தம்பொருள் என்பதம் மக்கள்....


தம்பொருள் என்பதம் மக்கள்.....



தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் "

                            குறள் 63


தம் - தமது
பொருள் - உடைமை, செல்வம்
என்ப - என்று சொல்லுவர்  
தம்  -தமது
மக்கள் -  புதல்வர்
அவர் - அவர்கள்
பொருள் - சொத்து
தம்தம் - அவரவர்
வினையான் - செயலால்
வரும் - வந்து சேரும்

தம் மக்களே தமது உடைமை என்று கூறுவர்.
அவர்களுக்கான உடைமை அவரவர் செய்யும்
செயலாலேயே வந்து சேரும்.

விளக்கம் : 

பிள்ளைகள் எனக்கு அருமையான சொத்து.
வேறு என்ன சொத்து வேண்டும் என்று
கூறுவர்.
பிள்ளைகள் நமது சொத்துதான்.
யாரும் மறுப்பதற்கில்லை.
ஆனால் நமக்கான உண்மையான சொத்து
யாதெனின் நாம் செய்யும் வினையால்
கிடப்பதன்றி வேறு எதுவுமில்லை.
நல்வினையோ தீவினையோ
அவரவர்களின் வினைப்படிதான்
பலன்கிடைக்கும்.
ஆதலால் செய்யும் வினைதான்
ஒருவனின் சொத்து.

பிள்ளையாக இருந்தாலும் பெற்றோராக
இருந்தாலும் வினைப்பயன் தான் சொத்து.
பிள்ளைகள் நல்வினை செய்தால்
நற்பயன் வந்தடையும். அது பெற்றோருக்கும்
கிடைக்கும்.
பெற்றோரின் நல்வினையால்தான்
நல்ல பிள்ளைகள் பிறக்கும்.

இந்தக் குறள் இருதரத்தாரும் செய்யும்
வினையின் படிதான்  நன்மையோ தீமையோ
நுகருவதற்கு வாய்க்கும் என்கிறார் வள்ளுவர்.

இந்தக் குறள் பற்றி உரையாசிரியர்கள்
மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும்,

உலகோர் தம் மக்களைத் தம்முடைய 
உடைமை என்று சொல்லுவர்.
ஆனால் அவர்களது செல்வம் அவர்கள்
செய்யும் செயல்திறனால் வரும் என்பதே
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் 
கருத்தாக உள்ளது.

English couplet :

"Man's children are his fortune' say the wise; From each one's
deeds his varied fortunes rise."


Explanation : 

Men will call their sons  their wealth because it flows to them
through the deeds  which they perform 
on their behalf.


Transliteration :

"Thamporul enpadham makkal avarporul
Thamdham vinaiyaan varum"

Comments

Popular Posts