வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம்

வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் 

தமிழ் எழுத்துகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் 

ஒவ்வொரு மாறுதலைச் சந்தித்து

இன்றைய எழுத்து வடிவத்தைப் பெற்றுள்ளது.


எழுத்து அப்படியே இருந்தால் என்ன?

அதனை மாறுதலுக்கு உட்படுத்த 

வேண்டிய அவசியம் என்ன?

அதனால் என்ன பயன் நடந்துவிடப்

போகிறது ?

என்று கேட்பவர்களும் உண்டு.


ஒரு எழுத்துக்கும் இன்னொரு

சொல்லுக்குமிடையே உள்ள வேறுபாடு

எளிதில் புலப்படாமை காரணமாக பொருள்

மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.

இதைத் தவிர்ப்பதற்காகவும்

எழுத்து எளிமையாக இருந்தால்தான் 

அனைவரும்

எளிதாக படிக்க முடியும் என்ற 

கருத்திற்காகவும் இத்தகைய மாற்றங்கள்

தமிழ் அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்டன.

இத்தகைய மாற்றங்கள் ஒரே நேரத்தில்

நிகழ்ந்தனவா  என்றால் இல்லை என்பதுதான்

பதிலாக இருக்கும்.


காலத்திற்கு ஏற்ப அவ்வப்போது

சிறுசிறு மாற்றங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.

பெரியார் செய்த எழுத்துச்

சீர்திருத்தம் அனைவருக்கும்

தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

ஆனால் வீரமாமுனிவர் செய்த எழுத்துச்

சீர்திருத்தம் அனைவராலும் அறியப்படாமலேயே 

இருந்திருக்கிறது.

 வீரமாமுனிவர் எழுத்து சீர்திருத்தம்

செய்தாரா? என்ற கேள்வி கேட்கும்

நிலையில்தான் பலர் உள்ளனர்.


அவர் தேம்பாவணி,கித்தேரி அம்மாள்

அம்மானை,திருக்காவலூர்க் கலம்பகம் 

போன்ற  நூல்கள்

 எழுதியதாக படித்திருக்கிறேன்.

இது என்ன புதுக் கதையாக இருக்கிறது

என்று வியந்து நிற்போர் இருக்கலாம்.


புதுக்கதை இல்லை.

பழைய கதைதான்.

பள்ளியில் பாடமாக வைத்திருந்தால்

நாம் அறிந்திருக்கலாம்.


வீரமாமுனிவர் இத்தாலி நாட்டைச் சார்ந்தவர்.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வேண்டும்

என்ற நோக்கத்திற்காக இந்தியாவிற்கு

வந்தார்.

தமிழகத்தில் வாழும் வாய்ப்பு

கிடைத்தது.

இங்கிருந்து கிறிஸ்தவ அருட்பணி

செய்து வந்தார்.

இப்போது தமிழ் மக்களோடு கருத்துப்

பரிமாற்றம் செய்ய வேண்டுமானால்

தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

அதனால் தமிழைப் படிக்க

ஆரம்பித்தார்.

தமிழ் மீது இருந்த ஆர்வம் வெறுமனே

படிப்பதோடு நிறுத்தி வைக்கவில்லை.


தமிழ் இலக்கியங்களைப் படித்தார்.

நாமும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

அதற்கு இலக்கணம் நடையாக இருக்கக்கூடாது

என்பதற்காக தமிழ் இலக்கணமும்

நன்கு கற்றறிந்தார்.

அவர் தமிழ்மீது வைத்திருந்த அவரது

தணியாக் காதல் அவரை தமிழ்மொழியில்

உள்ள அனைத்து இலக்கியங்களையும்

கற்க வேண்டும்

என்ற ஆர்வத்தைத் தூண்டியது. 


பின்னர் தேம்பாவணி என்ற காப்பியத்தை

எழுதும் அளவு புலமையைக் கொடுத்தது.



இத்தாலிக்காரர்  எப்படி

வீரமாமுனிவர் ஆனார் என்று 

அறிய வேண்டும் என்ற

ஆவல் இருக்கிறதல்லவா?



இவருடைய  இயற்பெயர்

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி

 என்பதுதான். அவர்  முதலாவது தனது

 பெயரை தைரியநாத  சாமி

 என்று மாற்றினார்.

 அது கூடத் தமிழ்ப் பெயராக இல்லை

 என்ற எண்ணம் அவருக்குள் ஏற்பட்டது.


பின்னர்  தமிழ்மீது கொண்ட காதலால்

 தன் பெயரை வீரமாமுனிவர் என்று 

 மாற்றிக்கொண்டார்.


பிறமொழி மக்கள் தமிழை 

படிக்க வேண்டும் என்றால் அது

எளிமையாக இருக்க வேண்டும்.

அதனால் படிப்பதற்கு சிக்கலை

ஏற்படுத்திய சில எழுத்துகளை மாற்றினால்

எளிதில் படிக்கலாம் என்று நினைத்தார்.

பொருள் வேறுபாடு எளிதில்

கண்டறிய உதவியாக இருக்கவேண்டும்

என்ற நோக்கில் எழுதப்பட்டதுதான்

வீரமாமுனிவர் எழுத்துச் சீர்திருத்தம்.


வீரமாமுனிவர் காலத்திற்கு முன்பு

'ர ' என்ற எழுத்து  பாதம் வைக்கப்படாமல்

எழுதப்பட்டு வந்திருக்கிறது.


பாதம் வைக்காமல் எழுதப்பட்டால் அது

துணை எழுத்தாகுமே.

இதே குழப்பம் வீரமாமுனிவருக்கு

இருந்திருக்கிறது.



இப்போது கரவை என்று எழுத வேண்டும் 

என்று வைத்துக் கொள்ளுங்கள்.

காவை  என்றுதான் எழுத வேண்டும். 


இதனால் பொருள் மாறுபடுகிறதல்லவா?

கண்டிப்பாக இப்படி எழுதுவது

குழப்பத்தை ஏற்படுத்தும்.

காவை மாடுகள் என்று

எழுதியிந்தால்

கரவை மாடுகள்

என்று பொருள் கொள்ளப்படுமாம்.

அது எப்படி?

வியப்பாக இருக்கிறது இல்லையா?

 அடுத்து வரும்

சொற்களை வைத்தும் முழு சொற்றொடரையும்

வைத்தும் பொருள் அறியப்பட வேண்டுமாம்.


அது எப்படி முடியும்?

எல்லாராலும் முடியுமா என்ற 

கேள்வி இடையில் கட்டையைப்

போட்டு நிற்கிறதல்லவா?


இப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்படாவண்ணம்

தவிர்ப்பதற்காக வீரமாமுனிவர்

'ர 'கரம் என்று பாதம் வைத்து எழுதும்

முறையைக் கொண்டுவந்தார்.



இப்போது காவை என்று 

எழுதாமல் கரவை

என்று எழுதி பொருளைப் புரிய

வைக்க முடிந்தது.


இப்படியாக' ர' என்ற

எழுத்து வீரமாமுனிவரால் உருவாக்கப்பட்டது.

இது மட்டும்தானா வேறு ஏதாவது 

எழுத்து வீரமாமுனிவர் உருவாக்கியிருக்கிறாரா?


வீரமா முனிவர் காலத்திற்கு முன்பாக

எ ,ஏ

என்றும்

ஒ ,ஓ என்றும் எழுதப்படவில்லையாம்


அப்புறம் குறில் நெடில் வேறுபாடு

எப்படி அறிவது?


எ எழுத்துக்கு மேலே

ஒரு புள்ளி வைத்தால் ஏ என்ற நெடில்

எழுத்து என்று அறிந்துகொள்ள

வேண்டுமாம்.


அதுபோல ஒ என்ற எழுத்துக்கு

மேல் புள்ளி  வைத்தால் ஓ என்ற 

நெடிலெழுத்தாகிவிடும் இல்லையா?



எ என்ற எழுத்துக்குப் பாதம் வைத்து

ஏ என்ற எழுத்தாக மாற்றி எழுதினார்

வீரமாமுனிவர்.


ஒ என்ற எழுத்தின் அடியில்

ஒரு சுழி போட்டு எழுதினால்

ஓ என்று நெடில் எழுத்தாகிவிடும்

என்றார் வீரமாமுனிவர்.


இப்படியாக  

எ,ஏ 

ஒ,ஓ 

வேறுபாடு வீரமாமுனிவரால்தான்

அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


கெட்டவனுக்கும்

கேடு செய்வோனுக்கும்

வேறுபாடு தெரிய வேண்டுமல்லவா?


கெ என்ற உயிர்மெய்க் குறில்

எழுத்துக்கும் கே என்ற உயிர்மெய்

நெடில் எழுத்துக்குமான வேறுபாட்டினை

அறிய வைக்க

இரட்டைச் சுழியை அறிமுகப்படுத்தினார்

வீரமாமுனிவர்.



கெ...கே

பெ....பே



இதனைப் போன்றே


கொடு

கோடு 

வேறுபாடு தெரிய வேண்டாமா?



கொ.....கோ

என்று எழுத வைத்தார்.


வீரமாமுனிவர் காலத்திற்கு முன்னால்

நெடிலை வேறுபடுத்திக் காட்டுவதற்காக

குறில் எழுத்தின் மேலே ஒரு புள்ளி

வைத்துவிடுவார்களாம்.

ஓலைச்சுவடியில் எழுதிய காலம் ஆதலால்

அது தெளிவாகத் தெரியாததால் பொருள்

அறிந்து கொள்வதில் சிரமம்

இருந்தது.


அதனை மாற்றிய பெருமை வீரமாமுனிவருக்கு

உண்டு!


 நெடில் வேறுபாடு

அறிய இடப்பட்டு வந்த புள்ளியை மாற்றி

தற்போதுள்ள எழுத்து வடிவைத் தந்ததால்

இதனை வீரமாமுனிவரின் எழுத்துச் சீர்திருத்தம் என்கிறோம்.







Comments