தேறான்தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்....

தேறான்தெளிவும் தெளிந்தான்கண்....


"தேறான்தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் "


                                   குறள் : 510

தேறான் - ஆராயாது
தெளிவும் - தேர்வு செய்தலும்
தெளிந்தான்கண் - ஆராய்ந்து தேர்வு செய்தவன் மாட்டு
ஐயுறவும் -  ஐயப்படுதலும்
தீராத - நீங்காத
இடும்பை - துன்பம்
தரும் - கொடுக்கும்

ஒருவனை ஆராயாமல் தேர்வு செய்தலும்
ஆராய்ந்து தேர்வு செய்தவன் மாட்டு
ஐயப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

விளக்கம் :

ஒருவனைப் பற்றி நன்கு அறிந்து
கொள்ளாமல் நம்புதல் கூடாது.
ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதை முழுமையாக
தெரியாமல் நம்பி ஒரு செயலைச் செய்யச்
சொல்லுதல் தீமையில்தான் முடியும்.

ஒருவனைப் பணிக்குத் தேர்வு
செய்யும் போதோ அல்லது நண்பனாகத்
தேர்வு செய்யும் போதோ அவனைப்பற்றி
முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் இந்தப் பணிக்குப் 
பொருத்தமானவனா அல்லது நண்பனாகத்
தொடர ஏற்றவனா என்பது புரியும்.

நன்கு ஆராய்ந்து அதன் பின்னரே 
சேர்த்துக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா 
என முடிவு செய்ய வேண்டும்.

ஒருமுறை நல்லவன் என முடிவு
செய்து சேர்த்தாகிவிட்டது என்றால்
மறுபடியும் அவன்மீது ஐயுறுதல் கூடாது.

அதாவது தேர்வு செய்யும் முன்னர்
தீர ஆலோசனை செய்க.
ஒருமுறை தேர்வு செய்துவிட்டால்
மறுபடியும் அவனைப்பற்றிக் குறை கூறிக்
கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை
என்பது வள்ளுவர் கருத்து.


English couplet : 

"Trust where you have not tried, doubt of a friend to feel,
Once trusted , wounds inflict that nought can heal "

Explanation : 

To make choice of one who has not been examined, and
to entertain doubts respecting one who has been 
Chosen , will produce irremediable sorrow.


Transliteration :

"Theraan Thelivum Thelindhaankan Aiyuravum
Theeraa Itumpai Tharum"

Comments

Post a Comment

Popular Posts