தெய்வத்தான் ஆகா தெனினும்....


  தெய்வத்தான் ஆகா தெனினும்...


"தெய்வத்தான் ஆகா  தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் "
                              குறள்  : 619
                             

தெய்வத்தான் _  கடவுளால்
ஆகாது _ ஆக முடியாது
எனினும் _ என்றாலும்
முயற்சி _  முயற்சி செய்தால்
தன் _ தனது
மெய் _ உடம்பு
வருத்த _  வருந்தி உழைத்த
கூலி _ சம்பளம், பலன்
தரும்_ கொடுக்கும்

ஒரு செயல் ஊழ்வினை காரணமாக
முடியாமல் போனாலும் விடாமுயற்சியோடு
உடம்பு வருத்தி உழைத்த உழைப்பிற்கான பலன்
கிடைக்காமல் போகாது.

விளக்கம் :

விதியின் காரணமாக சில நேரங்களில்
கிடைக்க வேண்டிய நற்பலன்கள் கிடைக்காமல்
தடைபடலாம்.
அதற்காக முயற்சி செய்வதை விட்டுவிடக்கூடாது.
உடல் வருந்த உழைப்பவனுக்கு அதனால்
கிடைக்க வேண்டிய பலன் கிடைத்தே தீரும்.
ஐயோ...என்னதான் செய்தாலும் ஒரு நன்மையும்
கிடைக்கமாட்டேங்குதே என்று மனம்
நொடிந்துவிடவேண்டாம்.
கடவுள்கூட எனக்கு உதவவில்லையே எனப்
புலம்ப வேண்டாம்.
உங்கள் உழைப்பிற்கான ஊதியம் கண்டிப்பாக
உங்களுக்கு வழங்கப்படும்.
இதில் எந்த ஐயமும் வேண்டாம்.
தெய்வத்தின்துணை இல்லாமல் போனாலும்
உங்கள் உழைப்பு உங்களுக்கு கை கொடுக்கும்.

உடலால் உழைத்த உழைப்பிற்கு மட்டும்தான்
கூலி கிடைக்குமா..என்ற ஐயம் வேண்டாம்.
முயற்சி செய்து செய்யப்படும் எந்த
வேலைக்கும் உரிய கூலி உண்டு என்கிறார்
வள்ளுவர்.

English couplet :

"Though fate_ devine should make your labour vain;
Effort its labour's sure reward will gain"

Explanation :

Although it be said that, , through fate, it cannot be attained
yet labour, with bodily exertion, will yield its reward.

Transliteration :

"Theyvaththaan Aakaa theninum muyarsithan
Meyvaruththak kooli tharum "






Comments

Popular Posts