சிறப்புஈனும் செல்வமும் ஈனும்....
சிறப்புஈனும் செல்வமும் ஈனும்...
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு"
குறள். 31
சிறப்பு - நற்பேறு
ஈனும் - கொடுக்கும்
செல்வமும் - வளத்தினையும்
ஈனும் - கொடுக்கும்
அறத்தின் - அறத்தை விட
ஊங்கு - ஆக்கம், நன்மை
ஆக்கம் -மேன்மை
எவனோ - எதுவுமில்லை
உயிர்க்கு - மக்களுக்கு
சிறப்பையும் செல்வத்தையும்
கொடுப்பதால் ஒருவனுடைய உயிர்க்கு
அறத்தை விட நன்மை தருவது
வேறு எதுவும் இருக்க முடியாது.
விளக்கம் :
நற்பேறு அடைய வேண்டும்.
நல்ல செல்வச் செழிப்போடு
வாழ வேண்டும்.
இவை இரண்டும்தான் அனைவரின்
குறிக்கோளாக இருக்கும்.
அதற்காகத் தான் இந்த
ஓட்டமும் உழைப்பும்
எல்லாவிதமான தேடல்களும்.
நாம் எவ்வளவுதான் வருந்தி
உழைத்தாலும் இவை யாவும்
நமக்குக் கிடைத்துவிடப் போகிறதா?
உறுதியாகச் சொல்ல முடியாதல்லவா?
செல்வம் பெருக வேண்டுமா?
பேரும் புகழும் அடைய வேண்டுமா?
அறவழியில் உங்கள் தேடல்
இருக்கட்டும்.
முயன்று பாருங்கள்.
கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
அறத்தைவிட நம் வாழ்விற்கு
நன்மையை அளிக்கக்கூடிய
செயல் வேறு எதுவும் இருக்க
முடியாது.
ஆதலால் அறம் செய்வீர்!
என்கிறார் வள்ளுவர்.
English couplet :
It yeilds distinction, yeilds prosperity ,what gain greater than
virtue can a living man obtain?
¹Explanation :
Virtue will confer heaven and wealth, what greater source of
happiness can man possess?
Transliteration :
"Sirappeenum selvamum eenum araththinoongu
Aakkam evano uyirkku"
Comments
Post a Comment