கண்ணின்று கண்ணறச் சொல்லினும்....

கண்ணின்று  கண்ணறச் சொல்லினும்....



" கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்னின்று பின்னோக்காச் சொல் "


                           குறள் : 184

கண்ணின்று - கண்ணெதிரே நின்று

கண்ணற- இரக்கமில்லாது

சொல்லினும் - சொன்னாலும்

சொல்லற்க - சொல்லாதிருப்பீராக

முன்- முன்னால் 

இன்று - இல்லாதிருக்கும்போது

பின்னோக்கா - பின் விளைவுகளை எதிர்கொள்ள முடியாத

சொல் - சொல்லுதல், சொற்கள்



நேருக்கு நேராக நின்று கடுமையான சொற்களைச்

சொன்னாலும் சொல்லலாம்;

ஆனால் ஒருவர் இல்லாதபோது  

பின்விளைவை எதிர் கொள்ள முடியாத

 தவறான சொற்களைப் பேசுதல் கூடாது.




விளக்கம் : 


ஒருவன் கண் எதிரே இருக்கும்போது

கடுமையான வார்த்தைகளைப் பேசிவிடலாம்.

அது ஏதோ ஒரு காரணத்திற்காகப்

பேசிய பேச்சாக இருக்கும். அதனால் பெரிய

குற்றம் ஒன்றும் ஏற்பட்டுவிடாது.


ஆனால்  ஒருவர் இல்லாத வேளையில்

அவரைப்பற்றிப் பேசுதல் புறங்கூறுதலைவிடக்

கொடிய குற்றமுடையதாக கருதப்படும்.

ஒருவரைப்பற்றி அவர் இல்லாத 

நேரத்தில் தவறாக பேசி விட்டோமானால் 

பிறகு எப்போதும்

அவர் எதிரில் நின்று பேச துணிச்சல் இல்லாது

அவமானப்பட்டுப் போகும் நிலை வந்துவிடும்.


அதனால் ஒருவர் முகத்தை நேருக்கு

நேர் எதிர் கொள்ள இயலாத அளவுக்கு

கடுமையான சொற்களை அவர் இல்லாதபோது

பேசாதிருங்கள் என்கிறார்

வள்ளுவர்.




English couplet : 


"In presence though unkindly words you speak, say not

In absence words whose ill result  exceeds your thought "



Explanation : 


Though you speak without kindness before another's face

speak not in the absence words which regard not the

evil subsequently .


Transliteration : 


"Kannindru kannarach chollinum sollarka

Munnindru pinnokkaach chol "










Comments