பாகப்பிரிவினையில் அம்மா
பாகப்பிரிவினையில் அம்மா "பாட்டி...பாட்டி" கதவைத் தட்டினான் செல்வன். " யாரும்மா...... பாட்டி வந்து கதவைத் திறக்கிறேன்" குரல் கொடுத்தபடியே தட்டுத்தடுமாறி வந்து கதவைத் திறந்தார் பாட்டி. கதவைத் திறந்ததும் "யாரும்மா.. மூத்தவன் பிள்ளையா? கையைப் பிடித்த பாட்டி "செல்வனா.. பள்ளிக்கூடத்துக்குப் போகல" கரிசனமாக கேட்டார் பாட்டி. "போகல..."ஒற்றை வார்த்தையோடு பேச்சை முடித்துக் கொண்டான் செல்வன். " ஏன் போகல...அம்ம வீட்டுல இல்லையா?" "இருக்காங்க..இருக்காங்க."சலிப்பாக பதில் வந்தது. "பிறகு ஏன் போகல? வாத்தியார் அடிச்சாரா?" "ஒருத்தரும் அடிக்கல...போகல்ல என்றால் போகல்ல விடுங்களாம் பாட்டி." " பள்ளிக்கூடம் போகாமல் இருக்கலாமா..." என்ற பாட்டி., "உங்க அப்...