பாவ் பீச் விழா

                    பாவ் பீச் விழா
பாவ் பீச் என்பது மராட்டியம் முதலான
வடஇந்திய மாநிலங்களில் வெகு விமர்சையாகக்
கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும்.
தீபாவளி நாளின் ஐந்தாம் நாள் கொண்டாட்டமாக
பாவ் பீச் விழா நடைபெறுகிறது.

நரகாசுரன் என்று ஒரு அரக்கன்
இருந்தான்.
அவன் இந்திரலோகத்து மன்னன்
இந்திரனை வென்று சொர்க்கபுரியைக் கைப்பற்றி
கொண்டான்.
அது மட்டுமல்லாமல் அங்கிருந்த பதினாராயிரம்
பெண்களையும் சிறைப்பிடித்துச் சென்றான்.

தேவேந்திரன் தாயானான அதிதி அணிந்திருந்த
மந்திரக் கம்மலையும் எடுத்துச் சென்றுவிட்டான்.

இப்போது தேவர்கள் அனைவரும்
தங்களை காக்கும்படி மகா விஷ்ணுவிடம்
ஓடிச் சென்று தஞ்சம் அடைகின்றனர்.

இந்த நரகாசுரனின்  ஆணவத்தை அடக்கி எம்மையும்
மக்களையும் காக்க வேண்டும் என்று 
மன்றாடி கேட்டுக் கொள்கின்றனர்.

தேவர்களையும் மக்களையும் காப்பதற்காக
விஷ்ணு  பகவான் நரகாசுரனை அழிக்கிறார்.
பெண்களையும் தாய் அதிதியின்
மந்திரக் கம்மலையும் மீட்டு வருகிறார்.

நரகாசரன் அழிந்த மகிழ்ச்சியைத்தான்
தீபாவளியாகக் கொண்டாடி வருவது
யாவரும் அறிந்த ஒன்று.

நரகாசுரனை  கொன்று பெண்களை 
மீட்டு வந்த மகிழ்ச்சியில் விஷ்ணு பகவானான
கிருஷ்ணர் இருக்கிறார்.
இப்போது அந்த நல்ல செய்தியைத்  தன்
தங்கை சுபத்திராவிடம் சொல்லி மகிழ
வேண்டும் என்று  நினைக்கிறார்.

சகோதரி வீட்டிற்குப் போகும்போது
வெறுங்கையோடு போக முடியுமா ...
கையில் ஏதாவது கொண்டு செல்ல 
வேண்டுமல்லவா! 

அதனால்  கையில் தங்கையை 
மகிழ்ச்சிப்படுத்த பொருட்களைக்
கொண்டு செல்கிறார்.

தன் சகோதரனைக் கண்ட 
சுபத்திரா வெற்றித் திலகமிட்டு
வரவேற்று தனது மகிழ்ச்சியைப்
பகிர்ந்து கொள்கிறார்.
அந்த நாளைத்தான் வட இந்தியர்கள்
பாவ் பீச் என்ற விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

 ஐந்தாவதுநாள் தீபாவளி தன் சகோதரிகளோடு
 கொண்டாடப்படுகிறது.
 இன்றும் குடும்பம் குடும்பமாக 
 தன் சகோதரிகள் வீட்டிற்கு கையில்
 தம்மால் இயன்ற பரிசுப் பொருட்களைக்
 கொண்டு செல்வதை நம்மால் 
 காண முடியும்.
 
 பாவ்பீச் கொண்டாட எங்கள் அத்தை வீட்டிற்குப்
 போவோமே ...என்று சிறுவர்கள் சொல்லி
 மகிழ்வதைக் கேட்டிருக்கிறேன்.

நரகாசுரனைக் கொன்ற வெற்றியைக்
கொண்டாடும் நாளாக இருந்தாலும்
தன் உறவுகளோடு தீபாவளி பண்டிகையை 
கொண்டாடி முடிக்கும் பாவ்பீச் கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகையின் சிறப்பான
ஒரு நாளாகக் கருதப்படுகிறது.

உடன் பிறந்த சகோதரிகளோடு 
மகிழ்ந்து கொண்டாடும்
பாவ்பீச் கொண்டாட்டத்தை வட இந்தியர்கள்
மட்டுமல்ல அனைவரும் கொண்டாடலாமே!

Comments

  1. அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய அருமையான பதிவு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts