நத்தம்போல் கேடும்....

நத்தம்போல் கேடும் உளதாகும் 



"நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது"
               குறள்: 235



நத்தம் - ஆக்கம்
போல்- போன்ற
தேடும் - அழிவும்
உளதாகும் - உள்ளதாகின்ற
சாக்காடும் - இறப்பும்
வித்தகர்க்கு- ஆற்றல் மிக்கவர்க்கு
அல்லால் -அன்றி
அரிது - கடினமானது



துன்பத்திலும் அவற்றைத் தாங்கி
 தன்னை  வளர்த்துக்
கொள்வதும் சாவிலும் தன் புகழை 
நிலை நாட்டுவதும்
ஆற்றல்மிக்கவர்களால் மட்டுமே
ஆகுமே அன்றி
மற்றவர்க்கு ஆவது கடினம்.


விளக்கம் :

எவ்வளவு துன்பம் வந்தாலும்
துவண்டு போகாதவர்கள் உண்டு.
நாலாபக்கங்களிலிருந்தும் தீமை
செய்பவர் இருந்தாலும் அவை
எல்லாவற்றையும் ஒரு புன்னகையால்
கடந்து செல்லும் மன தைரியம்
ஒரு சிலரிடம் மட்டுமே இருக்கும்.
இந்த மன தைரியமும் புரிதலும்
ஒருவரை அடுத்த நிலைக்கு 
எடுத்துச் செல்லும்.


வாழும்போது கேடு வந்தபோதிலும்
தமது உழைப்பால் புகழ் ஈட்டி
இறந்தபோதும் இறவாப் புகழ்
எய்தும்  திறன் அறிவுடையவர்கு
மட்டுமே வாய்க்கும். மற்றவர்க்கு
வாய்த்தல் அரிதினும் அரிது.

புகழ் எளிதில் ஈட்டிவிட முடியுமா?
புகழெனின் உயிரையும் கொடுக்கும்
ஆற்றல்மிக்கவராமல் மட்டுமே புகழ்பெற
முடியும். கேடுற்ற காலத்தும் தம்
நற்செயல்களை விட்டுவிடா பண்பு
பேராற்றல் மிக்கவர்களுக்கு 
மட்டுமே உண்டு.

இதைத்தான் வள்ளுவர்,
"ஆக்கத்திற்கான கேடுற்றலும்
புகழுக்காக சாதலும் பேராற்றல்
படைத்தவர்களுக்கு மட்டுமே இயலும்.
மற்றவர்களுக்கு இது இயலாத
ஒன்று" என்கிறார்


English couplet:

Oss that is gain and death of life's true bliss fulfilled
Are fruits which only wisdom rare can yield"



Explanation :

Prosperity to the body of fame, resulting in poverty
to the body of fresh and stability to the form artising
from the death' of the latter are achievable
only by the wise.


Transliteration:

"Naththampol ketum Uladhaakum saakkaatum
Viththakark kallaal aAridhu"

Comments

Popular Posts