விளாம்பழங்கள் எத்தனை
விளாம்பழங்கள் எத்தனை?
ஒரு பழக்கடைக்காரர் விளாம்பழங்களை விற்று வந்தார். ஒருநாள் சிலர்
அவர் கடையிலிருந்த பழங்களைத் திருடிக் சென்று விட்டனர். கடைக்காரருக்கு
என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அக்கம்பக்கத்தில் விசாரித்துக் பார்த்தார். திருடனைப் கண்டுபிடிக்க முடியவில்லை.
அரசனிடம் போய் முறையிட்டால் திருடு போன பழங்களுக்கு இழப்பீடாக பணம் தருவார் என்று நம்பினார்.
நேரே அரசரிடம்
சென்று ,அரசே! என் கடையிலிருந்த விளாம்பழங்களை யாரோ திருடிக் சென்றுவிட்டனர்.
நான் பழங்களை விற்றுதான் பிழைப்பு நடத்தி வருகிறேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கைகளைப் பிசைந்து
கொண்டு நின்றார்.
"எத்தனை பழங்கள் திருடு
போயிருக்கின்றன?" என்று கேட்டார்
அரசர்.
வியாபாரி திருதிருவென்று விழித்தார்.
"சரி அதை விடு. திருடு நிகழ்ந்த நேரத்தில் கடையில் எத்தனை
பழங்கள் இருந்தன?" என்று கேட்டார்.
கடைக்காரர் " எத்தனை பழங்கள் இருந்தன
என்று நினைவில் இல்லை. "என்றார்.
"திருடு போன பழங்கள் எத்தனை என்று தெரியாமல் எப்படி புகார் கொடுக்க வநாதிருக்கிறீர் "
கோபப்பட்டார் மன்னர்.
"மன்னா!
எனக்கு இப்போது நினைவு வருகிறது.என்னிடம் கைவசம் இருந்த பழங்களை இரண்டிரண்டாகப்
பிரித்தால் 1 பழம் மிஞ்சும்; "
அப்புறம்?
மூன்று மூன்றாகப் பிரித்தால் 2 பழங்கள் மிஞ்சும்;
'நான்கு நான்காகப் பிரித்தால்?"
"நான்கு
நான்காகப் பிரித்தால் 3 பழங்கள் மிஞ்சும்; "
"அப்புறம் ஐந்து ஐந்தாம் பிரித்தால் நான்கு பழங்கள் மிஞ்சுமோ?"
"சரியாகச் சொன்னீர்கள்.
ஐந்து ஐந்தாகப் பிரித்தால் 4 பழங்கள்
மிஞ்சும்; "
"முடிந்ததா...இல்லை இன்னும் இருக்கிறதா?"
"இருக்கிறது மன்னா...
ஆறு ஆறாகப் பிரித்தால் 5 பழங்கள் மிஞ்சும்;
ஏழு ஏழாகப் பிரித்தால் எதுவும்
மிஞ்சாது." என்று மொத்தமாக ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் கடைக்காரர்.
இது என்ன புதிய கதையாக இருக்கிறது.
விளாம்பழ வியாபாரி புதிர் போடுகிறாரே...
தெரியாது என்று சொல்லிவிட்டால்...
ம்ஹூம் கூடாது.
அப்படி சொல்லிவிட்டால் மன்னன் மதியற்றவன் என்று நினைத்து விடுவார்கள்.
என்ன செய்யலாம்....என்ன செய்யலாம் சிறிது நேரம் யோசித்தார்.
எந்த வழியும் புலப்படவில்லை.
மெதுவாக அமைச்சரை தனியாக அழைத்துப்
பேசினார்.
"மன்னா! சற்று பொறுங்கள் நானும் அதைப்பற்றி தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
சற்று என்னை தனிமையில் இருக்க விடுங்கள்.
ஒரு பத்து நிமிடத்தில் விடையளித்துவிடுகிறேன்" என்றார்
அமைச்சர்
மன்னர் பத்து நிமிடம் காத்திருந்தார்.
அமைச்சர் திரும்பி வந்து
"மன்னா!
திருடு போன நேரத்தில் கடையில் இருந்த பழங்கள்xxx
19 பழங்களைப் பசி கொடுமையால் யாரோ திருடிச் சென்றிருக்கின்றனர்.
பசிக்காகத் திருடியவருக்குத் தண்டனை கொடுப்பது அறமாகாது.
திருடனை மன்னித்து விடலாம்.
இதில் கடைக்காரரின் தவறும் இருக்கிறது. அவரும் கவனமாக இருந்திருக்க
வேண்டும்" என்றார் அமைச்சர்.
அரசர் அப்படியே அமைச்சரை ஏற இறங்க பார்த்தார்.
அரசரின் பார்வையில் "எப்படி
சரியான விடையைக் கண்டுபிடித்தீர் "என்ற கேள்வி இருந்தது.
அமைச்சர் மெதுவாக மன்னனின் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார்.
மன்னன்... சபாஷ் என்றபடி அமைச்சரின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
விளாம்பழ வியாபாரியின் புதிருக்கான விடையை மன்னர் சரியாகச் சொல்ல
இனியாவது கவனமாக இரு
என்று அறிவுரை வழங்கி சென்று வா என்றார் மன்னர்.
வியாபாரி தலையை ஆட்டியபடி
அங்கேயே நின்றிருந்தார்.
மன்னருக்கு வியாபாரி எதற்காக
நிற்கிறார் என்பது புரிந்து போயிற்று.
ஒரு வீரனை அழைத்து "திருடு போன பழத்திற்கு இழப்பீடு வழங்கி அனுப்புங்கள் " என்றார்.
திருடு போன விளாம்பழங்கள் எத்தனை?
மொத்த விளாம்பழங்கள் எத்தனை?
ஏழாம் வாய்பாட்டைச் சொல்லியபடியே
உள்ளே சென்ற வீரர்
சரியாக 19 நாணயத்தை எடுத்து வந்து வியாபாரி கையில் கொடுத்தார்.
அமைச்சர் 119 விளாம்பழங்கள்
இருந்தன என்றாரே... அதெப்படி
கண்டுபிடித்தார்?
நாமும் கண்டுபிடித்துவிட வேண்டும் என்று ஏழாம் வாய்பாட்டை சொல்லிச் சொல்லிப் பார்த்தேன். எதில் நிறுத்துவது?
இரண்டால் வகுத்தால்
ஒன்று மிஞ்ச வேண்டும்
மூன்றாம் வகுத்தால்
இரண்டு மிஞ்ச வேண்டும்.
நான்காம் வகுத்தால் மூன்று
மிஞ்ச வேண்டும்.
ஐந்தாம் வகுத்தால் நான்கு
மிஞ்ச வேண்டும்.
ஆறால் வகுத்தால்
ஐந்து மிஞ்ச வேண்டும்.
ஏழாம் வகுத்தால்
ஒன்றுமே மிஞ்சக்கூடாது.
எப்படி....எப்படி....
முயன்று பார்த்தேன்.
என்னால் முடியவில்லை.
உங்களால் முடியுமா?
கண்டிப்பாக முடியும்
எப்படி விடையைக் கண்டு பிடித்தீர்கள் என்பதை எனக்கு எழுதுங்கள்.
நானும் தெரிந்து கொள்கிறேன்.
(கணக்கதிகாரப் பாடல்)
Comments
Post a Comment