சிந்தனைத் துளிகள்
சிந்தனைத் துளிகள் 1"நாம் எங்கே நிற்க வேண்டும் என்று நமக்கான இடத்தை நாம்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்." 2"யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே. மாற்றிக் கொள்ள நினைத்தால் முடிவில் ஏமாற்றம்தான் நிகழும்." 3"தன்மானம் பாதிக்கப்படும் இடத்திலிருந்துதான் எதிர்ப்பு கிளம்பும்." 4"மரியாதை இல்லாத இடத்தில் மௌனமாய் கடந்துவிடு. 5"உண்மை உன்னை பலவீனப்படுத்தும் என்பதற்காக உண்மையை எந்த இடத்திலும் தொலைத்துவிடாதே" 6"நேற்றைய எதிரி நாளைய நண்பன் என்று நம்பிவிடுவது முட்டாள்தனம். ஒருமுறை எதிரி எப்போதும் எதிரி." 7கலகக்காரனிடமிருந்து தள்ளி நிற்கப் பழகு. கலகம் உன்னை எப்போது வேண்டுமானாலும் உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளும்" 8"பொய்யும் புரட்டும் பொய்யனின் மினுக்கு." 9"தேடாத உறவு தோண்டாத துறவு போன்றது" 10"பணம் பேசும். மௌனம் பேச வைக்கும்." 11. "அவமானப்பட்டவனுக்கு அந்த அவமானம்தான் ஊக்கம் மருந்து. என்றாவது ஒரு நாள் பலன் தராமல் போகாது." 12 "இல்லாமையைப் பகிர்ந்து கொள்ளாதே. இருப்பதைப் பதுக்கி வைக்காதே."...