சிந்தனைத் துளிகள்
சிந்தனைத் துளிகள்
1"நாம் எங்கே நிற்க வேண்டும் என்று நமக்கான இடத்தை நாம்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்."
2"யாருக்காகவும் உன்னை மாற்றிக்
கொள்ளாதே.
மாற்றிக் கொள்ள நினைத்தால்
முடிவில் ஏமாற்றம்தான் நிகழும்."
3"தன்மானம் பாதிக்கப்படும்
இடத்திலிருந்துதான்
எதிர்ப்பு கிளம்பும்."
4"மரியாதை இல்லாத இடத்தில்
மௌனமாய் கடந்துவிடு.
5"உண்மை உன்னை பலவீனப்படுத்தும்
என்பதற்காக உண்மையை எந்த இடத்திலும் தொலைத்துவிடாதே"
6"நேற்றைய எதிரி
நாளைய நண்பன்
என்று நம்பிவிடுவது
முட்டாள்தனம்.
ஒருமுறை எதிரி
எப்போதும் எதிரி."
7கலகக்காரனிடமிருந்து
தள்ளி நிற்கப் பழகு.
கலகம் உன்னை எப்போது வேண்டுமானாலும்
உள்ளே இழுத்துப் போட்டுக்
கொள்ளும்"
8"பொய்யும் புரட்டும்
பொய்யனின் மினுக்கு."
9"தேடாத உறவு
தோண்டாத துறவு போன்றது"
10"பணம் பேசும்.
மௌனம் பேச
வைக்கும்."
11. "அவமானப்பட்டவனுக்கு
அந்த அவமானம்தான்
ஊக்கம் மருந்து.
என்றாவது ஒரு நாள் பலன் தராமல் போகாது."
12 "இல்லாமையைப்
பகிர்ந்து கொள்ளாதே.
இருப்பதைப் பதுக்கி
வைக்காதே."
13 "பணமில்லாதபோது
உறவினர் வீட்டிற்குச் செல்லாதே.
அவமானத்தோடு திரும்ப வேண்டியிருக்கும்"
14 "வறுமையை யாரிடமும்
சொல்லாதே.
அது இடைவெளியை உண்டாக்கும்"
15 "ஆளில்லாத போது
அரவமில்லாமல் பேசு."
16 "வாழ்க்கை ஒரு பந்தயம்
ஜெயிக்கிறவன்
கொண்டாடப்படுவான்..
தோற்றவன்
கழற்றிவிடப்படுவான்."
17 "விழுந்தால் பாடம்.
எழுந்தால் பயிற்சி
விழுந்து எழுந்தால் வெற்றி."
18 "பாடம் கற்றவர்களால்
மட்டுமே வெற்றிப்பற்றி
யோசிக்க முடியும்."
19 "தோல்வியைத் தழுவாத
வெற்றி
தொடர் வெற்றியைத்
தந்துவிடாது"
20 "பாரம் என்று நினைத்தால்
சிறகுகூட விரியாது.
தூரம் என்று நினைத்தால்
மரக்கிளை கூட வானமாகத்தான்
தெரியும்."
21 "உனக்காக அனைத்தையும்
இழந்த அப்பா
உன் வலியில் உன்னோடு
நின்ற அம்மா
இருவரையும்
இதயத்தில் வை."
22 "கோபம் அளவாக
இருந்தால் சுவை.
அன்பு அளவாக இருந்தால்
அருஞ்சுவை"
23. "நின்ற இடத்தில் நிமிர்ந்து
பார்ப்பது அழகு.பிறரை
நிமிர்ந்து பார்க்க வைப்பது
பேரழகு"
24 "வாழ்க்கை ஒரு வெற்றுக் காகிதம்.
அதை எதற்காகப் பயன்படுத்த வேண்டும்
என்பது
உன் கையில்தான்
இருக்கிறது."
25. "போய்க் கொண்டிருக்கும்போது
திரும்பிப் பார்க்காதே.
முன் நோக்கிய பயணத்தில்
பின்நோக்கிய பார்வை
இடற வைக்கும்."
26. "இருக்கிறதை வைத்து
இல்லாததை உருவாக்குகிறவனிடம்
இல்லாதது எதுவும் இல்லை."
27 "நேர்மை தாமதமானாலும்
நியாயமான
பலனைத் தந்தே தீரும்."
28 " படிக்க மறுப்பவனுக்கும்
கடைசிவரை காலம்
பாடம் கற்பித்துக் கொண்டுதான்
இருக்கும்."
29 "காலம் சொல்லித் தராததை யாரும்
சொல்லித் தந்துவிட முடியாது."
30 "உப்போ நட்போ அளவோடு
இருந்தால்தான் மதிப்பு.
அளவுக்கு அதிகமானால்
ஆபத்தில் முடியும்."
31 "மொழிகளுள் யாரையும்
காயப்படுத்தாத மொழி
மௌனம்."
32 "உன்னைச் செதுக்கும் உளி உன் கையில் மட்டுமே இருக்கட்டும்.
எதற்காகவும் அதை பிறர் கையில்
கொடுத்து விடாதே."
Comments
Post a Comment