இணரூழ்த்தும் நாறா மலரனையர்....

இணரூழ்த்தும் நாறா மலரனையர்...

"இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரிந்துரையா தார்"
                              குறள் - 650

இணர் - கொத்தாக
ஊழ்த்தும் - பூத்திருந்தும்
நறா -,மணங்கமழாத
மலர் - பூ
அனையர் -ஒப்பர்
கற்றது- கற்ற நூலின்பொருள்
உணர - அறியும்படி
விரித்து -விரிவாக
உரையாடலாம் - உரைக்க மாட்டாதவர்


தான் கற்றதை பிறர் உணரும் வண்ணம் சொல்லத்
தெரியாதவர் கொத்தாக மலர்ந்திருக்கும்
மணமில்லா மலருக்கு ஒப்பாவர்.

விளக்கம் :

பேசுவது என்பது எல்லாருக்கும் வாய்க்காத
ஒரு கலை.
எவ்வளவுதான் கற்றிருந்தாலும்
ஒரு சிலரால் மட்டுமே அதனைப் பிறர் மத்தியில்
பேச முடியும்.  
.
நமது அறிவை பிறர் முன்னிலையில்
வெளிப்படுத்தத் தெரியவில்லை என்றால்
கத்தைக் கத்தையாகக் கண்டதை எல்லாம்
கற்றிருந்தாலும் அதனை தன் எல்லைக்குள்ளே
வைத்துக் கொண்டு உள்ளுக்குள்ளேயே
மகிழ்ந்து கொள்ள வேண்டியதுதான்.
நாம் கற்ற கல்வியால் பிறர்க்கு எந்தவிதத்
பயனும் கிடைக்கப்போவதில்லை.
கல்வி கற்றிருந்தால் அதனைப் பிறர் முன்னால்
விரிவாகச் சொல்லும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட திறன் இல்லாதிருப்பது
 எப்படி இருக்கிறது என்றால் ஒரு செடியில்
மணமில்லாத மலர்கள் கொத்துக்
கொத்தாகப் பூ பூத்துக் கிடக்கிறது. அதைக்
கொய்து சென்று சூடுவார் எவரும் இல்லாது
செடியிலேயே வாடிக் கிடப்பதற்கு
ஒப்பானது.
.

கற்ற கல்வியை நாலுபேர் செவிக்குக்
கேட்கும்படியாகச்
சொல்லத் தெரிய வேண்டும். பிறர்
மனம் கொள்ளும்படி விரிவாக
சொல்லும் திறன்
இருக்க வேண்டும்.இவை எதுவும்
இல்லாதிருந்தால் 
மலர்ந்திருந்தும் மணமில்லாத மலர்
விரும்பி சூடப்பட மாட்டாததுபோல
 நமது புலமையும் பிறரால் 
மதிக்கப்பட மாட்டாது  வெளியுலகுக்கு தெரியாமல்
அப்படியே மங்கிப்
போய்விடும் என்கிறார் வள்ளுவர்.

English couplet:

"Like scentless flower in blooming garland found are men who can't
their lore acquired to other's ears expound"

Explanation:

Those who are unable to set forth their acquirements before others
are like flowers blossoming in a
cluster and yet without fragrance.

Transliteration:

"Inaruzhththum naara malaranaiyar katradhu
Unara viruththuraiyaa thaar"





Comments

Popular Posts