துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்...

         துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்....


 "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
  துப்பாய தூஉம் மழை " 
                                        - குறள்: 12


துப்பார்க்கு -உண்பவர்க்கு
துப்பாய - வலிமை தருகின்ற
துப்பு - உணவு
ஆக்கி - ஆகும்படி செய்து,விளைவித்து
துப்பார்க்கு - உண்பவர்க்கு, குடிப்பவர்க்கு
துப்பாய - வலிமையாக
தூஉம் - ஆவதும், பெய்து வருவதும்
மழை - மழை


உண்பவர்களுக்குத் தக்க உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு பருகுவார்க்குத் 
தானும் ஓர் உணவாக
இருப்பது மழையாகும்.

விளக்கம் :

மழை இல்லை என்றால்
உணவுமில்லை....உயிருமில்லை.
மழையானது நாம் உண்ணும் 
உணவுப் பொருட்களான காய்கறிகள், 
தானியங்கள்
யாவும் விளைவதற்குக்  காரணகர்த்தாவாக
இருக்கிறது..இப்படி
துய்ப்பவர்க்கு உரிய உணவுப் பொருட்களை
விளைவித்துத் தருவதோடு  
அவற்றை உண்பவர்க்கு தானும் 
துய்ப்பதற்கு உரிய ஒரு பொருளாக இருந்து
வலிமை தரும் நீரையும் தந்து
 நிற்கிறது மழை.

உணவுப் பொருட்கள்
விளைவிக்க உதவுவதோடு மட்டும்
நில்லாமல் பருகும் நீராக இருந்து
நேரடியாக வலிமை சேர்த்து
நிற்பது  மழை.

இந்தப் பாடலில் ஐந்து முறை துப்பு 
என்ற சொல்லைப் பயன்படுத்தி
அனைவரையும் பாடலைத் திரும்பிப்
பார்க்க வைத்துள்ளார்  வள்ளுவர்.

 அது என்ன துப்பார்க்குத் துப்பாய...
என்று பாடலைப் பற்றி ஏதாவது
துப்பு கிடைக்குமா என்று
ஆராய வைத்துள்ளார் என்றே
சொல்ல வேண்டும்.

துப்பு என்ற சொல் உண்ணல்,
நுகர்தல், அனுபவித்தல்,
ஆராய்தல், உமிழ்தல்  என்று 
இடத்திற்கு இடம் பொருள்
மாறுபடுகிறது.

துப்பு கெட்டவன் என்பது
சோற்றுக்குக்கூட வழியற்றவன்
என்ற பொருளில் பயன்படுத்தப்படும்.
துப்பு துலக்குதல் என்றால்
சூழலை ஆராய்வது என்று பொருள்படும்.
துப்பு என்பது உமிழ்தல் என்ற
பொருளிலும்  பயன்படுத்தப்படுவதுண்டு.

கவிநயம் கருதியும் சொல்ல வந்த
கருத்தின் முக்கியத்துவம் கருதியும்
துப்பு என்றசொல் மழையைப் பற்றி
துப்பு கொடுக்க மறுபடியும் மறுபடியும்
கையாளப்பட்டுள்ளது.

மழை இல்லை என்றால் புல்லும் முளைக்காது.
உயிர்களின் தாகமும் தணியாது.
உயிர்களின் பசியையும் நீர்வேட்கையையும் 
தணிக்கும் சக்தி மழைக்கு மட்டுமே உண்டு.

உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி
தானும் உணவாய் இருப்பது மழை.
         
துப்பு என்ற சொல் கொண்டு மழையைத்
துப்புத் துலக்க வள்ளுவரைத்
தவிர வேறு யாரால் கூடும்.?

English couplet  :12

The rain makes pleasant food for eaters rise ;
As  food for itself ,thirst
quenching draught supplies."

Explanation :

" Rain helps to grow  food  for food eaters;
Apart from this rain itself act as a
part of food  as water  to quench
our thirst .

Transliteration :

"Thupparkkuth  thuppaaya  thuppaakkith  thuppaarkkuth
  Thuppaaya thoovum mazhai "
  
       

Comments

  1. வாழ்க.வளர்க.நிலைத்து நீடித்து நிற்க.

    ReplyDelete

Post a Comment

Popular Posts