கற்றதனால் ஆய பயனென்கொல்....

        கற்றதனால் ஆய பயனென்கொல்.....


"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் "

                              குறள் : 2

கற்றதனால் - கல்வி பெற்றதனால்
ஆய - ஆகிய
பயன் - நன்மை
என்கொல் - என்னவோ
வாலறிவன் - தூய அறிவுடையவன்
நற்றாள் - நல்ல அடி, நற்பாதம்
தொழாஅர் - தொழாதிருந்தார்
எனின் - என்றால்

தூய அறிவு வடிவாக விளங்கும்
இறைவன் திருவடிகளை வணங்காது
இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால்
ஆகக்கூடிய பயன் என்ன
இருக்கப் போகிறது?

விளக்கம் : 

ஒருவன் எவ்வளவுதான் கல்வி அறிவில்
சிறந்து விளங்கினாலும் அவனிடம்
இறை நம்பிக்கை இல்லை என்றால்
கற்ற கல்வியால் ஒரு பயனும் 
இருக்கப் போவதில்லை.

வாலறிவு என்பது முழுமையான
அறிவு.
முழுமையான அறிவுடையவன் என்பவன்
யார் ? 
இறைவன் ஒருவனாக மட்டுமே இருக்க
முடியும்.
எவ்வளவு கல்வி கற்றிருந்தாலும்
நாம் கற்ற கல்விக்கு மேலான அறிவுடைய
ஒருமெய்ப் பொருள் உண்டு.
அந்த மெய்ப்பொருளைப்  பற்றிய
தேடல் நமக்குள் இருந்து கொண்டே 
இருக்க வேண்டும்.

கல்வியும் அறிவும் கடவுள்
அறிவை நோக்கியதாக 
மட்டுமே இருக்க வேண்டும்.

இறைவன் அருள் இல்லாமல் 
கற்றல் இயலாது. கற்றதைப் பற்றி
தெளிவாக அறிந்து கொள்ள முடியாது.
அதனால்தான்  முதலாவது இறைவன்
தாளடியைத் தொழுதுவிட்டு
மேற்கொண்டு உங்கள் அறிவு
தேடல் இருக்கட்டும் என்கிறார்
வள்ளுவர்.
அப்படி படித்தால்தான் கற்ற
கல்வியின் பயனை உங்களால்
முழுமையாக
பெற்றுக்கொள்ள முடியும்
என்பது வள்ளுவர் கருத்து.

English couplet : 

"No fruit have men of all their studied lore,
Save they the Purely Wise Ones'. feet adore."

Explanation : 

What profit have those derived from learning
Who worship not the good feet of Him who
is possessed of pure knowledge?

Transliteration :

"Katradhanaal Aaya payanenkol vaalarivan
Natraal thozhaaar Enin "







Comments

Popular Posts