ஆசிரியர் நாள் வாழ்த்து



ஆசிரியர் நாள் வாழ்த்து


அகரம் அறிமுகம் செய்து
 சிகரம் தொடும்வரை
 நகரா ஏணியாயிருந்து
 பகரும்மொழியை மடமை
 தகரும் வரை ஊட்டி
 பழுதிலா வாழ்க்கைக்குப்
 வழுவிலா நெறியமைத்து
 பத்திரமாய்க் கரம் பிடித்து
 சிலையாய்ச் செதுக்கி
 சிற்பமாய் அணியம் செய்து
 செந்தமிழைச் செப்பமுறச் 
 செப்பும்வரை உதடசைத்து
 ஓயாப் பயிற்சி தந்து 
 தரிசு நிலமாம் என்னைப்
 பண்படுத்திப் பயனுறச் செய்ய
 விழுமியங்களைப் பயிற்றுவித்து
 விழுநீர்ப் பாய்ச்சி
 வீழ்விலாக் கல்வியூட்டி
 வீறு பெறச் செய்த
 ஆசிரியர்களின் பாதம் தொட்டு
 வாழ்த்தி வணங்குகிறேன்!


ஆசிரிய பெருமக்களுக்கு
 ஆசிரியர் நாள் நல்வாழ்த்துகள்!
 

 
 
 
 

Comments

  1. நல்வாழ்த்துகளை கவிதையாக பதிவிட்ட தங்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts