ஜெபிக்கும் கரங்கள்

                            ஜெபிக்கும் கரங்கள்

  
ஜெர்மனி நாட்டில்   ஆல்பிரெச் ,ஆல்பிரட்  என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். 
  இருவருக்கும் ஓவியம் கற்றுக்கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசை.
    ஆனால் போதுமான பண வசதி இல்லாததால் இருவராலும் படிக்க முடியவில்லை.
    ஒருவர் வேலை செய்து இன்னொருவரை படிக்க வைக்க வேண்டும்.
    ஒருவர் படிப்பு முடித்து வந்ததும் இன்னொருவர் படிக்கலாம் என்று  முடிவு எடுத்தனர்.
    யார் முதலாவது படிக்க செல்வது?
     பூவா தலையா போட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான்.
     பூ விழுந்தவர்  முதலில் படிக்கச் செல்ல வேண்டும்.
     தலை விழுந்தால் ,அந்த நபர்  வேலை செய்து மற்றவரை படிக்க வைக்க  வேண்டும்.
     இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டது.
     ஆல்பிரட்  படிக்க  வேண்டும் என்ற முடிவு வந்தது.
    அதன்படி படிப்பதற்காக ஆல்பிரட்  வெளி மாநிலத்திற்குச் சென்றார்.
         பட்டறையில் வேலை செய்து  பணம் அனுப்பிக் கொண்டிருந்தார் ஆல்பிரெச்.
      ஆல்பிரட்டின்  படிப்பு முடிந்தது. நல்ல வேலையும் கிடைத்தது.
        இனி சகோதரனைப் படிக்க வைக்க வேண்டும்.
       மகிழ்ச்சியோடு  நாடு திரும்பினார்.
              சகோதரனைப் பார்த்தார்.
            ஆவலோடு கரங்களைப் பிடித்தார்.
   அதிர்ந்து போனார். 
      இனி தன் சகோதரனால் ஓவியம் வரைவதற்கு பிரஷ் பிடிக்க முடியாது. 
      அந்த அளவுக்கு  வேலை செய்து அவர் கை நைந்து போய் இருந்தது.
      கண்கள் பனித்தன.
      தன்னைப் படிக்க வைத்து உயர் நிலைக்கு கொண்டு வர தன்னையே தியாகம் செய்துவிட்ட தன் சகோதரனை நினைத்தார்.
      என் முதல் ஓவியம் எனக்காக,
      தன்னையே தியாகம் செய்த என் சகோதரனின் கரங்களாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.
     பிரஷை எடுத்து சகோதரனின்  நைந்து போன கரங்களை ஓவியமாக தீட்டினார்.
     அந்த ஓவியம் மிகவும் பிரபலமானது.
     இதுதான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஜெபிக்கும்  கரங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
      

Comments

Popular Posts