காணும் பொங்கல்

காணும் பொங்கல் 


தை மூன்றாம் நாள் 

காணும் பொங்கல்.


இந்த நாளில்  உற்றார்

உறவினர்கள்  ஒருவரை ஒருவர் சந்தித்து தங்கள்

அன்பையும் தாங்கள் செய்த 

பண்டங்களையும் தங்களுக்குள்

பரிமாறிக்கொள்வார்கள்.



இது கணுப் பொங்கல் அல்லது

கன்னிப் பொங்கல் என்றும்

அழைக்கப்படுவதுண்டு.


இந்த நாளில் விளையாட்டுப்

போட்டிகள் நடைபெறும்.

உறியடித்தல்,கயிறு இழுத்தல்,

கபடிப்போட்டி,வழுக்கு மரம் ஏறுதல்

என்று பல்வேறு விளையாட்டுப்

போட்டிகள் இந்த நாளில் 

நடைபெறும்.

வீரவிளையாட்டுக்கான நாள்

என்றுதான் சொல்ல வேண்டும்.


காணும் பொங்கலின் சிறப்பே

அன்று கொண்டு சென்று உண்ணும்

உணவுதான்

அப்பப்பா...என்ன ருசி...

என்ன ருசி....


முன்பு பொங்கல் இந்துக்கள் மட்டும்

கொண்டாடும் பண்டிகையாக இருந்தது.

இப்போது அது தமிழர் திருநாளாக

மாறிப் போனதில் 

பெருமையும் பெரும்மகிழ்ச்சியும்  உண்டு. 


பொங்கல்  பண்டிகையை

தமிழர்த் திருநாளாக மாற்றிய

கலைஞருக்கும் கலைஞர் அரசுக்கும் 

நாம் இந்த நேரத்தில் நன்றி 

சொல்லியே ஆக வேண்டும்.


சமயத்திற்கு அப்பாற்பட்டுத்

தமிழர் அனைவருக்குமான பண்டிகை

என்று உலகம் எங்கும் அடையாளம் 

காண வைத்திருப்பது ஒரு முற்போக்கு 

சீர்திருத்தவாதியால் மட்டுமே இயலக்கூடிய

காரியம்.



ஆற்றங்கரை மற்றும் குளத்தங்கரை

போன்ற நீர்நிலைகள் உள்ள இடங்களுக்கு

குடும்பத்தோடு சென்று மகிழ்ச்சியாக

 களிக்கும் நாள் காணும் பொங்கல்.

தமிழர்களின் பண்பாட்டை

குடும்ப அமைப்பை

அதை அணைத்துச் செல்லும் திறத்தை

இந்தக் கொண்டாட்டங்கள் என்றென்றும் நமக்குச் சொல்லித் தந்து கொண்டே இருக்கும்.


இந்த மகிழ்ச்சி நாளுக்குநாள் பன்மடங்கு கூடியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.தமிழர் பண்பாட்டை உலகமே கண்டு வியக்கும் அளவுக்கு

வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது

இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் தான் என்றால் மிகையாகாது.


பெண்கள் கும்மியடித்துப்

நாட்டுப்புறப் பாடல்கள் 

பாடி

காணும் பொங்கலைக் கவின் மிகும்

பொங்கலாக்கி விருந்து 

உண்ணும் இல்லை ஊட்டி

மகிழும் நாள் காணும் பொங்கல்.



இந்த நாளில் கொண்டு சென்று

உண்பதற்கென்றே பொங்கல் நாளில்

செய்த கறி வகைகளையும் 

முதல்நாள் வைத்த சாம்பாரோடு போட்டு சுண்ட வைத்துக்

தயார் பண்ணி எடுத்துச் செல்வர்.

சுண்ட வைத்த கறிக்குத் தனிச்சுவை உண்டு.

உண்டு பார்த்தால் தெரியும்.


அதுவும் காட்டில் போய் உட்கார்ந்து

அருகில் உள்ள தோட்டங்களில் 

நீர்நிலைகளுக்கு அருகில் இருந்து 

வாழை இலை

போட்டு சாப்பிட வேண்டும்.

அதன் சுவையும் மணமும் அலாதியாக இருக்கும்.


இப்போது  உள்ள பிள்ளைகளுக்கு நேற்று உள்ள சுண்டக்

குழம்பு என்றாலே முகம்

சுண்டிப் போகிறது.


வேண்டாம் நீயே சாப்பிடு என்று

முரண்டு பிடிக்கிற காலமாகிவிட்டது


அதனால்தான் இப்போது காணும்

பொங்கல் நாளில் சுற்றுலாத் தலங்களிலும்

உணவகங்களிலும் மக்கள் குவிகின்றனர்.


மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை.

ஆனால் மாற்ற வேண்டும்

என்பதற்காக தாயை தமக்கையை  தங்கையை 

அண்ணன் தம்பியை மாற்றிவிட

முடியுமா?

மாற்றத்தான் கூடுமா?


தமிழர்கள் திருநாளை உறவுகளோடு

நட்புகளோடு இணைந்து கொண்டாடும் போதுதான்

உண்மையான மகிழ்ச்சி வெளிப்படும்.


இதற்காக வைக்கப்பட்டதுதான்

காணும் பொங்கல்.

அனைவரும் அவரவர் உறவுகளோடும்

நண்பர்களோடும் கூடி 

உண்டு,

உறவாடி ,விளையாடி,கதை பேசி

களிப்போடு காணும் பொங்கலைக் கொண்டாடுவோம்.


இனிய காணும் பொங்கல் வாழ்த்துகள்!









Comments