நவில்தொறும் நூல்நயம் போலும்....

நவில்தொறும் நூல்நயம் போலும்....



"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு"

               குறள் : 783


நவில்தொறும்- படிக்கும் தோறும்
நூல் - நல்ல நூல்
நயம் - இன்பம் தருதல்
போலும்- போன்றது
பயில்தொறும்- பழகப் பழக
பண்புடையாளர்- நற்குணமுடையவர்
தொடர்பு - நட்பு

படிக்கப் படிக்க இன்பம்தரும் சிறந்த நூலைப் போல
பழகப் பழக இன்பம் தரக்கூடியது 
பண்புடையவர்களோடு கொண்ட நட்பு.



விளக்கம் :

ஒரு நல்ல நூலைப் படிக்கிறோம்.
படித்த மாத்திரத்திலேயே அதன்
முழு பொருளையும் நம்மால்
அறிந்துகொள்ள முடியாது.

திரும்பத் திரும்பப் படிக்கும் போதுதான்
அந்த நூலின் பொருளை முழுமையாக
உணர முடியும். சொல்லாட்சித்திறன்,அணிநலன்
யாவற்றையும் உணர்ந்து அந்த நூலைப் பற்றிய
பெருமையையும் சிறப்பையும் நம்மால்
உணர முடியும்.

அது போன்றுதான் நல்ல 
பண்புடையவர்களுடைய நட்பும் இருக்கும்.
பார்த்த மாத்திரத்திரத்திலேயே அவர்களைப்
பற்றி நம்மால் முழுமையாக 
உணர்ந்துகொள்ள முடியாது.
 பழகப் பழகத்தான் அவர்களுடைய 
 நல்லியல்பை நம்மால்
 முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
 அவர்களுடைய நற்குணங்கள் நமக்குத்
 தெரிய வரும்.

நவில்தல் என்றால் படித்தல் என்றும்
பயில்தல் என்றால் நெருங்கிப் பழகுதல்
என்றும் சொல்லி, படித்தலுக்கும்
பழகுதலுக்குமான ஒரு நெருக்கத்தை நம்
கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்
வள்ளுவர்.

நல்லப் புத்தகத்தோடு நெருங்கிப் பழகுங்கள்.
நல்ல பண்புள்ளவர்களோடும் நெருங்கிப்
பழகுங்கள்.
நல்லப் புத்தகத்தோடும்
நல்ல பண்பு கொண்டவரோடும்
நெருங்கிப் பழகினால் நம்
வாழ்க்கைக்குத் தேவையான நல்ல
கருத்துகள் கிடைக்கும்.
 
புத்தகத்தோடும் நெருங்கிப்
பழகுங்கள். பண்புடையாயாளரோடும்
நெருங்கிப் பழகுங்கள் என்கிறார் வள்ளுவர்.

நூலினைப் படிக்கப் படிக்க இன்பம்
தருதல் போல பழகப் பழக இன்பம்
தருவது பண்புடையார் நட்பு.



 English couplet

"Learned scroll the more you ponder, sweeter grows the mental food
So the heart by use grows fonder,found in friendship with the good"


Explanation:

Like learning, the friendship of the noble,
the more it is cultivated, the more delightful
does it become.

Transliteration:

"Navildhorum Noolnayam polum payildhorum
Panputai yaalar thotarpu"




Comments

Popular Posts