மயிர்நீப்பின் வாழாக் கவரிமா....

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா....
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் "

                                  குறள்  : 969

மயிர்  _ முடி
நீப்பின் _ நீங்கினால்
வாழா _  உயிர் வாழாத
கவரிமா _ கவரிமா எனும் ஒரு வகை விலங்கு
அன்னார் _ அனையர், ஒத்தவர்
உயிர்நீப்பர் _ உயிரை விட்டுவிடுவர்
மானம்_  அவமானம்
வரின் _ வரும் போது

தன் உடம்பிலிருந்து மயிர் வீழ்ந்தால் உயிர் வாழா
கவரிமான் போல மானம் உடையவர் அந்த மானம்
போவதாயின் உயிர் வாழ மாட்டார்.

விளக்கம் : 

கவரிமா எனப்படும் ஒரு வகை விலங்கு
தன் உடம்பிலிருந்து மயிர் உதிர்ந்தாலோ
மயிர் மழித்து எடுக்கப்பட்டாலோ உயிர்வாழாதாம்.
அது போல  தன் தன்மானத்திற்கு
ஒரு இழுக்கு ஏற்படும் நிலை வந்தால்
 தன்மானமுடையவர் உயிர் 
வாழ மாட்டார்.

நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் 
அவமானத்தால் தற்கொலை செய்து 
கொண்டவர்களைப் பற்றி
வாசிக்கிறோம்.தனக்கு இப்படிப்பட்ட
அவமானம் வந்து விட்டதே என்பதைத் 
தாங்கிக் கொள்ள இயலாமல்தான்
பல தற்கொலைகள்  நிகழ்கின்றன.

தனக்கு ஒரு மானக்கேடு வந்து விட்டதே என
எண்ணி அவமானத்தால் மனம் ஒடிந்து
கூனிக் குறுகிப் போவர்.ஒருநாள் தன்
உயிரை மாய்த்துக் கொள்வர்.
இப்படிப்பட்ட தன்மானம் இழக்கா
நற்பண்பாளரைக் கவரிமானோடு
ஒப்பிட்டுக் கூறப்படுவதை நாம் 
இன்றும் அறிவோம்.

 ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.
 ஒழுக்கமே உயிரினும் சிறந்தது.
இவ்வாறு உயர்ந்த பண்புகள் உயிரோடு
ஒப்பிடப்படுவதைப் பார்க்கலாம்.

மயிர் நீங்கினால் உயிர்வாழ 
முடியாத கவரிமா
போன்றவர்கள் மானம் இழந்தால்
உயிர் வாழ மாட்டார்கள்.
 
அவமானம் ஒரு மனிதனை எந்த 
எல்லை வரையும் கொண்டு செல்லும்.
அதனால்தான் அது உயிரை
முடித்துக் கொள்ளும் முடிவெடுக்கத் தூண்டுகிறது.

விலங்குகளில் கவரிமா என்று ஒரு 
விலங்கே கிடையாது.
கவரிமான் பற்றி வள்ளுவர் குறிப்பிடவில்லை.
கவரிமா என்பது பனிக்கரடி போன்ற
ஒரு விலங்கு . அதைச் சொல்வதற்காகத்தான்
வள்ளுவர் கவரிமா என்று கூறுகிறார்
என்று விவாதம் செய்வோரும் உண்டு.

எது எப்படியோ மயிர் நீங்கின் உயிர்வாழா
விலங்கு உண்டு என்பது உண்மை. 
அது போல மானம் நீங்கின் சான்றோர்
உயிரை விட்டுவிடுவர் என்பதும் உண்மை
என்பது இதன்மூலம் நாம் அறியப்படும்
செய்தி.

English couplet :

"Like the wild ox that, of its tuft bereft, will pine away,
Are those who of their honour shorn, will quit the light of day"

Explanation : 

Those who give up their life when their honour is at stake
are like the yak which kills itself at the loss of 
even one of its hairs.


Transliteration : 

"Matineepin vaazhaak  kavarimaa Annaar
Uyirneeppar Maanam varin"












"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் "

                                  குறள்  : 969
மயிர்  _ முடி
நீப்பின் _ நீங்கினால்
வாழா _  உயிர் வாழாத
கவரிமா _ கவரிமா எனும் ஒரு வகை விலங்கு
அன்னார் _ அனையர், ஒத்தவர்
உயிர்நீப்பர் _ உயிரை விட்டுவிடுவர்
மானம்_  அவமானம்
வரின் _ வரும் போது

தன் உடம்பிலிருந்து மயிர் வீழ்ந்தால் உயிர் வாழா
கவரிமான் போல மானம் உடையவர் அந்த மானம்
போவதாயின் உயிர் வாழ மாட்டார்.

விளக்கம் : 

கவரிமா எனப்படும் ஒரு வகை விலங்கு
தன் உடம்பிலிருந்து மயிர் உதிர்ந்தாலோ
மயிர் மழித்து எடுக்கப்பட்டாலோ உயிர்வாழாதாம்.
அது போல  தன் தன்மானத்திற்கு
ஒரு இழுக்கு ஏற்படும் நிலை வந்தால்
 தன்மானமுடையவர் உயிர் வாழ மாட்டார்களாம்.

நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் 
அவமானத்தால் தற்கொலை செய்து 
கொண்டவர்களைப் பற்றி
வாசிக்கிறோம்.தனக்கு இப்படிப்பட்ட
அவமானம் வந்து விட்டதே என்பதைத் 
தாங்கிக் கொள்ள இயலாமல்தான்
பல தற்கொலைகள்  நிகழ்கின்றன.

தனக்கு ஒரு மானக்கேடு வந்து விட்டதே என
எண்ணி அவமானத்தால் மனம் ஒடிந்து
உயிரை மாய்த்துக் கொள்வோரை கவரிமானோடு
ஒப்பிட்டுக் கூறப்படுவதை நாம் 
இன்றும் கேட்கலாம்.

 ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.
 ஒழுக்கமே உயிரினும் சிறந்தது.

மயிர் நீங்கினால் உயிர்வாழ முடியாத கவரிமா
போன்றவர்கள் மானம் இழந்தால்
உயிர் வாழ மாட்டார்கள்.
 
அவமானம் ஒரு மனிதனை எந்த 
எல்லை வரையும் கொண்டு செல்லும்.

விலங்குகளில் கவரிமா என்று ஒரு 
விலங்கே கிடையாது.
கவரிமான் பற்றி வள்ளுவர் குறிப்பிடவில்லை.
கவரிமா என்பது பனிக்கரடி போன்ற
ஒரு விலங்கு . அதைச் சொல்வதற்காகத்தான்
வள்ளுவர் கவரிமா என்று கூறுகிறார்
என்று விவாதம் செய்வோரும் உண்டு.

எது எப்படியோ மயிர் நீங்கின் உயிர்வாழா
விலங்கு உண்டு என்பது உண்மை. 
அது போல மானம் நீங்கின் சான்றோர்
உயிரை விட்டுவிடுவர் என்பதும் உண்மை
என்பது இதன்மூலம் நாம் அறியப்படும்
செய்தி.

English couplet :

Like the wild ox that , of its tuft bereft, will pine away
Are those who of their honour shorn , will quit
the light of day.

Explanation :

Those who give up their life when their honour is at
stake are like the yak which kills itself at the loss of
even one of its hairs.

Transliteration :

"Mayirneeppin Vaazhaak kavarimaa Annaar
Uyirneeppar Maanam Varin "

 

Comments

Post a Comment

Popular Posts