தீதொழிய நன்மை செய்
தீதொழிய நன்மை செய்க மனித மனங்கள் வேறுபடுகின்றன. மதங்கள் என்றும் வேறுபடுவதில்லை. எல்லா மதங்களும் போதிப்பது அன்பை மட்டும்தான். தீமை செய்வதற்கு எந்த மதமும் அனுமதிப்பதில்லை. நன்மை செய்தால் நல்லது கிடைக்கும். என்பதை ஆழ விதைத்துச் செல்வது மதங்கள். ஆனால் மதங்களுக்குள் ஏன் இத்தனை மாறுபாடுகள்? வேறுபாடுகள்? மதத்தின் பெயரால் ஏன் சண்டைப் சச்சரவுகள் ? இப்படியொரு கேள்வி உங்கள் மனதில் எழலாம். இவை எல்லாவற்றிற்கும் காரணம் மனித மனங்களும் அவற்றில் நிரம்பிக் கிடக்கும் மாறுபாடுகளும் வேறுபாடுகளும் அன்றி வேறென்ன சொல்வது? அதனை மக்களுக்கு எப்படி புரிய வைப்பது? நானும் நீங்களும் சொன்னால் கேட்டுவிடவா போகிறார்கள்? இப்படி ஒவ்வொருவரும் நமக்கென்ன நமக்கென்ன என்று விலகிச் சென்றால் எப்படி? யாராவது ஒருவர் பேசித்தானே ஆக வேண்டும்.புரிய வைத்து மக்களை நல்வழிப்படுத்த வேண்டாமா? அதற்குதான் யாம் இருக்கிறோம் என்கிறார் ஔவை. தனது நல்வழி பாடல்களின் முதல் பாடலே நல்வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதோ பாடல் உங்களுக்காக... " புண்ணியம் ஆம் பாவம் போல் போனநாள் செய்தவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் எண்ணுங்கால் ஈ...