உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை.....

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை....

"உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்"
                                  குறள்  : 530

உழை -  இடம் 
பிரிந்து - நீங்கி
காரணத்தின் - ஒரு காரணத்தினால்
வந்தானை - திரும்பி வந்தவனை
வேந்தன் -மன்னவன்
இழைத்து - நுட்பமாக
இருந்து - ஆராய்ந்து, பொறுத்திருந்து
எண்ணி -  ஆலோசித்து
கொளல் -  முடிவு செய்க

ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்து 
சென்றவர் மீண்டும்
திரும்பி வரும்போது அவர் வந்த காரணத்தை
நன்கு ஆராய்ந்து அதன் பின்னரே
சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

விளக்கம் : 

எந்தவித காரணமும் இன்றி நம்மைவிட்டுப்
பிரிந்து செல்பவர்கள் உண்டு.
இது மன்னன் வாழ்க்கையில் மட்டும்
நடைபெறுவதல்ல. உறவுகளில் நட்புகளில் 
வீடுகளில் என்று எல்லா இடங்களிலும்
காரணமற்ற பிரிவு  நிகழ்தல் உண்டு.

அப்படி பிரிந்து சென்றவர்கள் மறுபடியும்
 ஏதோ ஒன்றை எதிர்பார்த்து நம்மிடம் 
 திரும்ப வந்து சேர வருகின்றனர்.
 அவர்களை ஐயத்தோடு பார்க்க வேண்டாம்.
 அவர்கள் வந்து சேர வேண்டும் என்று 
 எடுத்த முடிவில் என்ன நோக்கம் 
 உள்ளது என்பதை மட்டும் நன்கு 
 ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதா.. வேண்டாமா
 என்று தீர்மானிக்க வேண்டும்.
 
மன்னனுக்கு இடர் ஏற்பட்ட காலத்து 
கைவிட்டுவிட்டு ஓடி ஒளியும் ஆட்கள்
பலர் இருப்பர்.அரசியலில் நாழும் 
நிகழும் நிகழ்வுகளுள்
இதுவும் ஒன்றுதான்.பிரிந்தவர்
பின்னர் தனக்கு ஒரு தேவை ஏற்படும்போது
திரும்பவும் வந்து நிற்பார்.
அவர் திரும்பி வந்துவிட்டார் என்பதற்காக
சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை.

திரும்பி வந்த காரணம் நல்லதாக இருந்தால்
சேர்த்துக் கொள்வதில் தப்பும் இல்லை.
ஆனால் எதற்கும் நன்கு ஆராய்ந்து முடிவு
செய்து கொள்ளுங்கள் 
என்று ஆட்சியாளர்களுக்கு 
அறிவுரை வழங்கியுள்ளார் வள்ளுவர்.

இடர் காலத்தில் நம்மைவிட்டுப் 
போய்விட்டவர்தானே என்று வெறுப்பு
கொள்ளாது ...வந்த நோக்கம் நல்லதாக 
இருந்தால் சேர்த்துக்
கொள்ளலாம்  என்பதுதான் இப்பாடல்
தரும் செய்தியாகும்.

English couplet :

" Who causeless went away , then to return,
for any cause , ask leave;
The king should sift their motives well,
consider, and receive "
 
Explanation

When one may have left him and for some cause
has returned to him , let the king fulfil the object
(for which he has come back )and thoughtfully
receive him again.

Transliteration : 

"Uzhaippirindhu kaaranaththin vandhaanai vendhan
Izhaiththirundhu Ennik kolal "


Comments

Popular Posts