பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல் 

கற்றோர்நிறை நாகர்கோவிலில் பிறப்பதிகாரம்

சான்றோர்நிறை செட்டிகுளத்தில் 

பெற்றார் குடியுரிமைஅதிகாரம்

மணிராஜா இல்லத்தில் கிடைத்தது வாழ்வதிகாரம்  -சித்ரா

பிள்ளை இருவர் பெற்றதால் வந்தது தாயதிகாரம்!


மாநகராட்சித் தமிழ்பள்ளி அளித்தது முதலதிகாரம்

கரும்பலகையில் எழுத்தோடு நடத்தினார் எழுத்ததிகாரம் 

சொற்சுவைபட கற்பிப்பதில் கண்டோம் சொல்லதிகாரம் -சித்ரா

உரையிடையிட்ட பேச்சில் மிளிருமே பொருளதிகாரம்!


கட்டமைப்பு திறன் முற்றும் பெற்ற யாப்பதிகாரம்

கலையாய்க்  கற்பித்தலால் காணலாம் அணியதிகாரம்

அறிவுப் பசிக்கு அமுதூட்டியதில் வெளிப்பட்டது பொறுப்புதிகாரம்-சித்ரா

அறம்விளை மாணவர் மிகு

விளைச்சலதிகாரம்!


முத்தமிழும் கொஞ்சி விளையாடும் வகுப்பதிகாரம்

செந்தமிழ்ச் சுவை சேர்க்க நாநடத்தும் நாவதிகாரம் 

தலைமுறையை காக்கும் காப்பதிகாரம் - சித்ரா

கல்விப் பயிர் வளர்க்க வந்த  நீரதிகாரம் !


தொய்வில்லா அறப்பணிக்கு தடையிட வந்தது ஓய்வதிகாரம்

ஓயாது இல்லறப்பணி ஆற்றுக நல்லதிகாரம்

பணி நிறைவுப் பாராட்டு விழா ஒரு நினைவதிகாரம் -சித்ரா

நித்தம் எம்நெஞ்சில் குடியிருக்கும் சிறப்பதிகாரம்!

அன்புடன்,

செல்வபாய் ஜெயராஜ் 





 

கருத்துகள்

Popular Posts