இணரூழ்ந்தும் நாறா மலரனையர்


இணரூழ்ந்தும் நாறா மலரனையர்....



இணரூழ்ந்தும் நாறா மலரனையர் கற்றது 
உணர விரித்துரையா தார்"

                  குறள் : 650

இணர் - கொத்தாக
ஊழ்ந்தும் - மலர்ந்திருந்தும் 
நாறா - மணம் தராத
மலர் - பூ
அனையர் - ஒத்திருப்பர்
கற்றது - கற்ற நூல்
உணர - பிறர் அறியும்படியாக
விரித்து - தெளிவாக
உரையாதார்- உரைக்க இயலாதவர்


கற்றதை பிறர் உணர  விளக்கிச் சொல்ல
இயலாதவர் கொத்தாக மலர்ந்திருந்தாலும்
மணம் கமழாத மலரைப்
போன்றவராவார்.


விளக்கம்:

பூக்கள் கொத்தாக மலர்ந்திருப்பது
பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
நாறா மலர் கண்டு பாராமுகமாகச்
செல்வதுதான் மனித இயல்பு.
ஏன் வண்டுகள்கூட மணம்
இருக்கும் பூக்களைத் தான்
நாடி வரும்.
பூக்கள் என்றால் அதில் மணம்
இருக்க வேண்டும்.

மணம்தான் பூக்களுக்கான
அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
வண்ணம் பார்க்கக் கவர்ச்சிகரமாக
இருக்கலாம். அது பிறரால்
விரும்பப் பட மாட்டாது.

அதுபோல கற்றவர் என்றால் தாம்
கற்ற நூலின் பொருளை பிறர் முன்
எடுத்துச் சொல்லும் திறன் 
பெற்றிருக்க வேண்டும்.
தாம் கற்றதைப் பிறர் அறிய விரித்துச்
சொல்ல இயலாது போனால்
அவர் பெற்ற கல்வியால் 
என்ன பயன்?
தான் பெற்ற கல்வியால் நாலுபேர்
பயன் பெற வேண்டாமா?
வெறுமனே தான் மட்டும்
அறிவைப் பொத்தி பொத்தி வைத்துப்
பாதுகாத்து வைத்திருந்தால்
உங்கள் அருமையும் 
பெருமையும் யாருக்குத் தெரியப்போகிறது?
அதனால்தான் ,

"கற்றதனைப் பிறர் அறிய விரித்துச்
சொல்ல இயலாதவர்
கொத்தாக மலர்ந்திருந்தும்  மணம்
பெறாத மலரை ஒப்பர்."
என்கிறார் வள்ளுவர்.


English couplet :

"Like scentless flower in blooming garland bound
Are men who can't their lore acquired to other's
ears expound."

Explanation :

Those who are unable to set forth their
acquirements before others are like
flowers blossoming in a cluster and
yet without fragrance.

Transliteration:

"Inaruzhththum naaraa malaranaiyar katradhu
Unara Viriththuraiyaa thaar"







Comments

Popular Posts