தீயவை தீய பயத்தலால்....

  தீயவை தீய பயத்தலால்....

"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் "
                             குறள்  :  202

தீயவை- தீயச் செயல்கள்
தீய _  துன்பங்கள்
 பயத்தலால் _ தருவனவாக இருத்தலால்
தீயவை _ தீயச் செயல்கள்
 தீயினும் _  நெருப்பை விடவும்
 அஞ்சப்படும் _ அச்சம் தருவதாகும்


தீயச் செயல்கள் துன்பங்களை  மட்டுமே தருவதால்
அத்தீயச் செயல்களானது நெருப்பைவிடவும்
மிகவும் அச்சம் தருவதாகும்.

விளக்கம் : 

தீயானது தொட்டவரைச் சுட்டுவிடும்.
தான் இருக்கும் இடத்தில் அதனுடைய வெப்பத் தாக்கம்
அதிகமாக இருக்கும்.
எந்த நேரத்தில் தீ ஏற்பட்டதோ அந்த 
நேரத்தில் மட்டுமே தீயால் ஏற்படும் பாதிப்பு
இருக்கும். நேற்று ஏற்பட்டது என்றால்
நேற்றோடு அதன் கதை முடிந்தது.

ஆனால் தீயச் செயல்கள் அப்படிப்பட்டவை அல்ல.
காலத்திற்கும் ஒருவருடைய மனதில்
காயத்தை ஏற்படுத்திவிடும்.
அருகில் இருந்தால் மட்டுமே தீயச் செயல்கள்
நம்மை வந்து சேரும் என்பதல்ல.
ஒருவன் செய்யும் தீய செயல் 
எவ்வளவு தொலைதூரத்தில் இருந்தாலும்
நம்மை வந்து தாக்கும்.
அதனால்தான் தீயச்செயல்கள்
தீயைவிட அஞ்சத்தக்கது என்கிறார் வள்ளுவர்.

தீயச்செயல்கள் தன்னையும் அழித்து 
பிறரையும் அழித்துவிடும்.
தீயச்செயல்கள் என்றாலே அதில் நன்மை
கிடையவே கிடையாது.
ஆனால் தீயினால் நன்மையும் உண்டு.
இப்படி எல்லா கோணங்களிலும் பார்க்கும்போது
தீயவை தீயினும் கொடிது ஆகும்.

English couplet : 

"Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe"


Explanation : 

Because evil produces evil , therefore should evil be
feared more than fire.

Transliteration: 

"Theeyavai theeya payaththalaal theeyavai
Theeyinum anjap patum "




Comments

Popular Posts