தந்தை மகற்காற்றும் நன்றி ....

தந்தை மகற்காற்றும் நன்றி....

"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் "

                            குறள் : 67

தந்தை - அப்பா
மகற்கு - மகனுக்கு
ஆற்றும் - செய்யும்
நன்றி - நன்மையான செயல்
அவையத்து - அவையில்
முந்தி - முன்னால்
இருப்ப - இருக்குமாறு
செயல் - செய்தல்

தந்தை மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி யாதெனில்
கற்றவர் அவையில் தன் மகனை முந்தியிருக்கும்படி
கல்வி அறிவில் மேம்படச் செய்தலேயாகும்.

விளக்கம் : 

பிள்ளைகளுக்கு செல்வம் சேர்த்து வைக்கலாம்.
வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
காடு கழனி என்று ஏராளமான நிலபுலன்களை
வாங்கி வைத்திருக்கலாம். ஆனால் இவை
எல்லாவற்றையும்விட நன்மை தரும் செயல்
அதாவது நல்லுதவி ஒன்று உண்டு.
அதுதான் பிள்ளைகளுக்கு உயர்ந்த,
நிலையான புகழைக் கொடுக்கும்
நல்ல கல்வி அறிவைக் கொடுத்தலாகும்.

அதனால்தான்  கற்றோர் நிறைந்த அவையில்
எல்லோர்க்கும் முற்பட்ட நிலையில் முதல்வனாக
இருக்கும்படியான நல்ல கல்வி அறிவைக்
கொடுத்தலே ஒரு தந்தை மகனுக்குச்
செய்யும் நன்மையான செயலாக
இருக்க முடியும் என்கிறார் வள்ளுவர்.

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தையின் கடனே
........   ........."

என்ற புறநானூற்றுப் பாடலில் பொன்முடியார்
என்ற புலவர்  பிள்ளையைச் சான்றோனாக்குதல்
தந்தையின் தலையாயக் கடன் என்று
கூறியிருப்பதும் இங்கு நோக்கத் தக்கது.

English couplet :

"Sire greatest boon on son confers , who makes him meet
In councils of the wise to fill the highest seat"

Explanation : 

The benefit which a father should confer on his son is
to give him precedence in the assembly of the learned.

Transliteration :

"Thandhai makarkaatrum nandri avaiyaththu
Mundhi Iruppach cheyal "

Comments

Popular Posts