இமையாரின் வாழினும் பாடிலரே.....


இமையாரரின் வாழினும் பாடிலரே....


"இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர் "

             குறள் :.    906


இமையாரின் - தேவர்போல
வாழினும்- வாழ்ந்தாலும்
பாடு - பெருமை
இலரே- இல்லாதவரே
இல்லாள்- மனைவி
அமையார்- அழகு பொருந்திய
தோள்- தோளைக் கண்டு
அஞ்சுபவர்- பயப்படுபவர்



மனைவியின் தோளுக்குப் பின்னால் 
அஞ்சி வாழ்கிறவர்
இவ்வுலகில் தேவரைப்போல உயர்வான நிலையில்
வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே
ஆவர்.

விளக்கம் :

மனைவிக்குப் பயந்து வாழ்பவர்களால்
துணிந்து தன்னிச்சையாக எந்த முடிவும்
எடுக்க முடியாது.
எதற்கெடுத்தாலும்  என் மனைவியைக்
கேட்டுப் சொல்கிறேன் என்று சொல்கிறவர்
கோழையாகவே கருதப்படுவார்.
அவரால் அறச்செயல்களில் ஈடுபட முடியாது.
குடும்பத்தாருக்கு ஒரு உதவி 
செய்ய முடியாது. 
அதனால் அவர் முதுகெலும்பில்லாதவராகவே
கருதப்படுவார்.

மனைவி சொல்லே மந்திரம் என்று
மந்திரத்திற்கு கட்டுப்பட்டு மனைவியின்
முதுகுக்குப் பின்னால் வாழ்ந்தால்
மனைவியை நன்றாக வைத்திருக்கிறார்
என்று  உலகம்  நம்மை 
பெருமையாக நினைக்கும் 
என்று தப்புக்கணக்குப்
போட்டு வைத்து மனைவிக்குப் பின்னால்
ஒளிந்துகொண்டு வாழ்க்கை நடத்துவார்.
மனைவியைப் பேசவிட்டு தான் ஒன்றுமே
தெரியாதவர் போல நடந்து கொள்வார்.

அதற்காக  நீங்கள் மட்டும்தான்
பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்.
உலகம் உங்களை ஒருபோதும் 
பெருமைக்குரியவராக எண்ணாது.

பெண்ணின் தோளுக்கு அஞ்சுகிறவன்
எவ்வளவு பெரிய உயர்நிலையில்
இருந்தாலும் இந்த உலகம் அவனை 
துணிவில்லாதவன் இல்லாதவன் என்று 
சிறுமையாகத்தான் கருதும் .
அவனுக்கு எந்த இடத்திலும் பெருமை
கிடையாது என்கிறார்
வள்ளுவர்.


English couplet:


"Though like the demi-gods , in bliss they dwell secure from harm,
Those have no dignity who fear the housewife's slender arm"

Explanation:


They that fear the bamboo- like shoulders
of their wives  will be destitute of manliness
though they may flourish like the Gods.

Transliteration :

Imaiyaarin vaazhinum paatilare Illaal
Amaiyaardhol anju pavar"





Comments

Popular Posts