நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்....

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்....


நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை"

             குறள் : 998

நண்பு - நட்பு
ஆற்றார் - கொள்ளாதவர்
ஆகி - ஆய்
நயம் - இனிமை , இரக்கம்
இல் - இல்லாதவற்றை
செய்வார்க்கும் -செய்பவர்க்கும்
பண்பு - பண்போடு
ஆற்றார் - ஒழுகாதவர்
ஆதல் - ஆகுதல்
கடை - இழிவு

நட்பு பாராட்டாதவராக  இனிமை
அல்லாத செயல்களைச் செய்பவரிடத்தில்
நாமும் பண்போடு நடக்க முடியாதிருத்தல்
இழிவாகவே கருதப்படும்.


விளக்கம் : 

நம்மிடம் இனிமையாக பேசத் தெரியாதவர்,
தீமை செய்ய நினைப்பவர் இவர்கள்
உண்மையிலேயே நம் நண்பர்களாக இருக்க
முடியாது. உண்மையான நட்பு இருப்பவர்கள்
தவறான பேச்சிலும் செயலிலும் ஈடுபட மாட்டார்.
அப்படி ஒருவர் தவறாக பேசுகிறார்
நமக்கு எதிரான செயலில் ஈடுபடுகிறார்
என்றால் நாமும் அவருக்கு அப்படியே 
திருப்பிப் செய்ய நினைப்பது
அநாகரிகமாகும். அப்படிச் செய்வோமானால் 
அவருக்கும் நமக்கும்
என்ன வேறுபாடு இருந்துவிடப் போகிறது.?

அவரைப் போலவே நாமும் பண்பற்றவர்களாக
நடந்து கொண்டால் நாம் அவரை விடவும்
இழிவானவர்களாகவே கருதப்படுவோம்
என்கிறார் வள்ளுவர்.

விருப்பம் இல்லாத செயல்கள் செய்பவர்
உள்ளத்தில் அன்பு இருக்காது. 
அவரிடம் நற்பண்பை
எதிர்பார்க்க முடியாது.
நாமும் அதையே திருப்பிச் செய்தால்
நாமும் பண்பற்றவராகவே கருதப்படுவோம்.
அதனால் நாம் பண்பில் அவரை விடவும்
கடைநிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம்.

அதனால்தான் "தீமை செய்பவரிடத்தும் 
பண்போடு பழகுங்கள். பண்போடு 
நடந்துகொள்ளாவிட்டால் அது உங்களுக்கு
 இழுக்காகவே கருதப்படும் "என்கிறார் வள்ளுவர்.


English couplet : 

"Though men with all' unfriendly acts and  wrongs assail,
'Tis uttermost disdrace in courtesy to fail"


Explanation :

It is wrong ( for the wise ) not to exhibit good quilties
even towards those bearing no friendship for them
do only what is hateful.


Transliteration :

"Nanpaatraar Aaki Nayamila  Seyvaarkkum
Panpaattraar aadhal katai"


Comments

Popular Posts