கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்....

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்.....

"கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும் "
                           குறள்   :575


கண்ணிற்கு _கண்ணுக்கு
அணிகலம் _அணியப்படும் நகை
கண்ணோட்டம் _இரக்கம்
அஃதின்றேல் _அது இல்லையானால்
புண்ணென்று _ வடு என்று
உணரப்படும் _  அறியப்படும்

கண்ணுக்கு அணிகலமாக அமைவது
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகிற
இரக்கமாகும்.
அந்த இரக்கம் இல்லாத கண்கள் 
புண்கள் என்றே கருதப்படும்.

விளக்கம் :

கண் அழகாக இருக்க கண்ணாடி போட்டுக்
கொள்கிறோம்.
மை தீட்டுகிறோம்.
அலங்காரம் பண்ணும்போது கண்களை
அழகாகக் காட்டுவதற்காக கண்களைச் சுற்றி
ஒப்பனை செய்து கொள்கிறோம்.
ஆனால் அவை எல்லாம் கண்களுக்கு
அழகாக மாட்டா.

 கண்கள் என்றால் அதில் இரக்கம் 
 இருக்க வேண்டும்.
 கருணை குடி கொண்டிருக்க வேண்டும்.

எவ்வளவுதான் ஒப்பனை செய்து
கொண்டாலும் கண்களில் இரக்கமும்
கருணையும் இல்லாவிட்டால் அந்தக் கண்கள் 
இருந்தென்ன...இல்லாமல் போயென்ன?
அவை கண்களாகவே கருதப்பட மாட்டாது.
வெறும் புண்களாகவே கருதப்படும்.

புண் என்றால் என்ன?
பார்வை குறைபாடு புண் எனப்படும்.
இதைத்தான் வள்ளுவர்,

"கண்ணுடையோர் என்போர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லா தவர் "
என்றார் .

கற்கவில்லை என்றால்  படிக்க இயலாதவர்
ஆகிவிடுவார். படிக்கத் தெரியவில்லை என்றால்
கண்களில் குறைபாடு இருப்பதாகதானே பொருள்
கொள்ள முடியும்.
இந்தக் குறைபாட்டினைத்தான் 
வள்ளுவர் புண் என்கின்றார்.

ஆதலால் கண்ணுக்கு அழகு 
கண்ணோட்டம்தான்.
கண்களை அழகாக வைத்துக் கொள்வதும்
அழகில்லாமல் ஆக்குவதும் உங்கள் கையில்தான்
உள்ளது என்கிறார் வள்ளுவர்.

English couplet:

"Benignity is she's adorning grace; without it
eyes are wounds disfiguring face"

Explanation :

Kind looks are the ornaments of the eyes; without
these they will be considered (by the wise)
to be merely two sores.

Transliteration:

Kaannirku Anikalam Kannottam Aqdhindrel
Punnendru Unarap Patum"



Comments

Popular Posts