Skip to main content

Posts

Featured

யானையோடு ஒரு விளையாட்டு

யானையோடு ஒரு விளையாட்டு  பாணன் ஒருவனுக்கு தன் மனைவியோடு சொல் விளையாட்டு  விளையாடிப் பார்க்க ஆசை. ஆனால் அவளோ ஒருநாளும் அவன் புலமையை மெச்சுவதே இல்லை. "உங்களால் நன்றாகப் பாடி  நல்ல பரிசு பெற்று வர முடிகிறதா? வெறுங்கையோடு தான் வருகிறீர்கள் " என்று அலட்சியப் படுத்தியே பேசுவாள். இன்று ஒரு வள்ளலைப் பாடி பொருள் பெற்று வருகிறேன் என்று சென்றான் பாணன். ஆனால் வரும்போது வெறும் கையோடு வருகிறான். வெறுங்கையை வீசிக்கொண்டு வீட்டிற்கு வந்ததும் பாணினிக்குக் கோபம். "இன்றும் வெறுங்கை தானா?" நக்கலாகக் கேட்டாள். "இல்லை ...இல்லை கொண்டு வந்திருக்கிறேன்" என்றான். "என்ன கொண்டு வந்தீர்கள்? காட்டுங்கள்." ஆர்வமாக  கேட்டாள். பாணனுக்கு  தன் மனைவியோடு சொல் விளையாட்டு  விளையாடிப் பார்க்க ஆசை. அதற்கான நல்வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. நழுவ விட்டுவிடுவானா? ஒரு நமட்டுச் சிரிப்போடு பாணினியைப் பார்த்தான். அவள் கண்கள் அவன் கையில் ஏதாவது இருக்கிறதா என்று தேடுவதிலேயே குறியாக இருந்தன. அவளுடைய ஆர்வத்தைக் கண்டு பாணனுக்கு உள்ளுக்குள் ஒரு சிரிப்பு. "வம்பதாம் களபம்   கொண்டு வந்திரு...

Latest Posts

காலத்தோடு ஒரு கண்ணாமூச்சி

சங்க இலக்கியத்தில் உவமை

இரட்டையர்களின் தமிழ் விளையாட்டு

உமி போனால் முளையாது