அரம் போலும் கூர்மையரேனும்...

அரம்போலும் கூர்மைய ரேனும்....



"அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட் பண்பில்லா தவர்  "

                          குறள்.  :  997

அரம் _ ஒரு ஆயுதம்
போலும் _ போன்ற
கூர்மையரேனும் _கூர்மையுடைய அறிவுள்ளவராயினும்
மரம் _  ஓரறிவுள்ள மரம்
போல்வர் _  போன்றவர்
மக்கட் பண்பு _ மனிதப் பண்பாடு
இல்லாதவர் _  இல்லாமல் இருப்பவர்


அரம் போன்று கூர்மையான அறிவுடையவராக
இருப்பினும் அவரிடத்து மனிதப்பண்பு 
இல்லாதிருந்தால் அவர் மரத்திற்கு 
ஒப்பாகவே கருதப்படுவார்.

விளக்கம் :

 அறிவுடையவராக இருந்தால்
அவரிடம் கண்டிப்பாக மனித ஒழுக்கமான
 பண்பாடு இருத்தல் வேண்டும்.
பண்பாடு இல்லை என்றால் எந்த
அறிவு பெற்றிருந்தாலும் அதனால்
பயனில்லை.
அவனுடைய அறிவு அழிவை நோக்கியதாகவே 
இருக்கும். அறிவு ஆக்கத்தற்கு வழி 
வகுப்பதாக இருக்க வேண்டும்.

நல்ல சமுதாயம் அமைய பண்பாடுள்ள 
நல்ல மனிதர்கள் வேண்டும்.
கூர்மையான அறிவு சமூகத்தைக்
கூர்தீட்டி விடாது.

அறிவு என்பது சமூக வளர்ச்சி 
சார்ந்ததாக இருக்க வேண்டும்.
பண்பில்லா அறிவால் யாருக்கும்
பயன் இருக்கப் போவதில்லை.


English couplet. :

"Though sharp their wit file ,as blocks they must remain,
Whose souls are void of 'courtesy humane "

Explanation : 

"  He who is destitute of true human qualities
   only resembles a tree
  though he may possess the sharpness of a file."

Transliteration : 

"arampolum koormaiya Renum marampolvar
makkatpanpu illa thavar "

Comments

Popular Posts