இல்லதென் இல்லவள் மாண்பானால்.....

 இல்லதென் இல்லவள் மாண்பானால்....


"இல்லெதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை "

                      குறள் : 52

இல்லது - இல்லாதது 
என் -  யாது
இல்லவள் - மனைவி
மாண்பு - நற்குணங்கள்
ஆனால் - கொண்டிருந்தால்
உள்ளது - இருப்பது
என் ,- என்ன
இல்லவள் - மனைவி
மாணாக்கடை - சிறப்பில்லாதபோது

மனைவி நற்பண்பு உடையவளானால்
வாழ்க்கையில் இல்லாதது என்ன?
மனைவி நற்பண்பு இல்லாதவளானால்
வாழ்க்கையில் இருப்பது என்ன ?

விளக்கம் : 

இரண்டு வினாக்கள் நம்முன் 
வைக்கப்பட்டுள்ளன.
இல்லாள் மாண்புடையவளானால்
இல்லற வாழ்வில் இல்லாதது என்ன?

இல்லாள் மாண்பில்லாதவளானால்
அந்த வாழ்வில் உள்ளது என்ன ? 

இரண்டு வினாக்களுக்குமான விடையை
நாமே உய்த்துணர வேண்டும்.
ஒன்றுமில்லை என்ற ஒற்றைச் சொல்லே
 அவற்றிற்கான பதிலாக இருக்கும்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம். நற்பண்புள்ள மனைவி
எல்லோருக்கும் வாய்த்திடாது.

நற்குணங்கள் கொண்ட மனைவி
வாய்த்து விட்டால்....
நீங்கள்தான் பேறு பெற்றவராக இருப்பீர்கள்.
உங்கள் வீட்டில் ஒன்றுமில்லை என்ற 
சொல்லுக்கே இடமிருக்காது.
எல்லா வளமும் நிறைந்திருக்கும்.
அன்பு இருக்கும்.
நிம்மதி இருக்கும்.

மாறாக மனைவி நற்பண்பு இல்லாதவளாக
வாய்த்துவிட்டால்.....
என்ன இருந்தாலும் ஒன்றுமில்லை என்ற
நிலைக்குத் தள்ளப்படுவீர்கள்.
அன்பும் நிம்மதியும் காணாமல்
போய்விடும்.
மகிழ்ச்சி முற்றிலுமாகத் தொலைந்து போகும்.

இல்லாள் மாண்புடையவளாக இருந்தால் 
இல்லறத்தில் இல்லாதது என்று 
சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இல்லாள் மாண்பில்லாதவளாக 
இருந்தால் இல்லறத்தில்
உள்ளது என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை
என்கிறார் வள்ளுவர்.

English couplet : 

"There is no lack within the house, where wife in worth excels
There is no luck within the house, where wife is dishonoured
dwells "

Explanation :

If his wife be eminent in virtue what does that man not possess?
If she be without excellence what does he possess ?

Transliteration:

" Illadhen illaval maanpaanaal ulladhen
 Illaval maanaak katai ? "


Comments

Popular Posts