கண்டதும் கொண்டதும்
🌹கண்டதும் கொண்டதும்🌹
👌 விருது வழங்கும் விழா👍
மும்பை மாநகராட்சித்
தமிழாசிரியர் குழுமம்
மும்பை.
ஓய்வும் பணியும்
ஓரிடத்தில் கைகோத்த விழா
இளமையும் முதுமையும்
இணைந்ததோர்ப் பெருவிழா
உள்ளங்களை இணைக்கும்
உறவுத் திருவிழா
உள்ளுந்தோறும் நெஞ்சை
அள்ளும் கவியாடுவிழா
முத்தமிழும் சத்தமில்லாமல்
முத்தமிட்டு விளையாடிய விழா
கலையாடு கவியோடு
கற்றவர் திரண்ட கலைவிழா
அறிமுகச் சொற்கள்
பேரதிர்வாய்ச்
செவிமடலைத் திருப்ப
இன்னிசைக் கீதம் ஒன்று
இதமாய் நெஞ்சை வருட
அடுக்குத் தொடரை அள்ளி வீசி
ஆசிரியர் ஜெரோம்
அனைவரையும் வரவேற்க
தொடங்கியதிந்த விருது விழா
பிடறி சிலிர்க்க
அரங்கம் அதிர
சிங்கம் ஸ்டீபன் சார்
எழும்பி வந்து
சிந்தனையைச் சிதற விட
இடைச் செறுகலாய்
உடல் நலம் பேணலுக்கும்
உரையொன்று உண்டென்று
செய்முறை நடனம் ஆடி
சிலிர்க்க வைக்க
மேகலா வர்ணன் ஆசிரியரும்
அருமையாய்க் கை கோர்க்க
மேடை கலை மேடையாகி
ஓடை இது தமிழோடையென
உவந்த வேளையில்
Alive வாக இருக்க அலைகவெனச்
சிலேடைகளை அள்ளி வீசி
விழாவை live ஆக்கி
காண்போரைத் தன் வயப்படுத்திய
வர்ணன் ஆசிரியர்
பேச்சாளுமை கண்டு
பேசா நிலைக்குச் சென்ற வேளையில்
வில்லியம் சார் காட்சியில் வர
அரும்மருத்துவர் இவரன்றோவென
நற்சான்றிதழ் எழுதி
கைகளில் தந்திட நினைக்கையில்
திரை விலகி
தலைவர் ஸ்ரீனிவாசன் சார்
சிறப்புரையாற்றியபோது
தான் யார் என்பதை அறிய வைத்து
தலைமகனை உருவாக்கும்
அரியப்பணி ஆசிரியப்பணி என்று
ஆசிரியருக்குப் பாராட்டுப்பத்திரம்
வாசித்தது தலைவருரைக்கோர்
மணிமகுடம் என்று
உவந்து நின்ற நிலையில்
குழுமத் தலைவி அனிதா
ஆசிரியை அசத்தலான
சொல்லாடலோடு
அருந்தமிழ்ச் சொல்லெடுத்து
விருது பெறுவோரை
அறிமுகம் செய்த பாங்கு
அனைவரையும் வியக்க வைக்க
அண்ணாந்து பார்த்தால்
ஸ்ரீனிவாசன் ஐயா கையிலிருந்து
விருதினைப் பெற
தேவதைகளென ஆசிரியைகளோடு ஆசிரியரும் அணிவகுத்து
கம்பீரமாய் நடந்துவந்த
கண்கொள்ளாக் காட்சி
கண்களை விட்டு
அகல மறுக்க
காட்சியில் பொருளாளர்
பாலன் வந்து
நிதி மேலாண்மைக்கு
யானுண்டு என
வெள்ளை அறிக்கை வெளியிட
கண்முன்னே தலைமை ஆசிரியை
ஞானம் அவர்கள் வந்து
தமிழ் பள்ளிக்குத் தான்
ஆற்றிய அரும்பணிகளைச் சொல்ல
இவரன்றோ நல்லாசிரியை என்று
நெஞ்சம் நெகிழ
அணியம்செய் விருது கொடுத்து
மகிழ்ந்து நின்ற வேளையில்
இது மட்டும் போதாது
இன்னும் கொஞ்சம் வேண்டும்
வேண்டுமென நெஞ்சம் கெஞ்ச
கடத்தல் விளையாட்டொன்று
கலகலப்பாக்கிட
மாநிலங்களைப் பிரித்தாளுமை
செய்து மற்றுமொரு விளையாட்டுக்
காட்டிய நிகழ்ச்சித் தொகுப்பாளரொடு இணைந்தத் தலைமை
கண்ணுக்கு விருந்தளிப்பது மட்டும்
எம் பண்பாடன்று
"செவிக்குணவில்லாதபோழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் "என்பதுதானே நம்
தமிழர் பண்பாடு என்றபடி
உணவுண்ண வேண்டிக் கொள்ள
வயிறார உணவுண்டு
வாயார வாழ்த்தி
மறுபடி மற்றுமொரு விழாவுக்கு
வாய்தா வாங்கி
கண்ட காட்சிகளை
நெஞ்சில் கொண்டாடியபடி
மகிழ்ச்சியோடு விடைபெற்றோம்!
விழா அமைப்பாளர்களுக்கு
நன்றியும் வணக்கமும்
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
Comments
Post a Comment