நாற்கவி என்றால் என்ன
நாற்கவி என்றால் என்ன
பாடல்கள் எழுதும் புலமையிலுள்ள திறன் வேறுபாடுகளை வைத்து கவி நான்கு வகையாக அடையாளப்படுத்தப்படுகிறது.
1.ஆசுகவி
2.மதுரகவி
3.சித்திரகவி
4.வித்தாரகவி
இவை நான்கும் நாற்கவிகள் என அழைக்கப்படுவனவாகும்.
ஆசுகவி :
உடனடியாகக் கவிதை பாடும் திறனுடையவர்கள் ஆசுகவி என்று அழைக்கப்படுகின்றனர்.
ஒருவர் சொல்லும் எழுத்தையோ
சொல்லையோ கருத்தையோ
கேட்டவுடனே கவிதையாகப் பாடும் ஆற்றல் கொண்டவர் ஆசுகவி.
கவி காளமேகம்
மதுரகவி :
காதுக்கு இன்பம் தரும் இனிமையான கவிதைகளைப் பாடுபவர்கள்
மதுரகவி எனப்படுவர்.
மதுரகவி ஆழ்வார்
சித்திரகவி :
ஓவியங்களின் வடிவங்களுக்கு ஏற்ப கவிதை எழுதுபவர்கள் சித்திரக் கவியாக
அடையாளப்படுத்தப்படுவர்.
திருமங்கையாழ்வார்
அருணகிரி நாதர்
பாம்பன் சுவாமிகள்
வித்தாரகவி:
வக்கணையாகப் பேசும் கவிதை நடையில் நூல் செய்யும் புலமை உடையவர்கள்
வித்தாரகவி எனப்படுவர்.
நாற்கவிராச நம்பி
Comments
Post a Comment