கர்வம் தொலைக்க வைத்த காளை


கர்வம் தொலைக்க வைத்த காளை


இந்த உலகில் தோல்வியைத் தழுவாதவர்

எவரும் இருக்க முடியாது.

வெற்றி பெற்றவர்களின் வரலாற்றினைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.


தோல்வியடைந்து விட்டோமே என்று

விரக்தியில் முட்டைக் கட்டிக்கொண்டு

முடங்கிக் கிடந்தால் சமூகம் நம்மைத் திரும்பிப் பார்க்காது எங்கேயோ ஓடிவிடும்.


மறுபடி ஓடு

மறுபடி தேடு

என்ற ஓயா ஓட்டமும் 

தேடலும் சிகரத்தில் கொண்டு நிறுத்தி

அழகு பார்க்கும்.


இது படைப்பாளிக்கு உரிய பண்பு.


ஆனால் எந்தவொரு மனிதனும்

இன்னொரு மனிதனிடம் தோற்றுப்போக

விரும்புவதில்லை.

அப்படித் தோன்றும்போவது தன்

தன்மானத்திற்கு இழுக்கு என்று நினைப்பர்.

அதுவும் தன்னைவிட வயதில் அந்தஸ்த்தில்

பொருளாதாரத்தில் அறிவில் குறைந்தவர்களிடம் தோற்றுப் போவதற்கு மனம் எந்த இடத்திலும் இடம் கொடுக்காது.


நான்காவது இவனிடம் தோற்றுப் போவதாவது.. ஒரு அகந்தை தான் என்ற ஆணவம் இந்த இடத்தில்தான் வந்து தலை தூக்கி நிற்கும்.


அழிவுக்கு முன்னானது அகந்தை.

அகந்தையில் வாழ்ந்தவர் ஒருவர்கூட இருக்கமுடியாது.ஆனால் வீழ்ந்தவர்கள் ஓராயிரம் பேரை நம்மால் அடையாளம் காட்டமுடியும்.

சாதாரண மனிதர் முதல் பெரிய அறிஞர்கள் வரை அனைவரையும் சீண்டிப் பார்த்திருக்கின்றது அகந்தை. ஔவையாரையும் விடவைக்கவில்லை.

அதனால் இந்த அகந்தையை அழிக்க

மாடு மேய்க்கும்  சிறுவன் உருவில் ஒருவன்

வந்துவிட்டான்.


இதுவரை தான் மட்டுமே அறிவாளி என நினைத்திருந்த ஔவையைச்

சுட்டுப் பழம் வேண்டுமா சுடாதப்பழம் வேண்டுமா என்று கேட்டு ஒரு நிமிடம் திக்குமுக்காட வைத்துவிட்டான்.

 சுட்டதும் சுடாததும் எது எனத் தெரியாமல்

திணர வைத்து விட்டான்.

சொற்களால் கம்பரையே மடக்கிய கூனக்கிழவியை ஒரு சிறுவன் சொல்லால் 

திருப்பியடித்து விட்டான்.


இனி ஔவைக்கு எப்படித் தூக்கம் வரும்.?

என் தூக்கம் தொலைந்தது என்று ஔவையைப்  புலம்ப வைத்துவிட்டான்

பாடல் உங்களுக்காக...


"கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி

சிறுகதலித் தண்டுக்கு நாணும் - பெருங்கானில்

காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது

ஈரிரவும் தூங்காது என் கண்"

       ,-   ‌ஔவை-தனிப்பாடல் 

"பெரிய பெரிய கருங்காலி மரங்களையெல்லாம் வெட்டித் தள்ளிய உறுதியான  இரும்புக் கோடாரி, இளங் கதலித் தண்டை வெட்டும்போது வளைந்து விடுவதுபோல இந்தப் பெருங்காட்டில் மாடு மேய்க்கின்ற இந்தச் சிறுவனிடத்தில் நான் தோற்றுவிட்டேன். இன்னும் இரண்டு நாட்களுக்கு எனக்குத் தூக்கமே வராது" என்று புலம்புகின்றார் ஔவையார்.

கதலி என்பது வாழையின் ஒரு வகை

மரத்தையெல்லாம் வெட்டித் தள்ளிய கோடாலி மிருதுவான வாழைத்தண்டை வெட்ட முடியாமல் வளைந்து போவது போன்ற நிலைமை இன்று என்னுடையது.
சொல்லால் உள்ளங்களை கண்டேன்.
சிறுவனின் சொல்லால் கர்வம் தொலைத்தேன் என்று
ஔவையே தன் தோல்வியை ஒப்புக் கொள்கிறார்.
ஔவையின் கர்வம் தொலைந்தது.

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்பார்கள். 

 எவ்வளவு உயர்ந்தாலும் உன்னைவிட உயரத்தில் ஒருவன் வந்து நிற்பான்.

அடக்கமாக இரு. இல்லையென்றால் அவமானப்பட்டுப் போவாய்.

அதனால்தான் கண்ணதாசன்
ஆறூமனமே ஆறு
ஆண்டவன் கட்டளை ஆறு என்ற பாடலில்,
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு

என்று நமக்குப் பாடம் எடுத்திருப்பார். 


"...காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது

ஈரிரவும் தூங்காது என் கண்"

ஔவையின் கர்வம் தொலைத்த வரிகள்.

Comments