ஆசிரியப்பா வகைகள்
ஆசிரியப்பா
அடிதோறும் நாற்சீர்களைப் பெற்றிருக்கும்.
இடையிடையே குறளடி, சிந்தடிகள்
வருதல் உண்டு.
ஆசிரியப்பாவிற்கான ஓசை அகவல் ஓசை.
அகவல் என்பது அழைத்தல் என்னும் பொருள் உடையது.
ஒவ்வோர் அடியும் தனித்தனியே அழைக்கும் வகையில்
அமைந்திருப்பதுதான் அகவல் என்பதற்கான காரணம்.
சீர் :
ஆசிரிய உரிச்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள்
மிகுந்து வரும்.
பிற சீர்களும் வருதல் உண்டு.
ஆனால் நிரை நடுவாக வரும் வஞ்சியுரிச்சீராகிய
கருவிளங்கனி கூவிளங்கனி வரவே வராது.
நேர் நேர் _ தேமா
நிரை நேர் _ புளிமா
நிரை நிரை _ கருவிளம்
நேர் நிரை _ கூவிளம்
இவை ஆசிரிய உரிச்சீருக்கு உரிய சீர்களாகும்
தேமாங்காய்
புளிமாங்காய்
கருவிளங்காய்
கூவிளங்காய்
என்ற வாய்பாட்டால் அமையும் நான்கு
சீர்களும் வெண்பா உரிச்சீருக்கு
உரியது.
ஆசிரிய உரிச்சீரோடு வெண்பா உரிச்சீரும்
ஆசிரியப்பாவில் வரலாம்.
தேமாங்கனி
புளிமாங்கனி
கருவிளங்கனி
கூவிளங்கனி
என்ற வாய்பாட்டால் அமையப்பெறும்
நான்கு சீர்களும் ஆசிரியப்பாவில் வராது.
ஆசிரியப்பாவின் வகைகள் :
நேரிசை ஆசிரியப்பா
இணைக்குறள் ஆசிரியப்பா
நிலைமண்டில ஆசிரியப்பா
அடிமறிமண்டில ஆசிரியப்பா
நேரிசை ஆசிரியப்பா:
ஆசிரியப்பாவின் இணக்கணங்களைப் பெற்று
ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள்
நாற்சீராகவும் அமைவது நேரிசை ஆசிரியப்பா.
இணைக்குறள் ஆசிரியப்பா :
ஆசிரியப்பாவின் இலக்கணங்களைப் பெற்று
முதல் அடியும் ஈற்றடியும் நான்கு சீர்களைக்
கொண்ட அளவடியாகவும் இடையிடையே குறளடி,
சிந்தடிகள் விரவியும் வருவது இணைக்குறள்
ஆசிரியப்பா.
நிலைமண்டில ஆசிரியப்பா :
ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று
அனைத்து அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டு
அமைவது நிலைமண்டில ஆசிரியப்பா.
அடிமறிண்டில ஆசிரியப்பா :
ஆசிரியப்பாவின் இலக்கணங்களைப் பெற்று
அனைத்து அடிகளும் நான்கு சீர்கள்
கொண்டு அமைவதோடு பாடலில் எந்த அடியை
எவ்விடத்தில் மாற்றினாலும் ஓசையும்
பொருளும் மாறாமல் வருவது
அடிமறி மண்டில ஆசிரியப்பா.
ஈற்றசை
ஆசிரியப்பாவின் ஈற்றசை ஏ, ஓ,
என், ஈ, ஆ, ஆய் , அய் என்னும்
அசைகளுள் ஒன்றாக இருத்தல்
வேண்டும்.
Comments
Post a Comment