பணி நிறைவுப் பாராட்டு மடல்
பணி நிறைவுப் பாராட்டு மடல்
சேலத்து மாங்கனிச் சுவையானவளை
சீர்மிகு நரசிம்மன் லட்சுமி இணை
மடி சுமந்தவளை மாதவளை
மன்னன் பாலசுப்பிரமணியம் மனையானவளை எம் ஆசானானவளை
ஆயிழை சித்ரா மாணவர்க்கு மாமழை!
ஆரே காலனியில் பெய்த முதல்மழை
மாதுங்கா முலுண்ட் கோலிவாடா
மாணவர் வளைமாயம் கற்றவளை
பேரருள் பெருமதியானவளை
மாணிழை சித்ரா மாணவர்க்கு மாமழை!
நினைவுவளை நிறைகுடமானவளை
புரிந்தவரைப் புடமிடச்செய்தவளை
உயர்ந்தவளை உள்ளம் கவர்ந்தவளை
நல்லவளை நற்பண்பானவளை
தேனிழை சித்ரா மாணவர்க்கு வான்மழை!
தமிழானவளை தமிழாய்ந்தவளை
தக்கவரைத் தரமாக்கும்வளை
தளராதவளை தனித்துவமானவளை
தூதுவளை போலானவளை
சேயிழை சித்ரா மாணவர்க்கு வான்மழை!
கனிந்தவளை கல்வி மொழிந்தவளை
அன்னவளை அன்பு தந்தவளை
புன்னகையிழை பொலிமுகமானவளை
என்னவளை என்நெஞ்சில் நிறைந்தவளை
பூவிழை சித்ரா மாணவர்க்கு வான்மழை!
ஓதும்பணி நிறைவானவளை
ஓர்ந்துநலம் சூழ்ந்தவளை
ஒத்திருகை தொழுதவளை
வாயார வாழ்த்துதும் இப்பொன்மகளை
நேரிழை சித்ரா மாணவர்க்கு வான்மழை!
Comments
Post a Comment