துள்ளாத மனமும் துள்ளும்

துள்ளாத மனமும் துள்ளும்...(ராகம்)



துள்ளாத மனமும் துள்ளும்

சொல்லாத கதைகள் சொல்லும்

இல்லாத ஆசையைக் கிள்ளும்

இன்பத் தேனையும் வெல்லும் - மனம்

இன்பத் தேனையும் வெல்லும்


(துள்ளாத)....2


மலரும் நினைவு மனதில் வந்து  

மகிழ்ச்சி பொங்கும் உள்ளம் 

அன்பு கொண்ட கண்கள் இங்கே

ஆயிரம் கதைகள் சொல்லும் 



நட்பைக் கண்கள் காணும் போது

அணைக்க கரங்கள் நீளும்

அன்புக் குரலில் இனிமை கலந்தே-மனம்

அழகுத் தமிழில் கொஞ்சும்  


(துள்ளாத)....1


எங்கோ இருந்த நம்மை ஒன்றாய்

கூட வைத்தது பாசம்

என்றன் நினைவில் உந்தன் நினைவை

இணைத்து நின்றதும் நேசம்



எங்கும் இருக்கும் இதயங்களையும்

இணைத்து வைப்பதும் தெய்வம் 

இணைந்தே பாடுவோம் நாமும்- இனி

கவலை மறப்போம் நாளும்



(துள்ளாத)...1



பிரிந்த உறவை  அருகில் கண்டால்

பிள்ளையாய் மனம் துள்ளும் 

சோர்ந்த நாளும் மாயம் ஆகும் 

ஓடி அணைத்தே மகிழும்


நல்ல இதயம்  நட்பைத் தேடி

நாடி நாளும் ஓடும்

உண்மை அன்பால் இணையும் -உள்ளம்

உறவாய் என்றும் நிலைக்கும்



(துள்ளாத).....2


.


















கருத்துகள்

Popular Posts