கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்ப்....

 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க்.....


"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் "
                               குறள் :  643

கேட்டார் - சொல்லைக் கேட்டவர்
பிணிக்கும் - ஈர்க்கும், கட்டி இழுக்கும்
தகையவாய் - இயல்பினை உடையனவாய்
கேளாரும் - அச்சொல்லைக் கேட்காதவரும்
வேட்ப - விரும்பும் வண்ணம்
மொழிவதாம் - சொல்லப்படுவதாம்
சொல் - சொல்வன்மை

சொல்லும்போது அதனைக் கேட்டவரைத்
தன்வயப்படுத்தும் தன்மை கொண்டதாய்க்
கேட்காதவரையும் கேட்க விரும்பும் தன்மையை
உருவாக்குவதாய்  சொல்லப்படுவதே
சொல்வன்மையாகும்.

விளக்கம் : 

ஒருவர் நம்மிடம் கேள்வி கேட்கும்போதோ அல்லது
ஒரு பொருளைப்பற்றி அறிந்து கொள்ளும்
முனைப்புடனோ பேசும்போது நாம் 
அவருக்குப் பதிலாகத் தரும் சொல் அல்லது
உரை அவரை நம் பக்கமாக ஈர்க்கும் வண்ணம்
இருத்தல் வேண்டும்.
அதுமட்டுமல்லாது கேளாதவரையும் 
கேட்கத் தூண்டுவதாக
இருப்பதே சொல்வன்மை ஆகும்.
அதாவது நாம் பேசும் பேச்சு கேட்பவரைக்
கட்டி இழுக்கும் தன்மை கொண்டு இருத்தல்
வேண்டும்.
அதுபோல கேட்க முடியாது போனவர்களும்
நாம் அவரது பேச்சைக் கேட்கத் தவறிவிட்டோமே
என ஏங்கும் வண்ணம் ஒருவருடைய
பேச்சு இருத்தல் வேண்டும்.
பேசும் சொல்லில் ஒரு ஈர்ப்பு
இருக்க வேண்டும்.அத்தகைய சொல்லைத்
தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும்.

சொற்களைக் கேட்டவர் தம் உள்ளத்தை
வயப்படுத்துவதோடு அவ்வாறு
கேட்க இயலாமல் போனவரையும்
கேட்க விரும்புமாறு தூண்டும்
ஆற்றல் கொண்டதே நல்ல
சொல்லாற்றலாகக் கருதப்படும்.

கேட்டார் கேளாதவர் என்று இருதரப்பினரையும்
கவரும் தன்மை  எப்போது வாய்க்கும்? 

கேட்டவரை அங்கிங்கு நகர விடாதபடி
கட்டிப்போடும் ஆளுமை இருக்க வேண்டும்.
அந்த உரையைக் கேட்டுக் கொண்டு
சென்ற நபர் அதனைப்பற்றி உரைக்கும்கால்
நாம் அந்த உரையைக் கேட்க தவறி
விட்டோமே. மறுபடி இப்படிப்பட்ட வாய்ப்பைத்
தவற விட்டுவிடக்கூடாது எண்ணம் ஏற்பட
வேண்டும்.
பிறர் வாயிலாக கேட்கும்போதுகூட
நமது பேச்சின்மீது ஒரு நாட்டம் ஏற்பட வேண்டும்.
அப்படிப்பட்ட பேச்சினைத்தான் சொல்வன்மை
என்கிறார் வள்ளுவர்.


English couplet :

'Tis speech that spell - bound holds the listening ear
While those who have not heard desire to hear.

Explanation : 

The speech is that which seeks to express elements 
as bind his friends to himself and is so delivered
As to make even his enemies desire( his friendship).

Transliteration : 

"Kettaarp pinikkum thakaiyavaaik kelaarum
Vetpa mozhivadhaam sol "



Comments

Popular Posts