செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்.....

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்...



செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு"

                       குறள் :389
    

செவி - காது
கைப்ப - கசக்கும்படியாக
சொல் - பேசும் மொழி
பொறுக்கும் - தாங்கிக் கொள்ளும்
பண்புடை- பண்பு கொண்ட
வேந்தன் - அரசன் , ஆட்சியாளன்
கவிகை - குடை, ஆட்சி
கீழ் - கீழாக,தலைமையின்கீழ் 
தங்கும் - நிலைபெறும்
உலகு - மக்கள்


குறைகூறுபவர்களின் கசப்பான சொற்களை
எல்லாம் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய
அரசின் கீழ்  உலக மக்கள் அனைவரும் வந்து
நிற்பர்.


விளக்கம் :

தன் காதுகளால் கேட்க முடியாதபடி
கசப்பான சொற்கள் வந்து விழுந்தாலும்
அவை எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும்
பண்பு ஒரு ஆட்சியாளனிடம் இருக்குமானால்
ஒருநாள் கசப்பாகப் பேசியவர்களும்
அந்த ஆட்சியாளனிடம் வந்து நிற்பர்.
மக்களின் விமர்சனங்கள்
அமைச்சர்களின் அறிவுரைகள் 
மாறுபாடாக கேட்க முடியாததாக
இருக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றையும்
பொறுமையாகக் கேட்டு, நாட்டு மக்கள்
நலன் கருதி எடுக்க வேண்டிய 
முடிவுகளைச் சரியாக எடுக்கும்
பண்பு ஒரு ஆட்சியாளரிடம்
இருக்க வேண்டும்.
இந்த ஒற்றைப் பண்பு இருந்தால் போதும்.
நாட்டு மக்கள் அனைவரையும்
தன் குடையின் கீழ்க் கொண்டு 
வந்துவிடலாம்.


விமர்சனங்களைப் பொறுமையாக
கேட்டுக் கொள்ளும் பண்புடைய
அரசுக்கு இருக்க வேண்டும்.அது கசப்பாக
இருந்தாலும் பரவாயில்லை.
நாட்டு நலனுக்காக 
பொறுமையாக
எல்லாவற்றையும் கையாளும் பண்பு
ஒன்று மட்டும் இருந்தால் போதும்.
நாட்டு மக்கள் விருப்பமொடு 
அந்த ஆட்சியாளரின் கீழ் வந்து
நிற்பர்  என்கிறார் வள்ளுவர்.


English couplet :

"The king of worth, who can words bitter to his ear endure,
Beneath the shadow of his power the world abides secure "


Explanation :

The whole world will dwell under the umbrella
of the king who can bear words that
embitter the ear .

Transliteration:

"Sevikaippach chorporukkum panputai vendhan
Kavikaikkeezhth thangum ulaku "


Comments

Popular Posts