அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்...

 அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்...

"அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை"

                                குறள் :814
அமர் - போர்
அகத்து - இடையில் 
ஆற்றறுக்கும் - வலிமையைக் கெடுக்கும்
கல்லா - பழக்கப்படுத்தப்படாத, பயிற்சியளிக்கப்படாத
மா - குதிரை , விலங்கு
தமரின் - தன்மையைவிட, உறவைவிட
தனிமை - தனித்திருத்தல்
தலை _ மேலானது, சிறப்பானது

போரின்போது களத்தில் குப்புற தள்ளிவிட்டு
ஓடும் அறிவில்லாத குதிரையைப் போன்றவரோடு
கொள்ளும் நட்பைவிட எந்த உறவும்
இல்லாமல் தனித்திருப்பது நலம்.

விளக்கம் : 

குதிரைக்கு போருக்கான பயிற்சி கொடுக்கும்போது
 இடதுசாரியும் வலதுசாரியும்
குறுக்கு அறுத்தலும் நெடுகப் பாய்தலும்
என்று எல்லாபக்கமும் சுழன்று சுழன்று
பாயும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்குமாம்.

 அப்படிப்பட்ட பயிற்சி அளிக்கப்படாத 
 குதிரை மீது ஏறி
 போருக்குச் சென்றால் குதிரையானது
 எதிராளிக்கு எதிராக சாதுரியமாகப் பாய்ந்து
 போர்புரிவதை விட்டுவிட்டு தாறுமாறாக 
 ஓடி தலை குப்புற வீரனைத் தள்ளி
 விட்டுவிட்டு ஓடிவிடும்.
 
இதனால் எவ்வளவுதான் திறமை உள்ள
வீரனாக இருந்தாலும் அவன் வலியிழந்து
நிற்கும் சூழல் உருவாகிவிடும்.

போர்க்களத்தில் இடையில் தள்ளிவிட்டுவிட்டு
செல்லும் குதிரை போன்றதுதான் இக்கட்டான
நேரத்தில் விலகிசென்று விடுபவரின் 
நட்பு.
அப்படிப்பட்டவரோடு நட்போ உறவோ வைத்துக்
கொள்வதைவிட தனிமையில் இருப்பது
சிறப்பு என்கிறார் வள்ளுவர்.
நெருக்கடியான நேரங்களில் தவிக்கவிட்டுவிட்டு
செல்லும் உறவுகளை நம்புவதைவிட தனிமையாக
இருந்து சமாளித்துக் கொள்வது நன்று.

அதனால்தான் "கொள்ளற்க அல்லற்கண்
ஆற்றறுப்பார் நட்பு "என்று நட்பாராய்தல்
என்ற அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லி 
இருப்பார்.

வழித்துணையாக வந்துவிட்டு நடுவழியில்
கழுத்தறுப்பவனோடு ஒரு போதும் நட்பாக
இருத்தல் கூடாது. அப்படிப்பட்டவர்களோடு
கொள்ளும் நட்பைவிட
தனிமை ஒன்றும் பெரிய
கொடுமையாக இருந்துவிடாது.

போர்க்களத்தில் தள்ளிஇட்டு ஓடும்
மடக்குதிரை போன்றோர் உறவைவிடத்
தனிமை நலம் தரும்.

English couplet:

"A steed untrained will leave you in the tug of war,
Than friends like that to dwell alone is better far"

Explanation :

"Solitude is more to be  desired than the society of
those who resemble the untrained horses which
throw down their riders in the fields of battle"

Transliteration :

"Amarakaththu Aatrarukkum kallaamaa Annaar
Thamarin Thanimai  Thalai "


Comments

Popular Posts