔவை. நாவறள கண்கள் கானல் பின்னால் ஓட வயிறு தா தா என்று தாவா நடத்த காது கருங்குயிலின் கானம் கேட்க தடாயிட்டு மறுத்து மல்லுகட்டி நிற்க ஏன் ஏனென்ற கேள்வியோடு மனசு பதில் கேட்டு நிற்க உன்னாலே எல்லாம் உன்னாலே வயிறே உன்னாலே எல்லாம் உன்னாலே ஒருநாள் ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்றால் ஏற்க மறுக்கிறாய் என் நோவறியா வயிறே! உன்னாலே எல்லாம் உன்னாலே கூழுக்குப் பாடிய கூனக்கிழவி என்றார் கூனிக்குறுகிப் போனேன் உப்புக்கும் புளிக்கும் பாடுவேனென ஒப்புதல் வாக்குமூலம் அளித்து மனதை ஆற்றியிருந்தேன் வயிறே! உன்னாலே எல்லாம் உன்னாலே நாளும் துன்பம் தரும் என் வயிறே உன்...