பணிநிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல் 

சேலத்து மாங்கனிச் சுவையானவளைச்

சீர்மிகு நரசிம்மன் லட்சுமி இணை

வளைகரம் சுமந்தவளை மாதவளை

மன்னன் பாலசுப்பிரமணியம் மனையானவளை

ஆயிழை சித்ரா ஒரு வான்மழை!


ஆரே காலனியில் பெய்த முதல்மழை

மாதுங்கா முலுண்ட் கோலிவாடா

மாணவர் வளை மாயம் கற்றவளை

பேரருளைப் பெருமதியானவளை

மாணிழை சித்ரா எமக்கு வான்மழை!


தமிழானவளை தமிழாய்ந்தவளை

தக்கவரைத் தரமாக்கும்வளை

தளராதவளை தனித்துவமானவளை

தூதுவளை போலானவளை

சேயிழை சித்ரா எமக்கு வான்மழை!


கனிந்தவளை கல்வி மொழிந்தவளை

அன்னவளை அன்பு தந்தவளை

புன்னகையிழை பொலிமுகமானவளை

என்னவளை  என்நெஞ்சில் நிறைந்தவளை

பூவிழை சித்ரா எமக்கு வான்மழை!


ஓதும்பணி நிறைவானவளை

ஓர்ந்துநலம் சூழ்ந்தவளை

ஒத்திருகை தொழுதவளை

 வாயார வாழ்த்துதும் பொன்மகளை

கோழிலை சித்ரா எமக்கு வான்மழை






Comments

Popular Posts