கருப்பும் கறுப்பும்
கறுப்பும் கருப்பும் ஏல....ஏ...சின்னவள அந்த கருப்பி அக்கா கடையில போயி ஒரு தேங்காய் சில்லு வாங்கிட்டு வா" "நான் கருப்பி கடைக்கும் போகல்ல...சிகப்பி கடைக்கும் போகல....போம்மா" சொல்லிவிட்டு அங்கிருந்து சிட்டாக பறந்து ஓடிவிட்டாள் பரணி. "எம்மோ அவ என்ன சொல்லிட்டு போறா பார்த்தியளா? கருப்பி....சிகப்பி... நல்லா இருக்குல்ல..." என்று சொல்லி சிரித்தாள் அக்கா. இதுவரை கருப்பி என்று சொன்னோமா? கறுப்பி என்று சொன்னோமா? குழப்பமாக இருக்கிறதல்லவா! எனக்கும் அதே குழப்பம்தான். நீங்கள் இதுவரை உச்சரித்து வந்தது கருப்பி என்பதுதான். வல்லின றகரம் போட்டு சொன்னீர்களா இல்லை இடையின ரகரம் போட்டு சொன்னீர்களா என்பது உச்சரிக்கும் போதே புரிந்திருக்கும். புரியவில்லை என்றால் யரவவழள கசடதபற உச்சரிப்பு வேறுபாட்டை கவனித்துப் பாருங்கள். கருப்பியா? கறுப்பியா? என்பது புரியும். நாமும் இந்த கருப்பி ,சிகப்பி என்ற வார்த்தைகளை எத்தனை முறை பயன்படுத்தியிருப்போம். இப்படி உச்சரித்து எழுத்து வேறுபாட்டைக் கவனித்ததில்லையே என்று தோன்றுகிறதா? சரி போகட்டும். விட்டுவிடுங்கள். கிராமப்புறங்களில் இருப்பவர்கள் இப்படிப்ப...