கவிதையாய் அம்மா

கவிதையாய் அம்மா


கன்னிக் குடம் உடைத்து

கன்னியெனைப் பிறக்க வைத்து

 கன்னி முத்தம் 

 கன்னத்தில் தந்து

கன்னித் தமிழ் கற்பித்து

 கன்னிநடை பயிற்றுவித்து

 கன்னித்திங்கள் காட்டி 

  கன்னி மதிழ்சூழ  முகம்

  கன்னிவிடாமல் பாதுகாத்த

  கன்னி இளஞாழலான உன்னை

  கன்னித் தமிழால்

  கன்னி நெக்குருகி 

  எம்மோ எம்மோவென

  யான் அழைத்த நாட்களை

  நினைக்கிறேன்

  கன்னி நித்தம் 

 கண்டாங்கியைக் 

காணாமல தவிக்கிறேன்

கவித்தாரும் கனித்தாரும் கொண்டு

 காத்திருக்கிறேன்

கவிதையாய் வாழ்வது

நீதானே அம்மா!


 இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் 🌹 



         

         

Comments