வேண்டிய வேண்டியாங் கெய்தலால்.....

வேண்டிய வேண்டியாங் கெய்தலால்....


வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப்  படும் "

                 குறள் : 265

வேண்டிய - விரும்பியவை
வேண்டியாங்கு - விரும்பியவாறு
எய்தலால் - பெறலாம்
செய்தவம் - தவம் செய்தல்
ஈண்டு-இங்கே
முயலப்படும் - முயற்சி செய்யப்படும்.



நாம் விரும்பியவற்றை
விரும்பியபடியே பெறமுடியும்
ஆதலால் தவம் செய்தலை
இங்கேயே முயற்சி செய்து
பெற்றுக் கொள்வீராக.


விளக்கம்

நாம் விரும்பியதை 
விரும்பியபடியே பெற்றுக்கொள்ள
வேண்டுமா?
அதற்காக வேறு எங்கும்
செல்ல வேண்டியதில்லை.
நமது விருப்பத்தை உறுதியாக
மனதில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
அதனைப் பெறுவதற்காக ஒரு தவம்
போல காத்திருங்கள்.
முயற்சி மேற்கொள்ளுங்கள்.
கண்டிப்பாக அது உங்களை வந்தடையும்.
வயதான பிறகு செய்யலாம்
குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு
கடுந் தவம் மேற்கொள்ளலாம்.
இப்படி எந்த 
நினைப்பும் வேண்டாம்.
இல்லறத்தில் இருந்தாலும்
தவம் செய்து நாம் விரும்பியதைப்
பெற்றுக் கொள்ளலாம்.
தவத்தை ஒரு குறிக்கோளை பெறுவதற்காக
விருப்பமுடன் செய்தால்
விரும்பியவற்றை எல்லாம்
விரும்பியபடி மே அந்தத் தவ வலிமையால்
பெற்றுக்கொள்ள முடியும்.


"விரும்பியதை விரும்பியவாறே பெறுவதற்கு
தவம் செய்தலை  இப்போதே இவ்விடத்தே
முயற்சி செய்க "என்கிறார் வள்ளுவர்.


English couplet :

"That what they wish may,as they wish,
be won,
By men on earth are works of painful penance done "


Explanation :

Religious discipline is practised in the world
because it secures the attainment of whatever
one may wish to enjoy in the world to come.


Transliteration:

"Ventiya ventiyaang kedhalaal seydhavam
Eentu muyalap patum"

Comments

Popular Posts