பிறந்தநாள் வாழ்த்து
பிறந்தநாள் வாழ்த்து
தத்தை மொழி கற்றலா(ல்)
ஒற்றைச் சொல்லில்- கைபேசி
ஓயாது பிறந்தநாள் வாழ்த்துப் பாடலா!
மிஞ்சும் அன்பு நின்மொழியிலா
விஞ்சும் மதியிலா பேச்சிலா
கஞ்சமில்லா அன்பு பாராட்டலிலா!
கரையிலா நட்பு பேணலா(ல்) -என்றும்
கறையிலா உள்ளம் நினதாதலா
வரையிலா அன்பு அரசாட்சி நடத்தலா!
கண்டுலா வந்திட விழைதலா(ல்)
கவியோலை ஏந்தி ஐயாவின் இல்லம்
வந்தேன் இன்பச் சிற்றுலா!
வானும் நிலனும் போல
வாழ்க பல்லாண்டு...பல்லாண்டு
இன்றுபோல என்றும் உவந்து!
- செல்வபாய் ஜெயராஜ் 🎈🎈🎈🎈🎈
கருத்துகள்
கருத்துரையிடுக